Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மீனவர்கள் தாக்குதலின் பின்னணியில் கேபி! - குமுதம் ரிப்போட்டர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

94768079.jpg

போதி மரத்தில் புத்தனுக்கு ஞானம் வந்தது போல, கோத்தபய ராஜபக்ஷேவின் நிழலில் கே.பி. என்றழைக்கப்படும் குமரன் பத்மநாபனுக்கு ஞானம் பிறந்துள்ளது. 2009 மே மாதம் இலங்கையில் போர் முடிவுக்கு வந்த பின்னர், இலங்கை அரசு தொடங்கிய இரண்டாவது போர் தமிழ் மக்கள் மீதான ‘உளவியல் யுத்தம்’ தான். அப்படி பேரினவாத இலங்கை அரசின் உளவியல் போருக்காக மலேஷியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவர்தான் இந்த குமரன் பத்மநாபன்.

சமீபத்தில் கே.பி. நேர்காணல் ஒன்றில், ராஜீவ் மரணத்தோடு தொடர்புபடுத்தி தமிழகத் தலைவர்கள் குறித்துப் பேசியிருக்கிறார். ஐ.நா.வின் அறிக்கைக்குப் பின்னர் ஈழப்படு கொலைகள் தொடர்பாக ஒரு நிலைப்பாடு எடுத்தாக வேண்டிய சூழல் தமிழகத்தில் நிலவுகிறது. குறிப்பாக ஜெயலலிதா ‘‘இலங்கை அரசின் மீது பொருளாதாரத் தடை கொண்டு வரும்படி மத்திய அரசை வலியுறுத்துவேன்’’ என்று அறிவித்திருக்கிறார்.

இந்த நிலையில், ராஜீவ் மரணத்தை வைத்து ஜெயலலிதாவுக்கும் கருணாநிதிக்கும் இடையிலான தனிப்பட்ட மோதலாக மட்டுமே ஈழம் இருக்க வேண்டும். அதற்கப்பால் இருவருமே, குறிப்பாக ஜெயலலிதா இதில் ஒரு நிலைப்பாடு எடுக்கக் கூடாது என்கிற நோக்கில்தான் கே.பி. பேசியிருக்கிறார் என்பது புரிகிறது.

மலேஷியாவில் பிடிபட்டு கொழும்பு கொண்டு செல்லப்பட்ட கே.பி. உயிருக்குப் பயந்து இலங்கை அரசின் நம்பிக்கைக்குரிய பிரசாரகராக மாறிவிட்டார். உலகெங்கும் இ ருக்கும் புலிகளின் சொத்துக்களை மீட்பதும், புலம்பெயர் தமிழர்களின் நிதியாதாரங்களை கொழும்பில் குவிப்பதும், தமிழகத்தில் எழுந்துள்ள எதிர்ப் பலையை நசுக்கி கு ழப்பத்தை உருவாக்குவதும்தான் கே.பி.க்கு இலங்கை அரசு வழங்கியுள்ள பொறுப்பு. அதற்காக மட்டுமே கே.பி.க்கு உயிர்ப்பிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது.

ஐ.நா. அறிக்கை குறித்து கருத்துத் தெரிவித்துள்ள கே.பி., ‘‘ஐ.நா. அறிக்கையின்படி, இரு தரப்புகளுமே தவறிழைத்துள்ளன. இந்த அறிக்கை தமிழ் மக்களுக்கு ஒரு இடைஞ்சல்’’ என்றெல்லாம் கூறியிருக்கிறார். உண்மையில் ஐ.நா.வின் போர்க்குற்ற அறிக்கை இறுதிப் போரின் போது நடந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்டது. அந்த அறிக்கை தமிழீழ விடுதலைப்புலிகள் மீதும் இலங்கை அரசின் மீதும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளை பட்டியலிடுகின்றது என்பது உண் மைதான்.

ஐ.நா.வின் அறிக்கையை தமிழர் தரப்பு ஏற்றுக் கொள்ளும் என்றால், இயல்பாகவே புலிகள் மீதான குற்றச்சாட்டுகளையும் ஏற்றுக் கொள்கிறது என்றுதான் பொருள். ஆனால், முப்பதாண்டு காலம் போராடிய புலிகள் இன்று இல்லை. தவிரவும் போரைத் தொடுத்தது இலங்கை அரசு. போரைத் தடுத்து நிறுத்தி தங்களின் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளை தக்க வைக்கப் போராடியவர்கள் விடுதலைப்புலிகள் என்னும் நிலையில், போர் தொடுத்த பேரினவாத அரசையும் போரை எதிர்கொண்ட புலிகளையும் ஒரே அளவுகோலில் வைத்துக் காண முடியாது.

