Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்க அப்பாவைக் கொல்லாதீங்க -குமுதம் ரிப்போட்டர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

01.jpg 04.09.11 கவர் ஸ்டோரி

ராஜிவ்காந்தி படுகொலையில் முதல் குற்றவாளியாக நளினி மீது சி.பி.ஐ. குற்றம் சுமத்தியபோது, இரண்டு மாதக் கருவாக நளினி வயிற்றில் இருந்தார் ஹரித்ரா. தொடர்ந்து நடந்த கொடும் விசாரணைகளில் நளினிக்கு ஏற்பட்ட சித்திரவதைகளையும் தாங்கிக் கொண்டு ஹரித்ரா அவதரித்தார். இப்போது தனது தந்தை முருகனுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை நிறுத்தக் கோரி கண்ணீர் மல்க போராடி வருகிறார்.

ராஜிவ்காந்தி படுகொலையில் குற்றம் சுமத்தப்பட்டு 91-ம் ஆண்டு கைது செய்யப்பட்டனர் முருகனும், நளினியும். சிறையிலேயே பிறந்த ஹரித்ரா மூன்று வயது வரையில் செங்கல்பட்டு, பூந்தமல்லி மகளிர் சிறையில் நளினியோடு இருந்தார். பின்னர் 95-ம் ஆண்டில் இருந்து சில காலம் கோயம்புத்தூரில் உள்ள தோழர் ஒருவரின் வீட்டில் ரகசியமாக வளர்க்கப்பட்டார் ஹரித்ரா. ‘நளினியின் மகள்தான் இவர்’ என்ற உண்மையோ, அவரது புகைப்படமோ வெளியாவதை தாய், தந்தை இருவருமே விரும்பியதில் லை.

அதன்பிறகு, பாட்டி சோமணியுடன் இலங்கைக்குச் சென்றவர், அங்கேயே மேல்நிலைக் கல்வியை முடித்தார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையில் போர் உக்கிரம் அடைந்த போது அங்கிருந்து இடம் பெயர்ந்து லண்டனுக்குச் சென்றுவிட்டார். அங்கு முருகனின் உறவினர் வீட்டில் தங்கிப் படித்து வருகிறார். இந்த ஆண்டு லண்டனில் மருத்துவப் படிப்பில் சேரத் தேர்வாகியிருக்கும் சூழலில் தனது தந்தை முருகனுக்கு தூக்கு தண்டனை தேதி முடிவான தகவலைக் கேட்டு அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறார் ஹரித்ரா.

‘‘முதல்வர் ஜெயலலிதா அம்மா அவர்களுக்கு.. என் அப்பா, அம்மாவைப் பிரிந்து 15 ஆண்டுகளாக நான் கஷ்டப்படுகிறேன். ஒரு பெண் இத்தனை ஆண்டுகள் தாய், தந்தை இல்லாமல் இருக்கும் வேதனையை நீங்கள் அறிவீர்கள். என் அப்பா நிரபராதி. அவரைக் காப்பாற்றுங்கள்’’ எனக் கண்ணீர் கலந்த மையோடு முதல்வர் ஜெயலலிதாவுக்குக் கடிதம் எழுதியிருக்கிறார் ஹரித்ரா.

வழக்கறிஞர் புகழேந்தி உதவியுடன் ஹரித்ராவிடம் போனில் பேசினோம்.

சிறையில் உங்கள் அம்மாவோடு நீங்கள் வளர்ந்தது ஞாபகம் இருக்கிறதா?

“இல்லை. மூன்று வயது வரைதான் அவர்களோடு இருந்தேன். அதன்பிறகு நான் அப்பா, அம்மாவிடம் வளரவில்லை. எந்தக் குழந்தைக்கும் என்னைப் போல் ஒரு நிலை வந்திருக்கக் கூடாது. நான் ஜெயிலுக்குள்ளயே பிறந்து அங்கேயே வளர்ந்துட்டேன். அதன்பிறகு பாட்டிதான் என்னை இவ்வளவு நாள் நல்லபடியாக கவனித்துக் கொண்டார்கள்.கடிதம் எழுதும்போதெல்லாம், ‘நான் உனக்காகத்தான் வாழ்ந்துகிட்டு இருக்கேன். நீ நல்லா படிச்சு மக்களுக்கு சேவை செய்யணும்’னு அம்மா சொல்லிகிட்டே இ ருப்பாங்க. ரொம்ப கஷ்டமாக இருக்கும். இப்படியொரு அன்பான அப்பா, அம்மா கிடைச்சும் வாழக் கொடுத்து வைக்கலையேன்னு நினைச்சு தினம் தினம் அழுதுகிட்டு இருக்கேன். நான் அவங்களோடு இல்லைன்னாலும் எனக்காக அவங்க இரண்டு பேரும் ஜெயில்ல இருக்காங்களேன்னு நினைச்சுகிட்டு இருந்துட்டேன்.

