Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சோனியாவின் அடங்காத பிண வெறி. தமிழகத்தை விழிப்பூட்டி அப்பாவி உயிர்கள் காக்க உதவுவோம் வாரீர்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

printButton.png | emailButton.png

வெள்ளிக்கிழமை, 12, ஆகஸ்ட் 2011 (20:53 IST)

என் மகனை காப்பாற்றுங்கள்: நாதியற்ற இந்த தாய்க்கு வேறு வழி இல்லை: பேரறிவாளன் தாயார் கண்ணீர்

para-1.jpg

para-3.jpg

para-2.jpg

20 ஆண்டுகளாக சிறையில் வாடிய என் மகனை காப்பாற்றுங்கள் என்று பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிம் பேசிய அவர்,

இருபத்தியோரு ஆண்டுகள் பொறுமையுடன் காத்திருந்து கருணை மனுவை மட்டுமே நம்பி இன்று ஏமாற்றத்தின் உச்சியில் இருக்கிறேன். வழக்கில் இத்தனை குளறுபடிகள், முடிவடையாத விசாரணைகள், கண்டுபிடிக்க முடியாத முடிச்சுகள் இருப்பதை காரணம் கொண்டு நிரபராதியான என் மகன் உறுதியாக விடுவிக்கப்படுவான் என்று நம்பி இருந்தேன்.

உலகில் எங்கும் நடக்காத அநியாயமாக காந்திய நாடு என்று சொல்லிக்கொள்ளும் அஹிம்சையை போற்றும் இந்திய நாட்டில், ஒருவன் நிரபராதி, நிரபராதி என்று கதறிக்கொண்டிருக்கும்பொழுதே தூக்கிலிட துடிக்கிறது காங்கிரஸ் அரசாங்கம்.

மக்களிடம் நான் சொல்ல விரும்புவதெல்லாம் ஒன்றுதான். பேரறிவாளனுக்கும் ராஜீவ் காந்தி கொலை சதிக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. இனி மக்களாகிய நீங்கள் உணர்ந்து, உங்கள் கருத்தை உரக்கச் சொன்னால் மட்டுமே என் மகனும் அவனை போல இருவரும் உயிர் பிழைக்க வாய்ப்பிருக்கிறது. தாய்மார்கள் ஒரு தாயின் தவிப்பை உணர்ந்து, என் மகனின் உயிர் மீட்பு போராட்டத்தில் கண்டிப்பாக என்னுடன் வருவார்கள் என்று உறுதியாக நம்புகிறேன்.

மாணவர்களும், சட்ட நிபுணர்களும் ஒரு வரலாற்று தவறு நிகழ்வதை இப்பொழுதே தடுக்க வேண்டும். மனித உரிமை ஆர்வலர்களும், சமூக ஆர்வலர்களும், அரசியல் தலைவர்களும் இவர்களின் தண்டனையை மறுபரிசீலனை செய்ய ஒருசேர உரத்து குரல் கொடுக்க வேண்டும். இனியும் காலம் இல்லை என்பதை நான் சொல்லத் தேவை இல்லை என்று நம்புகிறேன்.

தமிழக முதல்வரும் என் மகனின் குற்றமற்ற தன்மையை உணர்ந்து, அவன் உயிரை காக்கும் அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறேன். நாதியற்ற இந்த தாய்க்கு வேறு வழி இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

படங்கள்: ஸ்டாலின்

நக்கீரன்

Left:

Edited by nedukkalapoovan

1. கடந்த இரு சனாதிபதிகள் காலத்திலும் மறுக்கப்பட்ட மரணதண்டனை இப்பொழுது ஒரு பெண்ணால் அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்திய சனநாயகத்தில் என்னதான் நடக்கின்றது?

தமிழக உறவுகள் தமது போராட்டங்களை தந்திரோபாயமாக முன்னெடுக்கவேண்டும்.

இவர்களை விடுவிக்க வேண்டும்.

2. 'தவறு' என வாக்களிக்கலாம் - http://tamil.yahoo.com/

ராஜிவ் கொலை: தூக்குத் தண்டனை பெற்ற முருகன், சாந்தன், பேரறிவாளனின் கருணை மனுக்களைக் குடியரசுத் தலைவர் நிராகரித்தது சரியா?

சரி (1064) 54% தவறு (823) 42% கருத்து இல்லை (75) 4%

  • கருத்துக்கள உறவுகள்

தூக்கில் எல்லாம் போட மாட்டார்கள் அது இங்க மிகபெரிய அளவில் கொந்தளிப்பை ஏற்படுத்தும் .. சாகும் வரை சிறையில் வைத்து போடுவார்கள்.. :( :(

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

தூக்கில் எல்லாம் போட மாட்டார்கள் அது இங்க மிகபெரிய அளவில் கொந்தளிப்பை ஏற்படுத்தும் .. சாகும் வரை சிறையில் வைத்து போடுவார்கள்.. :( :(

இதில் அரசியல் உள்ளது உண்மைதான். ஆனால் போனவருடம் மட்டும் பேரை தூக்கில் போட்டுள்ளார்களே?

