Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிங்கள மொழி பேசும் கிறிஸ் பூதங்கள்

Featured Replies

சனிக்கிழமை , ஆகஸ்ட் 13, 2011

Marmamanitharkal.jpgஇன்று மலையகத்தில் இரண்டு கிறிஸ் பூதங்கள் பிடிபட்டன பொதுமக்கள் அவைகளை தாக்கும் போது சிங்களத்தில் ஓலமிட்டன.சிறிலங்காவில் இப்போ சிறுபான்மை இன மக்களை கலக்கி வருவது கிறிஸ் பூதங்கள் எனும் மாயாவிகள்.ஆரம்பத்தில் மலையகத்தில் தோட்டப்பகுதிகளில் தமிழ் பெண்களை இலக்கு வைத்த கிறிஸ் பூதங்கள் இப்போ கிழக்கு மாகாணம் திருக்கோவில், பொத்துவில் போன்ற தமிழ் , முஸ்லிம் மக்களையும் இலக்கு வைக்கின்றது.

.

ஆனால் இந்த கிறிஸ் பூதம் தொடர்பில் பொலிசார் பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை. பொதுமக்கள் சில சந்தேகப்பேர்வழிகளை பிடித்துக்கொடுத்தாலும் அவர்களை இராணுவம் மற்றும் பொலிசார் விடுவித்து வருகின்றனர்.

.

இதனால் சிறுபான்மை மக்களுக்கு பீதியும் சந்தேகமும் ஏற்படவே தாமே கிறிஸ் பூதங்கள் மீது நடவடிக்கை எடுக்க துணிந்தனர். நடவடிக்கை ஒன்றின் போது பொதுமக்களால் மடக்கி பிடிக்கப்பட்ட கிறிஸ் பூதங்கள் அடித்த அடியில் சிங்களத்தில் அழுது, கெஞ்சி மண்டாடியுள்ளது.

.

சம்பவம் பற்றி தெரியவருவதாவது;

தொட்டுலாகல தோட்டத்தில் நேற்றுக்காலை பெண்கள் தேயிலைத் தோட்டங்களில் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த போது மரத்திலிருந்து இரண்டு மர்ம மனிதர்கள் பெண்களுக்கு அருகில் பாய்ந்துள்ளனர். இதனையடுத்து பெண்கள் பதறியடித்து கூக்குரல் எழுப்பியுள்ளனர். இதனால், அப்பகுதியில் ஒன்று கூடிய தோட்ட மக்கள் இருவரையும் மடக்கிப் பிடித்து நையப்புடைத்துள்ளனர். இதனால் படுகாயமடைந்த இருவரும் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளனர். இருந்த போதிலும் அவர்கள் இருவரும் உயிரிழந்தனர்.

.

மர்ம மனிதர்கள் இருவரும் தோட்டத்திற்குள் புகுந்து பெண்களை தாக்குவதற்கு முற்பட்டபோதே அவர்களைப் பிடித்து தாக்குதல் நடத்தியதாக தோட்ட மக்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.

.

தோட்டத்திற்குள் 6 மர்ம மனிதர்கள் புகுந்ததாகவும் தாக்குதலை அடுத்து ஏனையவர்கள் தப்பிச் சென்று விட்டதாகவும் தோட்ட மக்கள் தெரிவிக்கின்றனர். ஆனாலும் தேவையொன்றின் நிமித்தம் தோட்ட வழியாக சென்ற கிராமவாசிகளே தாக்குதலுக்கு இலக்காகியிருப்பதாகவும் தாக்குதல் மேற்கொண்டவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

.

தோட்ட மக்களின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த இருவரது சடலங்களையும் வைத்தியசாலையிலிருந்து எடுத்துச் செல்ல வந்தவர்கள் மீதும் மக்கள் குழுவொன்று கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு அதிரடிப்படையினரும் பொலிஸாரும் விரைந்து வந்து நிலைமையை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளனர்.

.

தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் சிங்களவர்கள் என்பது தெரிய வந்தது. இதனால் அப்புத்தளைப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகின்றது. அப்புத்தளை, சேர்வூட், பிட்ரத்மலை, தம்பேத்தனை, உட்பட 10க்கும் மேற்பட்ட தோட்டங்களில் பெரும் பதற்றம் நிலவிவருவதுடன் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.

.

அடுத்து திருக்கோவிலில்

.

திருக்கோவில் பகுதியில் மூன்று மர்ம மனிதர்களை பொதுமக்கள் பிடித்து பின்னர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் பொலிசார் அவர்களை விடுவித்துள்ளனர் அவர்கள்ளும் சிங்களவர்களே இதனால் அவர்களை பொலிசார் விடுவித்துள்ளனர். இதனை அடுத்து மக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்லது.

பொலிஸ் நிலையங்களைச் சுற்றி திரண்ட பொதுமக்களை கலைப்பதற்கு பொலிஸார் கண்ணீர்ப் புகைப் பிரயோகத்தையும் மேற்கொண்டதுடன் ஆகாயத்தை நோக்கி பல முறை துப்பாக்கிப் பிரயோகமும் மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதன் போது தமிழ் மக்கள் காயமடைந்ததுடன் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் தகவல். தற்போது ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தபப்ட்டுள்ளது.

.

இவ்வாறு பொத்துவில் பகுதியில் நடந்த சம்பவம் ஒன்றில்

.

பொத்துவில் 06ஆம் வட்டாரம் கே.பி.எம்.வீதியை சேர்ந்த ஜூனைதீன் ஆஸிக் (22வயது) என்ற பெண்னே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த பெண்ணின் கணவர் மத்திய கிழக்கு நாடொன்றில் தொழில்செய்துவரும் நிலையில் தனது தாய் தந்தையருடன் குறித்த பெண் வாழ்ந்துவருகின்றார்.

.

இது தொடர்பில் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் கருத்து தெரிவிக்கையில்,

.

நேற்று இரவு 8.30 மணியளவில் நான் வெளியில் தண்ணீர் எடுப்பதற்காக சென்றபோது என்னை யாரோ ஒருவர் திடிரென வீட்டில் மேல் பகுதியில் இருந்து தூக்கினர்.

.

அங்கு பார்த்தபோது உடம்பு எல்லாம் கறுப்பு நிறத்தையுடைய ஒருவன் என்னை பிடித்திருந்தான். நான் கத்த முனைந்தபோது எனது வாய்க்குள் விரலையோட்டினான். அப்போது அந்த விரலில் ஏதோ திரவம் தடவப்பட்டதை உணர்ந்தேன்.

.

அப்போது அவனது கையில் கூரான ஆயுதம் இருந்தது, நான் பல தடைவ முயற்சி செய்து கத்திய போது அயலவர்கள் வரவே என்னை அவன் கீழே தள்ளிவிட்டு ஓடிவிட்டான் என தெரிவித்தார்.

http://www.eelanatham.net/story/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D

  • கருத்துக்கள உறவுகள்

ghost.jpg

பெரிய பூதமாக இருக்கம் போல தெரியுது..

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

very bad devils

பூதங்களும் பேய்களும் கூட சிங்கள மொழி தான் பேசுமாம்?????????

  • கருத்துக்கள உறவுகள்

முன்னம் சுதுமலையிலும் இது போல் ..LOT பூதங்கள் திரித்தது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.