Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஐ.தே.க. தலைமைப் பொறுப்பை ஏற்க கரு ஜயசூரிய இணக்கம்

Featured Replies

ஐ.தே.க. தலைமைப் பொறுப்பை ஏற்க கரு ஜயசூரிய இணக்கம்: சஜித் எம்.பி.

நாட்டையும் நாட்டு மக்களின் நலனையும் பாதுகாப்பதற்காக உயர்மட்டக் குழுவின் வேண்டுகோளுக்கிணங்க ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்பதற்கு கரு ஜயசூரிய இணக்கம் தெரிவித்துள்ளதாக சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

இன்று பிற்பகல் கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றுகையிலேயே ஐ.தே.க. பிரதித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சஜித் பிரேமதாச மேற்படி கூறினார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர் கூறுகையில்,

எமது நாடும் நாட்டு மக்களும் வரலாற்று ரீதியான ஆட்சி மாற்றத்தை வேண்டி நிற்கும் தருணம் ஏற்பட்டுள்ளது. காரணம் தற்போதுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் நாட்டின் சொத்துக்களையும் நிதியையும் பச்சையாகவே கொள்ளையடித்து வருவதுடன் மக்களின் நலனையும் கெடுக்கின்றனர். இவ்வாறானதொரு ஆட்சியிலிருந்து அரசாங்கத்தைக் கவிழ்க்க வேண்டுமாயின் அதற்கு பலம்வாய்ந்ததொரு எதிர்க்கட்சி தேவைப்படுகிறது.

ஜனநாயக ரீதியில் பலத்தைப் பெற்று மக்களின் ஏகோபித்த அனுமதியுடன் நாட்டை சிறந்தவொரு நிலைக்கு கொண்டுசெல்ல வேண்டிய தேவை தற்போது ஏற்பட்டுள்ளது. அதற்கான கட்டாயத்துக்கு ஐக்கிய தேசிய கட்சி தற்போது தள்ளப்பட்டுள்ளது. ஆனால் கட்சியை சீரமைத்து, பலம்வாய்ந்த கட்சியாக முன்னிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டவர்கள் தற்போது அரசியல் பழிவாங்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

உள்வீட்டுப் பிரச்சினைகளால் கட்சி பிளவுபடுவதை நாம் ஒருபோதும் விரும்பவில்லை. பிளவு இன்றிய கட்சியாக ஐ.தே.க.வை பலம்வாய்ந்ததொரு பாதையில் கொண்டுசெல்ல எடுக்கப்பட்ட முயற்சிகள் தோல்வியைத் தழுவின. அதனால் கடந்த தேர்தல்களில் எமது கட்சி படுதோல்வியைத் தழுவியது. இதனால் நாட்டு மக்களின் நலனை கருத்திற்கொண்டு நாம் தீர்க்கமானதொரு முடிவை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.

இவ்வாறானதொரு நிலையில், நாட்டையும் நாட்டு மக்களையும் கொள்ளையர்களிடமிருந்து காப்பாற்ற நாட்டின் மீது அன்பு கொண்டவர்கள் என்ற அடிப்படையில் நாம் எவ்வாறான முயற்சிகளை எடுக்க முடியும். அதனாலேயே, கட்சியின் உள்வீட்டுப் பிரச்சினைகளின் போது இரு தரப்புக்கும் மத்தியஸ்தம் வகித்து கட்சி உறுப்பினர்களை சமாதானப்படுத்தி வந்த ஐ.தே.க.வின் பிரதித் தலைவர் கரு ஜயசூரியவை கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்குமாறு வேண்டுகோள் விடுத்தோம்.

எமது வேண்டுகோளுக்கு இணங்க, இன்றேனும் கட்சியைப் பொறுப்பேற்க தயார் என அவர் தெரிவித்தார். தனது முடிவு குறித்தும் வெகு விரைவில் கரு ஜயசூரிய அறிவிப்பார். அதன்மூலம் மக்களின் ஆசீர்வாதத்துடன் கட்சியை பலப்படுத்தி எதிர்வரும் தேர்தல்களில் வெற்றிபெற்று அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவோம் என்றார்.

http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/25457-2011-07-28-09-58-23.html

  • தொடங்கியவர்

சவாலை ஏற்க கரு ஜயசூரிய தயார்

கட்சியினால் தனக்கு ஒப்படைக்கப்படும் எந்த சவாலையும் ஏற்றுக்கொள்ள தான் தயார் என ஐ.தே.க. பிரதித் தலைவர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

ஐ.தே.க. தலைமைப் பதவியை ஏற்க வருமாறு அக்கட்சியின் மற்றொரு பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ விடுத்த அழைப்புக்கு பதிலளிக்கும் விதமாக வெளியிட்ட அறிக்கையிலேயே கரு ஜயசூரிய இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஐ.தே.க.வின் சிரேஷ்ட அங்கத்தவர்கள் குழுவொன்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தன்னை சந்தித்து கட்சியில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய அவசியத்தை வலியுறுத்தியதாக அவ்வறிக்கையில் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இலங்கை கடும் சவாலை எதிர்நோக்கியுள்ள நிலையில், அரசாங்கத்தின் அனைத்து பாகங்களிலும் ஊழல் ஆதிக்கம் செலுத்தும் நிலையில், நாட்டின் பிரதான எதிர்க்கட்சி வலிமையானதாகவும் உட்கட்சி பிரிவினைகள் இல்லாதாகவும் இருக்க வேண்டியதன் அவசியம் குறித்து அவர்கள் வலியுறுத்தினர் அவர் கூறியுள்ளார்.

http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/25480-2011-07-28-15-27-39.html

அப்போ "ரணில் the நரி" யின் சுகசேதிகள் எப்படியோ?.

