Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

முதலமைச்சர் ஜெயலலிதாவை பணம் கொடுத்து வாங்கலாம்! – நடராஜன் மகிந்தவிற்கு ஆலோசனை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முதலமைச்சர் ஜெயலலிதாவை பணம் கொடுத்து வாங்கலாம்! – நடராஜன் மகிந்தவிற்கு ஆலோசனை

Friday, June 10, 2011, 17:30

உலகம், சிறீலங்கா

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை பணம் கொடுத்து வாங்கலாம் எனவும் ஜனாதிபதிக்கும் அவருக்கும் இடையில் தொடர்புகளை ஏற்படுத்தித் தருவதாகவும் ஜனாதிபதியிடம் உறுதியளித்திருந்த ஜனாதிபதியின் உறவினரான திருகுமார் நடராஜனை ஜனாதிபதி நேற்றிரவு ஆபாச வார்த்தைகளினால் திட்டித் தீர்த்துள்ளார்.

இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக தமிழக அரசு நிறைவேற்றிய யோசனை பற்றி ஜனாதிபதி செயலகத்தின் மூத்த அதிகாரியொருவர் அறிவித்த சந்தர்ப்பத்திலேயே ஜனாதிபதி இவ்வாறு திட்டித்தீர்த்துள்ளார். தமிழ் நாடு அரசாங்கத்தின் தீர்மானம் குறித்து நேற்றிரவு 8 மணியளவிலேயே ஜனாதிபதிக்க அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் செய்தியை அறிந்தவுடன் ஆத்திரமடைந்த ஜனாதிபதி இதுகுறித்து ஏன் உடனடியாக அறிவிக்கப்படவில்லை என வினவியதுடன் அதனை அறிவித்த அதிகாரியையும் சில அமைச்சர;களையும் ஆபாச வார்த்தைகளினால் ஜனாதிபதி திட்டித் தீர்த்ததாக அரசாங்கத்தின் மூத்த அமைச்சர் ஒருவர் கூறியுள்ளார்

இதன்பின்னரே திருகுமார் நடராஜனைத் திட்டியுள்ளார். நடராஜன் பிரதியமைச்சர் நிருபமா ராஜபக்சேவின் கணவராவார். அத்துடன் அமைச்சர் பசில் ராஜபக்சேவின் வர்த்தகப் பங்காளியுமாவார்

கடந்த காலத்தில் இலங்கையில் உள்ள இந்திய தூதரக அலுவலகத்தின் மூத்த அதிகாரிகளை வர்த்தகப் பங்காளிகளாக இணைத்து அவர்களுக்கும் அமைச்சர் பசில் ராஜபக்சேவிற்கும் இடையில் அந்யோண்யத் தொடர்புகளை திருகுமார் நடராஜனே ஏற்படுத்தியிருந்தார்.

tamilthai.com

இதுதொடர்பாக மேலும் தெரியவருவதாகவது:

தமிழக முதல்வராக செல்வி ஜெயலலிதா ஆட்சிப் பொறுப்பேற்றதை அடுத்து மகிந்தவைச் சந்தித்த திருகுமார் நடேசன், முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலாவின் கணவர் நடராஜன் தனது நெருங்கிய நண்பர் எனக் கூறியுதுடன், பணம் மூலம் ஜெயலலிதாவின் ஆதரவை வெல்வதற்கு சசிகலாவின் கணவருடனான தனது நட்பைப் பயன்படுத்த முடியும் எனவும் வாக்குறுதிகளை அள்ளி வீசியுள்ளார்.

இந்த வார்த்தைகளை நம்பிய மகிந்த, இதற்கான உரிய ஏற்பாடுகளை பசில் ராஜபக்சவுடன் இணைந்து மேற்கொள்ளுமாறு திருகுமாரைக் கேட்டுள்ளார். இதற்காக அண்மையில் இந்தியப் பயணம் மேற்கொண்ட பசில் மற்றும் திருகுமார் ஆகியோரால் சசிகலாவின் கணவரைச் சந்திக்க முடியவில்லை.

