Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நெடியவன் நாமத்தை கொண்டு சிங்களம் விரிக்கும் வலை - லங்காதீப செய்தி மீதான ஆய்வு

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலம்பெயர் நாடுகளிலும், தமிழ்நாட்டிலும் இன்று ஈழத்தமிழர்கள் விடயம் கொதிநிலையில் இருக்கின்றது. குறிப்பாக ஈழத் தமிழர் விடயம் என்பதற்கு அப்பால் தமிழீழ ஆதரவுக் கொள்கை மற்றும் தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளுக்கு தேர்தலில் மக்கள் வழங்கிய ஆதரவுக்கான தளம் பற்றி சிறீலங்கா அரசாங்கம் நித்திரை இன்றி ஆய்வு செய்து வருகின்றது.

அது மட்டுமல்லாமல் தமிழ் மக்களை கண்ணீரிலும் குருதியிலும் தோய்த்த இந்த வைகாசி மாத கண்ணீரோடான நாட்களில் நாம் அடைந்த அடைவுகள் எமக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம் என்பன சிறீலங்காவை கிலிகொள்ள வைத்துள்ளது. இதைத் தொடர்ந்து பல விடயங்கள் பற்றி சிறீலங்கா சிந்திக்க ஆரம்பித்துள்ளது.

தலைக்கு வந்திருக்கும் ஆபத்தை, அதாவது தமிழ்நாட்டின் திசையில் மகிந்தவுக்கு தெரியும் தூக்கு மேடையில் இருந்தும் உலகம் முழுக்க விரிக்கப்பட்டுள்ள வலையில் இருந்தும் எவ்வாறு தப்புவது என்று மகிந்தவும், தம்பியரும் அதிகமாக தற்போது சிந்தித்து வருகின்றனர்.

ஏனைய தமது சகாக்களுக்கும் இது பற்றி சிந்தித்து அறிவுரை சொல்லும்படி கோரிக்கை விடுத்துள்ளனர். மேவின் சில்வா போன்ற, தம்பாட்டுக்கு கதைவிடும் சிங்கள தேசியவாதிகளாக காட்டிக் கொள்ளும் அரசியல்வாதிகளையும் அடக்கி வாசிக்கும்படி அறிவுரை வழங்கியுள்ளதாக அறிய முடிகின்றது.

இது மட்டுமல்லாமல் ஏக காலத்தில் நடந்தேறிய ஈழத்தமிழர் சார் இரு அரசியல் மாற்றங்கள் அதாவது சர்வதேச ரீதியிலான இரு தமிழ் பெண் தலைமைகள் சிறீலங்காவை அச்சமடையச் செய்த, சகுனப்பிளையாக சிறீலங்கா நோக்குகின்றது.

ஒன்று கனேடியத் தேர்தல் முடிவு மற்றயது தமிழ்நாட்டு ஆட்சி மாற்றம். அவையே ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை மற்றும் அனைத்துலக அழுத்தத்துடன் இணைந்து சிறீலங்காவின் தான்தோன்றித் தனமான வக்கற்ற சண்டித்தன அறிக்கைகளை அமைதியாக்கியது எனக் கருதப்படுகின்றது.

ஆனாலும் இடையில் கெஹெலிய விடுத்த அறிவிப்பான தமிழ்நாட்டு அரசியல் மாற்றம் தங்களுக்கு ஒன்றும் செய்துவிட முடியாது என்னும் சாரப்பட்ட அறிக்கை சிறீலங்காவில் தான் அதிக எதிர்ப்பைக் காட்டியிருந்தது. அதாவது தமிழ்நாட்டு அரசியலில் சிறீலங்காவின் அக்கருத்தை ஒரு பெரும் பெருட்டாக எடுத்து கொள்ளாது நியத்தை புரிந்தவர்களாக அனைவரும் நடந்து கொண்டது சிறீலங்காவை மேலும் கிலிகொள்ள வைத்துள்ளது.

இதை தொடர்ந்து அவசர அவரமாக வாழ்த்துக்கள், இணைந்து பணியாற்றும் அழைப்புக்கள், பம்மாத்து புலுடா என்று சிறீலங்கா தமது அனைத்து அஸ்திரங்களையும் ஏவிப்பார்த்தது. ஆனால் தமிழ்நாடு இன்றுவரை தலையாட்டவும்; இல்லை, எதுவும் பேசவும் இல்லை.

