Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையும் ஜேயலலிதாவும்

Featured Replies

இலங்கை தொடர்பான இந்தியாவின் கொள்கையின் வடிவம் சிதைவடையுமானால் தமிழ்நாடு வெறும் அவதானியாக இருக்கமாட்டாது என்பதற்கான உறுதிமொழியாக ஜெயலலிதாவின் அறிக்கை அமைந்திருப்பதாக ஆசிய கற்கைகளுக்கான நிலையத்தின் சிரேஷ்ட ஆய்வாளர் வி.சூரியநாராயணன் குறிப்பிட்டுள்ளார்.

"ஜெயலலிதாவும் இலங்கை தொடர்பான இந்தியாவின் கொள்கையும்' என்ற தலைப்பில் சூரியநாராயணன் எழுதியுள்ள கட்டுரையில் நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் நேற்று செவ்வாய்க்கிழமை பிரசுரிக்கப்பட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது; முன்னொருபோதுமில்லாத வகையில் தேர்தலில் வெற்றிபெற்றதையடுத்து ஊடகங்களுடனான தனது முதலாவது சந்திப்பின்போது முதலமைச்சர் ஜெயலலிதா, இலங்கை தொடர்பான இந்திய மத்திய அரசாங்கத்தின் கொள்கையை மீளாய்வு செய்யுமாறு அழுத்தம் கொடுக்கப்போவதாக உறுதியளித்திருந்தார். நான்காவது ஈழப்போரின் இறுதிக்கட்டத்தின்போது இலங்கை அரசாங்கத்தால் இழைக்கப்பட்ட குற்றச்செயல்களை வெளிப்படுத்தி குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்துவது மட்டுமன்றி, இலங்கையிலுள்ள தமிழர்களுக்கு நீதி கிடைப்பதை உறுதிப்படுத்தும் விடயத்திற்கும் அழுத்தம் கொடுக்கப்போவதாக அவர் உறுதியளித்துள்ளார்.

இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவு கோரி காலத்திற்குப் பொருத்தமான தருணத்தில் ஜெயலலிதா விடுத்த வேண்டுகோளானது உலகளாவிய ரீதியில் தமிழர்களின் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. எவ்வாறாயினும் இந்த விடயமானது முக்கியமானதொரு கேள்வியை எழுப்புகிறது. இந்திய வெளியுறவுக் கொள்கையை உருவாக்குவதில் சமஷ்டி அலகுகளின் பங்களிப்பு என்ன? என்பதே அக்கேள்வியாகும்.

அயல் நாடுகளுடனான இந்தியா போன்றதொரு பெரிய நாட்டின் வெளியுறவுக் கொள்கையானது அந்தத் தேசங்களுடன் தொடர்புபட்டுள்ள இந்திய மாநிலங்களுடன் உடனடியாக சச்சரவை ஏற்படுத்தும் தன்மையைக் கொண்டிருக்கின்றது. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்குமிடையிலான உறவுகள் ஜம்புகாஷ்மீர், பஞ்சாப்,இராஜஸ்தான்,குஜராத் ஆகியவற்றுடன் உடனடி சச்சரவுக்குள் உட்படும் தன்மையைக் கொண்டிருக்கின்றன. சீனாவுடனான வெளியுறவுக் கொள்கையானது அருணாச்சலப் பிரதேசம்,சிக்கிம், உத்தரப்பிரதேசம், உத்தராஞ்சல், ஜம்புகாஷ்மீர் ஆகியவற்றில் தாக்கத்தையேற்படுத்தும்.

