Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கனடிய பாராளுமன்ற வேட்பாளராக ராதிகா சிற்சபைஈசன்!

Featured Replies

எமது சமூகத்தின் அபிலாசைகளை கனடிய பாராளுமன்றத்தில் முன்னெடுத்துச் செல்லக் கூடிய ஒருவரை எமது பாராளுமன்றப் பிரதிநிதியாக்கக்கூடிய வாய்ப்பாக வரப்போகும் கனடியப் பாராளுமன்றத் தேர்தல் அமைகின்றது.

இவ்வாறான சந்தர்ப்பத்தில்,Scarborough-Rouge River தொகுதியில் NDP யின் சார்பில் கனடியப் பாராளுமன்ற வேட்பாளராக முன்னிற்பதில் நான் பெருமையடைகின்றேன். என்றுமில்லாதவாறு இம்முறை எமக்கான குரலை கனடிய பாராளுமன்றத்தில் ஒலிக்கச் செய்யவும், எமது மக்கள் நலன் சார்ந்த விடயங்களை பாராளுமன்றத்தில் எடுத்துரைக்கவுமான மிகச் சாதகமான இவ்வாய்ப்பானது கனடியத் தமிழர்களுக்கான முக்கிய தேர்தலாக அமைகின்றது. NDP யும் அதன் தலைவர் Jack Layton னும் எமது மக்கள் நலன் சார்பான விடயங்களுக்காக எந்நிலையிலும், எந்தநேரத்திலும் துணைநிற்பவர்கள் என்பதை எமது மக்கள் நன்கறிவர். Scarborough-Rouge River தொகுதியில் எமக்குக் கிடைத்து வரும் ஆதரவானது எமது வெற்றிக்கான வாய்ப்பைத் தெளிவாகக் காட்டுகின்றது.

இத்தொகுதியின் நீண்ட காலப் பாரளுமன்ற உறுப்பினர் கூட இது மாற்றத்திற்கான நேரம் எனக் காட்டியுள்ளார். எனவே இது எங்களுக்கான நேரம். முதல் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை தேர்ந்தெடுத்து வரலாறு படைக்கும் காலம். எனது அன்பு மக்களே, மே 2ம் திகதியின் தேர்தல் வெற்றியில் உங்கள் அமோக ஆதரவுடன் வரலாறு படைப்போம். நன்றி ராதிகா சிற்சபைஈசன்

more info:-http://www.manithan.com/index.php?subaction=showfull&id=1304028034&archive=&start_from=&ucat=1&

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலம்பெயர்நாடுகளில் வாழும் எமது பிள்ளைகளை நல்ல அரசியல்வாதிகளாகவும்......

நல்ல பேச்சாளர்களாகவும் திறமைமிக்க ஊடகவியாளர்களாகவும் வளர்த்தெடுக்க வேண்டும்.

இதுதான் இப்போதுள்ள அடிப்படித்தேவைகள்.எமது தாயக நிலமைகள் பற்றி உண்மையான விளக்கம் பெற்றோர்களாகிய நாம் அவர்களுக்கு கொடுக்க வேண்டும்.

எனது பிள்ளைகளையும் இதுசம்பந்தமாகவே உரமேற்றி வளர்க்கின்றேன்.

ஈழவிடுதலைக்கு மிகவும் பயன்படும்.

இணைப்பிற்கு நன்றி BLUE BIRD

  • கருத்துக்கள உறவுகள்

reform - change - new member எல்லாம் உலகெங்கும் உள்ள அரசியல்வாதிகள் பேசுறதுதான். ராஜபக்சவும் இதைத்தான் பேசுறான்.. இவாவும் அதைத் தான் பேசுறா. வடிவேலுக்கும் அதைத்தான் சொல்லிக் கொடுக்கிறாங்க.

ஒரு விடயத்திற்காக இவரை பாராட்டலாம். இளையோர்கள் நிறைந்த தொகுதியில் அரசு சிறைச்சாலைகளை திறக்க முனையும் வேளையில் தொழில்வாய்ப்பை அதிகரிப்பதற்கு உழைப்பேன் என்று சொன்னதை.

