Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பொலிசாரின் மேற்பார்வையிலேயே பிக்குகளும் சேர்ந்து முஸ்லிம்களின் தொழுகை கூடத்தை தகர்த்தனர். (படங்கள்)

Featured Replies

முஸ்லிம்களின் வழிபாட்டிடம் நேற்று முந்தினம் இடிக்கப்பட்டபோது அதற்கு பொலிசார் பாதுகாப்பு கொடுத்துள்லனர் என அறியவருகின்றது. இதே வேளை

துட்டகெமுனு மன்னனின் வாளைத் தேடி அலையும் சில பௌத்த அமைப்புகளே அநுராதபுரம் ஒட்டுப்பளம் பிரதேசத்தில் அமைந்திருந்த முஸ்லிம்களின் ஸியாரத்தைத் தரைமட்டமாக்கின எனத் தகவல்கள் வெளிவந்துள்ளன. தேசிய சிங்கள ராவய என்ற அமைப்பும் அதன் கீழான சில பௌத்த பிரிவுகளுமே குறிப்பிட்ட ஸியாரத்தைத் தரைமட்டமாக்கி அங்கு துட்டகெமுன மன்னனின் வாளைத் தேடியதாக சிங்கள இணையமான லங்கா சி நியூஸ் இன்று செய்தி வெளியிட்டுள்ளது.

குறிப்பிட்ட ஸியாரம் கடந்த வாரம் பொலிஸார் முன்னிலையிலேயே தரைமட்டமாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இந்த விடயம் தொடர்பில் அரசின் பங்காளி முஸ்லிம் கட்சிகளோ அமைச்சர்களோ இதுவரை வாய் திறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஈழ நாதம்

Pallivasal idippu.jpg

Pallivasal idippu003.jpg

Pallivasal idippu004.jpg

துட்டகேமுணுவின் வாளா? அது அமெரிக்க தூதுவராலய கட்டிடத்துக்குள் கீழே அல்லவா இருக்கின்றது?

  • தொடங்கியவர்

முள்ளிவாய்க்காலில் புலிகள் முடிவோடு அனுராதபுரம் எல்லாளன் சிலையருகில் இருந்த தமது 150 வீடுகளும் (தமிழ் மற்றும் முஸ்லிம்களின்) உடைக்கப்பட்டனவாம் இவ்வாறு ஒரு முஸ்லிம் ஆசிரியர் கூறுகின்றார்.

இது தொடர்பாக பிரதேச மக்கள் கருத்து தெரிவிக்கையில் நேற்று சுமார்4.00 மணியளவில் வந்த ஒரு குழுவினர் ஸியாரத்தை முற்றாக நிர்மூலமாக்கிச் சென்றனர்.தற்போது சியாரத்தின் சுற்று மதில்கள் மட்டும் எஞ்சியுள்ளது. என்றும் தெரிவிக்கின்றனர்.

.

இது தொடர்பாக குறித்த பிரதேசத்தின் ஆசிரியர் ஒருவர் எமக்கு தகவல் தெரிவிக்கையில் போலீஸாரின் முனிலையில் சியாரம் உடைக்கப்பட்டுள்ளது. உடைக்க வந்த குழுவில் பெளத்த பிக்குகளும் இருந்துள்ளனர். உடைத்த பின்னர் அங்கு பெளத்த கொடியொன்று ஏற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. சில மாதங்களுக்கு முன்னர் குறித்த சியாரம் பெளத்த மதக் குழுவொன்றினால் உடைக்கப்பட்டது பின்னர் மீண்டும் முஸ்லிம்களால் கட்டப்பட்டது அந்த சம்பவம் கூட சில இனவாத இணையத்தளங்களில் முஸ்லிம்கள் பலவந்தமாக பெளத்த புனித பகுதியில் புதிதாக மஸ்ஜித் ஒன்றை நிர்மாணித்து வருவதாக உண்மைக்கு புறம்பான தகவல்களை தெரிவித்தகாக அறிகின்றேன் என்றும் தெரிவித்தார்.

.

