Jump to content

இந்தியாவின் பாகிஸ்தான் சுற்றுப்பயணம் 2006


Recommended Posts

ஏற்கனவே 3 முறை குற்றம்சாட்டப்பட்டு ஐ.சி.சி யினால் பரிசோதனைக்கு உட்படுத்தி தவறில்லை என்று தீர்ப்பு கூறிய பின் மீண்டும் இந்தியா பயிற்சியாளர் புகார் கூறியிருப்பது மீண்டு பாகிஸ்த்தான் இந்திய அணிகளிடயே சர்ச்சயை உருவாக்கி உள்ளது

3வது டெஸ்ட் போட்டியில் இந்தியா தோல்வியடையும் போதுதான் அந்த தவறுகள் அவைகளின் கண்களுக்கு தெரிகிறது போல கிடக்கு முதலில் மற்றவனில் பிழைபிடிப்பதை விட்டு விட்டு தாம் நேற்றதுக்கு என்ன காரணம் என அதை நிவர்த்திசெய்ய ஏன் பயிற்சியாளர் முயற்சிக்கவில்லை

இதே காரணம்தான் அவுஸ்ரேலியாவும் இலங்கையிடம் வாங்கிக்கட்டிய போதுதான் ரசிகர்களிடமிருந்த தப்புவதற்காகபழியினை முரளிமீது போட்டார்கள் கடைசியில் என்ன நடந்தது

Link to comment
Share on other sites

  • Replies 53
  • Created
  • Last Reply

1வது ODI போட்டி - Monday 2006

பாகிஸ்தான் 7 ஓட்டங்களால் (D/L Method)வெற்றி

நேற்று Arbab Niaz Stadium, Peshawarல் நடந்து முடிந்த பாகிஸ்தான் இந்தியா அணிகளுக்கிடையிலான 1வது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் 7ஓட்டங்களினால் (D/L Method) முறையில் அதாவது போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தால் ஆட்டம் இடைநிறுத்தப்பட்டு விளையாடி முடித்த 47ஓவர்களில் யார் அதிகம் ஓட்டம் பெற்றவர்கள் என பார்த்து வெற்றி அறிவிக்கப்பட்டது அதன் வகையில் பாகிஸ்தான் 47ஓவர் முடிவில் இந்தியாவை விட 7ஓட்டங்கள் அதிகமாகப் பெற்றிருந்தது

உண்மையில் இந்தியாவுக்கு காலநிலையும் கை குடுக்கவில்லை என்பது கவலைதான் இவ்வளவு திறமையாக விளையாடிய அவர்களால் வெற்றியைப் பெற முடியவில்லையே நேற்றைய ஆட்டத்தில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி இந்தியாவை முதலில் துடுப்பெடுதாட பணித்தது அதன்படி இந்தியாவும் 49.4ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து 328ஓட்டங்களைப் பெற்றது ஒருநிலையில் 4விக்கட் இழப்புக்கு 304ஓட்டங்களை எடுத்திருந்த போதும் மிகுதி 6 விக்கட்டுகளையும் 23ஓட்டங்களுக்கு இழக்க வேண்டி ஏற்பட்டது அணிக்கு வலுவுட்டினவர்கள்

Sr.Tendulkar - 100runs

Ik. Pathan - 65runs

Dhoni - 68runs

ஓவருக்கு 6.89ஒட்டங்கள் எடுக்கவேண்டிய நிலையில் களம் இறங்கிய பாகிஸ்தான் அணி மிகவும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடியது ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் திறமையாக தமது பணியைச் செய்தார்கள் இறுதியாக 47வது ஓவரில் 7 விக்கட்டுகளை இழந்து 311ஓட்டங்களை எடுத்திருந்த வேளை போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தால் ஆட்டம் இடைநிறுத்தப்பட்டு (D/L Method) முறையில் 7ஓட்டங்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது என அறிவிக்கப்பட்டது ஆட்டம் முழுமையாக நடைபெற்றிருந்தால் சிலவேளைகளில் முடிவும் கூட மாறியிருக்கலாம் பாகிஸ்தான் அணி சார்பாக

Salman Butt - 101runs

Shoaib malik - 90runs

ஸ்கோர் விபரம்

இந்தியா - 328 ஓட்டங்கள் (49.4ஓவர்கள்)

இந்தியா - 304 ஓட்டங்கள் (47 ஓவர்கள்)

பாகிஸ்தான் - 311/7 ஓட்டங்கள்

http://usa.cricinfo.com/db/ARCHIVE/2005-06..._06FEB2006.html

ஆட்ட நாயகன் : Salman Butt - 101runs

58828.jpg

Salman Butt celebrates his century

Link to comment
Share on other sites

நடுவர்கள் முடிவு அறிவிப்பதற்கு முன்னாலேயே பாகிஸ்தான் வீரர்கள் ஸ்டேடியத்தை விட்டு வெளியேறி அவர்களது ஒழுங்கீனத்தை பறைசாற்றினார்கள்.... 18 பந்தில் 18 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற நிலையில் கோழைத்தனமாக வெளியேறினார்கள்.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணிக்கு எங்கள் வாழ்த்துக்கள்!! இப்படி தொடர்ந்து வெல்லவேண்டும் என வாழ்த்துகின்றோம்

Link to comment
Share on other sites

கிரிக்கெட் விதிமுறையில் துடுப்பெடுத்தாடுபவர்களே (Bad light)வெளிச்சமில்லை என்று நடுவரிடம் முறையிட முடியும் ஆனபடியால் அவர்கள் அதன்அடிப்படையில் வெளியேறியிருக்கலாம் இதை ஒழுங்கீனம் என்று சொல்வதுக்கில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள ஒரு அணி கூட மரண அடி வாங்கி கொண்டிருக்கிறதாமே? திரும்பி வரும் போது குற்றுயிரும், குலை உயிருமாக தான் வரும் என்று பேசிக் கொள்கிறார்களே?