சிறீலங்காவின் பச்சைக்கொடி விளையாட்டுகளுக்கு, அதாவது வெள்ளைக் கொடியில் சிக்கித் தவிக்கும் சிறீலங்கா தமிழ்நாட்டுக்கு பச்சைக்கொடி காட்டி தப்பிவிட அன்று முதல் இன்றுவரை செய்யும் ஏமாற்று செப்படி வித்தையை இம்முறையும் காட்டிவிடலாம் என்பது கைநழுவிப் போக, சிறீலங்கா தமிழ்நாட்டை என்ன செய்யலாம் அங்கிருந்து கிளம்பும் தமிழர் ஆதரவுக்குரலை என்ன செய்யலாம் என்பது பற்றி ஈழமாகச் சிந்தித்தது. இதற்கு இந்திய மத்திய புலனாய்வு அமைப்பு நிச்சயம் உதவி இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.

இந்நிலையில் சோர்ந்து போய் இருந்த சிறீலங்காவுக்கு நோர்வேயில் விடுதலைப் புலிகளின் அனைத்துலகத் தொடர்பகத்தின் துணைப் பொறுப்பாளராக இருந்த நெடியவன் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்த செய்தி சற்று தைரியத்தை கொடுத்ததுடன், மீண்டும் ஒரு போர் வெற்றியை கொண்டாட சிங்கள மக்களிடையே இனவாதத்தை பரப்ப தமிழ் மக்களை சோர்வடையச் செய்ய நல்ல சகுனம் வாய்த்தது.

நெடியவன் நீதிமன்ற நெறிமுறைகளுடன் விசாரணை செய்யப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், அதனை ஒரு கைது நடவடிக்கைச் செய்தியாக்கி, நெடியவனைத் தம்மிடம் ஒப்படைக்கும்படி கொக்கரிக்க ஆரம்பித்தது சிறீலங்கா அரசாங்கம்.

அழித் தொழிக்கப்பட்டதாக தானே கூறிக்கொள்ளும் ஒரு அமைப்பை, நோர்வே தடை செய்யவேண்டும் என்று சிறீலங்கா கூச்சலிட்டவண்ணமும் உள்ளமை அனைவரும் அறிந்தது.

இந்த நிலையில் லங்காதீப என்னும் வெறும் இனவாதத்தில் பிளைப்பு நடாத்தும் பத்திரிகையை வைத்து பிறிதொரு இராஜதந்திரத்தை சிறீலங்கா அரங்கேற்ற முனைந்துள்ளது.

நெதர்லாந்தில் உள்ள சிறீலங்கா தூதரகத்தை மேற்கோள்காட்டுவதாகக் கூறி இச்செய்தியை வெளியிட்ட சிறீலங்கா அரசாங்கம், நெடியவனை தம்மி;டம் ஒப்படைக்ககோரிய கோரிக்கைக்கு என்ன பதில் என்பதற்கு இதுவரை எந்தவித பதிலும் இன்றி தவிக்கும் நிலையில் கொழும்பு ஊடகங்களில் தற்போது அந்தச் செய்தி மறைந்து போயுள்ளதை அவதானிக்கலாம்.

இது பற்றிய செய்திகளை அடிக்கடி வெளியிட்டு, சிங்களவர்களை மனச்சோர்வடையச் செய்யாது தொடர்ந்தும் இனவாதத் துடிப்பில் வைத்திருக்க சிறீங்கா அரச பயங்கரவாத நிகழ்ச்சி நிரலில் செயற்பாடுகள் தொடருகின்றன.

புலம்பெயர் நாடுகள், தமிழ்நாட்டில் உள்ள தமிழீழ ஆதரவாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் அனைவர் பற்றிய தகவல்களும் தமக்கு தெரிய வந்துள்ளதாக ஒரு புரளியைக் கிளப்பி, அங்குள்ள செயற்பாட்டாளர்கள் தமிழீழ ஆதரவாளர்களை அச்சத்தில் ஆழ்த்தி, தமிழ்நாட்டிலும், உலகெங்கும் பொங்கிப் பெருவகிக்கும் தமிழ் உணர்வை அடக்கிவிடலாம் என்பது அவ் செய்தியின் சிறீலங்காவின் உள்நோக்கம்.