முழுமையாக ஐக்கிய சுதந்திர கூட்டு முன்னணிக்குள் உள்வாங்கபட்டுவிட்டாரா?

  • தொடங்கியவர்

ரணில் எமது மக்களால் இந்த தேர்தலில் நிராகரிக்கப்பட்டார். யூ.என்.பீ. எந்தவொரு சபையையும் வெற்றிகொள்ளத் தவறியதோடு தனது கட்டுப்பாட்டில் இருந்த ஐந்து சபைகளையும் இழந்தது.

இந்த மாத முற்பகுதியில் ரணில் நியூயோர்க்கிற்கு சென்று திரும்பிய போது, ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை சம்பந்தமாக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல் அரசாங்கத்துக்கு கால அவகாசம் கொடுக்குமாறு ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனிடம் தான் வேண்டுகோள் விடுத்ததாக அம்பலப்படுத்தினார். அதுவே முக்கிய காரணமாக இருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

சஜித் பிரேமதாசவும் தோளுக்கு மேலை வந்திட்டான், இனியும் ரணிலை நம்பி பிரயோசனம் இல்லை என்று தெரிஞ்சுபோட்டுது.

ரணில் இனி ஐ.தே.க. விலிருந்து மூட்டை கட்ட வேண்டியது தான்...

  • தொடங்கியவர்

இந்த தலைவர் பதவி கவிழ்ப்பு நடந்தால், ரணில் மகிந்தவுடன் சேர்ந்தாலும் சேரலாம்.

ரணில் விக்கிரமசிங்கவின் இரகசிய திட்டம்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=89617

  • கருத்துக்கள உறவுகள்

சஜித் பிரேமதாசவும் தோளுக்கு மேலை வந்திட்டான், இனியும் ரணிலை நம்பி பிரயோசனம் இல்லை என்று தெரிஞ்சுபோட்டுது.

ரணில் இனி ஐ.தே.க. விலிருந்து மூட்டை கட்ட வேண்டியது தான்...

நான் பல சிங்கள நண்பர்களுடன், கதைத்த போது, ரணில் எப்போதோ போயிருக்க வேண்டியவர் என்பது தான் அவர்களது கருத்து. ஐக்கிய தேசியக் கட்சியை, அழிவு நிலைக்குக் கொண்டு போனதில் பெரும் பங்கு, ரணிலைச் சாரும் என்பதே அவர்களின் ஒருமித்த கருத்தாகும். வைக்கல் பட்டடை நாயைப்போல தான் ரணில் என்று சொல்லுவார்கள். ரணில் இப்போது மகிந்தவுடன் தொங்கும் காரணம், ஐக்கிய நாடுகள் சபைக்கு, இலங்கையின் பிரதிநிதியாகத் தனது கடைசிக் காலத்தைக் கழித்து விடலாம் என்பதற்காகவே. இதை மனதில் கொண்டே, சமாதானத் தேவதை வேடம் போட்ட, சந்திரிகாவின் கருத்துக்களும் அமைவது கருத்தில் எடுக்கப் பட வேண்டியதே. இந்தியாவின் ஐ.நா.சபையின் நிரந்தர அங்கத்துவம், பயமுறுத்தும் போர்க் குற்ற விசாரணைகள் ஆகிய எல்லாவற்றுடனும் இது ஒத்துப் போகும், என்பதையும் கவனிக்கவும்! ரணில் மகிந்தவின் ராஜ தந்திரியாக எப்போதோ செயற்பட ஆரம்பித்து விட்டார். அத்துடன் இவர் சிங்கள ''ரதல' குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால், மகாநாயக்கர்களுக்கும் ஆட்சேபனை இருக்காது.

  • கருத்துக்கள உறவுகள்

ச்சா. சொந்தமாக சிந்திக்கத் தெரியாத ரணிலை 2005 ஜனாதிபதி தேர்தலில் வெல்ல வைத்திருக்கலாம். வீணாக சான்ஸை மிஸ் பண்ணிவிட்டோம் <_<

ச்சா. சொந்தமாக சிந்திக்கத் தெரியாத ரணிலை 2005 ஜனாதிபதி தேர்தலில் வெல்ல வைத்திருக்கலாம். வீணாக சான்ஸை மிஸ் பண்ணிவிட்டோம் <_<

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் கேட்கும்போது வெல்ல வைக்கலாம்.

Edited by மல்லையூரான்

  • தொடங்கியவர்

கரு இந்தியா சென்றுள்ளார்.

புது டெல்லியின் ஆசிர்வாதம் கிடைக்குமா என தெரியவில்லை, காரணம் ரணில் அவர்களின் ஒரு நல்ல சேவகன். அதேவேளை மகிந்த கூட்டத்திற்கு எதிராக டெல்லி ஒரு நிலைப்பாட்டை எடுத்தால் மட்டுமே கருவை ஆதரிக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

ச்சா. சொந்தமாக சிந்திக்கத் தெரியாத ரணிலை 2005 ஜனாதிபதி தேர்தலில் வெல்ல வைத்திருக்கலாம். வீணாக சான்ஸை மிஸ் பண்ணிவிட்டோம் <_<

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் கேட்கும்போது வெல்ல வைக்கலாம்.

ரணில் ராசியில்லாத தலைவர் என்று, சிங்களச் சாத்திரிமாரே... சொல்லிப் போட்டினம். :D:lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.