Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பகை முடிக்கும் நேரம்? தயாநிதியை கைகழுவும் தி.மு.க

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சோனியாவும் கைவிட... கட்சியும் கண்டுகொள்ளாமல் அமைதி காக்க... பகை முடிக்கும் நேரத்தில் களம் இறங்கியிருக்கிறார், சிவசங்கரன். இதனால் மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய நிர்பந்தத்துக்கு தயாநிதி மாறன் தள்ளப்பட்டுள்ளார்.

முரசொலி மாறன் மறைவுக்குப் பின்னர் கருணாநிதி குடும்பத்தில் இருந்து ஒருவரை டெல்லிக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது. அப்போது கருணாநிதி தேர்வு செய்தது, கனிமொழியைத்தான். ஆனால் கவிஞராக இருந்த கனிமொழி ‘பதவி ஆசை இல்லை’ என்று ஒதுங்கிக் கொண்டார். அப்போது, தயாநிதி மாறன் கனிமொழியோடு நல்ல உறவில் இருந்தார். இதைத் தொடர்ந்து ‘மாறன் பிள்ளைகளில் ஒருவரை டெல்லிக்கு அனுப்பலாம்’ என்று ராஜாத்தியம்மாள் மூலம் கனிமொழி காய் நகர்த்த, தயாநிதிக்கு அடித்தது யோகம்.

மத்திய சென்னை எம்.பி.யாகி மத்திய அமைச்சரவையிலும் இடம் கிடைத்தது. டெல்லியில் மிக வேகமாக செல்வாக்கை வளர்த்துக் கொண்ட தயாநிதி, சி.ஐ.டி. காலனிக்கு வருவதையே நிறுத்திக் கொண்டார். இது கனிமொழிக்கும், அவரது தாயாருக்கும் வருத்தத்தை ஏற்படுத்தியது.

தயாநிதி குடும்பத்தினர் நடத்தும் பத்திரிகையில் கருத்துக்கணிப்பு வெளியாக, அழகிரி பிரச்னை ஏற்படுத்தினார். இது குடும்பத்தில் பிளவை ஏற்படுத்த, மீண்டும் டெல்லிக்குப் போகும் வாய்ப்பு கனிமொழிக்கு வந்தது. தங்களை புறக்கணித்த தயாநிதிக்கு பாடம் புகட்ட, மத்திய அமைச்சராக இருந்த ராசாவை தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக உட்கார வைத்தார்.

மீடியாக்கள் இருப்பதால்தானே மாறன் சகோதரர்களுக்கு முக்கியத்துவம் கிடைக்கிறது என்று கருதிய கனிமொழி, அவர்களுக்குப் போட்டியாக கலைஞர் டி.வி.யை உரு வாக்குவதில் முனைப்புக்காட்டினார். இது மாறன் சகோதரர்களுக்கு பெரும் சரிவை ஏற்படுத்தியது. குடும்பத்தினர் மத்தியிலும் சன் டி.வி. பங்கு பிரித்ததில் இருந்த மோதல், கனிமொழிக்கு சாதகமானது.

இந்நிலையில்தான் ஸ்பெக்ட்ரம் விவகாரம் அரசல்புரசலாக வெளியே வர ஆரம்பிக்கிறது. உடன் மாறன் சகோதரர்கள் அதனைப் பெரிதுபடுத்தினர். ஊடகங்கள் வாயிலாக அந்த செய்திகளை வேகமாக பரவ வைத்தனர். இதற்கு பதிலளித்து ராசா பேசும் போதெல்லாம், ‘இதற்கு முன்னால் அமைச்சராக இருந்த தயாநிதி என்ன செய்தாரோ அதையே நானும் செய்தேன்’ என்று சொல்லி வந்தார். அப்போது அதன் அர்த்தம் யாருக்கும் தெரியவில்லை. இப்போதுதான் அது புரிகிறது.

தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக தயாநிதி மாறன் இருந்த போது தமிழகத்தைச் சேர்ந்த சிவசங்கரனின் ஏர்செல் நிறுவனத்திற்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு கேட்கிறார். தேவையில்லாத கேள்விகளைக் கேட்டு, அந்த விண்ணப்பங்களை நிறுத்தி வைக்கிறார், தயாநிதி.

சிவசங்கரனுக்கும் மாறன் சகோதரர்களுக்கும் இடையே ஏற்கெனவே மோதல் இருந்தது. அவர்கள் ஏர்செல் நிறுவனத்தை, மலேசியாவைச் சேர்ந்த தமிழர் ஆனந்தகிரு ஷ்ணனுக்கு விற்கச் சொல்கிறார்கள். அவர் மறுக்கவே அவரை கட்டாயப்படுத்தி விற்கச் சொன்னதாக சிவசங்கரன் குற்றம் சாட்டியுள்ளார்.

மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்துக்கு ஏர்செல் விற்கப்பட்டவுடன், ஏர்செல் நிறுவனம் கேட்டிருந்த ஸ்பெக்ட்ரம் அலைவரிசை உடனடியாக ஒதுக்கப்படுகிறது. இதன் மூலம் அரசுக்கு சுமார் ரூ.20 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டு இருப்பதாக இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதையெல்லாம் விட மேக்சிஸ் நிறுவனத்தினர் மாறன் சகோதரர்களின் நிறுவனமான சன் டி.டி.எச். நிறுவனத்தில் ரூ.599 கோடி ரூபாய் முதலீடு செய்தனர். அதே போல எப்.எம். ரேடியோவிற்கு ரூ.111 கோடி ரூபாய் முதலீடு செய்தனர். ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்ததாலேயே இந்த பணம் மாறன் சகோதரர்களின் நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்டதாக இப்போது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதற்குப் பதிலளித்த தயாநிதி மாறன், ‘நான் சன் டி.வி. நிறுவனத்தில் பங்குதாரராக இல்லை. நான் அமைச்சராக இருந்த போது இந்த பரிவர்த்தனை எதுவும் நடக்கவில்லை’ என்று சொல்லியிருக்கிறார். ஆனால் சி.பி.ஐ. தொடர்ந்து விசாரணை நடத்தி போதிய ஆவணங்களை எடுத்துவிட்டது என்று டெல்லி வட்டாரங்கள் சொல்கிறது. மூன்றாவது குற்றப்பத்திரிகையில் அவர் பெயர் இடம்பெறலாம் என்கிறார்கள்.

தமிழக தேர்தல் முடிவுகள் வந்த உடன் சிவசங்கரன் டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் தயாநிதிமாறன் மீது புகார் கொடுத்துள்ளார். இது தயாநிதிக்குத் தெரியாது. சமீபத்தில் கருணாநிதி டெல்லி சென்று கனிமொழியைப் பார்த்தார். அவரை மத்திய அமைச்சர்கள் சிதம்பரம், குலாம் நபி ஆசாத் ஆகியோர் நேரில் சந்தித்துப் பேசினர்.

அப்போது, ‘தயாநிதி மாறன் அமைச்சராக இருந்த போது, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கியதில் முறைகேடு செய்துள்ளார் என்றும், சுப்ரீம் கோர்ட் உத்தரவின் பேரில் நடக்கும் விசாரணையில் இருந்து அவர் தப்ப முடியாது. சி.பி.ஐ. போதிய ஆவணங்களை வைத்துள்ளது. நாடாளுமன்றக் கூட்டத் தொடர் ஆரம்பிக்கும் முன்பாக அவரை ராஜினாமா செய்யச் சொல்லுங்கள். அதுதான் இரண்டு கட்சிகளுக்கும் நல்லது’’ என்று சொல்லியிருக்கிறார்கள்.

இந்தத் தகவல் அரசல் புரசலாக தயாநிதி மாறனுக்குத் தெரிய வர, அவர் அவசர அவசரமாக சோனியாவைச் சந்தித்து முறையிட்டுள்ளார். ஆனால், அவர் என்னால் எதுவும் செய்ய முடியாது என்று கையை விரித்துவிட்டாராம். இதைத் தொடர்ந்து சென்னை வந்த தயாநிதி, கருணாநிதியைச் சந்தித்துப் பேசினார். அவரும் டெல்லி தலைவர்கள் சொன்ன தகவலைச் சொல்லியிருக்கிறார். அப்போதே தயாநிதி ராஜினாமா கடிதத்தை கருணாநிதியிடம் கொடுத்துவிட்டதாகவும் பேச்சு இருக்கிறது. இருந்தாலும், கடைசி முயற்சியாக இரண்டொரு நாட்களுக்கு முன்னால் டெல்லியில் பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்துப் பேசியிருக்கிறார், தயாநிதி. அமைச்சரவைக் கூட்டம் முடிந்து, பிரதமர் செல்லும் போது, பின்னாலேயே போய் தனியாக சுமார் 40 நிமிடங்கள் பேசியுள்ளார். அப்போது பிரதமரும், ‘என்னால் எதுவும் செய்ய முடியாது’ என்று சொல் லிவிட்டாராம்.