உங்களைப்போல ஆட்களுக்கு என்னத்தை எதனுடன் ஒப்பிடுவதென்றே தெரியாது. உமது படிப்பின் திறமையை இதிலிருந்தே அறியக்கூடியதாகவுள்ளது அறிவாளி. உங்களுக்கெல்லாம் என்னத்துக்கு எங்களது இணையத்தளங்கள் தேவைப்படுகிறது. உங்களுக்காகத்தானே நிறைய ஆட்கள் இருக்கிறார்கள் எங்களைப்பற்றி நையாண்டிபண்ண..போய்பண்ணவேண்டி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கிரிக்கெட் விதிமுறையில் துடுப்பெடுத்தாடுபவர்களே (Bad light)வெளிச்சமில்லை என்று நடுவரிடம் முறையிட முடியும் ஆனபடியால் அவர்கள் அதன்அடிப்படையில் வெளியேறியிருக்கலாம் இதை ஒழுங்கீனம் என்று சொல்வதுக்கில்லை

இதையே இந்தியர்கள் செய்திருந்தால் கதையையே அப்படியே மாற்றியிருப்பார்கள்

Link to comment
Share on other sites

முகத்தார் அவர்களே....

துடுப்பாட்டக்காரர்கள் அம்பயரிடம் இது குறித்து தெரிவித்து அவர்கள் முடிவெடுக்கும் வரை களத்தில் நிற்கவாவது செய்யலாம்... அதை விடுத்து எதுவும் தெரிவிக்காமல் நேரே பெவிலியனுக்கு திரும்பிய முறையை தான் ஒழுங்கீனம் என்றேன்.....

பாண்டியன் ரொம்ப நாளா காணோம்... ஏதாவது முக்கிய வேலையோ?

Link to comment
Share on other sites

தூயவன்,

வாழ்த்தி விட்டீர்களா போச்சு.... இனி பாக்.குக்கு இருண்ட காலம் தான்... உங்க ராசி அப்படியாச்சே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாண்டியன் ரொம்ப நாளா காணோம்... ஏதாவது முக்கிய வேலையோ?

இல்ல லக்கிலுக், நான் அனேகமாக ஒரு பார்வையாளராகத்தன் இருப்பேன் ஆனால் சில சமயங்களில் சிலர் எழுவதற்கு மட்டும் பதிலளிப்பேன் அதற்கு வேலைப்பழுவும் ஒரு காரணம்தான்.

Link to comment
Share on other sites

நானும் அப்படித்தான்.... எனக்கு என்னவோ இந்த களம் இன்னும் நெருங்கவே இல்லை....

மற்ற மத வழிபாட்டுத் தலங்களுக்கு போனால் ஏதோ ஒரு மாதிரி அந்நியமாய் இருக்கும்.... இங்கு எனக்கு அது போல் தான் இருக்கிறது......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தூயவன்,

வாழ்த்தி விட்டீர்களா போச்சு.... இனி பாக்.குக்கு இருண்ட காலம் தான்... உங்க ராசி அப்படியாச்சே?

உங்களின் ஆதரவுக் குரலால் இந்திய அணி எப்படி வாங்கிக் கட்டுகின்றதோ, அப்படி பாகிஸ்தானுக்கு இருக்காது என நம்புவோம்.

அதை விடுங்கள். இப்போது என்னைப் பற்றி தகவல்கள் திரட்டிக் கொண்டு திரிகின்றீர்களா? ராசியைப் பற்றி எல்லாம் தெரிந்து வைத்திருக்கின்றீர்கள்? :wink:

Link to comment
Share on other sites

கிரிக்கெட் விதிமுறையில் துடுப்பெடுத்தாடுபவர்களே (Bad light)வெளிச்சமில்லை என்று நடுவரிடம் முறையிட முடியும் ஆனபடியால் அவர்கள் அதன்அடிப்படையில் வெளியேறியிருக்கலாம் இதை ஒழுங்கீனம் என்று சொல்வதுக்கில்லை

நமக்கு நடந்ததை தொலைக்காட்சியில் பார்க்கக் கிடைக்கவில்லை. பாட் லைட் என்றால் நடுவர்கள் இண்டிகேற்றர் வைச்சு பரிசோதித்து தொடர்ந்து ஆடமுடியாது என்பதை அறிவித்த பிந்தான் வீரர்கள் களத்தை விட்டு வெளியேறலாம்..! :P :idea:

Link to comment
Share on other sites

குருவிகள்,

சரியாகச் சொன்னீர்கள்.... நடுவர்கள் முடிவு அறிவிப்பதற்கு முன்னாலேயே பாக். வீரர்கள் பெவிலியன் திரும்பியதை தான் நான் ஒழுங்கீனம் என்றேன்.... அவர்கள் பெவிலியன் போன பின் தான் டக் ஒர்த் லூயிஸ் முறையில் பாக். 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.....

Link to comment
Share on other sites

பந்து தாமதமாக வீசுவதற்கு பல காரணங்கள் இருக்கிறது... ஆனால் அதுவும் பிழை தான்... டிராவிட்டுக்கு கேப்டன் பொறுப்பில் அவ்வளவு அனுபவம் இல்லாததால் இது நேர்ந்திருக்கிறது.... ஆனால் பாக். வீரர்கள் எப்போதுமே, எல்லா அணியினருடனும் ஒழுங்கீனமாக தான் நடந்து கொள்கிறார்கள்....

Link to comment
Share on other sites

டிராவிட்டுக்கு கேப்டன் பொறுப்பில் அவ்வளவு அனுபவம் இல்லாததால் இது நேர்ந்திருக்கிறது

..

என்னங்க இது அணி வெண்டா மாத்திரம் அணித்தலைவரை புகழ்த்து தள்ளுறீங்கள் தோல்வியடைந்தா அந்த பழியை தூக்கி தலைவரின் தலையில் போட்டுவிடுகிறீயள் இந்த பொறுப்புகளில் இருந்து தப்பிக்கத்தான் சச்சின் தலைமை பதவியை விரும்பவில்லை இலங்கைக்கும் இங்கிலாந்துக்கும் போட்டு சாத்தேக்கை டிராவிட்டை புகழ்ந்த பத்திரிகைகள் இந்த தோல்விக்கு அவரை வசைபாடுவது கவலைக்குரியது ஏற்கனவே கங்குலியை ஓரங்கட்டிய பின் நல்லதொரு கப்டன் (டிராவிட்) இந்திய அணிக்கு கிடைத்திருக்கிறார் அவரின் மனநிலையை இப்பிடியான விமர்சனங்கள் பாதிக்குமல்லவா.........?????