அனுராதபுரம் முஸ்லிம்களின் பிரதேசமான அநுராதபுரம் பழைய நகர் பகுதியில் அமைந்திருந்த பழமை வாய்ந்த இந்த ஸியாரத்தை முஸ்லிம்களின் வரலாற்று சின்னமாகவே பிரதேச முஸ்லிம்களில் பெரும்பாலானவர்கள் பார்க்கின்றனர். இங்கு ஷிர்க் இடம்பெறுவதில்லை என்று தெரிவிகின்றனர். இன்று இந்த முஸ்லிம்களின் வரலாற்று சின்னம் அடித்து உடைக்கப்பட்டுள்ளது. முஸ்லிம்களும் ,தமிழர்களும் அதிகமாக வாழ்ந்த அநுராதபுரம் பழைய நகர் பகுதியில் இருந்து அந்த பிரதேசத்தின் மக்கள் பலர் வெளியேற்ற பட்டனர். அவர்கள் தமது நகர பகுதி காணிகளை இழந்த நிலையில் தற்போது புறநகர், பிரதேசசபை பகுதியில் காணிகள வழங்கப்பட்டு நகரத்துக்கு வெளியில் வாழ்கின்றனர்.

.

அநுராதபுரம் பழைய நகர் பகுதியில் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வந்தவர்களின் சுமார் 150 வரையான வீடுகள் கடைகள் என்பன புலிகளுடனான யுத்தம் முள்ளிவாய்காலில் முடிவடைததாக அரசாங்கள் அறிவித்த மே 19 ஆம் திகதிக்கு அடுத்த நாள் 20 ஆம் திகதி புல்டோசர்களால் உடைத்து தகர்க்கப்பட்டது என்றும் அந்த ஆசிரியர் தெரிவிக்கின்றார்.

.

இந்த சம்பவங்கள் யுத்த வெற்றி முழக்கத்தின் மத்தியில் யாரினதும் காதுகளுக்கு விழவில்லை. இதை எதிர்ந்து கட்டிடங்களினதும் காணிகளினதும் உரிமையாளர்கள் பிரதேசத்தில் பலர் தமக்கு வழங்கப்பட்டுள்ள காணிகளை ஏற்காது கொழும்பில் வழக்கு தொடுத்துள்ளனர். அந்த வழக்கு தற்போதும் விசாரணையில் உள்ளது. அந்த உடைப்பு சம்பவத்தின் போதும் குறித்த சியாரம் உடைக்கப்படவில்லை என்பது குறிபிடத்தக்கது. 1957 இல் UNESCO World Heritage Site, புராதன பிரதேசமாக அனுராதபுரம் அறிவிக்கப்பட்டுள்ளதும், அனுராதபுரம் பௌத்தர்கள் புனித பூமியாக கொண்டுள்ளதும் குறிபிடத்தக்கது.

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவன் இவ்வளவு செய்த பிறகும், முஸ்லீம்கள் மொட்டாக்கு, போட்டுக் கொண்டு ஒளித்திருப்பது இருப்பது நல்லது அல்ல.

வீரத் தமிழனைப் போல்... செய், அல்லது அதற்கு முயற்சி செய். தனிய... தமிழனிட்டை மட்டும், ராவுசு காட்ட நினக்காதீங்க.

இப்ப... பந்து, உங்கடை பக்கம். அடியுங்க..., ஓடி ஒளியாதேங்க காக்கா.

இதுவும் ஒரு பாபர் மசூதி கதை போலத்தான் கிடக்குது. மரத்தை சுத்திகட்டி முஸ்லீம் மக்கள் எந்த கடவுளை கும்பிடுகிறவர்கள். மரத்தினுடைய அடியைப்பார்த்தால் அரசமரம் மாதிரி இருக்கு. அப்படியாயின் இது இலகுவில் தீர்க்க கூடிய பிரச்சனை அல்ல. இருந்தும் முஸ்லிம் அமைச்சர்கள் மீண்டும் கட்டுவதற்கு பின்கதவால் பணம் வாங்கிவிடுவார்கள். வீடுகளை இழந்த தமிழர்கள் திரும்ப்ச் முடியாத நிலையிற்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.