நேபாளத்துடனான கொள்கையானது பீகார்,சிக்கிம், உத்தராஞ்சல், உத்தரப்பிரதேசம் ஆகியவற்றுடன் விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய தன்மையைக் கொண்டதாகும். இந்தியாவுக்கும் பூட்டானுக்குமிடையிலான உறவுகள் மேற்குவங்கம்,அசாம்,அருணாச்சலப் பிரதேசம் மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களில் தாக்கத்தையேற்படுத்த வல்லவையாகவுள்ளன. மியன்மாருக்கும் (பர்மா) இந்தியாவுக்குமிடையிலான உறவு அருணாச்சலப் பிரதேசம்,மிஸோரம்,நாகலாந்து,மணிப்பூர் ஆகியவற்றுக்கிடையிலான சமன்பாடுகளைக் கொண்டதாக அமையும். அதேசமயம், இந்தியாவுக்கும் பங்களாதேஷûக்குமிடையிலான உறவுகள் மேற்குவங்கம் மேகாலயா,மிஸோரம், திரிபுரா,அசாம் ஆகியவற்றுக்கிடையிலே தொங்கிநிற்கிறது. அதேபோன்று இலங்கை தொடர்பான இந்தியாவின் வெளியுறவுக்கொள்கையின் விளைவுகள் தமிழ்நாட்டில் தங்கியுள்ளன.

இந்திய அரசியலமைப்பின் பிரகாரம் வெளியுறவுக் கொள்கையின் வடிவமைப்பும் அமுலாக்கமும் மத்திய அரசாங்கத்தின் சட்டவரையறைக்குள் பிரத்தியேகமாக வருகின்றது. உண்மையான நடைமுறையின்போது பல சந்தர்ப்பங்களில் தொடர்ச்சியாகவுள்ள இந்திய மாநிலங்களின் நலன்களை புதுடில்லி பலிகொடுத்துள்ளது. அத்தகைய கொள்கையானது மத்திய அரசாங்கத்துக்கும் சமஷ்டி அலகுகளுக்குமிடையில் முறிவுகளைத் தோற்றுவித்திருந்தது. இந்தப் பிரச்சினையானது இந்தியாவுக்கு மட்டும் தனித்துவமானதொன்றல்ல. அமெரிக்கா,சீனா, முன்னாள் சோவியத் ஒன்றியம் போன்ற பல நாடுகளுக்குப் பொதுவான விடயங்களாகவுள்ளன. யூகோஸ்லாவியாவில் அந்நாடு பல தேசங்களாகப் பிரிந்து செல்வதற்கு முன்னர் சமஷ்டி அலகுகள் வெளிவிவகாரத் திணைக்களங்களைத் தனித்தனியே கொண்டிருந்தன. வெளியுறவுக்கொள்கையை இந்த சமஷ்டி அலகுகள் நிர்வகிக்க வேண்டுமென்று நான் ஆலோசனை கூறவில்லை. ஆனால், இதுவொரு பொறிமுறை என்றே நான் குறிப்பிடுகின்றேன். அதாவது தொடர்ச்சியாகவுள்ள இந்திய மாநிலங்களின் நலன்கள் தொடர்பாக இந்தப் பொறிமுறை குறித்து நான் வேண்டுகோள் விடுக்கின்றேன்.

இந்த நலன்கள் மத்திய அரசாங்கத்தினால் பேணிப் பாதுகாக்கப்படுகின்றன. தமிழ்நாட்டு மக்களுக்கு சிறப்பானதாகவிருக்கும் விடயமானது இந்திய அரசாங்கத்திற்கு தீமையானதாக இருக்க வேண்டிய தேவையில்லை. இந்தியாவின் அயல் உறவுக் கொள்கையை உருவாக்கும் விடயத்தில் சமஷ்டி அலகுகள் வேறுபட்ட முறையில் தமக்குச் சாதகமான விடயங்களை உள்ளடக்கியவாறு சேர்த்துக் கொள்ளுதல் அவசியமானதாகும்.

தமிழ் நாட்டின் நலன்களை மோசமாகப் பாதிப்படைய வைத்த இந்தியாவின் இலங்கை தொடர்பான கொள்கை எவ்வாறு வழிநடத்தப்பட்டது என்பதற்கான சில விடயங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

1964 இல் ஸ்ரீமாவோசாஸ்திரி உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டது. இலங்கையிலுள்ள இந்திய வம்சாவளித் தமிழர்களின் பெருந்தொகையானவர்களுக்கு இந்தியப் பிரஜாவுரிமையை வழங்குவதென புதுடில்லி தீர்மானித்திருந்தது. இந்த விடயமானது ஜவஹர்லால் நேருவின் பரிசீலிக்கப்பட்ட கொள்கையில் ஏற்பட்ட பின்னடைவு மட்டுமன்றி, இலங்கையிலுள்ள பாதிக்கப்பட்ட மக்களின் விருப்பத்தை பரிசீலனைக்கு எடுக்காமல் மேற்கொள்ளப்பட்ட தீர்மானமுமாக உள்ளது.