  • கருத்துக்கள உறவுகள்

இதில் அரசியல் உள்ளது உண்மைதான். ஆனால் போனவருடம் மட்டும் பேரை தூக்கில் போட்டுள்ளார்களே?

சர்வதேச அரசியல் வேறு உள்ளூர் லோக்கல் வேறு என்று தங்களுத்தான் தெரியுமே தோழர் அகூதா.. போனவருடம் வரை தூக்கில் போட்டார்கள் என்றால்.. உள்ளூரில் பாலியல் வல்லுறவு.கொலை கொள்ளை செய்தவர்களுக்கு எல்லாம் எவனும் இங்க துடிக்க போவது இல்லை...

சர்வதேச அரசியல் வேறு உள்ளூர் லோக்கல் வேறு என்று தங்களுத்தான் தெரியுமே தோழர் அகூதா.. போனவருடம் வரை தூக்கில் போட்டார்கள் என்றால்.. உள்ளூரில் பாலியல் வல்லுறவு.கொலை கொள்ளை செய்தவர்களுக்கு எல்லாம் எவனும் இங்க துடிக்க போவது இல்லை...

உணமைதான். ஆனால், சில தமிழக உறவுகள் ' ஒட்டுமொத்த மரணதண்டனையையும் நிற்பாட்டல் வேண்டும்' ( கனடாவில் மரணதண்டனை கிடையவே கிடையாது) என்ற கோணத்தில் போராட்டத்தை முன்னெடுக்க முனைகின்றனர். இந்த மூவரையும் காப்பாற்ற அந்தவழி பயன்தராது என்றே ஊகிக்கமுடிகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

உணமைதான். ஆனால், சில தமிழக உறவுகள் ' ஒட்டுமொத்த மரணதண்டனையையும் நிற்பாட்டல் வேண்டும்' ( கனடாவில் மரணதண்டனை கிடையவே கிடையாது) என்ற கோணத்தில் போராட்டத்தை முன்னெடுக்க முனைகின்றனர். இந்த மூவரையும் காப்பாற்ற அந்தவழி பயன்தராது என்றே ஊகிக்கமுடிகின்றது.

ஜான் டேவிட் போல எல்லாம் இவர்களை தூக்கில் போட முடியாது.. இது இனசிக்கல் சார்ந்த விடயம்

பொறுமை காப்பார்கள் அந்த பொறுமையில் எல்லை ஆயுள்கைதி.... :( :(

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்ப் பற்றாளர் அப்துல் கலாம் ஜனாதிபதியாக இருந்த போது கூட... இவரின் கருணை மனுவை நிராகரித்தது, கவலையான செய்தி. :mellow:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்ப் பற்றாளர் அப்துல் கலாம் ஜனாதிபதியாக இருந்த போது கூட... இவரின் கருணை மனுவை நிராகரித்தது, கவலையான செய்தி. :mellow:

அப்துள் கலாம்.. இவர்களின் கருணை மனை நிராகரிக்கவும் இல்லை.. ஏற்கவும் இல்லை. மனிதர் சோலியே வேண்டாம் என்று கிடப்பில் போட்டு விட்டார். இந்த அம்மையார் சோனியாவால் கொண்டு வரப்பட்ட ஒருவர். சோனியாவின் திருகு பொம்மையும் கூட. அந்த வகையில் இவர் அந்தம்மாவின் விருப்புக்கு ஆடுகிறார்.. அவ்வளவே..!

  • கருத்துக்கள உறவுகள்

இத்தனை வருடங்கள் ஆனபோதும் வெறி அடங்காத ஒருவர் காந்தியகட்சிக்கு தலைவர். உருப்படுமா சாத்வீகம்???

  • கருத்துக்கள உறவுகள்

அப்துள் கலாம்.. இவர்களின் கருணை மனை நிராகரிக்கவும் இல்லை.. ஏற்கவும் இல்லை. மனிதர் சோலியே வேண்டாம் என்று கிடப்பில் போட்டு விட்டார். இந்த அம்மையார் சோனியாவால் கொண்டு வரப்பட்ட ஒருவர். சோனியாவின் திருகு பொம்மையும் கூட. அந்த வகையில் இவர் அந்தம்மாவின் விருப்புக்கு ஆடுகிறார்.. அவ்வளவே..!

ஒரு, அப்பாவி தமிழனை காப்பாற்ற முடியாத பதவியும், தமிழ்ப் பற்றும் அப்துல் கலாமுக்கு எதற்கு?