Link to comment
Share on other sites

நான் கங்குலி ஆதரவாளன் என்பதால் திராவிட்டை பற்றி இதுபோல் நினைக்க தோன்றுகிறது.... நீங்கள் கிரிக்கெட் விளையாட்டைப் பற்றி நிறையத் தெரிந்தவர் என்பதால் நீங்கள் சொல்வது தான் சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாகிஸ்தான் இப்பொழுது நல்லாக விளையாடுகிறது. 80 இறுதிகளில் விளையாடிய அணி போலப்பலமாக உள்ளது. ஐ.சி.சி உலகத்தர டெஸ்ட் போட்டியில் இப்பொழுது 4ம் இடத்தில் உள்ளது. பலம்பொருந்திய இந்தியா,இங்கிலாந்து அணிகளினை வீழ்த்தி 108 புள்ளிகளை பெற்றுள்ளது. இங்கிலாந்து 113, இந்தியா 111 புள்ளிகளுடன் முறையே 2ம்,3ம் இடத்தினைப் பெற்றுள்ளார்கள். அடுத்து பாகிஸ்தான் அணி மார்ச் மாதம் இலங்கை செல்கிறது.

Link to comment
Share on other sites

_41321094_yuvraj.jpg

இந்திய - பாகிஸ்தான் ஒரு நாள் கிரிக்கெட் போட்டித் தொடரின் இரண்டாவது ஆட்டத்தில் பாகிஸ்தான் முதலில் துடுப்பெடுத்தாடி 50 ஓவர்களில் நிர்ணயித்த 265 ஓட்டங்கள் என்ற இலக்கை இந்திய அணி மூன்று விக்கற்றுக்களை ( இலக்குகம்புகள் வெற்றி பெற்றுள்ளது..! இதில் யுவராஜ் சிங் சிறப்பாக துடுப்பெடுத்தாடி ஆட்டமிழக்காது 82 ஓட்டங்களை அணிக்காகப் பெற்றுக் கொடுத்துள்ளார்..!

போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு வாழ்த்துக்கள்..! சிறப்பாக விளையாடி அணிக்கு வெற்றி தேடித் தந்த சிங்குக்கும் பாராட்டுக்கள்.. வாழ்த்துக்கள்..!

(விக்கற்றுக்கான தமிழ் பதம் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்..!)

தகவல் மூலம் - பிபிசி.கொம்

Link to comment
Share on other sites

2வது ODI போட்டி -Saturday 2006

இந்தியா 7 விக்கட்டுகளால் வெற்றி

இன்று Rawalpindiல் நடந்து முடிந்த பாகிஸ்தான் இந்தியா அணிகளுக்கிடையிலான 2வது ஒருநாள் போட்டியில் இந்தியா 7 விக்கட்டுகளால் வெற்றி

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுதாடியது ஆரம்பத்தில் 75ஓட்டங்களுக்கு 4விக்கட்டுகளை இழந்தாலும் 5வது விக்கட்டுக்கு ஜோடி Shoaib malik (95) Yonus Khan (81) இணைப்பாட்டத்தின்(102runs) மூலம் பாகிஸ்தான் 49.2ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து 265 ஓட்டங்களைப் பெற முடிந்தது பாகிஸ்தான் அணியில் 4வீரர்கள் ரண் அவுட் முறையில் அட்டமிழந்தது குறிப்பிடத்தக்கது அணிக்காக

Shoaib Malik - 95runs

Youns Khan - 81runs

அடுத்து களம் இறங்கிய இந்திய அணி அதிரடி ஆட்டம் போட்டதெண்டே சொல்லவேணும் ஆரம்ப துடுப்பாட்டக்காரர் தொடக்கம் சகலரும் மிகவும் திறமையாக விளையாடினார்கள் 7ஓவர்கள் மிகுதியாக இருக்கவே இந்த இலக்கை(266) வெறும் 3விக்கட்டுகளை மாத்திரம் இழந்து பெற்றுக் கொண்டது இந்திய அணி சார்பாக

Shaweg - 64 runs

Tendulkar - 42runs

*R Dravid -56 runs

Youva raj - 82runs

ஸ்கோர் விபரம்

பாகிஸ்தான் - 265 ஓட்டங்கள் (49.2 ஓவர்கள்)

இந்தியா - 266/3ஓட்டங்கள்

http://usa.cricinfo.com/db/NEW/LIVE/frames..._11FEB2006.html

58987.jpg

indian Heros

Link to comment
Share on other sites

3வது ODI போட்டி -Monday 2006

இந்தியா 5 விக்கட்டுகளால் வெற்றி

நேற்று Gaddafi Stadium, Lahoreல் நடந்து முடிந்த பாகிஸ்தான் இந்தியா அணிகளுக்கிடையிலான 3வது ஒருநாள் போட்டியில் இந்தியா 5 விக்கட்டுகளால் அபார வெற்றி பெற்றுள்ளது

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியாஅணி பாகிஸ்தானை துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது அதன்படி துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி ஆரம்பத்தில் அடுத்தடுத்து விக்கட்டுகளை இழந்தாலும் Shoaib Malik(108) Abdul Razzaq (64)ஆகியோரின் சிறப்பாட்டத்தால் 50ஓவர்கள் முடிவில் 8விக்கட்டுகளை இழந்து 288ஓட்டங்களை பெற முடிந்தது அணிக்காக

Shoaib Malik - 108runs

Abdul Razzaq - 64*runs

அடுத்து களம் இறங்கிய இந்திய அணி நிதானமாக விளையாடியது சச்சின் திரும்பவும் தான் பழைய நிலைக்கு வந்து விட்டதை நிருபித்தார் அடுத்து வந்த டோனியும் யுவராஜ்ம் அணியின் வெற்றிக்கு வழிகோலினர் 14பந்துகள் மிகுதமாக இருக்கவே 292 என்ற ஓட்ட எண்ணிக்கையை எடுத்து 5 விக்கட்டுகளால் வெற்றி பெற்றது

SR Tendulkar - 95runs

Yuvraj Singh - 79*runs

+MS Dhoni - 72*runs

ஸ்கோர் விபரம்

பாகிஸ்தான் - 288/8ஓட்டங்கள் (50 ஓவர்கள்)

இந்தியா - 292/5ஓட்டங்கள்

http://usa.cricinfo.com/db/ARCHIVE/2005-06..._13FEB2006.html

ஆட்ட நாயகன் - MS Dhoni

59127.jpg

Link to comment
Share on other sites

சச்சின் 10வது முறையாக 90களில் அவுட் ஆகிறார்.... நேற்று 40வது சதம் அடிப்பார் என்று 110 கோடி பேரும் எதிர்பார்த்து ஏமாந்தோம்......

