Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைப்புலிகளை இலங்கையில் அழித்த காங்கிரஸ், தமிழகத்தில் திமுக வை அழிக்க நினைக்கிறது. திமுக பேச்சாளர்.

Featured Replies

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தால் தி.மு.க.வும்,காங்கிரஸும் மறைமுக யுத்தம் நடத்திக் கொண்டிருப்பது ஊரறிந்த ரகசியம்.கனிமொழி கைது, அவருக்கு ஜாமீன்கூட கிடைக்காமல் தாமதமாவது...இவையெல்லாம் அந்த யுத்தத்தை உச்சநிலைக்குக் கொண்டுபோயிருக்கின்றன.

ஆனால், தி.மு.க. தலைவர் கருணாநிதியிடம் பத்திரிகையாளர்கள் இதுபற்றி கேள்வி எழுப்பினாலே, ‘தி.மு.க. காங்கிரஸ் உறவு சுமுகமாக இருக்கிறது. காங்கிரஸ் மீது தி.மு.க.வினருக்கு எந்தக் குமுறலும் இல்லை. அப்படி எந்த தொண்டராவது உங்களிடம் குமுறினாரா?’என கேள்வி எழுப்புபவர்கள் மீதே பாய்ந்து கொண்டிருக்கிறார்.

உயர்மட்ட செயல்திட்டக் குழுக் கூட்டம் முடிந்த பின்னர் நிருபர்கள் இதைப் பற்றியே கேள்வி கேட்டதால், தி.மு.க.-காங்கிரஸ் உறவைத் துண்டிக்க பத்திரிகைகள் துடிப்பதாக கருணாநிதி அறிக்கையே வெளியிட்டுள்ளார்.

உண்மையில் தி.மு.க. தொண்டர்கள் காங்கிரஸ் மீது செம கடுப்பில் இருக்கிறார்கள் என்பதற்கு, கடந்த 12-ம் தேதி நாகர்கோயில் அருகே இறச்சகுளத்தில் நடைபெற்ற தி.மு.க. பொதுக்கூட்டமே சாட்சி.

அந்தக் கூட்டத்தில் சிறப்புப் பேச்சாளராக பங்கேற்ற தி.மு.க.வின் மாநிலப் பேச்சாளர் வாகை முத்தழகன்,காங்கிரஸை வாரியபோதெல்லாம் கூட்டத்தினர் மத்தியில் பலத்த கரகோஷம்!கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு காங்கிரஸ் தலைவர்கள் சோனியா,ராஜீவ்காந்தி, ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோரை பொதுக்கூட்டத்தில் தாக்கிப் பேசியதற்காக கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டவர். மீண்டும் கட்சியில் சேர்ந்துள்ள அவர் இப்போதும் தனது உணர்வையும், தொண்டர்களின் உணர்வையும் பூட்டிவைக்க முடியாமல் பொரிந்து தள்ளத்தான் செய்கிறார்.

இனி வாகை முத்தழகன் பேசியதிலிருந்து...

“நடந்து முடிந்த தேர்தலில் நமது தோல்விக்கு முக்கியமான காரணம், தேர்தல் கமிஷனும் சி.பி.ஐ.யும்தான்.அஸ்ஸாமிலும் மேற்கு வங்கத்திலும் மே 13-ம் தேதி வரை தேர்தலை நடத்திய தேர்தல் கமிஷன், தமிழகத்திலும் கேரளாவிலும் அவகாசமே கொடுக்காமல் அவசரமாக ஒரு மாதம் முன்னதாகவே தேர்தலை நடத்தியது.இதற்குக் காரணம் அச்சுதானந்தனும்,கலைஞரும் பிற்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்பதுதான்.

2ஜி விவகாரத்தை தி.மு.க.வுக்கு எதிரான பிரச்னையாக பலரும் பேசுகிறார்கள்.முதலில் வந்தவருக்கு முன்னுரிமை என்கிற நடைமுறையை அதில் கொண்டு வந்தவர், பா.ஜ.வைச் சேர்ந்த மறைந்த பிரமோத் மகாஜன். அவருக்குப் பிறகு அந்தத் துறையில் அமைச்சர்களாக இருந்த அருண்ஷோரியும், தயாநிதி மாறனும் அதைக் கடைப்பிடித்தனர். ராசா அமைச்சர் ஆவதற்கு முன்பே அறுபத்தொன்பது கம்பெனிகளுக்கு அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.அதனால்தான் இதை சட்டப்படி சந்திக்கத் தயார் என ராசா சொல்கிறார்.

