Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஜெயலலிதாவின் கருத்துக்களை நாங்கள் பொருட்படுத்தவில்லை-இலங்கை

Featured Replies

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சர்வதேச நீதிமன்றின் முன் நிறுத்துவதாக ஜெயலலிதா கூறும் கருத்துகளை நாம் பொருட்படுத்தப் போவதில்லையென அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெவித்துள்ளார்.தமிழக முதல்வராகப் பதவியேற்கவுள்ள ஜெயலலிதா ஜெயராம் கூறும் கருத்துகளை இலங்கை அரசாங்கம் பொருட்படுத்தாது. அது அவரது தனிப்பட்ட கருத்தாகவே இலங்கை அரசாங்கம் பார்க்கிறது.

இலங்கை அரசாங்கம் இந்திய அரசாங்கத்துடனேயே பேச்சுவார்த்தைகளை மேற்கொள்கிறது. தமிழ் நாடு என்ற மாநிலத்தில் இருந்து வெளியாகும் கருத்துகள் இலங்கை அரசாங்கத்திற்கோ எமது நாட்டு ஜனாதிபதிக்கோ எந்தவொரு பாதிப்பையும் ஏற்படுத்தாது என அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெவித்தார்.இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில்: இலங்கை அரசாங்கம் என்ற வகையில் நாம் இந்திய மத்திய அரசுடனேயே பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறோம். அதனுடன் இலங்கை அரசாங்கத்திற்கு நெருங்கிய தொடர்பும் இருக்கிறது. அந்த உறவை நாம் சிறந்த முறையில் பேணி வருகின்றோம்.

தமிழ் நாடு என்பது இந்தியாவின் ஒரு மாநிலமாகும். அந்த மாநிலத்தில் இருக்கும் முதல்வர்கள், கட்சித் தலைவர்கள் கூறும் விடயங்களையெல்லாம் இலங்கை அரசாங்கம் பொருட்படுத்தாது. அவர்கள் கூறும் கருத்துகள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தப் போவதும் இல்லை.

கடந்த காலங்களில் மேடைகளில் பகிரங்கமாக வைகோ போன்றோர் இலங்கை அரசாங் கத்தையும், ஜனாதிபதியையும் விமர்சித்து பல்வேறு கருத்துகளை முன்வைத்தார்கள். இதை இலங்கை அரசாங்கம் கண்டு கொள்ளவே இல்லை. அது அங்குள்ள கட்சிகளின் தலைவர்களது கருத்துகள் எமது அரசாங்கத்திற்கு தாக்கத்தை ஏற்படுத்தாது.

நாங்கள் நெருங்கிய தொடர்புகளை இந்திய மத்திய அரசாங்கத்தோடு பேணி வருகிறோம்.

எதிர்வரும் தினங்களில் எமது வெளிவிவகார அமைச்சர் பேராசியர் ஜீ.எல். பீஸ் இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளார். அவர் அங்கு சென்று மத்திய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முக்கிய பிரதிநிதிகளையும் சந்தித்து எமது நாட்டின் தற்போதுள்ள நிலைமைகள் குறித்தும் அரசாங்கத்தின் நிலைப்பாடுகள் குறித்தும் விளக்கமளிக்கவுள்ளார்.

அத்தோடு, அமைச்சர் பீரீஸ் இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கையும் சந்தித்து கலந்துரை யாடவுள்ளார். இந்தச் சந்திப்பிலும் அரசாங்கத்தின் நிலைப்பாடு தற்போது இலங்கையின் நிலைமைகள் குறித்தும் பிரதமருக்கு விளக்கமளிப்பார் என நினைக்கிறேன்.