Link to comment
Share on other sites

4வது ODI போட்டி ---- 16 Thursday 2006

இந்தியா அணி 5 விக்கட்டுகளால் வெற்றி

இந்திய பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 4வது ஓருநாள் போட்டி சென்ற வியாழக்கிழமை Multan Cricket Stadium ல்.பகலிரவு ஆட்டமாக நடைபெற்றது முதலில்

துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி மிகவும் பரிதாபமாக அடுத்தடுத்து 4விக்கட்டுகளை 30ஓட்டங்களுக்குள் இழந்தது இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களான இர்பான் பதான் (3)ம் ஆர்.பி சிங் (4) ம் மிகவும் சிறப்பாக பந்து வீசினர் பாகிஸ்தான் அணி கடும் போராட்டத்தின் மத்தியில் 41.5ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து வெறும் 161ஓட்டங்கள் மாத்திரமே பெற முடிந்தது அணித் தலைவர் இன்சாம் அல் ஹக் மட்டும் 49 ஓட்டங்களைப் பெற்றிருந்தர்

இதுக்கு பதிலளித்தாடிய இந்திய அணி 32.3ஓவர்களில் 5விக்கட்டுகளை மாத்திரமே இழந்து 162ஓட்டங்களை பெற்று மிகவும் இலகுவான வெற்றி ஒன்றை தமதாக்கிக் கொண்டனர் இந்திய அணியில்

R.Dravid - 59runs

Raina - 35runs

ஸ்கோர்

பாகிஸ்தான் -161 ஓட்டங்கள்(41.5ஓவர்)

இந்தியா -162/5ஓட்டங்கள்

http://usa.cricinfo.com/db/ARCHIVE/2005-06..._16FEB2006.html

ஆட்ட நாயகன் - RP Singh 40/4

59240.jpg

Rudra Pratap Singh

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 5 போட்டிகளை கொண்ட இத் தொடரில் இன்னொரு போட்டி பாக்கியுள்ள நிலையிலும் முடிவடைந்த 4போட்டிகளில் 3 : 1என்ற கணக்கில் வெற்றி பெற்று Hutch 2006 தொடர் கிண்ணத்தை தனதாக்கிக் கொண்டது