அதைத் தொடர்ந்து மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் கபில்சிபலை சந்தித்திருக்கிறார், தயாநிதி. அவரும் உங்கள் தரப்பு நியாயத்தை பத்திரிகைகளுக்கு சொல்லு ங்கள் என்று சொல்லி நழுவி இருக்கிறார். காங்கிரஸ் செய்தித் தொடர்பாளரிடம் தயாநிதி மாறன் ஊழல் பற்றிக் கேட்ட போது, ‘அதற்கு அவர்தான் பதில் சொல்ல வேண் டும்’ என்று சொல்லிவிட்டார்.

சி.பி.ஐ. தயாரித்து வரும் 3-வது குற்றப்பத்திரிகையில் தயாநிதி மாறன் பெயர் நிச்சயம் இடம் பெறும் என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அப்படி தயாநிதி மாறன் பெயர் இடம் பெற்றால் அவரும் கைதாவது தவிர்க்க முடியாது என்கிறார்கள்.

இந்த இக்கட்டான சூழ்நிலை குறித்து அரசியல் வட்டாரங்களில் வேறு விதமாக பேசப்படுகிறது. ‘‘ராசா, கனிமொழி போன்றவர்கள் சிறையில் இருப்பதற்கு மிக முக்கிய காரணம், மாறன் சகோதரர்கள்தான். அவர்கள் தங்களின் ஊடகங்களில் ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை ஊதி ஊதிப் பெரிதுபடுத்தினார்கள். டெல்லி தலைவர்கள் பலருக்கு இது பற்றித் தெரியாதபோதும், அவர்கள் பேட்டியை வெளியிட்டு வந்தனர். அதுதான் பூதாகரமானது. இன்று அதுவே அவர்களுக்கு எதிராகத் திரும்பியுள்ளது. அவர்களால் கனிமொழி, ராசா மட்டுமல்லாது, தொழிலதிபர் சிவசங்கரனும் பாதிக்கப்பட்டார். இப்போது சி.பி.ஐ.யின் துருப்புச் சீட்டு சிவசங்கரன்தான். அவர் இரண்டொரு நாளில் சி.பி.ஐ. கோர்ட்டில் மாறன் சகோதரர்கள் பற்றி ரகசிய வாக்குமூலம் அளிக்கப் போகிறார். மாறன் சகோதரர்களால் பாதிக்கப்பட்ட அவர், கனிமொழி மூலமாக ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு பெற்றார். அந்த விசுவாசத்துக்காக, கனிமொழியை சிறையில் தள்ள காரணமாக இருந்த தயாநிதிக்கு எதிராக வாக்குமூலம் கொடுக்கத் தயாராகியுள்ளார். இதைத் தெரிந்து கொண்டுதான், தயாநிதி மாறன் சிறையில் இருக்கும் கனிமொழியை சந்தித்துப் பேசினார். அவரும் ‘இது குறித்து எனக்கு எதுவும் தெரியாது’ என்று கையை விரித்துவிட்டாராம்.

கனிமொழி பெயரை குற்றப்பத்திரிகையில் சேர்க்கும் சூழ்நிலை வந்த போது, கூட்டணியில் இருந்து வெளியேற தி.மு.க. முடிவு செய்தது. அப்போது அதற்கு எதிராக இருந் தது தயாநிதிதான். டெல்லியில் உள்ள தலைவர்களிடம் பேசி கூட்டணியைக் காப்பாற்றினார். இப்போதுதான் புரிகிறது, அவர் தன்னைக் காப்பாற்றவே கூட்டணியில் இருந்து வெளியே போகக் கூடாது என்று சொல்லியிருக்கிறார். இதெல்லாம் கருணாநிதிக்கு தெரிந்ததாலேயே இந்த விஷயத்தில் அவரும் கைவிரித்துவிட்டார்’’ என்கிறார்கள் மூத்த தலைவர்கள்.

எது எப்படியோ கத்தரிக்காய் முற்றினால் கடைக்கு வந்துதானே ஆகவேண்டும்.

ஆனந்தகிருஷ்ணனுக்கு உதவியது ஏன்?

மாறன் சகோதரர்கள் மலேசியாவில் உள்ள ஆஸ்ட்ரோ தொலைக்காட்சி நிறுவனத்துடன் நீண்ட நாட்களாக தொடர்பில் இருக்கின்றனர். சன் தொலைக்காட்சியை வெளிநாடு களில் கொண்டு செல்ல அவர்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளனர். ஆனந்தகிருஷ்ணன் இலங்கையைச் சேர்ந்தவர். மலேசியாவில் பிரபலமான இரட்டைக் கோபுரத்துக்குச் சொந்தக்காரர். அவரைத் தாண்டி அங்கு யாரும் சேனல் கொண்டு வர முடியாது. இவர் இலங்கைத் தமிழர் என்பதால், எல்லா நாடுகளிலும் உள்ள தமிழர்களிடம் சன் டி.வி.யைக் கொண்டு செல்ல முடியும் என்பதாலேயே அவருக்கு ஸ்பெக்ட்ரம் கிடைக்க உதவி செய்ததாகவும் சொல்கிறார்கள்.