இதைத்தான் ‘இரு தரப்பும் தவறிழைத்திருக்கிறது’ என்று போராளிக் குழுவையும் பேரினவாத அரசையும் ஒன்று என்பது போன்ற தோற்றத்தை உருவாக்குகிறார் கேபி. இனப்படுகொலை, அரசியல் தீர்வு, தமிழீழம் என்றெல்லாம் பேசினால் வன்னி மக்களை சிங்கள அரசு வாழ விடாது என்ற பிரசாரம் உலகம் முழுக்க உள்ள இலங்கை அரசு ஆதரவாளர்களால் முன்னெடுக்கப்படுகிறது.

‘இதெல்லாம் பேசாமல் இருந்தால் மட்டும் வதை முகாம்களில் உள்ள மக்களின் பாரம்பரிய இடங்களை அவர்களிடம் ஒப்படைத்து விடுமா இலங்கை அரசு?’ என்று கே ட்டால், மௌனம் காக்கிறார்கள். தமிழ் மக்களின் பாரம்பரிய இடங்களை சிங்கள மயமாக்குவதும், உலகிலேயே பிரமாண்டமான புத்தர் சிலையை வவுனியாவில் அமைப்ப தும், தமிழ் மக்களின் வழிபாட்டுத்தலங்களை அபகரித்து பௌத்த ஆலயங்களை அமைப்பதும் என ஒட்டுமொத்த இலங்கையையும் ஒரு பௌத்த மேலாதிக்க சிங்களப் பேரினவாத நாடாக மாற்றுவதே இலங்கை அரசின் திட்டம்.

‘‘தமிழீழம் இனி தேவையில்லை, அந்த மக்களுக்குத் தேவை பாலும் உணவும்தான். இனி தமிழீழப் போராட்டத்தை புகலிடத் தமிழர்கள் உருவாக்குவார்கள் என்றால், அவர்கள் முதலில் என்னைக் கொன்று விட்டுத்தான் அதைச் செய்ய முடியும்’’ என்கிறார் கே.பி. மாபெரும் இன அழிப்புப் போர் முடிவுக்கு வந்த பின்னர், புகலிடத் தமிழர்கள் யாருமே இலங்கையில் ஆயுதப் போராட்டம் வெடிக்கும் என்று சொல்லவும் இல்லை. அதற்காக நிதிகளை கொடுத்ததாகவும் தெரியவில்லை.

புலிகளின் நிதி கட்டமைப்பு பல கூறுகளாக தனி மனிதர்களிடம் குவிந்து கிடக்கும் அதே வேளையில், ஒழுங்குபடுத்தப்பட்ட தலைமை ஒன்றின் கீழ் தமிழீழப் போராட்டத் திற்காக நிதி வசூலிக்கும் சூழலே இப்போது இல்லை. பாலுக்கும் கூழுக்கும் கையேந்தி நிற்கும் வன்னி மக்களுக்கு புகலிடத் தமிழர்கள் அனைவருமே உதவிக் கொண்டி ருக்கிறார்கள். கள நிலைமையைப் புரிந்து கொண்டு அவர்கள் செயல்படுகிற அதே நேரம் தமிழீழம் என்னும் கோரிக்கை கைவிடப்பட்டுள்ளதா?

60, 70 களில் ஏன் கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட, சுதந்திர தமிழீழம் கோருவதற்கான காரணங்கள் இன்று ஆயிரம் மடங்கு அதிகரித்துள்ளது. ஆனால் தனி ஈழத்திற்காகப் போராடுவது யார்? வாழ்விடங்களை இழந்து உண்ண உணவில்லாமல், முடமாக்கப்பட்டுள்ள அந்த மக்களா? என்ற கேள்வியை மட்டுமே இயல்பில் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. தமிழீழ விடுதலைப் போரில் கடக்கவியலா பெருங்கேள்வி இதுதான். இந்தக் கேள்வியையும் வன்னி மக்களின் இன்றைய நிலையையும் வைத்தே இவர்கள் ஒரு தேசிய இன விடுதலையின் வேரை வெட்ட நினைக்கிறார்கள். அந்த மக்களிடமிருந்து பிடுங்கப்பட்டுள்ள நிலம், உணவு, உடை என எல் லாவற்றையும் ஒரு நிவாரணப் பிரச்னையாக மட்டுமே சுருக்கி இவர்கள் அவர்களின் அரசியல் உரிமைகள் குறித்தும் சிவில் உரிமைகள் குறித்தும் பேச மறுக்கின்றனர்.