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஐபிஎல் 2024: பேட்ஸ்மேன்களின் காட்டடியால் கலங்கும் பந்துவீச்சாளர்கள் - டி20இல் நிகழும் மாற்றங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இங்கிலாந்து அணியின் ஒருநாள் கிரிக்கெட் கேப்டன் ஜோஸ் பட்லர், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக மூன்று இன்னிங்ஸ்களில் இரண்டு சதங்கள் அடித்துள்ளார். கட்டுரை தகவல் எழுதியவர், அயாஸ் மேமன் பதவி, கிரிக்கெட் எழுத்தாளர் 5 மணி நேரங்களுக்கு முன்னர் உலகின் பணக்கார கிரிக்கெட் போட்டியான இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) இந்த ஆண்டு பேட்டிங்கில் அபாரமான வாண வேடிக்கையைப் பார்க்க முடிகிறது. நாடு முழுவதும் உள்ள மைதானங்களில், பேட்ஸ்மேன்கள் எச்சரிக்கையைக் காற்றில் பறக்க விடுகிறார்கள். இரக்கமின்றி பெரிய ஷாட்களை அடிக்கிறார்கள், கிட்டத்தட்ட ஒவ்வொரு போட்டியையும் சிக்ஸர் அடிக்கும் திருவிழாவாக மாற்றுகிறார்கள். இதனால், பந்துவீச்சாளர்கள் வெலவெலத்துப் போயுள்ளனர். டி20 கிரிக்கெட் எங்கே போய்க்கொண்டிருக்கிறது என நிபுணர்களும், ரசிகர்களும் குழம்பிப் போயுள்ளனர். நாம் இதுவரை பார்த்த அதிரடி பேட்டிங்கின் சில புள்ளிவிவரங்களைப் பார்ப்போம். செவ்வாய்க்கிழமை இரவு சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னெள சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான சீசனின் 39வது போட்டிக்குப் பிறகு, மொத்தம் 1,191 பவுண்டரிகள் மற்றும் 686 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டுள்ளன. ஐபிஎல் 2023இல் மொத்தம் 2,174 பவுண்டரிகள் மற்றும் 1,124 சிக்ஸர்கள் பதிவு செய்யப்பட்டன. நடப்பு சீசன் பாதிக்கு மேல் எஞ்சியுள்ள நிலையில் கடந்த ஆண்டின் புள்ளிவிவரங்கள் எளிதில் முறியடிக்கப்படும் என்று எதிர்பார்ப்பது நியாயமானதே. பவுண்டரிகள், சிக்ஸர்கள் அதிகரித்திருப்பது அணியின் ஸ்கோரையும் அதற்கேற்ப உயர்த்தியுள்ளது.   எளிதில் முறியடிக்கப்படும் சாதனைகள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி டி20 வரலாற்றில் அதிக பவர்பிளே ஸ்கோரை பதிவு செய்ய டிராவிஸ் ஹெட் உதவினார். ஆரம்பக்கால ஐபிஎல் சீசன்களில், 150-160 ரன் என்பது சவால் கொடுக்கும் ஸ்கோராக கருதப்பட்டது. ஆனால் இன்று பெரும்பாலும் 10 போட்டிகளில் 8இல் இது போன்ற ஸ்கோர் அடித்த அணிகள் தோல்வியடைகின்றன. ஸ்கோரிங் முறைகளில் ஏற்பட்ட மாற்றத்தை விளக்குவதற்கு இந்த உதாரணத்தைப் பார்ப்போம். 2007ஆம் ஆண்டு தொடக்க டி20 உலகக் கோப்பையில் ஸ்டூவர்ட் பிராட் பந்தில் யுவராஜ் சிங் ஆறு சிக்ஸர்களை விளாசினார். அப்போது இந்தியா மொத்தம் 218 ரன்கள் எடுத்தது. அந்த நேரத்தில் இது ஒரு பெரிய சாதனை. இருப்பினும் 16 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு அணி 200 ரன்கள் அடிப்பது என்பது வாடிக்கையாகிவிட்டது. செவ்வாய்க்கிழமை வரை இந்த ஐபிஎல் சீசனில் நடந்து முடிந்துள்ள 39 ஆட்டங்களில் அணிகள் 19 முறை 200 ரன்களை கடந்துள்ளன. மொத்த ஸ்கோர் ஒன்பது முறை 400 ரன்களை தாண்டியது. வியக்க வைக்கும் வகையில் இரண்டு போட்டிகளில் இரு அணிகளின் மொத்த ஸ்கோர் 500 ரன்களை தாண்டியுள்ளது. சுவராஸ்யமான தகவல்கள் இன்னும் முடியவில்லை. இந்த சீசனில் சராசரி ரன் விகிதம் ஓவருக்கு 10. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் சீசனின் தொடக்கத்தில் இருந்தே சாதனைகளை முறியடிக்கும் ஓவர் டிரைவில் உள்ளனர். டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான முதல் பவர்பிளேவில் (ஆறு ஓவர்கள்) முன் எப்போதும் இல்லாத வகையில் 125 ரன்களை குவித்தனர். இது ஒரு ஓவருக்கு 20.83 ரன்கள் என்ற வியக்க வைக்கும் சாதனை. இந்த சீசனில் சன்ரைசர்ஸ் அணி, மூன்று முறை 250 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிராக 287 ரன்கள் எடுத்ததும் இதில் அடங்கும். இதுவொரு ஐபிஎல் சாதனை. இந்தப் போக்கு தொடருமானால் இந்த சீசனிலேயே 300 ரன்கள் என்ற சாதனை படைக்கப்படலாம். டி20 கிரிக்கெட், இயல்பிலேயே அதிரடி ஆட்டத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறது. பேட்டிங்கிற்கு நிலையான ஸ்ட்ரோக் ஆட்டம் தேவைப்படுகிறது. அங்கு ஒரு டாட் பால்கூட ஏற்றுக்கொள்ள முடியாதது. பேட்ஸ்மேன்கள் ஒவ்வொரு பந்திலும் அதிகபட்ச ரன் எடுக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. ஆகவே மட்டையை வீச தடையற்ற சுதந்திரம் வழங்கப்படுகிறது. இந்த உத்தியால் ஆபத்துகள் இருந்தாலும், பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்களால் உந்தப்பட்ட ரன் குவிப்பு இந்த சீசனில் ஒரு விதிவிலக்காகவே உள்ளது.   