Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உங்களைக் காட்டிக்கொடுக்க மாட்டோம்: இலங்கைப் படையினரிடம் ராஜபக்ஷே உறுதி

Featured Replies

கொழும்பு, மே 27,2011

சர்வதேச அளவில் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், "உங்களைக் ஒருபோதும் காட்டிக்கொடுக்க மாட்டோம்," இலங்கைப் படையினரிடம் அந்நாட்டு அதிபர் ராஜபக்ஷே இன்று உறுதியளித்தார்.

விடுதலைப்புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு, இரண்டு ஆண்டுகள் ஆனதையொட்டி, காலிமுகத் திடலில் தமது நாட்டின் படையினர் முன்பு இலங்கை அதிபர் ராஜபக்ஷே இன்று தனது உரையில் கூறியது:

"பழைய காயங்களைப் பெரிதாக்கி, மக்கள் மத்தியில் கலவரத்தை ஏற்படுத்த சில சக்திகள் முயற்சித்து வருகின்றன. அதற்கு நாம் இடமளிக்கப்போவதில்லை. அரசுடன் இணைந்து நாட்டையும் நாட்டு மக்களையும் முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல அரசியல் கட்சிகள் முன்வர வேண்டுமே தவிர, அரசுக்கு எதிரான சதி நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது.

போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு நாடு தற்போது ஒன்றுபடுத்தப்பட்டு, அனைத்து இன மக்களும் சமமாக வாழ வழிவகுத்ததற்காக இந்த யுத்த வெற்றி விழா கொண்டாடப்படுகிறது. போரில் பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கான மக்கள் மீட்கப்பட்டு, இயல்பு வாழ்க்கைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், அரசியல் அமைப்புக்குள் மனித உரிமைகளை உள்ளடக்கி, சர்வதேசத்திடம் சமர்பிப்பதன் மூலம் நாட்டின் மனித உரிமையை பாதுகாக்க முடியாது. மக்கள் சுதந்திரமாக வாழக்கூடிய சூழலை உருவாக்குவதன் மூலமே மனித உரிமைகளை பாதுகாக்க முடியும்.

வெளிநாடுகளில் வாழும் பழைய பயங்கரவாதிகள் மீண்டும் நாட்டுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர்.

வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களைப் பெற்றுச் செல்லும் அவர்கள், அந்நாடுகளிலுள்ள ஜனநாயக உரிமைகளைப் பயன்படுத்தி இலங்கைக்கு எதிரான சதி வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இது அனைவரும் அறிந்த உண்மையே.

அதேநேரத்தில், உண்மையின் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதன் மூலமே ஒரு நாட்டில் குழப்பம் ஏற்படுத்தப்படுகிறது. அந்த நிலைமையே எமது நாட்டிலும் தற்போது ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. அதனாலேயே போரை முடிவுக்கு கொண்டுவந்த எமது போர் வீரர்களுக்கு எதிராக தற்போது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

ஒரு கையில் துப்பாக்கியும் மறு கையில் மனிதாபிமானத்தையும் வைத்துக்கொண்டே எமது படையினர் யுத்த களத்தில் மனிதாபிமான நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் சாதி, மதம் என்பவற்றைப் பார்க்கவில்லை.

ஆனால், எமது படையினருக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது மிகவும் தவறு.

படையினரே... யுத்த காலத்தில் நாம் உங்களுடன் இருந்தோம். எமது இதயங்களில் நீங்கள் குடிகொண்டிருக்கின்றீர்கள். இந்நிலையில், உங்களை நாம் ஒருபோதும் காட்டிக் கொடுக்கப்போவதில்லை.

எமது உள்நாட்டு பிரச்னைகளுக்கான தீர்வுகளைப் பெற்றுக் கொள்வதற்கும் எமது மக்கள் எமக்கு உதவுவர். அதில், வெளிநாட்டினர் தலையீட்டுக்கு ஒருபோதும் இடமில்லை.