இலங்கை அரசின் கையாட்களாகச் செயல்படும் கே.பி. போன்றோர் அதையே மக்களைக் குழப்பும் ஆயுதமாகப் பயன்படுத்துகிறார்கள். இதற்கப்பால் ஈழம், வன்னி மக்களின் நிலை, இறுதிப் போரின் போது போராளிகள் தரப்பில் நடந்த தவறுகள் இருக்கத்தான் செய்கின்றன. அதை பேரினவாத இலங்கை அரசின் நிழலில் நின்று கொண்டு பேசுகிற குரல் ஜனநாயகக் குரல் அல்ல.

கே.பி. மூலமாக இலங்கை அரசு தமிழர்களை மண்டியிட வைக்க தன்னார்வக் குழுவைத் தொடங்கியது. சில மாதங்களுக்கு முன்னர் புகலிடத் தமிழ்ப் பிரமுகர்களை ரகசியமாக கொழும்புக்கு வரவழைத்து பேச்சுவார்த்தை ஒன்றையும் நடத்தியது. லண்டனில் இருந்து அக்குழுவில் சென்று வந்த டாக்டர் அருள் குமார் என்பவர் லண்டன் திரும்பியதும் பல உண்மைகளைப் போட்டுடைத்தார். ‘கே.பி. இலங்கை அரசின் கைக்கூலி என்றும், புகலிடத் தமிழர்களை இலங்கை அரசிடம் மண்டியிட வைத்து அவர்களிடமிருந்து பெருமளவு பணங்களை பெற்றுக் கொள்வதும், இலங்கைக்கு எதிரான எண்ணங்களை நீர்த்துப் போகச் செய்வதுமே கே.பி.யின் நோக்கம்’ என்றார்.

புகலிடத் தமிழர்கள் மட்டுமல்லாது தமிழக மீனவர் பிரச்னையை அணுகும் பொறுப்பும் கே.பி.யிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. சமீபகாலமாக தமிழக மீனவர்களைச் சுட்டுக் கொல்வது ராணுவ உடையில் வந்த கூலிப்படைகளே என்று சொல்கிறார்கள். அதில் கே.பி.யின் கையும் இருக்கலாம். ஏனென்றால், தமிழக மீனவர் பிரச்னை தொடர்பாக வன்மம் தோய்ந்த வரிகளைக் கொட்டியவர்கள் இருவர். ஒருவர் டக்ளஸ் தேவானந்தா. இன்னொருவர் கேபி.!

டி. அருள்எழிலன்

இந்த நிலையில், ராஜீவ் மரணத்தை வைத்து ஜெயலலிதாவுக்கும் கருணாநிதிக்கும் இடையிலான தனிப்பட்ட மோதலாக மட்டுமே ஈழம் இருக்க வேண்டும். அதற்கப்பால் இருவருமே, குறிப்பாக ஜெயலலிதா இதில் ஒரு நிலைப்பாடு எடுக்கக் கூடாது என்கிற நோக்கில்தான் கே.பி. பேசியிருக்கிறார் என்பது புரிகிறது.

டி. அருள்எழிலன் சிங்களத்தின் பரப்புரை பயங்கரவாதத்தை அழகாக சொல்லியுள்ளார்.

இதை முதலமைச்சர் அவர்களும் புரிந்து நடப்பார் என நம்புவோம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆரம்பத்தில் இருந்தே இந்திய உளவு அமைப்புடன் சேர்ந்து செவ்வனே திட்டமிட்டு, முள்ளிவாய்க்கால் வரையும் புலிகளை அழைத்துச் சென்று, முழுப் போராட்ட்டத்தையுமே குழியில் புதைத்த தனி மனிதன் தான் இவர்!!!

எமது இனம் உள்ளவரை இவரை உலகத் தமிழினம் இவரை மன்னிக்கக் கூடாது!

ஆரம்பத்தில் இருந்தே இந்திய உளவு அமைப்புடன் சேர்ந்து செவ்வனே திட்டமிட்டு, முள்ளிவாய்க்கால் வரையும் புலிகளை அழைத்துச் சென்று, முழுப் போராட்ட்டத்தையுமே குழியில் புதைத்த தனி மனிதன் தான் இவர்!!!

எமது இனம் உள்ளவரை இவரை உலகத் தமிழினம் இவரை மன்னிக்கக் கூடாது!

அதுதான் உண்மை. இல்லையேல் இவ்வளவும் நடந்தேறி இருக்காது.

இந்தியன் இவனை விசாரிக்காமல் இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம்.

நம்பி நாசமா போனோம்.

தலைவர் இந்த நாசமாய் போனவனை எங்கை பிடிச்சாரோ.....

  • கருத்துக்கள உறவுகள்

கே.பியின் தீவிர ஆதரவாளர்கள் யாழிலும் உள்ளார்கள்.வார்த்தையை அளந்து பேசுங்கள். :wub::wub:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.