கிடைத்த சந்தர்ப்பத்தில் இவ்வாறு புரளியைக்கிளப்பி, உண்மையிலேயே அச்சத்தில் உறைந்துபோயுள்ள தனக்கு தானே ஒத்தடம் போட்டுக்கொள்ள முனைகின்றது சிறீலங்கா.

சிறீலங்கா அரசாங்கமும், அதன் புலனாய்வுக் கட்டமைப்பும் வெளியிடும் இவ்வாறான தகவல்களின் உண்மைத் தன்மைகளை அறிந்து ஆராயாது, கொழும்புப் பத்திரிகைகளில் வெளியாகும் செய்தியை மொழிபெயர்த்து வெளியிட்டு தமிழ் மக்கள் மத்தியில் குறிப்பாக தாயக மக்களிற்கான விடிவை, முடிவைப் பெற்றுக்கொடுக்கும் சக்தியாகவுள்ள புலம்பெயர்ந்த, தமிழ்நாட்டு உறவுகளைக் குழப்புகின்றோம் என்ற எந்தவித குற்ற உணர்வும் ஒரு சில தமிழ் ஊடகங்களில் காணவில்லை.

ஒருவர் பற்றி செய்தியை சிங்களம் வெளியிட்டால், அதற்கு ஒத்து ஊதுவது போன்று, அவர்களுக்கு ஆபத்து இருக்கின்றது என அறிந்திருந்தும் குறித்த நபரது படங்களை வெளியிடுவதையும், அவர் எங்கு இருக்கின்றார், என்ன செய்கின்றார் போன்ற விடயங்களை வெளியிடுவதையும், சொந்த பெயரை வெளியிடுவதையும் அவசியம் அற்ற நிலையில் தவிர்க்கலாம் என்ற அடிப்படையைக்கூட தமிழ் ஊடகங்கள் மறந்து விடுகின்றன.

ஆனால் தமிழ் மக்களின் செயற்பாட்டாளர்கள் இங்கு விழிப்புடன் செயற்பட வேண்டிய அவசியமும் சுட்டிக்காட்டப்படுகின்றது. இந்தச் செய்திகள் புரளியாக இருந்தாலும் சிறீலங்காவின் இராஜதந்திரத்துக்குள் சிக்காமல் சர்வதேச சட்டத்தின்படி நகர்ந்தால் சிறீலங்காவால் எதையும் செய்து விட முடியாது.

நாம் அனைத்தையும் இழந்த போதிலும், மீண்டெழும் சாம்பல் பறைவைகள் என்பதை மனதில் கொண்டு செயற்படும் அதேவேளை, சிறீலங்காவின் இவ்வாறான பூச்சாண்டிக்கு அஞ்சுவதாக காட்டிக் கொண்டால் சிறீலங்கா மீண்டும் உயிர்த்துவிடும். தமிழ் மக்களை அழிக்க நினைக்கும் சில வெளிச் சக்திகளுக்கும் இதற்கு நெய்யூற்றிவிடும்.

சிறீலங்காவைவிட தமிழர்கள் சாணக்கியர்கள் என்பது விரைவில் சிறீலங்காவுக்கு புரியவைக்கப்படும்வரை, தமிழ் மக்கள் குறிப்பாக புலம்பெயர்ந்த, மற்றும் தமிழ்நாட்டிலுள்ள தமிழ் மக்கள் அமைதியாகவும், பெறுமையாகவும், வெதானமாகுவும் செயற்பட வேண்டும் என்பதே தாயகத்திலுள்ள எம் போன்றவர்களின் விருப்பாகும்.

http://www.facebook.com/notes/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%80%E0%AE%B4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/10150193829207936

  • கருத்துக்கள உறவுகள்

நெடியவன் விசாரணையின் பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்

நோர்வேயிலை பாலியல் வல்லுறவு, கொலை, கடத்தல் செய்யிற வேறு குற்றவாளிகளையும் விசாரிச்சுப்போட்டு வெளியிலைதான் விடுறவையாம் எண்டு கேள்விப்பட்டிருக்கிறன் அண்ணோய்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.