Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அமெரிக்காவும், இந்தியாவும் இணைந்து மகிந்த அரசை வீட்டுக்கு அனுப்பும் நாள் வெகுதொலைவில் இல்லை - விக்கிரமபாகு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவும், இந்தியாவும் இணைந்து மகிந்த அரசை

02 ஜூலை 2011

வீட்டுக்கு அனுப்பும் நாள் வெகுதொலைவில் இல்லை - விக்கிரமபாகு :

அமெரிக்காவும், இந்தியாவும் இணைந்து மகிந்த அரசை

அமெரிக்கா மற்றும் இந்திய அரசுகள் விடுத்துள்ள வேண்டுகோளுக்கிணங்க இலங்கை அரசு விரைவில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை வழங்க முன்வரவேண்டும். இல்லையேல், அமெரிக்காவும், இந்தியாவும் இணைந்து மகிந்த அரசை வீட்டுக்கு அனுப்பும் நாள் வெகுதொலைவில் இல்லை என புதிய இடதுசாரி முன்னணித் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளளார்.

நாடாளுமன்ற தெரிவுக்குழுவை அமைப்பதற்குப் பிரதான எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளன. அத்துடன், தாம் அங்கம் வகிக்கப் போவதில்லை எனவும் திட்டவட்டமாக கூறியுள்ளன. எனினும், அரசு நாடாளுமன்ற தெரிவுக்குழுவை அமைக்கும் முயற்சியில் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றது.

தெரிவுக்குழுவை அமைப்பதற்கான பிரேரணையை அரசு 5ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளது. இந்தக் குழுவில் 31 உறுப்பினர்களை உள்ளடக்குவதற்கும் அரசு தீர்மானித் துள்ளது.அரசிடம் அரசியல் தீர்வு ஒன்று இல்லாததன் காரணமாகவே அரசு காலத்தை இழுத்தடிக்கின்றது.

இதனை மேலும் இழுத்தடிக்கவே நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை அரசு நியமிக்க முனைகிறது என அரசியல் ஆய்வாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இந்நிலையில், அரசிடம் உண்மையாகவே அரசியல் தீர்வு உள்ளதா, அப்படி இருந்தால் ஏன் காலத்தை இழுத்தடிக்கின்றது, இதனால் அரசுக்கு சர்வதேச அழுத்தங்கள் ஏற்படுமா என ஊடகம் ஒன்று கேட்டபோதே விக்கிரமபாகு மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்படுமாறே அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. அண்மையில் இலங்கை வந்த ரொபட் ஓ பிளேக்கிடம் அரசு இது விடயம் தொடர்பில் இணங்கியது.

இந்தியாவும் இதனையே கூறியுள்ளது.ஆனால், அரசு தற்போது தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் என எவரும் இல்லை எனக் கூறுகின்றது. அதனாலேயே நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை நியமித்து அதனூடாகத் தீர்வு வழங்கப்படும் எனக் கூறி வருகின்றது.ஏகப் பிரதிநிதிகள் யார் என்பதை தேர்தலே தீர்மானிக்கும். வடக்கு, கிழக்கு மக்கள் கூட்டமைப்பினர்தான் தங்களின் ஏகப் பிரதிநிதிகள் என்பதை தங்களின் வாக்குரிமை மூலம் நிரூபித்துள்ளனர்.

உண்மையாகவே தீர்வு இருந்தால் கூட்டமைப்பினருடன் பேசி வடக்கு, கிழக்கு மக்களுக்கு அரசு அரசியல் தீர்வை வழங்க முன்வரவேண்டும். இதுவே தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாகும்.அரசு அப்படியே காலத்தை இழுத்தடிக்க முனையுமானால் அமெரிக்க, இந்திய அரசுகள் மகிந்த அரசை வீட்டுக்கு அனுப்பும் நாள் வெகு தொலைவில் இல்லை.

ஏனெனில், இந்தியாவும், அமெரிக்காவுமே மகிந்தவை ஆட்சியில் அமர்த்தியதுடன், யுத்தத்தை முடிப்பதற்கு பெருமளவு பங்களித்தன. எனவே, இலங்கை விடயத்தில் கட்டாயம் அவர்கள் தலையிட வேண்டியதொரு நிலை ஏற்பட்டுள்ளது.ஏனெனில், இறுதிக்கட்ட யுத்தத்தில் ஒரு இலட்சத்து 50 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு ஆயுதம் வழங்கிய நாடுகளும் பொறுப்புக் கூறவேண்டும்.

தொடர்ந்தும் அரசு இனப்பிரச்சினை தொடர்பில் மௌனம் காக்குமானால், சர்வதேசத்தின் தலையீடு தவிர்க்க முடியாத ஒன்றாகிவிடும்.இலங்கை அரசை மகிந்த என்ற பொம்மை ஒன்று ஆட்சி செய்கின்றது என்பது அனைவருக்கும் தெரியும். இதன் காரணமாக அரசு பக்கம் உள்ள இனவாதத்தைத் தூண்டும் அமைச்சர்களின் தாளத்துக்கு மகிந்த என்ற பொம்மை ஆடுகின்றது.அவர்களின் அழுத்தத்தாலேயே கூட்டமைப்புடன் பேச்சு நடத்தி, தீர்வை வழங்க அரசு தயங்குகின்றது என விக்ரமபாகு தெரிவித்துள்ளார்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/63476/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவும் இதனையே கூறியுள்ளது.ஆனால், அரசு தற்போது தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் என எவரும் இல்லை எனக் கூறுகின்றது. அதனாலேயே நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை நியமித்து அதனூடாகத் தீர்வு வழங்கப்படும் எனக் கூறி வருகின்றது.ஏகப் பிரதிநிதிகள் யார் என்பதை தேர்தலே தீர்மானிக்கும். வடக்கு, கிழக்கு மக்கள் கூட்டமைப்பினர்தான் தங்களின் ஏகப் பிரதிநிதிகள் என்பதை தங்களின் வாக்குரிமை மூலம் நிரூபித்துள்ளனர்.

இந்தியாவுக்கு எமது பிரச்சனையைத் தீர்க்கும் நோக்கம் அடியோடு இல்லை!

குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க முனைகின்றது!!!

அவ்வளவு தான்!!!

  • கருத்துக்கள உறவுகள்

"மகிந்த அரசு" என்று ஒன்று எங்கு இருக்கிறது என்பதை யாராவது சொல்வீர்களா?

தமிழர்கள் குழம்பாமல் இருப்பதற்கு செய்திகளைப் பதிவுசெய்பவர்கள்

அதை சரியாக பதிவு செய்தால் நல்லது.

"மகிந்த அரசாங்கம்" என்பதுதான் சரியான சொற்பதம்.

தமிழா விழித்திடு !!

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவுக்கு எமது பிரச்சனையைத் தீர்க்கும் நோக்கம் அடியோடு இல்லை!

குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க முனைகின்றது!!!

அவ்வளவு தான்!!!

உண்மைதான்.... புங்கையூரான். இந்தியா இனி விரும்பினாலும்...... எமது பிரச்சினையில் தலை கொடுக்க சீனா விடாது.

இலங்கையின் மீதுள்ள பிடியை, எப்பவோ... இழந்து விட்டார்கள். இனி சும்மா, கொழும்புக்கு ராஜதந்திரிகளை? அனுப்பி.... பம்மாத்து காட்டிக் கொண்டிருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவும், இந்தியாவும் இணைந்து மகிந்த அரசை வீட்டுக்கு அனுப்பும் நாள் வெகுதொலைவில் இல்லை - விக்கிரமபாகு

ஒரே டமாஸ்தான் :lol: :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.