Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சினிமா பட உலகில் இருந்து விலகல் : கதறி அழுதார் நயன்தாரா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புதன்கிழமை, 29, ஜூன் 2011 (8:23 IST)

சினிமா பட உலகில் இருந்து விலகல் :

கதறி அழுதார் நயன்தாரா

பிரபுதேவா டைரக்டு செய்த `வில்லு' படத்தில் நயன்தாரா நடித்தார். அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட நட்பு, பின்னர் காதலாக மாறியது. இரண்டு பேரும் நெருக்கமாக பழக ஆரம்பித்தார்கள். கணவர்-மனைவி போல் ஒரே ஓட்டலில் தங்கினார்கள்.

நயன்தாரா, திருமணம் ஆகாதவர். பிரபுதேவாவுக்கு திருமணமாகி மனைவியும், 2 குழந்தைகளும் இருக்கிறார்கள். இவர்கள் காதலுக்கு ஆரம்பத்தில், பிரபுதேவாவின் மனைவி ரமலத் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அதையும் மீறி நயன்தாரா-பிரபுதேவா காதல் தொடர்ந்தது.

இந்த நிலையில், பிரபுதேவா-ரமலத் இருவரும் விவாகரத்து கோரி கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்கள். இந்த வழக்கு கோர்ட்டில் இருக்கிறது. தீர்ப்பு இன்னும் வரவில்லை.

கோர்ட்டு தீர்ப்பு வந்ததும் பிரபுதேவா, நயன்தாராவை திருமணம் செய்துகொள்ள முடிவு செய்து இருக்கிறார். இப்போது இருவரும் மும்பையில் தங்கியிருக்கிறார்கள். அநேகமாக திருமணத்தையும் விரைவில் மும்பையிலேயே வைத்துக்கொள்வார்கள் என்று தெரிகிறது.

திருமணத்துக்குப்பின் நயன்தாரா சினிமாவில் நடிக்கக்கூடாது என்று பிரபுதேவா கண்டிப்புடன் கூறியிருக்கிறார். அதற்கு நயன்தாராவும் சம்மதம் தெரிவித்து இருக்கிறார். அவர் கடைசியாக, `ஸ்ரீராமராஜ்யம்' என்ற தெலுங்கு படத்தில் சீதையாக நடித்து வந்தார்.

இது, என்.டி.ராமராவ் நடித்த `லவகுசா' என்ற படம்தான். அவருடைய மகன் பாலகிருஷ்ணா கதாநாயகனாக நடிக்க, `ஸ்ரீராமராஜ்யம்' என்ற பெயரில் மீண்டும் தயாராகி வந்தது. இந்த படத்தின் படப்பிடிப்பு, ஐதராபாத்தில் நடந்தது. அதில் நயன்தாரா கலந்துகொண்டு நடித்து வந்தார். நேற்று கடைசி நாள் படப்பிடிப்பு.

நயன்தாரா காலையில் படப்பிடிப்புக்கு வந்தபோதே சோகமாக காணப்பட்டார். அவர் முகம் வாடிப்போய் இருந்தது. மாலை 6 மணிக்கு படப்பிடிப்பு முடிந்ததும், அவர் மற்ற நடிகர்-நடிகைகளிடமும், படப்பிடிப்பு குழுவினரிடமும் பிரியா விடை பெற்றார்.

அப்போது அவர் கதறி அழுதார். இவ்வளவு நாள் இருந்த சினிமாவை விட்டு பிரிந்து போகிறோமே என்ற துயரம் தாங்காமல், சத்தம்போட்டு அழுதார்.

அவருக்கு, நடிகர் பாலகிருஷ்ணா ஆறுதல் கூறினார். ‘’திருமணம் ஆனபிறகும் நீ தொடர்ந்து நடிக்கலாம். கவலைப்படாதே’’ என்றார். அதற்கு நயன்தாரா, ’’திருமணத்துக்குப்பின் நடிக்கக்கூடாது என்று `அவர்' கண்டிப்பாக கூறிவிட்டார்’’ என்று பதில் அளித்தார்.

