Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசியல் தீர்வுத திட்டமொன்று முன்வைக்கப்பட வேண்டும் - சம்பந்தன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

22 ஜூன் 201

அனைவராலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய அரசியல் தீர்வுத் திட்டமொன்று முன்வைக்கப்பட வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

அரசியல் தீர்வுத் திட்டம் முன்வைக்கப்பட்டால் பூரண ஆதரவளிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஜூன் மாதம் 16ம் திகதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் வருத்தமளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இந்தத் தாக்குதல் சம்பவம் மனித உரிமை மீறலாகும் எனவும், பூரண விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

பாராளுமன்ற அமர்வுகளில் கலந்து கொண்டு சற்று முன்னர் ஆற்றிய உரையின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தத் தாக்குதலை இராணுவத்தினரே மேற்கொண்டுள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

இதேவேளை, இந்தத் தாக்குதல் சம்பவம் குறித்து 11 பேரிடம் ஏற்கனவே விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக பிரதமர் டி.எம். ஜயரட்ன தெரிவித்துள்ளார்.

இந்தத் தாக்குதல் தொடர்பில் வருத்தம் வெளியிட்டுள்ள பிரதமர் எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதனை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/63001/language/ta-IN/article.aspx

அளவெட்டியில் கட்சிக் கூட்டம் நடப்பதை சிங்களப் பயங்கரவாதி கோத்தபாயவிற்கு காட்டிக் கொடுத்து குழப்பிய சாக்கடை சம்பந்தன், தனது துரோகத்தனத்தை மறைக்க இந்திய உல்லாசப் பயணத்தையும் கைவிட்டு பாராளுமன்றுக்கு சென்று அரசியல் தீர்வு பற்றி ஊளையிட்டுள்ளார். போலியாக தாக்குதலுக்கு கண்டனமும் வெளியிட்டுள்ளார். எனினும் சம்பந்தனின் துரோகத்தனம் சந்தேகங்களுக்கப்பால் நிரூபணமாகி விட்டது.

அது சரி, சம்பந்தன் ஊளையிடும் எல்லாரும் ஏற்றுக்கொள்ளும் தீர்வு என்றால் என்ன?

தமிழருக்கான தீர்வு யாரிடமுள்ளது? எந்தத் தீர்வுத்திட்டம் முன்வைக்கப்பட்டாலும் அதனை ஆராய்ந்து தமிழர் தரப்பால் பதிலளிக்க வேண்டிய கடமை கூட்டமைப்பிற்கு மட்டுமே உண்டு. எந்தத் தீர்வையும் சிங்கள அரசு முன்வைக்காது என்பது வேறு விடயம். அப்படித் தீர்வுகள் ஏதும் முன் வைக்கப்பட்டால் அதில் தற்போதைக்குப் பெறுவதற்குரிய எதையாவது கண்டேயாக வேண்டும்.

சம்பந்தரால் தனித்துஎதுவும் செய்துவிட முடியாது. அனைத்துத் தமிழரும் இணைய வேண்டும். அது தமிழர் தரப்பில் கனவிலும் நடக்காது.

  • கருத்துக்கள உறவுகள்

அனைவராலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய அரசியல் தீர்வுத் திட்டமொன்று முன்வைக்கப்பட வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இதைத் தான் மகிந்தவும் அடிக்கொருதரம் கூறிக் கொண்டிருக்கின்றார்!

அனைவரும், என்று யாரைக் குறிப்பிடுகின்றார்கள், இவர்கள்!

கசாப்புக் கடைக்காரனிடம், மாடு தீர்வு கேட்ட மாதிரி!!!

சந்தர்ப்பவசத்தால் கூட்டமைப்பின் தலைவராகியிருக்கும் சம்பந்தர் அவர்கள், புலிகள் மீதிருந்த மதிப்பால் மக்கள் கூட்டமைப்பின் மீது வைத்த நம்பிக்கையை காப்பாற்றவேண்டும்.

அதை விட்டுவிட்டு தமிழின விரோதிகளின் வழிநடத்தல் மூலம் பொறுப்பற்ற முறையில் செயற்பட்டால் அதன் விளைவுகள் பாரதூரமாக இருக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.