இது இவ்வாறிருந்த போதும், முதல்வர் ஜெயலலிதா விவகாரத்தை தான் பொறுப்பெடுப்பதாக திருகுமார் மகிந்தவுக்கு உறுதியளித்துள்ளார். ஆனால் தற்போது சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிராக ஜெயலலிதா அரசாங்கம் கடுமையான தீர்மானமொன்றை நிறைவேற்றியுள்ள நிலையில் மகிந்த ராஜபக்சவின் சீற்றம் திருகுமார் நடேசன்மீது திரும்பியுள்ளதாக நம்பப்படுகிறது.

சிறிலங்காவில் துணை அமைச்சராக பதவி வகிக்கும் நிருபமா ராஜபச்சவின் கணவரான திருகுமார் நடேசன், சிறிலங்காவில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் பல மூத்த அதிகாரிகளை சிறிலங்காவில் பல்வேறுபட்ட வணிக நடவடிக்கைகளில் ஈடுபடுத்தி, அவர்களுக்கு பசில் ராஜபக்சவுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொடுத்து வருபவர்.

அதிகாரத்தில் உள்ள கட்சிக்கு சார்பாக தனது அரசியல் நிலைப்பாடுகளை மாற்றிக் கொள்பவர். அத்தோடு அரசாங்கத்தின் வணிகத் திட்டங்களில் தன்னை ஈடுபடுத்துவதன் மூலம், அச்சுறுத்திப் பணம் பறிப்பவராக வணிகச் சமூகத்தின் மத்தியில் அடையாளப்படுத்தப்படுபவர்.

இவருக்கு முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் கணவருடன் உண்மையில் தொடர்புகள் ஏதும் உள்ளதா என்பது சந்தேகமே. ஆனாலும் திரு நடராஜன் அவர்களின் பெயரைப் பயன்படுத்தி அரச உயர்புள்ளிகளிடமிருந்து பணம் பறிப்பற்கான முயற்சியை இவர் மேற்கொண்டிருக்கலாம் என்றே நம்பப்படுகிறது.

கடந்த காலங்களில் தமக்கு எதிராக தமிழ்நாட்டில் எழக்கூடிய எதிர்ப்புகளை சமாளிக்க ஊடகவியலாளர்களை விலைபேசும் முயற்சிகளின் பின்னணியில் அப்போதைய சிறிலங்கா துணைத் தூதுவர் அம்சா செயற்பட்டதாக செய்திகள் வெளியாகியிருந்தன. இதன் தொடர்ச்சியாக முதல்வர் ஜெயலலிதாவை பணத்திற்கு விலைபேச முயன்ற சிறிலங்கா அரச தலைவர்களின் சதி முயற்சியும் தற்போது அம்பலமாகியுள்ளது.

சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிராக முதல்வர் ஜெயலலிதா இவ்வளவு விரைவில் தீர்மானமொன்றை நிறைவேற்ற முன்வருவார் என்பதைக் கணிக்காது அவர்கள் மேற்கொண்ட முயற்சி பிசுபிசுத்துப் போய்விட்டமை இங்க கவனிக்கத்தக்கது.

http://ponguthamil.com/news/contentnews.asp?sectionid=1&contentid={B454D2B0-55C3-4FC0-A61A-364ECCB6C781}

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த்தேசியத்துக்கான திரு. திருக்குமார் அவர்களின் சேவை பாராட்டத்தக்கது..! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

சசிகலா புருசன் மற்றும் கோவை முக்கிய தொழில் அதிபர் இருவரும் சீமான் மற்றும் பெரியவர் நெடுமாறன் பின்னால் உள்ளனர்.. அனைத்து கூட்டங்களுக்கும் குறிப்பிட தகுந்த அளவுக்கு ஸ்பான்ஸ்ர் இவர்கள்தான். இது இவருக்கு தெரியாதா?

thumb_smileyvault-cute-big-smiley-animated-060.gif

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் ஜெயலலிதாவை பணத்தால் வாங்கமுடியுமாயின் அவர் கேட்கும் தொகை ஸ்ரீலங்காவை வித்தாலும் போதாது. :lol::D:D:D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.