இப்ப எங்க அப்பா உயிரைப் பறிக்கறாங்களேன்னு நினைக்கும்போது அழுகையாக வருது. அம்மா எந்த மனநிலையில் இருக்காங்கன்னு என்னால நினைச்சுகூடப் பார்க்க முடியலை. அவர் ரொம்ப அன்பான அப்பா. அவர் எந்தத் தப்பும் பண்ணலை. இது ரொம்பக் கொடுமையான விஷயம். யாருக்கும் இந்த மாதிரி நடக்கக் கூடாதுன்னு நான் கடவுள்கிட்ட கேட்டுக்கறேன்(கதறியழுகிறார்). ப்ளீஸ் எனக்கு வேறென்ன சொல்றதுன்னே தெரியலை.’’

சிறையில் அப்பாவை முதன் முதலாகப் பார்த்தபோது எப்படி இருந்தது?

“‘இவர்தான் உன் அப்பா’ என முதன்முதலாக அவரைப் பார்த்து அம்மா சொன்னபோது ரொம்ப ரொம்ப சந்தோஷமாக இருந்தது.‘உன் ஒருத்திக்காகத்தான் நாங்க உயிரோட இருக்கோம். நல்லா படிக்கணும்’னு ரொம்ப நேரம் என்கரேஜ் பண்ணினாங்க. 01a.jpgஅவங்களுக்காகத் தான் நான் இங்கு படிச்சிக்கிட்டு இருக்கேன். நான் நல்லா படிக்கறதைக் கேட்டாவது அவங்க சந்தோஷப்படுவாங்கன்னு படிக்கிறேன்.

சின்ன வயசில் இருந்தே நான் டாக்டருக்குப் படிக்கணும்னு அம்மாவோட ஆசை. அதுக்காகத்தான் ‘மெடிசின்’ படிக்கப் போறேன். இதை அம்மாகிட்ட சொன்னப்ப, ‘என் னால முடியாத விஷயத்தை நீதான்மா பண்ணணும். ஜெயில் கம்பி வழியாக இந்த உலகத்தை உன் மூலமாகத்தான் பார்த்துகிட்டு இருக்கேன்’னு அம்மா சந்தோஷப்பட் டாங்க. இதையெல்லாம் பார்த்துட்டு அம்மாவை ரொம்ப மிஸ் பண்றேன்னு கவலையாக இருக்கும். நான் ரொம்ப அன்லக்கி.’’

அதன்பிறகு உங்கள் அம்மாவைச் சந்திக்க வாய்ப்பே கிடைக்கவில்லையா?

“இல்லை. 95-வது வருஷம் முதலமைச்சராக ஜெயலலிதா அம்மா இருக்கும்போது எனக்கு என் அம்மாவை ஜெயில்ல பார்க்க வாய்ப்புக் கொடுத்தாங்க.அதுக்காக அவங்களுக்கு ரொம்பக் கடமைப்பட்டிருக்கிறேன். அதன்பிறகு 97-ல் இருந்து அம்மாவைப் பார்க்கப் போக விசாவுக்கு அப்ளை பண்ணினேன். கொடுக்க மாட்டேன்னு சொல்லிட்டாங்க. தமிழ்நாடு அரசும் எந்த நடவடிக்கையும் எடுக்கலை. இதை எதிர்த்து என் அம்மா, அப்பா 19 நாள் ஜெயிலுக்குள்ளயே உண்ணாவிரதம் இருந்தாங்க. ‘க ண்டிப்பாக விசா கொடுக்கறோம்’ என உறுதியளித்ததால் அம்மா, அப்பா உண்ணாவிரதத்தைக் கைவிட்டார்கள். ஆனால், விசா கொடுக்காமல் ஏமாற்றி விட்டார்கள்.