பின்னர் அவர், படப்பிடிப்பு குழுவில் இருந்த 150 பேர்களுக்கும் கைக்கடிகாரங்களை பரிசாக வழங்கினார். தன்னிடம் நீண்ட நாட்கள் `மேக்கப்மேன்' ஆக பணிபுரிந்த ராஜுவுக்கு ஒரு பவுனில் தங்க மோதிரத்தை பரிசாக வழங்கினார்.

அதன்பிறகு படப்பிடிப்பு குழுவினர் அனைவருக்கும் நயன்தாரா சார்பில் விருந்து அளிக்கப்பட்டது. நயன்தாரா கண்களை துடைத்துக்கொண்டு, விமானம் மூலம் மும்பைக்கு பறந்தார்.

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=56880

  • கருத்துக்கள உறவுகள்

கவலைப் பட வேண்டாம் ...கூடிய சீக்கிரமே திரும்ப நடிக்க வருவீர்கள் என்ட நம்பிக்கை எனக்கு இருக்கு :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கவலைப் பட வேண்டாம் ...கூடிய சீக்கிரமே திரும்ப நடிக்க வருவீர்கள் என்ட நம்பிக்கை எனக்கு இருக்கு :lol:

உங்களுக்கு நம்பிக்கைஇருந்து என்னத்தை செய்ய. பிரபுதேவா சம்மதிக்க வேண்டுமே

  • கருத்துக்கள உறவுகள்

எந்த கோர்டில் டிவர்சுக்கு அப்ளை செய்ய போறாரோ.. ஆலபுழாவா? ஐதராபத்தா? அண்டார்டிக்காவா? எனிவே தமிழ்நாட்டு தாய்மார்களுக்கு உங்களின்ட அழவக்கும் சேவை .. சின்னத்திரை சீரியல்களில் இனி தேவை!!!! :lol:

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

புதன்கிழமை, 29, ஜூன் 2011 (8:23 IST)

பிரபுதேவா டைரக்டு செய்த `வில்லு' படத்தில் நயன்தாரா நடித்தார்.

:lol:

கவலைப் பட வேண்டாம் ...கூடிய சீக்கிரமே திரும்ப நடிக்க வருவீர்கள் என்ட நம்பிக்கை எனக்கு இருக்கு :lol:

கவலைப்படாதிர்கள் திரும்பி வந்தால் சிம்பு இருக்கிறார்...

Edited by நெருப்பு நீலமேகம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சென்று வா நயன்தாரா!!!!! உன்னை எப்பவும்? எந்த நேரத்திலையும்வரவேற்க.....பலவித,பலவர்ண கிரடிற்காட்டுக்களுடன் காத்திருக்கின்றேன்.

இப்படிக்கு

குமாரசாமிMP

(முன்னாள் விதானையார்,சங்கக்கடைத்தலைவர்,அரசினர்கலவன் பாடசாலை பெற்றோர்சங்க காரியதரசி,அம்மன்கோயில்தலைவர் அன்ட் கணக்காய்வாளர்)

சென்று வா நயன்தாரா!!!!! உன்னை எப்பவும்? எந்த நேரத்திலையும்வரவேற்க.....பலவித,பலவர்ண கிரடிற்காட்டுக்களுடன் காத்திருக்கின்றேன்.

இப்படிக்கு

குமாரசாமிMP

(முன்னாள் விதானையார்,சங்கக்கடைத்தலைவர்,அரசினர்கலவன் பாடசாலை பெற்றோர்சங்க காரியதரசி,அம்மன்கோயில்தலைவர் அன்ட் கணக்காய்வாளர்)

அண்ணை மட்டையோ...??? உந்த வயசில ஜெயிலில களி திங்கவேணுமே...?? நிற்க, உங்கடை வயசு நயந்தார கேக்குதோ...??? :D :D அந்த நேரத்தில என்ன ஆட்டம் ஆடி இருப்பீங்கள்...??? :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.