இப்படி நல்லதொரு உறவு இருநாடுக ளுக்கும் இடையில் இருக்கும் போது தமிழ் நாடு என்ற மாநிலத்தில் முதலமைச்சராகப் பதவியேற்கவுள்ள ஜெயலலிதா போன்றோர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சர்வதேச நீதிமன்றத்தின் முன் நிறுத்தப் போவதாகக் கூறும் வார்த்தைகளால் எவ்வித பாதிப்பும் ஏற்படப் போவதில்லை என்றார். http://akkinikkunchu.com/new/index.php

கருத்துக்களை எவர் எந்தப் பதவியில் இருந்து கொண்டு கூறுகிறார்கள் என்பதைப் பொறுத்துத்தான் கவலை கொள்ள வேண்டும். தற்போதய வெளிப்படையான கருத்துகளின்படி சிறிலங்கா ஆட்சியாளர்கள் எவருமே இவ்வாறான கருத்துகளைத்தான் கூறுகிறார்கள். ஆனால் உட்கிடையாக பல மாற்றங்கள் பதைபதைப்புகள் விளக்கமற்ற வெளிப்பாடுகளை இலங்கையரசு வெளிப்படுத்திக் கொண்டிருப்பதை சாதாரண மனிதர்களும் தெரிந்து வைத்துள்ளனர். ஜெயாவின் கருத்துக்குமான வெளிப்பாடு அத்தகையதுதான். பாதிப்பு உடனடியாக ஏற்படாது.

தற்போதைய சிங்கள தலைமைகளின் நட்பு வட்டாரம் நாளுக்கு நாள் சுருங்கி வருகின்றது. அதில் காங்கிரஸ் ஒரு இருதலை கொள்ளி இரும்பாகி உள்ளது.

அதன் தமிழக படுதோல்வி அதன் சிங்கள ஆதரவை மீண்டும் ஒரு முறை மீளாய்வு செய்ய தூண்டியிருக்கும். மேலும் தோல்விகளை அது சந்திக்க விரும்பாது. அதற்காக அது சிங்களத்தை கைவிடக்கூடும்.

இந்தியாவை பொறுத்தவரையில் தமிழகம் பொருளாதார வளர்ச்சியில் ஐந்தாவது இடத்தில் உள்ள மாநிலம் ( மொத்தம் 28 மாநிலங்கள்). எனவே புதுடெல்லி அந்த மாநிலத்தின் முதலமைச்சரை முழுமையாக ஒதுக்கிவிடவும் முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை அரசு, தன்னை விமரிசனங்களுக்கு அப்பாற்பட்டதாகத் தன்னை எப்போதுமே கருதிக் கொள்கின்றது!

அதற்கேற்றவாறு இந்தியாவும் தாளம் போடுகின்றது என்பதே உண்மை!!!

இலங்கை அரசு, தன்னை விமரிசனங்களுக்கு அப்பாற்பட்டதாகத் தன்னை எப்போதுமே கருதிக் கொள்கின்றது!

அதற்கேற்றவாறு இந்தியாவும் தாளம் போடுகின்றது என்பதே உண்மை!!!

இல்லை இப்ப வீட்டுக்கு போனவர் பாவம் சும்மா தான் இருக்கிறார். ஏதும் கத்துவர். பாவத்துக்கு பரிகாசம் தேடுவார்.

கட்சி கூட்ட்ம் கூட்டம் கூடி நல்ல தீர்மானங்கள் எல்லாம் வரும்.

பொறுங்கோ. சோனியாவை இறுக்க இனி இவர் ஈழம் தான் தஞ்சம்.

அடுத்த தேர்தலுக்கு முதல் ஒரு வழி பண்ண வேணுமே.

முள்ளி வாய்க்காலுக்கு இவரும், வைரமுத்துவும் கவிதை எழுதுவினம்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் நாடு என்பது இந்தியாவின் ஒரு மாநிலமாகும். அந்த மாநிலத்தில் இருக்கும் முதல்வர்கள், கட்சித் தலைவர்கள் கூறும் விடயங்களையெல்லாம் இலங்கை அரசாங்கம் பொருட்படுத்தாது. அவர்கள் கூறும் கருத்துகள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தப் போவதும் இல்லை.