அதுக்குப் பிறகு எனக்கு விசா கொடுக்கணும்னு அம்மா கோர்ட்ல வழக்கு போட்டு உத்தரவு வாங்கினாங்க. ஆர்டர் வந்த நேரத்தில் நான் படிச்சிட்டு இருந்ததால அங்கு வர முடியலை. அப்பா, அம்மாவும் ‘நீ நல்லா படிச்சு முடிச்சுட்டு வாம்மா. அப்பதான் எங்களுக்கும் ரொம்பப் பெருமையாக இருக்கும்’னு கடிதம் எழுதினாங்க. அவங்களப் பார்க்க முடியலையேன்னு ஏமாற்றமாக இருந்தது.’’

உங்கள் அப்பாவுக்கு தூக்கு அறிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில், உங்கள் பெற்றோரைப் பார்க்க இப்போது இந்தியா வரப்போகிறீர்களா?

“இந்தியாவுக்குப் போறதுக்கு விசாவுக்கு அப்ளை பண்ணியிருக்கிறேன். என் அப்பா, அம்மாவை விடுதலை பண்ணணும்னு நிறையப்பேர் போராடிகிட்டு இருக்காங்க. அவங்க எல்லாரையும் பார்த்துப் பேசுவேன். முதலமைச்சர் ஜெயலலிதா அம்மாவுக்கு கடிதம் அனுப்பியிருக்கிறேன். எனக்குப் பதினைந்து நாளில் விசா கிடைக்கும்னு சொல்லியி ருக்காங்க. அதுக்குள்ள ‘எங்க அப்பாவுக்கு எதுவும் நடக்காம பார்த்துக்கங்க’ன்னு முதலமைச்சருக்கு கடிதம் எழுதியிருக்கேன். அப்பாவுக்கு எதுவும் நடக்காதுன்னு உறுதியாக நம்பிட்டு இருக்கேன். அம்மாவும், அப்பாவும் எந்தத் தப்பும் பண்ணலைன்னு நான் நம்பறேன். இந்த உலகமும் அவர்கள் நிரபராதின்னு நம்பணும்னு ஆசைப்படறேன்.’’

நளினி, முருகனின் மகளாக நீங்கள் முன்வைக்கும் கோரிக்கை என்ன?

‘‘எந்தவொரு குழந்தைக்கும் அம்மா, அப்பா எவ்வளவு பெரிய விஷயம்னு எல்லாருக்கும் தெரியும். அவங்களை விடுதலை செய்யலைன்னா கூடப் பரவாயில்லை. சாகடிக்காதீங்க. அப்பாவை தூக்கில் போடக் கூடாதுன்னு தினம் தினம் கடவுள்கிட்ட வேண்டிக்கிட்டு இருக்கேன். நீங்களும் எனக்காக வேண்டிக்குங்க. நீங்க ஒவ்வொருத் தரும் அரசுக்குக் கடிதம் எழுதுங்கள். நான் கெஞ்சிக் கேட்டுக்கறேன். நீங்க பண்ற உதவிக்கு நான் காலம் முழுக்க நன்றிக் கடன் பட்டிருக்கிறேன். அப்பாவைக் காப்பாத்து ங்க ப்ளீஸ்’’ கதறியழ ஆரம்பித்தார் ஹரித்ரா.

சம்பந்தப்பட்டவர்கள் ஹரித்ராவின் கதறலை கொஞ்சம் காது கொடுத்துக் கேளுங்கள்!

கலங்கிப் போன மூவர்!

ராஜிவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மூவருக்கும் கருணை மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், செப்டம்பர் 9-ம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என சிறைத்துறை அறிவித்தது. இதுதொடர்பாக மூவருக்கும் சிறைத்துறை கடிதம் மூலமாக தகவல் தெரிவித்தது.