தமிழ்நாட்டிலிருந்த சகல முக்கியமான தலைவர்கள்காமராஜ் நாடார், வி.கே.கிருஷ்ணமேனன்,சி.என்.அண்ணாத்துரை, பி.இராமமூர்த்தி ஆகியோர் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தனர். எவ்வாறாயினும் அச்சமயம், பொதுநலவாய செயலாளராகவிருந்த சி.எஸ்.ஜாவின் ஆலோசனையின் பிரகாரம் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி, இந்திய வம்சாவளி மக்களின் நலன்களைப் பாதுகாப்பதிலும் பார்க்க இலங்கை அரசாங்கத்துடன் அதிகளவு நட்புறவுக்கான ஆர்வத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

இரண்டாவது உதாரணமாக அமைவது கடல் எல்லை உடன்படிக்கையாகும். இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையில் 1974 இலும் 1976 இலும் உடன்படிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த உடன்படிக்கைகளின் விளைவாக இராமநாதபுரம் ராஜாவின் ஜமீனுக்குச் சொந்தமாகவிருந்த கச்சதீவு மட்டுமன்றி, கச்சதீவு இலங்கைக்கு வழங்கப்பட்டது மட்டுமன்றி, இந்திய மீனவர்கள் அனுபவித்து வந்த பாரம்பரியமான மீன்பிடி உரிமைகளும் கைவிடப்பட்டன. இதேபோன்றதொரு சூழ்நிலை 1950 களில் ஏற்பட்டிருந்தது. இத்தகைய நிலைமையை மத்திய அரசாங்கம் எதிர்கொண்டிருந்தது. கிழக்குப் பாகிஸ்தானுக்கு பேரூபாரியை மாற்றுவதற்கு மத்திய அரசாங்கம் தீர்மானித்திருந்தது. அச்சமயம், மேற்குவங்க முதலமைச்சராகவிருந்த பி.சி.ரோய், இந்த விவகாரத்தை உச்சநீதிமன்றத்துக்குக் கொண்டு சென்றார். வழக்கில் வெற்றிபெற்றார். இந்திய ஆட்புல எல்லை கையளிக்கப்படும் விடயம் தடுக்கப்பட்டது. இந்திய ஆட்புல எல்லையான கச்சதீவானது இலங்கைக்கு கைமாற்றப்படும்போது அதனைத் தடுப்பதற்கு 1974 இல் தமிழ்நாட்டில் ஆட்சியிலிருந்த தி.மு.க. அரசாங்கமானது ஏன் நீதித்துறை மூலம் நிவாரணத்தை நாடியிருக்கவில்லை என்பதற்கு எந்தவொரு திருப்திகரமான விளக்கமும் வழங்கப்பட்டிருக்கவில்லை.

பாக்குநீரிணையில் இலங்கை பக்கம் உள்ள மீன்வளம் கொண்ட பகுதியானது அடிக்கடி தமிழக மீனவருக்கும் இலங்கைக் கடற்படையினருக்கும் சச்சரவையேற்படுத்தும் இடமாக உருவாகியுள்ளது.இதன் விளைவாக இந்திய மீனவர்கள் பலரின் மரணத்துக்கு இந்த விடயம் இட்டுச் சென்றுள்ளது.

