Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நடிகர் வடிவேலு - அவ்ளோ தானா?

Featured Replies

பெரும்பாலான கலைஞர்கள் உணர்ச்சிப்பூர்வமானவர்கள். நடிகர் சங்கத்தில் நுழைய மாட்டேன் என்று சபதம் செய்த சிவாஜி முதல் பெரிய ஹீரோக்களுடன் மோதும் சேட்டன் ‘திலகன்’ வரை எல்லோருமே எதிர்வினையாற்றுவதில் வல்லவர்கள் தான். வாயைக் கொடுத்து மாட்டிக்கொள்ளும் நடிகர்களும் இதில் அடக்கம் தான். அந்த வகையில் ஆரம்பத்தில் இருந்தே உணர்ச்சிப் பூர்வமான நடிகராக திகழ்ந்தவர் வடிவேலு.

காளி மார்க் போன்ற உள்ளூர் குளிர்பான நிறுவனங்கள், பெப்சி/கோக்ககோலா போன்ற அந்நிய நிறுவனங்களால் ஒழித்துக்கட்டப்பட்டதை மதுரை வட்டார மக்கள் அறிவர். மதுரை மண்ணில் இருந்து வந்தவர் என்பதாலோ என்னவோ சில நிமிட விளம்பரளுக்கு லட்சக்கணக்கில் சம்பளம் தர அவர்கள் முவந்தும், நடிக்க மறுத்தவர் வடிவேலு. இம்சை அரசன் 23-ம் புலிகேசியில் அக்காமாலா பற்றிய கிண்டல் செய்ய தகுதியான நபர் தான் அவர். காசு கொடுத்தால், லட்சியமாவது ஒன்னாவது என்று ஓடும் ஆட்களுக்கு மத்தியில், எவன் எக்கேடு கெட்டா என்ன-நம்ம பொழைப்பு வெற்றிகரமாக நடந்தால் சரி என்று எண்ணும் ஆட்களுக்கு மத்தியில் வடிவேலு கொண்ட உறுதி பாராட்டத்தக்கது.

அவர் ஒரு உணர்ச்சியுள்ள மனிதர் என்பதை அதுவே உணர்த்தியது. நாம எதிர்த்தா மட்டும் அவங்க ஒழிஞ்சுடவா போறாங்க- என்று எண்ணாமல், எதிர்ப்பைக் காட்டுவதன் மூலம் இன்னும் கொஞ்சம் தமிழராவது சூடு சுரணையுடன் உள்ளதை தெரியப்படுத்த முடியும்-என்ற நம்பிக்கை கொண்டவர் போலும் அவர்.

அவரது உணர்ச்சிவசப்படலின் அடுத்த முக்கிய நிகழ்வாக அமைந்தது உயிர் படம் பற்றி அவர் பேசிய பேச்சு. புனிதமான, அன்னைக்கு நிகரான அண்ணி உறவினை கொச்சைப்படுத்தி எடுக்கப்பட்ட உயிர் படத்தின் இயக்குநர் பற்றி ‘அவன் மட்டும் என் கையில கிடைச்சான்..’ என்ற ரீதியில் மேடையிலேயே பேசினார். பொதுவாக ஒரு இயக்குநரை பகைத்துக்கொள்வது, ஒரு நகைச்சுவை நடிகருக்கு இழப்பாகவே முடியும். ஆனாலும் கண் முன்னே நடக்கும் அநியாயம் பார்த்து, பேடிகளைப் போல் மவுனிக்காமல் துணிந்து கருத்துச் சொன்னார்.

வெறும் கொள்கை அளவில் மட்டுமல்லாது ஈகோ மோதலிலும் அவ்வப்போது ஈடுபட்டு வந்தார் வடிவேலு. சில பிரபல ஹீரோக்கள்/இயக்குநர்கள் வடிவேலுவே வேண்டாம் என்ற முடிவுக்கு வரும்படி, அவரது உணர்ச்சிகரமான வினையாற்றல் நிகழ்ந்தது. ஆனாலும் அவர் வெற்றிகரமான நகைச்சுவை நடிகராக வலம் வந்ததற்கு அவரது திறமையே காரணம். ‘ஆணியே புடுங்க வேண்டாம், வடை போச்சே, அவ்வ்வ் ‘ போன்ற பல வசனங்கள் மக்களின் அன்றாட வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தின.