இங்கு நாம் ஒன்றைக்கவனிக்கவேண்டும்

தமிழக முதலமைச்சரின் பேச்சுக்கே தாம் முன்னுரிமை கொடுக்கத்தேவையில்லை என்று சொல்கிறார்கள்.

ஆனால் ஜெயலலிதாவின் நோக்கம் இந்திய பிரதமர் ஆவதுதான். அதை ஒரு நாள் நிச்சயம் செய்வார்.

அதற்கு நாமும் துணைபோகவேண்டும்.

அன்று அவர் எமக்காக தன்னால் எதுவும் செய்யமுடியாது என்று சொல்லவும் முடியாது. ஸ்ரீலங்காவும் அதற்கு நாம் பயப்படத்தேவையில்லை என்று வாலாட்டமுடியாது.

எனவே அதற்கான ஒத்துழைப்புக்கள் பற்றி ஈழ ஆதரவாளர்கள் ஜெயலலிதாவை ஊக்கப்படுத்தவேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திமுக ஆட்சியாளரிடம் இருந்து இப்படியான கருத்து வந்திருந்தால், சிங்களம் உடனே "அவர்கள் கோமாளிகள்" என்ற வாசக்ங்களால் அர்சித்திருப்பார்கள். ஆனால் ஜெயாவின் ஆட்சிக்கு இப்படி பதிலளித்திருந்தால் பலன் கைமேல் கிடைத்திருக்கும்!

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான பேச்சுக்கள் தான் தற்போது தேவை..

அனைத்து மாநில மக்களோடும் கலந்துரையாடப்பட்டு பொதுவான ஒரு அரசியல் தீர்வுக்கு ...ஈழதமிழர்கள் விரும்பும் வகையில் இருக்கவேண்டுமென்றில் தமிழகம் மிக முக்கியபாத்திரம் வகிக்கவேண்டும் (ஐ மீன் 40 எம்பி சீட்டு ஒரு ஈழ ஆதரவு கட்சிக்கே செல்லவேண்டும்)அப்போது தமிழகத்தின் தயவில் தான் மத்திய அரசு தொங்கவேண்டும்.

இது நடைபெற நீண்ட காலம் என்றபடியால் .. போர்குற்றத்தில் நாராயணன் ..மேனன்.. நம்பியார் போன்ற கைத்தடிகளின் பங்குகளை விசாரிக்க வேண்டும் என ஈழ தோழர்கள் கோரவேண்டும் அப்பத்தான் வழிக்கு வருவார்கள்..

டிஸ்கி:

முன்னர் சொன்ன அரசியல் சொற்சிலம்பத்தினை ஈழ தோழர்கள் நினைவு கூறுதல் நன்று..

போர் குற்றத்தினை விசாரிக்ககோரி ஐ.நா சபை அழுத்தம்

இலங்கையின் பதில்: அது புனர்வாழ்வு மற்றும் மீள் குடியேற்றத்தினை பாதிக்கும்..

நம்முடைய பதில்:

அப்போ புனர்வாழ்வு மற்றும் மீள் குடியேற்றத்தினை சிங்கள அரசு சார்ப்பாக செய்பவன் எல்லாம் போர்குற்றவாளிகள்..முடிச்செருக்கிகள் மொள்ளமாறிகள்.. ஆக கூட்டி கழித்து பார்த்தால் இவர்களை கைது செய்து விசாரணைக்கு உட்படுத்துவதால் .. பாதிப்பு உருவாகும் .. லாஜிக்கு கரெக்டு...

இலங்கை: அந்நிய நாட்டு சக்திகள் இலங்கைக்குள் ஊடுருவிகின்றன:

டீசல் மற்றும் பெட்ரோல் கிடைக்காவிட்டால் .. சிங்கள மக்கள் அனைவரையும் நடந்து போக சொல்லலாம்..

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.