இத்தகைய அதிரடி பேட்டிங்கிற்கு காரணம் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் வீரர் அஷூதோஷ் ஷர்மா 28 பந்துகளில் 61 ரன்கள் குவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். எளிதான ஆடுகளங்கள் ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது. உலகமெங்கும் ஒயிட்-பால் கிரிக்கெட், ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20க்கான ஆடுகளங்கள் எளிதாக விளையாடக் கூடியதாகவே தயார் செய்யப்படுகின்றன. டி20 கண்கவர் ஆக்‌ஷன் வாக்குறுதியைக் கொண்டிருப்பதால், ரசிகர்கள், ஒளிபரப்பாளர்கள் மற்றும் ஸ்பான்சர்களுக்கு அதிரடி ஷாட்கள் முக்கிய அம்சமாகிவிட்டன. இதற்காகவே எல்லா ஏற்பாடுகளும் செய்யப்படுகின்றன. மற்ற டி20 லீக்குகளை போல் அல்லாமல் ஆடுகளங்கள் பேட்டிங்கிற்கு உகந்ததாக இருப்பதை ஐபிஎல் உறுதி செய்கிறது. இருப்பினும் ஃப்ளாட் பிட்சுகள் மட்டுமே பந்துவீச்சாளர்கள் எதிர்கொள்ளும் ஒரே தடை அல்ல. பேட்டர்கள் தற்போது நல்ல உடல் தகுதியுடனும், நல்ல வலுவுடனும், சாகசங்களுக்குத் துணிந்தவர்களாகவும் உள்ளனர். குறிப்பாக இளம் வீரர்கள் தங்கள் ஆரம்ப ஆண்டுகளிலேயே டி20இல் இழுக்கப்படுகின்றனர். அவர்கள் அதிக ரிஸ்குகளை எடுக்கின்றனர். போட்டிகளில் வெற்றிபெற, அற்புதமான சாதனைகளைப் படைக்க முயற்சி செய்கிறார்கள். போட்டியை எதிர்த்து சமாளிக்கவும், அதிக அங்கீகாரம் மற்றும் வெகுமதிக்காகவும் அவர்கள் இதைச் செய்கின்றனர். சில விதிமுறை மாற்றங்களும் பந்து வீச்சாளர்களின் முக்கியத்துவத்தைக் குறைப்பதில் பங்களித்துள்ளன. உதாரணமாக இந்த ஐபிஎல் சீசனில் இம்பாக்ட் சப்ஸ்டிட்யூட் அறிமுகமாகியுள்ளது. சரியான நேரத்தில் ஒரு குறிப்பிட்ட வீரரைக் கொண்டு வருவதற்கு பயிற்சியாளர்கள் மற்றும் கேப்டன்களுக்கு இது வாய்ப்பளித்துள்ளது. சூழலுக்கு ஏற்ப ஆட்டத்தை மாற்றிக்கொள்ள இதுவொரு சுவாரஸ்யமான வாய்ப்பைக் கொடுக்கிறது. மேலும் ஒரு பந்து வீச்சாளரைக்கூட இம்பாக்ட் சப்ஸ்டிட்யூட்டாக கொண்டு வர முடியும். ஆனால் இதுவரையிலான போக்கு பேட்டிங் வீரர்களுக்கு சாதகமாகவே உள்ளது. கிரிக்கெட் ஒரு பேட்டரின் விளையாட்டு என்று சொல்லப்படுகிறது. ஆனால், மட்டைக்கும் பந்துக்கும் இடையே அதிகரித்து வரும் இந்த இடைவெளி டி20க்கு நல்லதா என்பதுதான் தற்போது கிரிக்கெட் வட்டாரத்தில் நடக்கும் பரபரப்பான விவாதம். இந்தச் சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், பேட்டிங் ஜாம்பவானுமான சுனில் கவாஸ்கர் பந்துவீச்சாளர்களுக்கு ஆதரவு அளித்துள்ளார். "இது இந்த அளவுக்கு ஒருதலைப்பட்சமாக இருந்தால் அது போட்டியின் மீதான ஆர்வத்தைக் குறைத்துவிடும்," என்று அவர் கூறுகிறார்.   பந்துவீச்சாளர்களுக்கு சவாலான நிலை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆண்ட்ரே ரசல் அடிக்கும் ஒரு ஷாட். வழக்கமான 75 கெஜத்தில் இருந்து 65 அல்லது அதற்கும் குறைவாக பவுண்டரி தூரம் குறைக்கப்பட்டது கவாஸ்கரின் கோபத்திற்கு முக்கிய காரணம். "ஒரு பந்து வீச்சாளர் தன் பந்து மூலம் பேட்ஸ்மேனை தவறு செய்யத் தூண்டுகிறார். ஆனால் பவுண்டரி தூரம் குறைக்கப்பட்டதால் அது பந்துவீச்சாளருக்கு எதிராகிவிடுகிறது. கேட்ச் ஆக மாற வேண்டிய பந்து சிக்ஸருக்கு சென்றுவிடுகிறது,” என்று அவர் கடுப்புடன் கூறினார். நவீன பேட்டுகளின் வல்லமை காரணமாகத் தவறாக அடிக்கப்படும் ஷாட்டுகளில்கூட பந்து கணிசமான தூரம் பயணிக்கிறது. இது கவாஸ்கரின் கவலையை நியாயப்படுத்துகிறது. முன்னாள் தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன், பந்து வீச்சாளர்களின் திறமை மற்றும் மனோபாவத்திற்கு சவால் விடும் சூழ்நிலையாக இதைப் பார்க்கிறார். "பௌலர்கள் நான்கு ஓவர்களில் ஹீரோக்களாக மாறுவதற்கான வாய்ப்பும் ஊக்கமும் உள்ளது" என்கிறார் ஸ்டெய்ன். டி20 ஆட்டத்தின் மனநிலை மரபுவழியில் இருந்து வியத்தகு முறையில் மாறியுள்ளது. இந்த மாற்றம் தொடர்கிறது. எனவே கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்துவீச்சாளர்கள் என்று அனைவருமே ஆற்றல்மிக்கவர்களாக, செயல்திறன் கொண்டவர்களாக, ஆக்கப்பூர்வமாக இருக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. ஆனால் கோல்ஃப் மற்றும் பேஸ்பாலின் சங்கமம் போல டி20 கிரிக்கெட் மாறாமல் இருக்க, பேட் மற்றும் பந்தின் சமநிலை பராமரிக்கப்பட வேண்டும். https://www.bbc.com/tamil/articles/c1038g85e13o
    • டி.ஆர்.பாலுவை விமர்சித்த யூடியூபர் குடும்பத்துக்கு மிரட்டல் என குற்றச்சாட்டு - திமுக தரப்பு விளக்கம் என்ன? பட மூலாதாரம்,சிவராமகிருஷ்ணன் 2 மணி நேரங்களுக்கு முன்னர் ஸ்ரீபெரும்புதூர் திமுக நிர்வாகி ராமலிங்கத்தின் மகன் சிவராமகிருஷ்ணன் ஜப்பானில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். தனது சொந்த ஊரான ஸ்ரீபெரும்புதூரில், திமுக எம்.பி. டி.ஆர்.பாலு வளர்ச்சித் திட்டங்கள் எதையும் நடைமுறைப்படுத்தவில்லை எனக் குற்றம் சாட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இதனால் அவருடைய குடும்பத்தாருக்கு திமுகவினரே‌ மிரட்டல் விடுப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால், ஸ்ரீபெரும்புதூர் நகர செயலாளர் சதீஷ் பிபிசி தமிழிடம் பேசியபோது, இந்த விவகாரம் குறித்துத் தனக்கு எதுவும் தெரியாது என்றும் சிவராமகிருஷ்ணனின் தந்தை ராமலிங்கத்துடன் தனக்கு நெருங்கிய பழக்கமே கிடையாது எனவும் விளக்கம் அளித்தார். என்ன நடந்தது? ஜப்பானில் பணியாற்றும் சிவராமகிருஷ்ணன் ஜப்பான் தமிழ் ப்ரோஸ் என்ற யூடியூப் சேனல் நடத்தி வருகிறார்.