சர்வதேச நாடுகளைப் போன்று நாட்டின் தேசிய ஒருமைப்பாட்டை மீறும் சம்பவங்கள் இங்கு இல்லை. வடக்கு கிழக்கு உட்பட நாட்டின் அனைத்துப் பிரதேச மக்களும் யுத்திமின்றி, நாட்டில் சுதந்திரக் காற்றை சுவாசித்து, இயல்பு வாழ்க்கையை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கின்றனர்," என்றார் ராஜபக்ஷே.

vikatan.com

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச அளவில் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், "உங்களைக் ஒருபோதும் காட்டிக்கொடுக்க மாட்டோம்," இலங்கைப் படையினரிடம் அந்நாட்டு அதிபர் ராஜபக்ஷே இன்று உறுதியளித்தார்.

விடுதலைப்புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு, இரண்டு ஆண்டுகள் ஆனதையொட்டி, காலிமுகத் திடலில் தமது நாட்டின் படையினர் முன்பு இலங்கை அதிபர் ராஜபக்ஷே இன்று தனது உரையில் கூறியது:

"பழைய காயங்களைப் பெரிதாக்கி, மக்கள் மத்தியில் கலவரத்தை ஏற்படுத்த சில சக்திகள் முயற்சித்து வருகின்றன. அதற்கு நாம் இடமளிக்கப்போவதில்லை. அரசுடன் இணைந்து நாட்டையும் நாட்டு மக்களையும் முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல அரசியல் கட்சிகள் முன்வர வேண்டுமே தவிர, அரசுக்கு எதிரான சதி நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது.

போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு நாடு தற்போது ஒன்றுபடுத்தப்பட்டு, அனைத்து இன மக்களும் சமமாக வாழ வழிவகுத்ததற்காக இந்த யுத்த வெற்றி விழா கொண்டாடப்படுகிறது. போரில் பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கான மக்கள் மீட்கப்பட்டு, இயல்பு வாழ்க்கைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், அரசியல் அமைப்புக்குள் மனித உரிமைகளை உள்ளடக்கி, சர்வதேசத்திடம் சமர்பிப்பதன் மூலம் நாட்டின் மனித உரிமையை பாதுகாக்க முடியாது. மக்கள் சுதந்திரமாக வாழக்கூடிய சூழலை உருவாக்குவதன் மூலமே மனித உரிமைகளை பாதுகாக்க முடியும்.

வெளிநாடுகளில் வாழும் பழைய பயங்கரவாதிகள் மீண்டும் நாட்டுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர்.

வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களைப் பெற்றுச் செல்லும் அவர்கள், அந்நாடுகளிலுள்ள ஜனநாயக உரிமைகளைப் பயன்படுத்தி இலங்கைக்கு எதிரான சதி வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இது அனைவரும் அறிந்த உண்மையே.

அதேநேரத்தில், உண்மையின் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதன் மூலமே ஒரு நாட்டில் குழப்பம் ஏற்படுத்தப்படுகிறது. அந்த நிலைமையே எமது நாட்டிலும் தற்போது ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. அதனாலேயே போரை முடிவுக்கு கொண்டுவந்த எமது போர் வீரர்களுக்கு எதிராக தற்போது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

ஒரு கையில் துப்பாக்கியும் மறு கையில் மனிதாபிமானத்தையும் வைத்துக்கொண்டே எமது படையினர் யுத்த களத்தில் மனிதாபிமான நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் சாதி, மதம் என்பவற்றைப் பார்க்கவில்லை.

ஆனால், எமது படையினருக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது மிகவும் தவறு.

படையினரே... யுத்த காலத்தில் நாம் உங்களுடன் இருந்தோம். எமது இதயங்களில் நீங்கள் குடிகொண்டிருக்கின்றீர்கள். இந்நிலையில், உங்களை நாம் ஒருபோதும் காட்டிக் கொடுக்கப்போவதில்லை.

எமது உள்நாட்டு பிரச்னைகளுக்கான தீர்வுகளைப் பெற்றுக் கொள்வதற்கும் எமது மக்கள் எமக்கு உதவுவர். அதில், வெளிநாட்டினர் தலையீட்டுக்கு ஒருபோதும் இடமில்லை.