மூவரும் இருபது ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்து வருகின்றனர். மரண தண்டனையை ரத்து செய்யக்கோரி குடியரசுத் தலைவரிடம் கருணை மனு அனுப்பி 12 ஆண்டுகள் கடந்த நிலையில், திடீரென தூக்கு அறிவிக்கப்பட்டிருப்பது மூவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. மிகவும் இறுகிய முகத்துடன் மூவரும் காணப்படு வதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இவர்கள் தண்டனையை ரத்து செய்யக்கோரி வேலூர் சிறைக் கைதிகள் உண்ணாவிரதம் இருக்கப் போவதாகச் சொல் லியுள்ளனர். ஆனால் அதையும் மூவரும் மறுத்துள்ளனர்.

தமிழகத்தில் 1995-ல் ஆட்டோ சங்கர் தூக்கில் இடப்பட்டதற்குப் பிறகு யாருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படவில்லை.வேலூர் சிறையில் 1983-க்குப் பிறகு யாருக்கும் தூக்கு தண்டனை தரப்படவில்லை. அதுவே கடைசியாக இருக்க வேண்டும் என்பதுதான் மனித நேயத்தை நம்பும் அனைவரின் ஆசையாகவும் இருக்கிறது.

- கெஜராஜ்

சிறையில் கொடுமை: பேரறிவாளன் புகார்!

தூக்கு தண்டனை அறிவிக்கப்பட்டதும், சிறையில் தங்களை கொடுமை செய்வதாக பேரறிவாளன் வழக்கறிஞர் ராஜிவ்காந்தி மூலம் சிறைத்துறைத் தலைவருக்கு புகார் தெரிவித்துள்ளார்.

அதில், ‘‘கடந்த 26-ம் தேதி தூக்கு உறுதி செய்யப்பட்டதும், உயர் பாதுகாப்பு தொகுதி இரண்டில் தனிமைச் சிறையில் 24 மணிநேரமும் அடைத்து வைத்துள்ளனர். வேறு எந்த சிறைவாசியையும் சந்திக்கவோ, பேசவோ, பார்க்கவோ அனுமதிப்பதில்லை. 40 காவலர்களும், 15 அதிகாரிகளும் எப்போதும் என்னைச் சூழ்ந்து நிற்பதால் பதற்றமாக உணர்கிறேன். இதுவே எனக்கு பெரும் மன அழுத்தத்தைத் தந்துள்ளது’’ என்று எழுதியுள்ளார்.

ஆ.விஜயானந்த்

இதயம் கனத்தாலும் , கூடவே இந்திய அரசின் மீது கடும்கோபம் வந்தாலும், ஹரித்ராவின் தன்னம்பிக்கை, விடாமுயற்சி என்பன மனத்தை 'எம்மால் முடியும்' என்ற தன்னம்பிக்கையை தருவதாகின்றது.

விடுதலை கிடைத்தே தீரும்.

  • கருத்துக்கள உறவுகள்

மத்திய அரசில் நம்பிக்கை இழந்தாலும்....

தமிழக சட்ட மன்றத்திலும்., சென்னை உயர் நீதி மன்றத்திலும் நம்பிக்கை உள்ளது.

மறுக்கப்பட்ட நீதி கிடைக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

"சின்ன வயசில் இருந்தே நான் டாக்டருக்குப் படிக்கணும்னு அம்மாவோட ஆசை. அதுக்காகத்தான் ‘மெடிசின்’ படிக்கப் போறேன். இதை அம்மாகிட்ட சொன்னப்ப, ‘என் னால முடியாத விஷயத்தை நீதான்மா பண்ணணும். ஜெயில் கம்பி வழியாக இந்த உலகத்தை உன் மூலமாகத்தான் பார்த்துகிட்டு இருக்கேன்’னு அம்மா சந்தோஷப்பட் டாங்க. இதையெல்லாம் பார்த்துட்டு அம்மாவை ரொம்ப மிஸ் பண்றேன்னு கவலையாக இருக்கும். நான் ரொம்ப அன்லக்கி.’’

நன்றி இணைப்பிற்கு, மனம் கனக்கிறது, இப்படி ஒரு கொடுமை யாருக்கும் வரக்கூடாது, தாயும் தந்தை ஜெயிலில், மகள்.. அந்த மகளின் மன உறுதிக்கு, தலை வணங்குகிறேன், hats off, வாழ்த்துக்கள் அவரின் முன்னேறத்திற்கு. . . .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.