பிறகு ஏன்... பாடசாலை மாணவர்களுக்கு புத்தி சொல்ல வெளிக்கிடுறார்.

அந்தாள் நல்ல மனுசன் எண்டு நினைத்தேன்... கடைசியில் அவரும் ஒரு அரசியல்வாதியாகி விட்டார்.

ஒரு, அப்பாவி தமிழனை காப்பாற்ற முடியாத பதவியும், தமிழ்ப் பற்றும் அப்துல் கலாமுக்கு எதற்கு?

பிறகு ஏன்... பாடசாலை மாணவர்களுக்கு புத்தி சொல்ல வெளிக்கிடுறார்.

அந்தாள் நல்ல மனுசன் எண்டு நினைத்தேன்... கடைசியில் அவரும் ஒரு அரசியல்வாதியாகி விட்டார்.

காங்கிரஸ் உள்ளவரை, அண்ணன் வைகோவே சனாதிபதியாக இருந்தாலும் இவர்களை மன்னித்து விடமுடியாது.

வைகோ பிரதமர் ஆனால் மட்டுமே சாத்தியம், ஆனால் சாத்தியமாகாது.

ஒரு, அப்பாவி தமிழனை காப்பாற்ற முடியாத பதவியும், தமிழ்ப் பற்றும் அப்துல் கலாமுக்கு எதற்கு?

பிறகு ஏன்... பாடசாலை மாணவர்களுக்கு புத்தி சொல்ல வெளிக்கிடுறார்.

அந்தாள் நல்ல மனுசன் எண்டு நினைத்தேன்... கடைசியில் அவரும் ஒரு அரசியல்வாதியாகி விட்டார்.

ஜனாதிபதிப் பதவி அதிகாரம் இல்லாத கௌரவ பதிவி மட்டுமே. அவர் உள்ளே கிடைக்கும் அறிவுரையின் பிரகாரமே ஏற்பதும் மறுப்பதும்.

அப்துல் கலாம் பலமுறை அரசாங்கத்தின் அறிவுரைகளை எற்க மறுத்ததினாலேயே இரண்டாமுறை காங்கிரஸ் அவருக்கு பதவியை கொடுக்கவில்லை.

கருணை மனு நிராகரிக்கப்பட்டதால் ....விரைவில் தூக்கிலிடப்படும் வாய்ப்பு அதிகம்.

கொந்தளிப்பு எல்லாம் ஒருத்தனுக்கும் வராது! மக்கள் மனம் கல்லாகி விட்டது!

ஆளுநர் மூலம் மூவர் தண்டனையை இரத்து செய்க! - மணியரசன் அறிக்கை

மாண்புமிகு தமிழக முதல்வர் செ.செயலலிதா அவர்கள், பேரறிவாள், முருகன், சாந்தன் ஆகியோரது கருணை மனுக்களைப் பெற்று, தமிழக ஆளுநர் மூலம் அவர்களது தூக்குத் தண்டனையை இரத்து செய்ய வேண்டுமென தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன். இதற்கான அதிகாரத்தை இந்திய அரசமைப்புச் சட்ட விதி 161 வழங்குகின்றது என்பதையும் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

இவ்வாறு தமிழ்த் தேசியப் பொதுவுடமைக் கட்சியின் பொதுச் செயலாளர் பெ.மணியரசன் விடுத்துள்ள அறிக்கையில் கேட்டுள்ளார். இவ் அறிக்கையின் முழுவிபரம் பின்வருமாறு:

இராசீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு வேலூர் நடுவண் சிறையில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அநியாயமாக சிறைபட்டிருக்கும் தோழர்கள் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரது கருணை மனுக்களை இந்தியக் குடியரசுத் தலைவர் தள்ளுபடி செய்துள்ளார்.

பேரறிவாளன் உள்ளிட்ட தோழர்களின் கருணை மனுவை நடுவண் உள்துறை அமைச்சகம் தள்ளுபடி செய்யலாம் என குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை அனுப்பியவுடனேயே, அவசர அவசரமாக கருணை மனுவை தள்ளுபடி செய்துள்ளார் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டில்.

இராசீவ் கொலை வழக்கிற்கு தடாச் சட்டம் பொருந்தாது என்று உச்சநீதிமன்றம் அறிவித்த பின்னரும், அதே சட்டத்தின் கீழ் பெறப்பட்ட ஒப்புதல் வாக்குமூலங்களை மட்டுமே ஒரே சாட்சியமாகக் கொண்டு இவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. இது மிகப்பெரும் முரண்பாடாகும்.