‌ அதில் வெளியிட்டுள்ள வீடியோவில் அவர், “அனைவரும் ஸ்ரீபெரும்புதூர் பிரம்மாண்டமாக வளர்ந்திருப்பதாக நினைக்கிறார்கள். வளர்ந்துள்ளது என்றால் என்ன‌ பொருள்? வேலை வாய்ப்புகள் இருக்கிறது. ஆனால், மக்களுக்குத் தரமான வாழ்க்கை இருக்கிறதா? இத்தனை பேர் வாழும் ஸ்ரீபெரும்புதூரில் ஒரு பூங்கா கிடையாது. சாலை போட இந்த அரசுக்குத் தெரியுமா? பத்து ஆண்டுகளாகப் பல நூறு கோடி செலவு செய்து பாதாள சாக்கடை கட்டப்பட்டு வருகிறது. அது செயல்முறைக்கு வரும்போதுதான், அந்தத் திட்டம் எப்படி இருக்கிறது என்று தெரியும். (டி.ஆர்‌.பாலு) ஸ்ரீபெரும்புதூரில் என்ன செய்து விட்டார் என்று இரண்டாவது முறையாக அவருக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது எனத் தெரியவில்லை,” என்று பேசியிருந்தார். அவர் 3 லட்சம் பின் தொடர்பவர்கள் கொண்ட தனது யூ டியூப் பக்கத்தில் இந்த வீடியோவை வெளியிட்டார்.   பட மூலாதாரம்,திமுக ஸ்ரீபெரும்புதூர் வார்டு அவைத்தலைவர் ராமலிங்கம் இந்த வீடியோவை வெளியிட்டதற்காக திமுக நகரச் செயலாளரும், ஸ்ரீபெரும்புதூர் ஊராட்சித் தலைவர் சாந்தியின் கணவருமான சதீஷ் தன்னை மிரட்டியதாக, ஸ்ரீபெரும்புதூர் இரண்டாவது வார்டு அவைத் தலைவராக உள்ள ராமலிங்கம் கூறுகிறார். இந்த விவகாரம் குறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், “கடந்த 12 ஆண்டுகளாக பாதாள சாக்கடைப் பணிகள் நடைபெறுகின்றன. நானும் என் மனைவியும் ஒருமுறை தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து பலத்த காயமடைந்தோம். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, என் மகன் ரூ.8 லட்சம் சிகிச்சைக்காக செலவு செய்தான். பள்ளிக் குழந்தைகள், பொதுமக்கள் எனப் பலரும் அதில் விழுகிறார்கள்," என்று கூறினார். மேலும், அந்த ஆதங்கத்தில் தனது மகன் வீடியோவை வெளியிட்டதாகவும் அதற்காக தாம் கட்டிக் கொண்டிருக்கும் வீட்டை இடித்துவிடுவதாக சதீஷ் மிரட்டியதாகவும் கூறினார். பட மூலாதாரம்,YOUTUBE நான்கு நாட்கள் முன்பு “DMK Sriperumbudur MP டி.ஆர் பாலு UPகள் மிரட்டல்” என்று மற்றொரு வீடியோவை வெளியிட்டிருந்தார். முதல் வீடியோவில் தாம் பேசியதற்காக ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி நகர திமுக செயலாளர் சதீஷ் தனது தந்தையை மிரட்டியதாக அதில் கூறியிருந்தார். அந்த வீடியோவில், “ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் என்ன பிரச்னைகள் இருக்கின்றன என்பது இந்தத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர் பாலுவின் காதுகளுக்கு எட்ட வேண்டும் என்றுதான் காணொளி வெளியிட்டிருந்தேன். அதற்காக எனது தந்தையை மிரட்டியுள்ளனர். நான் காணொளி வழியாக வெளிப்படுத்திய பிரச்னைகளை வருங்காலத்தில் நிவர்த்தி செய்வோம் என்று கூறியிருக்கலாம். ஆனால் அதை விட்டு, மிரட்டுவது எந்த விதத்தில் நியாயம்? இப்போது என்னை சீண்டிவிட்டார்கள், நான் சும்மா விடமாட்டேன்," எனப் பேசியுள்ளார். மேலும், "ஸ்ரீபெரும்புதூர் பஞ்சாயத்து கடந்த மூன்று ஆண்டுகளில் முறைகேடுகளைச் செய்துள்ளனர். இதுவரை என்னென்ன திட்டங்கள், எவ்வளவு செலவு செய்துள்ளனர் என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் முழு தகவல்களையும் வெளியே கொண்டு வரப் போகிறேன். நான் எந்தக் கட்சி சார்பாகவும் பேசவில்லை. பெரிய கட்சிகள் என்று கூறுகிறார்கள், அவர்களின் முகத் திரைகள் கிழிக்கப்பட வேண்டும். நான் என்ன திமுகவுக்கு எதிரியா? நாளை பாஜக, அதிமுக, நாம் தமிழர் என யார் ஆட்சிக்கு வந்தாலும் கேள்வி கேட்கும் சாதாரண மனிதன். பெரிய தலைவர்கள் தங்களுக்குக் கீழ் உள்ளவர்களுக்குக் கடிவாளம் போடத் தவறுவதால்தான் திமுக மீது இவ்வளவு அவபெயர் ஏற்படுகிறது. அதிமுக ஆட்சியில் இருந்தபோதும் லஞ்சம் ஊழல் இருந்தது. ஆனால் அது மக்களை நேரடியாகப் பாதிக்கவில்லை. ஆனால், இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு, கல், மண், ஜல்லி என எதைத் தொட்டாலும் லஞ்சம்,” என்று அந்த வீடியோவில் பேசியிருந்தார்.   பட மூலாதாரம்,YOUTUBE மேலும் அதே வீடியோவில் தனது தந்தை வீடியோ கால் மூலம் தன்னிடம் பேசியதை வெளியிட்டிருந்தார் சிவராமகிருஷ்ணன். அதில், “செயலாளர் சதீஷ் என்னை அழைத்து, 'எப்படி உன் மகன் இப்படி வீடியோ போடலாம், நீ எப்படி வீட்டு வரி, குடிநீர் இணைப்பு, பாதாள சாக்கடை இணைப்பு வாங்குவாய் எனப் பார்க்கிறேன். அனைத்துக்கும் என்னிடம்தான் வர வேண்டும், எப்படி வாங்குகிறாய் எனப் பார்க்கிறேன்' என்று கூறியதாக" ராமலிங்கம் பேசியிருந்தார். திமுக உட்பட எந்தக் கட்சியில்தான் இல்லை என்று கூறிய சிவராமகிருஷ்ணன் பிபிசி தமிழிடம் பேசியபோது, “ஸ்ரீபெரும்புதூரில் பல சுற்றுச்சூழல் பாதிப்புகள் உள்ளன. அங்குள்ள நெடுஞ்சாலையை நான்குவழிச் சாலையிலிருந்து ஆறு வழிச் சாலையாக மாற்றும் திட்டம் நடைபெறுகிறது. வயலுக்குச் செல்ல நாங்கள் இந்த நெடுஞ்சாலையைக் கடந்து செல்ல வேண்டும். எனவே ஒரு மேம்பாலம் அல்லது சுரங்கப்பாதை கட்டித் தருமாறு கேட்டோம். அதை இன்னும் செய்யவில்லை. நான் காணொளியில் கூறியது என் கருத்து. ஆனால், எனது அப்பாவை மிரட்டியுள்ளனர். எங்களுக்கு நான்கு வீடுகள் உள்ளன. அதில் ஒன்றில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதற்கான குடிநீர், பாதாள சாக்கடை இணைப்புகள் கிடைக்காது என்றும், வீடுகளை இடித்து விடுவோம் என்றும் தொடர்ந்து பலரது முன்னிலையில் அவதூறாகப் பேசியுள்ளனர். இதனால் எனது தந்தை மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தார்,” என்றார் சிவராமகிருஷ்ணன்.   