கசியும் அறிக்கை!

தயாநிதி மாறன் மத்திய அமைச்சராக இருந்த போது, தன்னுடைய வீட்டில் டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் வைத்துள்ளனர். அமைச்சரின் பயன்பாட்டுக்காக கொடுக்கப்பட்ட அந்த லைன்களை அவர்களின் வியாபாரத்திற்குப் பயன்படுத்தியுள்ளனர். இதனால் அரசுக்கு ரூ.400 கோடி இழப்பு ஏற்பட்டதாக பி.எஸ்.என்.எல். புகார் தெரிவித்தது. இது குறித்து 2008-ம் ஆண்டு ஜெயலலிதா விரிவான அறிக்கை கொடுத்தார். இதையடுத்து சி.பி.ஐ. விசாரணை நடத்தி, அந்த அறிக்கையை அரசுக்குக் கொடுத்தது. அப்போது மத்திய அமைச்சராக இருந்த ராசா அதை கருணாநிதியிடம் கொடுக்க, அதன் பின்னரே மாறன் சகோதரர்களின் மீடியாக்களில் ஸ்பெக்ட்ரம் செய்தி வெளி வருவது நின் றது. இரண்டு குடும்பங்களும் இணையவும் காரணமாக இருந்தது. இதையடுத்து சி.பி.ஐ. அனுப்பிய அறிக்கை கிடப்பில் போடப்பட்டது. மீண்டும் அதனை எடுத்து விசாரிக்க சி.பி.ஐ. தயாராகி வருகிறது. இந்த அறிக்கையும் மீடியாக்களுக்கு தொடர்ந்து கசியவிடப்படுகிறது.

உடனே வரும் வக்கீல் நோட்டீஸ்!

தயாநிதி மாறனின் ஸ்பெக்டரம் ஒதுக்கீடு ஊழல் குறித்து செய்தி வெளியிடும் பத்திரிகைகளுக்கு பல கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு உடனுக்குடன் வக்கீல் நோட்டீஸ் அனுப்பிவிடுகிறார்கள். முதலில் இது குறித்து செய்தி வெளியிட்ட எக்கனாமிக்ஸ் டைம்ஸ், டெகல்ஹா, இந்தியன் எக்ஸ்பிரஸ், இந்து ஆகிய பத்திரிகைகளுக்கு அவர்கள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

ரிப்போர்ட்டர் டீம்

- குமுதம் ரிப்போட்டர்

  • கருத்துக்கள உறவுகள்

ஆனந்தகிருஷ்ணன் இலங்கையைச் சேர்ந்தவர். மலேசியாவில் பிரபலமான இரட்டைக் கோபுரத்துக்குச் சொந்தக்காரர். அவரைத் தாண்டி அங்கு யாரும் சேனல் கொண்டு வர முடியாது. இவர் இலங்கைத் தமிழர் என்பதால், எல்லா நாடுகளிலும் உள்ள தமிழர்களிடம் சன் டி.வி.யைக் கொண்டு செல்ல முடியும் என்பதாலேயே அவருக்கு ஸ்பெக்ட்ரம் கிடைக்க உதவி செய்ததாகவும் சொல்கிறார்கள்.

உலகில் உயரமான கட்டிடங்களில் ஒன்றான, மலேசியாவில் உள்ள இரட்டைக் கோபுரத்துக்கு சொந்தக்காரர் இலங்கைத் தமிழர் என்னும் தகவலுக்கு நன்றி கந்தப்பு.

  • கருத்துக்கள உறவுகள்

உலகில் உயரமான கட்டிடங்களில் ஒன்றான, மலேசியாவில் உள்ள இரட்டைக் கோபுரத்துக்கு சொந்தக்காரர் இலங்கைத் தமிழர் என்னும் தகவலுக்கு நன்றி கந்தப்பு.

த. ஆனந்தகிருஷ்ணன்http://tawp.in/r/gz7

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

த. ஆனந்தகிருஷ்ணன் (பி. 1938) மலேசியா தொழிலதிபர். மலேசியத் தமிழரான இவர் கோலாலம்பூரில் இருக்கும் பெட்ரோனாஸ் டவர் எனப்படும் மாபெரும் கட்டடத்தைக் கட்டியவர். உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவர். 2007 இல் இவரது சொத்து மதிப்பு 7.4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இவரது மூதாதையர் இலங்கையின் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

[தொகு]

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4._%E0%AE%86%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.