அண்மைய வருடங்களின்போது இலங்கை தொடர்பான இந்தியாவின் கொள்கைகளில் ஏற்பட்டிருக்கும் கடுமையான சிக்கல்களையும் திருப்பங்களையும் ஆய்வு செய்வதற்கான யோசனையாக இது முன்வைக்கப்படவில்லை. ஆனால், ஒரு உண்மையை இங்கு கோடிட்டுக்காட்ட வேண்டியது அவசியமானதாகும். அயல் நாடொன்றில் ஏற்பட்டுவரும் உள்மட்ட விவகாரங்களில் இந்தியா எத்தகைய செல்வாக்கைச் செலுத்த முடியும் என்பது குறித்து அவதானிக்கக்கூடிய எல்லைகள் உள்ளன. ஆனால், 1983 இல் லோக்சபாவில் பிரதமர் இந்திரா காந்தி, இலங்கையானது இப்போது மற்றொரு நாடாக இல்லையென்று கூறியிருந்தார். இலங்கையின் ஸ்திரத்தன்மை தொடர்பாக மட்டுமன்றி தமிழர்களின் கௌரவம்,நலன்கள் தொடர்பாக முக்கியமான பங்குடைமைகளையும் இந்தியா கொண்டுள்ளது. இந்தப் பரிமாணத்தின் அடிப்படையில் மனித உரிமை மீறல்கள் விடயத்தை சர்வதேசமயப்படுத்துவதில் தமிழர்களுக்கு புதுடில்லி உதவியளித்தது மட்டுமன்றி, பிரச்சினைக்கு இராணுவத்தீர்வு முன்னெடுக்கப்பட்டால் வெறுமனே மௌனமாக அவதானித்துக் கொண்டு தொடர்ந்தும் இந்தியா இருக்கப்போவதில்லையென்பதை கொழும்புக்கு தெளிவுபடுத்தியிருந்தது. 1987 மே இல் இந்திய விமானங்கள் யாழ்ப்பாணத்தில் உணவையும் மருந்துப் பொருட்களையும் வான்மார்க்கமாகப் போட்டபோது ஒருநாடு கூட இந்தியாவுக்கு எதிராக எதிர்ப்பைத் தெரிவிக்கவில்லை.

அத்தகைய செயற்பாட்டுத் திறனுடையதாக இந்தியாவின் கொள்கை அமைந்திருந்தது. ஆனால், 1987 முதல் பாக்கு நீரிணையின் ஊடாக அதிகளவு மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டன. இலங்கை தொடர்பான இந்தியாவின் கொள்கையானது மிக மோசமான விதத்தில் மாற்றமடைந்தமை மிகவும் துன்பியலாகும். புலிகளுக்கு எதிரான யுத்தமானது நான்காவது ஈழப்போரின் இறுதிக்கட்டங்களில் தமிழ்ப் பொதுமக்களுக்கு எதிரான யுத்தமாக பரிமாணம் பெற்றிருந்தது.சுமார் 40 ஆயிரம் அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இந்தியா வெறுமனே அமைதியான அவதானியாக இருந்தது.அத்துடன், ஐ.நா. வில் இலங்கையை இந்தியா பிணையெடுத்திருந்தது. எமக்கு வெட்கமான விடயமாக ஐ.நா.வில் நாங்கள் சீனாவுடனும் ஜெயலலிதா ரஷ்யாவுடனும் கூட்டுச்சேர்ந்திருந்தோம். இவற்றின் அடிப்படையில் வரவேற்புக்குரிய அறிவிப்பானது இந்தியாவின் இலங்கை தொடர்பான கொள்கையின் வடிவம் கெட்டுவிடுமேயானால் தமிழ்நாடு வெறுமனே சாட்சியமாகத் தொடர்ந்தும் இருக்காது என்ற உறுதிமொழியை வழங்குவதாகவுள்ளது.

http://www.thinakkural.com/news/all-news/india/5043-srilanka.html

Edited by komagan

  • கருத்துக்கள உறவுகள்

உலகத் தமிழரின் தலைவராக இருக்கக் கருணாநிதிக்குப் பல சந்தர்ப்பங்கள் கிடைத்தன!

அவரின் இன்றைய நிலையை நாங்கள் அறிவோம்!!!

சூரிய நாராயணா ஒரு 'இந்திய ஆய்வாளர்'

இவர் இந்தியாவை எச்சரிக்கின்றாரா அல்லது தமிழ் நாட்டுத் தமிழரை எச்சரிக்கின்றாரா என்பதில் தான் தெளிவில்லை!

அருணாச்சலப் பிரதேசத்தின் 'மாநில அரசின்' மயிரைக் கூட இந்தியா தொடாது! அவ்வளவு மதிப்பு சீனாவுக்கு!!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.