பிபிசி தமிழிடம் பேசிய ஸ்ரீபெரும்புதூர் நகர செயலாளர் சதீஷ், “இந்த விவகாரம் குறித்து எனக்கு எதுவும் தெரியாது, நண்பர்கள் கூறித்தான் அந்த வீடியோவையே பார்த்தேன். ராமலிங்கம் கட்சி உறுப்பினர்தான். இதே பகுதியில், செல்வபெருமாள் தெருவில்தான் வசிக்கிறார். ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வந்தார். வாக்குப்பதிவு நாளில் அவரை நான் பார்த்தபோது 'வாக்குப்பதிவு நன்றாக போய்க் கொண்டிருக்கிறது' என்று கூறினார். அவருடன் எனக்கு நெருங்கிய பழக்கமே கிடையாது. அவர் நிலத்தில் அவர் வீடு கட்டினால் நான் என்ன செய்து தடுக்க முடியும்?” என்று விளக்கம் அளித்தார். https://www.bbc.com/tamil/articles/cw8qd458jjgo
    • Published By: VISHNU 26 APR, 2024 | 08:26 PM (நெவில் அன்தனி) மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் பந்துவீச்சில் இந்தோனேசிய கிரிக்கெட் வீராங்கனை ரொஹ்மாலியா அதிசிறந்த பந்துவீச்சுப் பெறுதியைப் பதிவுசெய்து உலக சாதனை படைத்துள்ளார். 17 வயதான ரொஹ்மாலியா ஒரு ஓட்டமும் விட்டுக் கொடுக்காமல் 7 விக்கெட்களைக் கைப்பற்றி ஆண்களுக்கான மற்றும் பெண்களுக்கான சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளுக்கான உலக சாதனையை படைத்தார். பாலியில் நடைபெற்ற மொங்கோலியாவுக்கு எதிரான 5ஆவது மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் அறிமுகமான ரொஹ்மாலி 3.2 ஓவர்கள் பந்துவீசி ஒரு ஓட்டத்தையும் விட்டுக்கொடுக்காமல் 7 விக்கெட்களை வீழ்த்தி உலக சாதனை நிலைநாட்டினார். மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளில் 7 விக்கெட்களை வீழ்த்திய 3ஆவது வீராங்கனை ரொஹ்மாலியா ஆவார். இதற்கு முன்னர் பெரு அணிக்கு எதிராக 2022இல்  ஆர்ஜன்டீனாவின் அலிசன் ஸ்டொக்ஸ் என்பவரும் பிரான்ஸுக்கு எதிராக 2021இல் நெதர்லாந்தின் ப்ரெடரிக் ஓவர்டிக என்பவரும் ஒரே பந்துவீச்சுப் பெறுதியான 3 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்கள் என்ற உலக சாதனையை சமமாகக் கொண்டிருந்தனர். ஆடவர் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் 8 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்கள் என்ற சாதனையை சீன வீரர் சியாஸ் ஐத்ருஸ் தன்னகத்தே கொண்டுள்ளாளர். கோலாலம்பூரில் மலேசியாவுக்கு எதிராக கடந்த வருடம் நடைபெற்ற போட்டியில் அவர் இந்த சாதனைக்கு சொந்தக்காரரானார். இது ஆடவருக்கு மட்டும்  சர்வதேச ரி20 கிரிக்கெட்   உலக சாதனையாகும். https://www.virakesari.lk/article/182055
    • ஒரு அரசியல் கட்சியின்/ இயக்கத்தின்  கடந்த கால  நடவடிக்கைகளையோ அல்லது கட்சிகளின்/ இயக்கங்களின்  தலைவர்களையோ விமர்சிப்பது என்பது அவர்கள்ளை ஒட்டு மொத்தமாக நிராகரிப்பதாகாது.  அரசியல் விமர்சனம் என்பது அரசியல் பிரமுகர்கள் அல்லது நிறுவனங்களின் நடவடிக்கைகள், கொள்கைகள் அல்லது நம்பிக்கைகளை பகுப்பாய்வு செய்து மதிப்பீடு செய்வதை உள்ளடக்கியது. ஒரு  அரசியல் தலைவரை அல்லது கட்சியை/ இயக்ததை  ஒட்டுமொத்தமாக நிராகரிப்பதையோ  அல்லது  அந்த தலைவரை/ அக்கட்சியை/ இயக்கத்தை  விமர்சனத்துக்கு  அப்பாற்பட்டவர்களாக புனிதப்படுத்துவதுவதோ  நேர்மையான அரசியல் கருத்தாடலுக்கு பங்கம் விளைவிக்கும் என்பதுடன் ஆரோக்கியமான அரசியல் கருத்தாடலாக அமையாது. 
    • யாழில் நான்காயிரம் ரூபாவுக்கு விற்கப்பட்ட தேங்காய்!! (மாதவன்) யாழ்ப்பாணத்தில் இளைஞர்கள் வருடாந்தம் நடத்தும் போர்த் தேங்காய் போட்டிக்காக பயன்படுத்தும் தேங்காய்கள் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன்போது ஓர் தேங்காய் நான்காயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சங்கானை இந்து இளைஞர் அமைப்பினால் இந்த போர்த் தேங்காய் ஏல விற்பனை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன்போது போர்த் தேங்காய் போட்டிக்கு பயன்படுத்தப்படக் கூடிய வைரமான தேங்காய்கள் தெரிவு செய்யப்பட்டு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. தெரிவு செய்யப்பட்ட ஏனைய அனைத்து தேங்காய்களும் ஆயிரம் ரூபாவிற்கும் அதிகமாக ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டதுடன் அதில் ஒரு தேங்காய் 4000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. அந்த தேங்காயை பல போட்டியாளர்கள் பெற்றுக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். பாரம்பரிய போர்த் தேங்காய் விளையாட்டை பேணிப் பாதுகாக்கும் நோக்கில் சங்காய் இளைஞர் அமைப்பு இந்த போட்டியை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. (ஏ) யாழில் நான்காயிரம் ரூபாவுக்கு விற்கப்பட்ட தேங்காய்!! (newuthayan.com)
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.