Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலன்டன் தமிழ் வர்த்தகர்களே

Featured Replies

இலன்டனில் வியாபார ஸ்தாபனம் நடாத்தும் தமிழ் உறவுகளே ஓர் அன்பான வேண்டுகோள்.

அண்மை காலமாக சிறிலங்கா சிங்கள ரெலிகொம் நிறுவனம் டயலொக் இலன்டனில் தங்களது மொபைல் சிம் கார்ட் அறுமுகபடுத்தி மொபைல் போன் வசதியை செய்து கொடுத்து வருகிறது. இதில் இருந்து சிறிலங்காவுக்கு பேசலாம் என்றெல்லாம் விளம்பரப்படுத்தி தமிழ் மக்கள் மத்தியில் பிரபல படுத்தி வருகிறார்கள்.

அதில் வெற்றியும் பெற்று வருகிறார்கள்.. இவர்களது திட்டம் ஒவ்வொரு தமிழனும் சிம் கார்ட் பெற்று கொண்டால் தங்கள் வியாபாரம் வெற்றி. ஏனெனில் இப்போ சாதரணமாக, இலங்கையின் எப்பகுதிக்கும் மொபைல் தொலை பேசி வசதி உண்டு. இலன்டனில் வாழும் உறவுகளின் விற்பனயே போதுமானது.

எனவே இதை நாம் கவனத்தில் கொள்வோம்.

கிட்டதட்ட அனைத்து சாதாரண பேப்பர் கடை தொடக்கம் வைன் கடை வரை தமிழர் கையில் தான் உள்ளது.. இந்த தொலை பேசிக்கான பவுச்சர்களும் அங்கே தான் விற்கப்படுகின்றன.

நாங்கள் விற்பதை நிறுத்துவோம். ஒரு நட்டமும் இல்லை. எத்தனையோ மொபைல் கார்ட் இருக்கின்றன.(lyca, lebra, now, vectone, )இன்னும் பல ,இவற்றில் சில ஈழ தமிழரது நிறுவனங்கள்.

இவை எல்லாம் ஈழத்திற்கு குறைந்தளவு கட்டணம் தான். top up செய்யும் வசதியை குறைத்து விட்டால் பிரபலம் இல்லாமல் போய் விடும்.

ஒரு 5 பவுன் top up செய்தால் கிடைப்பது 10 p மட்டுமே. இந்த 10 பி இல்லாவிட்டால் வியாபாரம் கெட்டு விடாது.

நாங்கள் சிந்திப்போம்.

ஏன் ஒரு சிங்கள நிறுவனத்திற்கு இதை விற்று கொடுக்கவேண்டும். ?

அந்த இனம் எங்களை அங்கு நிம்மதியாக வாழவிட்டதா?

இது ஒன்றும் தமிழரின் அன்றாட வாழ்வு பொருள் அல்ல. நிறுத்துவோம்.

முள்ளிவாய்க்காலின் நினைவு நாளோடு வர்த்தகர் கள் முடிவு எடுங்கள். இதில் வியாபார ஸ்தாபனங்களுக்கு வரும் ஏஜென்டுகளாக பல தமிழ் ,சிங்கள மாணவரும் வேலை செய்கிறர்கள். அவர்கள் வேலை இல்லா பிரச்சனை. அவர்கள் மேல் பிழை இல்லை.நாம் வியாபாரம் நடத்தும் ஓரளவு பணம், புகழ் உள்ளவர்கள். இலகுவாக பகிஸ்கரிக்கலாம்.

தயவு செய்து இதை பார்வை இடும் அனைவரும் மற்றவருக்கும் பரப்புங்கள். அறிய கொடுங்கள்.

முக்கியமாக கடைகளில் வேலை செய்யும் தமிழ் இளைஞர்களுக்கு சொல்வது நல்லது.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல முயற்சி

தொடருங்கள்

உலக நாடுகள் பொருளாதார தடை விதிக்கும் முன் நாம் இலங்கைக்கு தடை விதித்திருக்கலாம், பல வர்த்தகர்களுடன் வாதாடியும் ஒரு பயனும் கிடைக்கவில்லை

தமிழ் மக்களை புறக்கணிக்க கோருவதே வர்த்தகர்களை கேட்பதை விட இலகு என நினைக்கிறேன்.