சர்வதேச பொருண்மிய நெருக்கடி கனடாவை எந்தளவு பாதித்திருக்கிறது என்பது தெரியாது. ஆனால் பொருண்மிய நெருக்கடி இன்று உலகலாவிய பிரச்சனை. குறிப்பாக பன்னாட்டு வர்த்தக நிறுவனங்கள் ஆட்குறைப்புக்களை தீவிரமாகச் செய்யும் நிலையில்.. வேலை இழப்புக்கள் அதிகரித்துள்ள நிலையில்.. இவரின் இந்தக் குரல் இளையோர்களை கவரும். ஆனால் அவர்கள் தேர்தலின் பின் ஏமாற்றப்படாதவர்களாக இருக்க வேண்டும்.

தமிழர்கள் ஒன்றைக் கற்றுக் கொள்ள வேண்டும்.. தேர்தலில் வென்ற பின்.. அதிகார மமதைத் தனத்தை கைக் கொள்வதை கைவிட்டு.. மக்கள் பிரதிநிதிகளாக தெரிவு செய்யப்பட்டால் மக்களோடு அவர்களின் நிலையில் அவர்களோடு நின்று அவர்களின் உணர்வுகளை விளங்கிக் கொண்டு அவர்களுக்காக உழைக்க கற்றுக் கொள்ள வேண்டும்.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

பனியிலும் மழையிலும் எம்மக்களோடு நின்றவர்.அத்துடன் சமூக சேவகியாக பல காலம் ஈடுபடுபவர்.மேலும் தமிழர்களுக்காக ஓரளவேனும் குரல் கொடுக்கும் என்.டி.பி கட்சி சார்பாக போட்டி இடுபவர்.ஏனைய இனவாத (தமிழர்களை ஏளனப்படுத்தும் கட்சிகளுக்கு)கட்சிகளுக்கு கடந்த காலங்களில் நாம் வாக்களித்து ஏதும் அவர்கள் பெரிதாக செய்யவில்லை. இம்முறை இவர்களுக்கு ஓர் சந்தர்ப்பம் கொடுக்கலாம்.

பல இடங்களில் pollல் இவர்கள் முன்னணியில் நிற்கிறார்களாம். குறிப்பாக பிரன்சுக்கட்சியின் கோட்டையாக விளங்கும் கியூபெக்கில் இவர்கள் முன்னணியில் உள்ளதாக கூறுகிறார்கள்.வெல்லுகிற குதிரையில் பந்தயம் கட்டுவது புத்திசாலித்தனமானதும் கூட..

தமிழே தெரியாமல் ஆங்கிலத்தில் பேசிக்கொண்டு தாம் தமிழர்கள் என கூறிக்கொண்டு திரிபவர்கள் தலையில் துண்டை போட்டுக்கொள்ளவும். :lol::lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எது எப்படி இருப்பினும் தமிழர்கள் வாக்களிக்கவேண்டியது இம்முறை என்டிபி கட்சிக்குத்தான். ராதிகா எப்படியோ? யாருக்கும் தெரியாது. தமிழ் மக்கள் பிரச்சனைக்குத் தெரிவு செய்யப்பட்டபின் குரல் கொடுக்கின்றாரோ இல்லையோ. சுயநலமாகச் செல்கின்றாரோ தெரியாது. இருந்தும் என்டிபிக்கு நன்றிசெலுத்தும் முகமாக தமிழர்கள் அனைவரும் எந்தத் தொகுதியில் வாழ்ந்தாலும் என்டிபிக்கு வாக்களியுங்கள். என்டிபி தலைவர், நாங்கள் குளிரிலும் கொட்டும் மழையிலும் நின்று எங்கள் மக்களை காப்பாற்று காப்பாற்று என்று போராடியபோது இவர்களும் மனிதர்கள் தானே என்று குரல் கொடுத்த ஒரே ஒரு கட்சித்தலைவர். மற்றவர்கள் ஏன் என்று கூடத்திரும்பிப்பார்க்கவில்லை. எனவே நன்றிக்கடனுக்காவது வாக்களிப்பது நன்றியைச்செலுத்த ஒரு அரிய சந்தர்ப்பம். ஆபத்தில் ஒரு அறுதல் வார்த்தை தானும் தந்த அந்தக்கட்சிக்கு ஆதரவளிப்போம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.