இவ்வாறு திறமைசாலியாகவும், அதே நேரத்தில் உணர்ச்சிவ்சப்படுபவராகவும் வடிவேலு வலம் வந்த நேரத்தில் தான் விஜயகாந்த்துடனான அவரது மோதல் நிகழ்ந்தது. ஏற்கனவே விஜயகாந்த் படத்திற்கு கால்ஷீட் தர மறுத்த கோபம் விஜயகாந்த தரப்பில் இருந்தது. அதே நேரத்தில் விஜயகாந்த வீட்டில் நிகழ்ந்த ஒரு துக்கத்திற்கு வந்தோர், அருகில் இருந்த வடிவேலு அலுவலகம் முன் காரை நிறுத்த, இவர் நேரம்-காலம் புரியாமல் அவற்றை எடுக்கச் சொல்லி தகராறு பண்ணினார். அந்த மோதலானது வடிவேலு வீட்டில் விஜகாந்த் கட்சியினர் தாக்குதல் நடத்தும் அளவிற்கு போனது. வடிவேலும், அவரது குழந்தைகளும் அந்த தாக்குதலில் சிறு காயம் அடைந்தனர்.

ஏற்கனவே உணர்ச்சிச் செம்மலான வடிவேலு, தீவிரமாக கண்மூடித்தனமாக விஜயகாந்த் எதிர்ப்பில் இறங்கினார். ஒரு நல்ல காமெடி நடிகர் இது போன்ற விஷயங்களில் ஈடுபட்டு, வீணாவதை மக்களும் விரும்பவில்லை. கடந்த தேர்தலில் திமுகவிற்கு ஆதரவாக அவர் பிரச்சாரத்தில் குதித்து, பெயரைக் கெடுத்துக்கொண்ட கதை நாம் அறிந்ததே.

ஆட்சி மாறியதும், சினிமாக்காரர்கள் வடிவேலுவை ஒப்பந்தம் செய்ய பயந்துகொண்டு, விலக்கி வைத்தனர். (முன்பு செந்திலுக்கும் இதுவே நடந்தது). அதனால் இழப்பு நம் போன்ற சினிமா ரசிகர்களுக்குத் தான். பேச்சின்மூலம் காமெடி செய்வோருக்கு, உடல்மொழி ஒத்துழைக்காது. ஆனால் பேச்சு, உடல் இரண்டாலும் நம்மை மகிழ்வித்த கலைஞன் வடிவேலு.

வடிவேலு இல்லாத வெறுமையை சமீபத்திய படங்களில் நன்றாகவே உணர முடிகிறது. சந்தானம் தவிர்த்த பிற காமெடி நடிகர்கள் வடிவேலுவை இமிடேட் செய்து, அவர் நடிக்க வேண்டிய பாத்திரத்தில் நடிப்பதைப் பார்க்கும்போது எரிச்சலாக வருகிறது.

ஒரு நல்ல கலைஞன் அரசியல் காரணங்களால் தன் சக்தியை வீணாக்குபதும் முடக்கப்படுவதும், சரியா என்ற கேள்வி எழுகிறது. தற்போதைய நிலையில், நமக்கு மீண்டும் அந்த பழைய வடிவேலு தேவை.

சுந்தர்.சியின் புதிய படத்தில் அவர் நடிக்கப்போவதாக வந்த செய்தியும், இப்போது இல்லையென்றாகிவிட்டது. ஏதோ ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்கப்போகிறார் என்று செய்திகள் சொல்கின்றன. நம்முடைய விருப்பம், அவர் முன்போல் காமெடியில் மட்டுமே கவனம் செலுத்தி, வெற்றி பெற வேண்டும், நம்மை முன்போல் மீண்டும் மகிழ்விக்க வேண்டும் என்பதே.

அதிக உணர்ச்சிவசப்படல், யாருக்குமே நல்லதல்ல என்பதற்கும் வடிவேலுவே உதாரணம்

http://sengovi.blogspot.com

  • கருத்துக்கள உறவுகள்

நடிப்பு நடிப்போட இருந்திருந்தா இந்த பிரச்சனை இல்லை, பணம் சேர மனித மனம் மாற என்ன செய்கிறது என்று தெரியாமல் ஆடியதன் விளைவு இது,

நல்ல சிரிப்பு நடிகர் இதுவும் கடந்து போய் திரும்ப வருவார், ஆனா இப்ப வரமாட்டார்,

நன்றி வீணா இணைப்பிற்கு

  • கருத்துக்கள உறவுகள்

வடிவேலு இல்லாத தமிழ் நகைச்சுவை திரையுலகம் வெற்றிடமாக உள்ளதை யாரும் மறுக்க முடியாது.

நல்ல திறமையான நகைச்சுவை கலைஞன் இல்லாதது, தமிழ் திரையுலகத்துக்கு பெரிய இழப்பு.

வடிவேலு இல்லாத தமிழ் நகைச்சுவை திரையுலகம் வெற்றிடமாக உள்ளதை யாரும் மறுக்க முடியாது.

நல்ல திறமையான நகைச்சுவை கலைஞன் இல்லாதது, தமிழ் திரையுலகத்துக்கு பெரிய இழப்பு.

green_plus.png

  • கருத்துக்கள உறவுகள்

வடிவேலு தன் வாயால் கெட்டவர்.வடிவேலின் நகைச்சுவை இயல்பானது.அவர் இல்லாத திரைப்படங்கள் அதிக காலம் நிலைப்பதில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.