டொராண்டோ நகரில் உள்ள ஒரு கடையில் ஒரு நண்பர் வேண்டுமென்றே சிங்கள பொருட்களை வாங்கி. பின்னர் கடையில் ஒரு முப்பது பேர் உள்ளபோது திரும்பி வந்து, " ஐயோ இது சிங்களவனுக்கு காசு கொடுக்கும் பொருட்கள், இதையேன் இங்கு விற்கிறீர்கள்?, எமது மக்களை கொல்ல உதவுவதற்கா ? வீட்டில் என்னை பேசி திருப்பி கொடுத்துவிட்டு வரச்சொன்னார்கள்" , என கூறி கொடுத்தார்.

நுகர்வோர்களாக பார்த்து புறக்கணித்தலே சிங்கள பொருளாதார தடைக்கு பலம் சேர்க்கும்.

டொராண்டோ நகரில் உள்ள ஒரு கடையில் ஒரு நண்பர் வேண்டுமென்றே சிங்கள பொருட்களை வாங்கி. பின்னர் கடையில் ஒரு முப்பது பேர் உள்ளபோது திரும்பி வந்து, " ஐயோ இது சிங்களவனுக்கு காசு கொடுக்கும் பொருட்கள், இதையேன் இங்கு விற்கிறீர்கள்?, எமது மக்களை கொல்ல உதவுவதற்கா ? வீட்டில் என்னை பேசி திருப்பி கொடுத்துவிட்டு வரச்சொன்னார்கள்" , என கூறி கொடுத்தார்.

இதே மாதிரி எனது நண்பர் ஒருவரும் அவருக்குத் தெரிந்த கிழக்கு ஐரோப்பிய நண்பனைக் கொண்டு Marks & Spencer இல், சிறிலங்காவில் தயாரிக்கப்பட்ட உடைகளை வாங்கி பின் பலர் கியூவில் நிற்கும் பொழுது திருப்பிக் கொடுக்கப் பண்ணினார்.

  • தொடங்கியவர்

இல்லை இது முழுக்க முழுக்க சிறிங்கன் தமிழ் ,சிங்கள மக்களை மையப்படுத்திய வியாபாரம்.

வர்த்தகர்களால் முடியும். top up இல்லை என்று ஒரு வார்த்தை சொன்னால் போதும்.

அலைய மாட்டார்கள். நிறைய மாற்று போன்கள் இருக்கின்றன.

வாடிக்கையாளர்கள் சரி என்ன அடுத்து இருக்கு என்று தான் கேட்கிறார்களே தவிர இதை தேடி வேறு கடைக்குபோவதா இல்லை.

எல்லா வர்த்தகரும் ஒத்துழைக்கனும்.

தமிழர் தான் 99 வீத கடை உரிமையாளர்கள் இந்த போன் பவுச்சர் விற்கும் இடங்கள். ஆகவே இதை செய்வது இலகு.

வியாபாரிகளின் விருப்பமான ஒத்துழைப்பு தேவை.

பார்ப்போம்.

புறக்கணிப்பின் வலியை எதிரி உணரட்டும்.

இனியாவது..... இருப்போம் நெருப்பாய்...

'இருப்பாய் தமிழா நெருப்பாய்...

இருந்தது போதும் இதுவரை... செருப்பாய்'

உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன்

.

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் இன்னும் பல புலம் பெயர்ந்த நாடுகளில் வீடுகளில் டில்மா தேநீரினையும் குடித்துக் கொண்டு, சிறிலங்கன் மலிபன் விசுக்கோத்துக்களை உண்டு கொண்டு, சிறிலங்கன் நெக்டோவைக்குடித்துக் கொண்டு, சிறிலங்காவில் தயாரிக்கப்பட்ட உடைகளை அணிந்து கொண்டு, சிறிலங்கா அணி துடுப்பாட வரும் போது சிறிலங்கா தேசிய உடை பொறித்த ஆடை அணிந்து கொண்டும், சிறிலங்கன் எயர்லைன்சில் பயணித்துக் கொண்டும் தமிழின அழிப்புக்கு துணை போன கலைஞரின் சன், கலைஞர் தொலைக்காட்சிகளைக் காசு கொடுத்து விட்டுக்கு கூட்டி வந்து பார்த்துக் கொண்டும் பலர் இருக்கிறார்களே.................

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.