இன்னொன்றையும் சொல்கிறேன்...ஒருவேளை ராசா தவறு செய்திருந்தால் அது பிரதமர் மன்மோகனுக்கும்,வழிகாட்டுதல் குழுத் தலைவர் சோனியாவுக்கும் தெரியாதா?அப்படி தெரியாது என்றால் உங்களுக்கு அரசியல் அறிவு கிடையாதா? கேபினட் என்பதே ஒரு கூட்டு முயற்சிதான். இதில் தலைமை தாங்குகிறவர்தான் அனைத்திற்கும் பொறுப்பு. ‘பிரதமருக்கு கடிதம் எழுதிவிட்டுத்தான் நான் செய்தேன்’ என ராசா தெளிவாகச் சொல்லியிருக்கிறாரே?

முதலில் ஒன்றேமுக்கால் லட்சம் கோடி அரசுக்கு இழப்பு என்றார்கள். கடைசியில் கலைஞர் டி.வி.க்கு கடனாக வாங்கப்பட்ட 214கோடி ரூபாய்தான் பிரச்னை என்கிறார்கள்.இந்தியாவில் வசிக்கும் யார் வேண்டுமானாலும் யாரிடமும் கடன் வாங்கலாம்.அந்தக் கடனை முப்பத்தொரு லட்ச ரூபாய் வட்டியுடன் திருப்பிச் செலுத்தியிருக்கிறது கலைஞர் டி.வி. இதற்கான எல்லா ஆவணங்களும் அரசிடம் உள்ளன. ஆனால்,கலைஞரின் மகள் என்கிற ஒரே காரணத்துக்காக கனிமொழியைக் கைது செய்து சிறையில் வைத்திருக்கிறது மத்திய அரசு.

எப்படி எமர்ஜென்சியின்போது ஸ்டாலினைக் கைது செய்து கலைஞரை இந்திரா காந்தி துன்புறுத்தினாரோ, அதேபோல இப்போது கனிமொழியைக் கைது செய்து கலைஞரை தொல்லைப்படுத்துகிறார்கள். விடுதலைப்புலிகளை இலங்கைச் சீமையில் அழித்ததைப்போல தி.மு.க.வை அழிக்க நினைக்கிறார்கள்.

கனிமொழிக்கு ஜாமீன் கொடுக்கக்கூட சி.பி.ஐ. எதிர்ப்புத் தெரிவிக்கிறது. மாயாவதி, முலாயம்சிங், லாலுபிரசாத், ஜெயலலிதா ஆகியோர் மீதெல்லாம் இதே சி.பி.ஐ. போட்ட வழக்குகள் ஏதாவது முடிவுக்கு வந்திருக்கிறதா? ஆக, இதையெல்லாம் வைத்து தி.மு.க.வை அழிக்க முடியாது.

தேர்தலுக்கு முன்பு ஆட்சியில் பங்கு கேட்டு, ‘அழுகுணிச் சித்தர்கள்’ மாதிரி சிலர் அழுதுகொண்டிருந்தார்கள். ‘கேபினட்டில் எங்களுக்கு ஐந்து இடம் வேண்டும், துணை முதல்வர் பதவி வேண்டும்’ என்றெல்லாம் கேட்டார்கள். அடிப்படை சக்தி இல்லாத ஒரு கூட்டம்,கூட இருந்தே நம்மை கெடுத்துவிட்டது.

நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு ஸ்டாலினை தலைவர் ஆக்கியிருக்க வேண்டும்.இளம் வாக்காளர்களுக்கு நம் கட்சி மீது ஒரு ஈர்ப்பு இல்லாமல் போய்விட்டது. என் தலையை அறுத்தாலும் தளபதி ஸ்டாலின் என இனி சொல்லமாட்டேன். நம் கோஷமே, ‘தலைவர் ஸ்டாலின்’ என்றுதான் இருக்க வேண்டும்.தேர்தல் கமிஷனையும்,சி.பி.ஐ.யையும் அவிழ்த்துவிட்டு தி.மு.க. ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்தவர்களுக்கு காலத்தால் பதில் சொல்லியே தீரவேண்டும்’’என முழங்கி முடித்தார் வாகை முத்தழகன்.

நன்றி.குமுதம்.காம்

இச்செய்தி குறித்த படம் பார்க்க....

http://www.thedipaar.com/news/news.php?id=29725

Edited by easyjobs

  • கருத்துக்கள உறவுகள்

சூப்பரோ..... சுப்பர்... இப்படித்தான் ஆகவேண்டும் என நினைத்தோம் நடந்திட்டுது,

புலிகளையும் மக்களையும் அழிக்க உதவியதற்கு காங்கிரசின் நல்ல பரிசு.

இந்திக்காரன் இந்திக்கரந்தான்.

இனியாவது திமுக திருந்துமா ?

Edited by தமிழ் அரசு

  • கருத்துக்கள உறவுகள்

தி.மு.க. விற்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையில் ஏற்பட்ட தகாத உறவின் விளைவு தான், தமிழீழ மக்களின் அழிப்பு!

இந்த உறவு அழிக்கப் பட வேண்டியதே, காலத்தின் கட்டாயம்!

கூண்டோடு நரகத்திற்கு போகவேண்டிய கூட்டம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.