சர்வதேச நாடுகளைப் போன்று நாட்டின் தேசிய ஒருமைப்பாட்டை மீறும் சம்பவங்கள் இங்கு இல்லை. வடக்கு கிழக்கு உட்பட நாட்டின் அனைத்துப் பிரதேச மக்களும் யுத்திமின்றி, நாட்டில் சுதந்திரக் காற்றை சுவாசித்து, இயல்பு வாழ்க்கையை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கின்றனர்," என்றார் ராஜபக்ஷே.

vikatan.com

பழைய காயங்களைப் பெரிதாக்கி, மக்கள் மத்தியில் கலவரத்தை ஏற்படுத்த சில சக்திகள் முயற்சித்து வருகின்றன. அதற்கு நாம் இடமளிக்கப்போவதில்லை. அரசுடன் இணைந்து நாட்டையும் நாட்டு மக்களையும் முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல அரசியல் கட்சிகள் முன்வர வேண்டுமே தவிர, அரசுக்கு எதிரான சதி நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது.

அண்ணல் திருமா வழிய பாலோ செய்து தலீத்துகளுக்கு இரட்டை வாக்குரிமை போல ...ஓ சிங்கள கிரவுடு அதிகம் என்றால் 3 4.. என்று கூட அங்குள்ள தமிழர் கூட்டமைப்பு கோரவேண்டும்

போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு நாடு தற்போது ஒன்றுபடுத்தப்பட்டு, அனைத்து இன மக்களும் சமமாக வாழ வழிவகுத்ததற்காக இந்த யுத்த வெற்றி விழா கொண்டாடப்படுகிறது. போரில் பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கான மக்கள் மீட்கப்பட்டு, இயல்பு வாழ்க்கைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

சும்மா டமாஸ் பண்ணாதப்பா..

இந்த நிலையில், அரசியல் அமைப்புக்குள் மனித உரிமைகளை உள்ளடக்கி, சர்வதேசத்திடம் சமர்பிப்பதன் மூலம் நாட்டின் மனித உரிமையை பாதுகாக்க முடியாது. மக்கள் சுதந்திரமாக வாழக்கூடிய சூழலை உருவாக்குவதன் மூலமே மனித உரிமைகளை பாதுகாக்க முடியும்.

ஒன்றை கூர்ந்து கவனித்தால் தீர்வு எதும் இல்லை என்று சொல்ல்வதற்கு என்னா வில்லத்தனம் .. டிவிஸ்டு...

ஒரு கையில் துப்பாக்கியும் மறு கையில் (...........) வைத்துக்கொண்டே எமது படையினர் யுத்த களத்தில் (...........) நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் சாதி, மதம் என்பவற்றைப் பார்க்கவில்லை.

:( :( :( :( :(

படையினரே... யுத்த காலத்தில் நாம் உங்களுடன் இருந்தோம். எமது இதயங்களில் நீங்கள் குடிகொண்டிருக்கின்றீர்கள். இந்நிலையில், உங்களை நாம் ஒருபோதும் காட்டிக் கொடுக்கப்போவதில்லை.

போக போக தெரியும் இந்த........

  • கருத்துக்கள உறவுகள்

உங்களைக் காட்டிக்கொடுக்க மாட்டேன் என்று மகிந்தன் சொல்வதிலிருந்தே புரிகிறது வன்னிப் போரில் மனிதஉரிமைமீறப்பட்டு போர்குற்றத்தில் படையினர் ஈடுபட்டனர் என்பது.

சர்வதேச பார்வையில் போர்க்குற்றங்களுக்காக தண்டிக்கப்படவேண்டியவர்கள் படையை வழிநடத்தியவர்களும் அதற்கு உத்தரவுகளை வழங்கியவர்ககளுமேயன்றி தனிப்பட்ட படைவீரனல்ல.

இப்படிப்பார்ப்பதானால் மகிந்த, கோத்தபாய உட்பட ஆட்சியில் இருந்த அனைத்து தலைவர்களும் போர் குற்றாவாளிகளாகவே கருதப்படுவர்.

இதுகூடபுரிந்துகொள்ளமுடியாத மகிந்தன் காட்டிக்கொடுக்கமாட்டேன் என்று சொல்லி சாதாரண படைவீரர்கள்தான் குற்றம்புரிந்தவர்கள் என்று பாசாங்கு பண்ணுகிறான்.

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தரும் காட்டிக் கொடுக்க மாட்டேன் என்கிறார்!

பொன்னரும் காட்டிக் கொடுக்க மாட்டேன் என்கிறார்!

நாங்கள் தான் தேடித் பிடிக்க வேண்டும்!!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.