இவர்களிடம் வாக்குமூலம் வாங்கிய காவல்துறை அதிகாரி தியாகராசன் என்பவர், ஏற்கெனவே கேரளா எர்ணாக்குளத்தில் கண்காணிப்பாளராக பணிபுரிந்த போது அருட்சகோதரி அபயா என்பவரது கொலை வழக்கை தற்கொலை வழக்காக மாற்ற முயற்சித்து அதற்காக தண்டனையும் பெற்றவராவார்.

இவர் தான் பேரறிவாளன் உள்ளிட்ட தோழர்களைத் துன்புறுத்தி, அவர்களிடம் ஒப்புதல் வாக்குமூலம் வாங்கி அதனை நீதிமன்றத்தில் சாட்சியமாகத் தாக்கல் செய்தார். துன்புறுத்திப் பெறப்பட்ட இவ்வொப்புதல் வாக்குமூலங்களை மட்டுமே ஒரே சாட்சியமாகக் கருதி உச்சநீதிமன்றம் இவர்களுக்கு தூக்குத் தண்டனை விதித்தது அநீதியாகும்.

இவ்வாறு நீதிக்கு நேர்மாறாக, பிழையாக வழங்கப்பட்ட இத்தண்டனையை இரத்து செய்யும் அதிகாரம் குடியரசுத் தலைவர் மற்றும் மாநில ஆளுநர்களுக்கு உண்டு. இந்திய அரசமைப்புச் சட்டப் பிரிவு எண் 72 குடியரசுத் தலைவருக்கு இதற்கான அதிகாரங்களை வழங்குகின்றது. பிரிவு எண் 161 மாநில ஆளுநர்களுக்கு இதற்கான அதிகாரங்களை வழங்குகின்றது.

அண்மையில் ஆந்திராவில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட 2 தலித் இளைஞர்களின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் தள்ளுபடி செய்து விட்ட பிறகும், மாநில அரசிடம் எழுத்தாளர் சுவேதாதேவி முறையிட்டதன் பேரில், மாநில ஆளுநர் தலையிட்டு அவர்களை மரண தண்டனையிலிருந்து காப்பாற்றியிருக்கின்றனர்.

1960களில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட கம்யூனிஸ்ட் தோழர் சி.ஏ.பாலன் என்பவருக்கு குடியரசுத் தலைவர் கருணை மனுவை தள்ளுபடி செய்துவிட்ட பிறகும், கேரள அரசு தமது ஆளுநரின் மூலம் அவரது தண்டனையை வாழ்நாள் தண்டனையாக குறைத்திருக்கிறது.

எனவே, இந்த முன்னுதாரணங்களை பின்பற்றி, மாண்புமிகு தமிழக முதல்வர் செ.செயலலிதா அவர்கள், பேரறிவாள், முருகன், சாந்தன் ஆகியோரது கருணை மனுக்களைப் பெற்று, தமிழக ஆளுநர் மூலம் அவர்களது தூக்குத் தண்டனையை இரத்து செய்ய வேண்டுமென தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன். இதற்கான அதிகாரத்தை இந்திய அரசமைப்புச் சட்ட விதி 161 வழங்குகின்றது என்பதையும் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

மேலும், இக்கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகமெங்கும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன. சென்னையில் 17.08.2011 அன்று சைதை பனகல் மாளிகை முன்பு த.தே.பொ.க. பொதுச் செயலாளர் தோழர் பெ.மணியரசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. உணர்வாளர்களும், மரண தண்டனையை ஒழிக்க விரும்பும் மனித நேயர்களும் இவ்வார்ப்பாட்டங்களில் திரளாகக் கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு த.தே.பொ.கட்சியின் பொதுச் செயலாளர் மணியரசன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://ponguthamil.com/news/contentnews.asp?sectionid=1&contentid={780C2BA2-81FF-4235-AEA7-D35951EC4BE5}

தோழர் பெ.மணியரசரின் முயற்சிகள் வெற்றி பெறவேண்டுமென்று வாழ்த்துகிறேன். நன்றி தோழர்.

Edited by மல்லையூரான்

மத்திய அரசின் தீர்மானத்தை மாநில அரசின் ஆளுனர் ஊடாக மறுதலிக்க முடியும் என மணியரசன் அவர்களால் கூறப்பட்டுள்ளது. இது மனத்திற்கு ஆறுதல் தரும் விடயம்.

போர்க்குற்ற அழுத்தங்கள் அதிகரித்துள்ள இந்தவேளையில் காங்கிரஸ் வேண்டுமென்றே இந்த தருணத்தை தேர்ந்தெடுத்துள்ளது. ஆனால் இது தமிழக உறவுகளின் ஒற்றுமையை இன்னும் அதிகரிக்கும். காங்கிரஸ் மேல் இன்னும் வெறுப்பை கூட்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.