Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அமெரிக்காவிடம் கூட்டமைப்பு கையளித்த இரகசிய ஆவணம்

Featured Replies

இலங்கை அரசின் எதிர்ப்புக் காரணமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் குழுவைச் சந்திக்கும் திட்டத்தை அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்ரன் கைவிட்டு விட்டதாகத் தெரியவருகின்றது.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அழைப்பின் பேரில் வோஷிங்டன் சென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பிரதிநிதிகள் நால்வரும் அங்கு இராஜாங்கத் திணைக்கள அதிகாரிகள் பலருடனும் சந்திப்புகளை மேற்கொண்டுள்ளனர்.

அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளிங்ரனையும் இவர்கள் சந்திக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியான போதும், சந்திப்பு இடம் பெற்றதாகத் தகவல் இல்லை.

இந்தநிலையில் இலங்கை அரசின் எதிர்ப்புக் காரணமாக ஹிலாரி கிளின்ரன், கூட்ட மைப்புப் பிரதிநிதிகளைச் சந்திப்பதைக் கை விட்டுள்ளதாகக் கொழும்பு ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. அதேவேளை, அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் றொபேட் ஓ பிளேக் மற்றும் அரசியல் விவ காரங்களுக்கான கீழ் நிலைச் செயலர் வெட்டி சேர்மன் ஆகியோரைக் கூட்டமைப்பு பிரதிநிதிகள் சந்தித்துள்ளனர்.

மேலும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் மூத்த கொள்கை வகுப்பு அதிகாரிகளுடனும் சந்திப்புகள் இடம்பெற்றுள்ளன. அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள அதிகாரிகளுடனான சந்திப்புகளின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 30 பக்க ஆவ ணம் ஒன்றை கையளித்துள்ளதா அறியவருகின்றது.

மனிதஉரிமை மீறல்கள், மற்றும் போர்க் குற்றங்கள் தொடர்பான விவரங்கள் அடங்கிய இந்த ஆவணத்தை கருத்தில் கொண்டு இலங்கை அரசின் மீது அமெரிக்கா அழுத்தங்களைக் கொடுக்க வேண்டும் என்று கூட்டமைப்புப் பிரதிநிதிகள் கேட்டுக் கொண்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

http://184.107.230.170/~onlineut/News_More.php?id=29999619631748327

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவிடம் கூட்டமைப்பு கையளித்த இரகசிய ஆவணம் - யாழ் செய்தி

இரகசியமானால் அது எப்படி செய்தியாகியது? இத்தகைய அறிக்கைகள் யாழில் வெளிவருவதும் இத்தகைய செய்திகளை கூட்டமைப்பினர் கசிய விடுவதும் நாம் இன்னமும் இராசதந்திரத்தின் முதல் பாடத்தையே தெளிவாக கற்றிடவில்லை என்பதையே காட்டுகிறது. தோல்வி இன்று நமது வெற்றிக்கான பாடப் புத்தகமாகும். அதன் பாடங்கலை நாம் இன்னமும் கற்க்க ஆரம்பிக்கவில்லை என்பது கவலை தருகிறது. இத்தகைய செய்திகள் அமரிக்காவையும் மேற்க்கு நாடுகலையும் இராசதந்திர நெருக்கடிகளுக்குள் தள்ளும் தமிழர் தரப்புடன் வேலை செய்வது தொடர்பாக சர்வதேச சமூகத்தின் நம்பகத் தன்மையை பாதிக்கும். இப்பவே எல்லாவல மேத்தானந்த தேரர் போன்ற இனவெறியர்கள் கூட்டமைப்பினரை தேசத் துரோகிகள் என்று சொல்ல ஆரம்பிதிருக்கும் பின்னணியில் இத்தகைய செய்திகள் தமிழருக்கு ஆபத்தானதும் கூட. ஈழ செய்தியாலர்கள் தயவு செய்து இவ்விடயத்தை கவனத்தில் எடுங்கள்.

அமெரிக்காவிடம் கூட்டமைப்பு கையளித்த இரகசிய ஆவணம் - யாழ் செய்தி

இரகசியமானால் அது எப்படி செய்தியாகியது? இத்தகைய அறிக்கைகள் யாழில் வெளிவருவதும் இத்தகைய செய்திகளை கூட்டமைப்பினர் கசிய விடுவதும் நாம் இன்னமும் இராசதந்திரத்தின் முதல் பாடத்தையே தெளிவாக கற்றிடவில்லை என்பதையே காட்டுகிறது. தோல்வி இன்று நமது வெற்றிக்கான பாடப் புத்தகமாகும். அதன் பாடங்கலை நாம் இன்னமும் கற்க்க ஆரம்பிக்கவில்லை என்பது கவலை தருகிறது. இத்தகைய செய்திகள் அமரிக்காவையும் மேற்க்கு நாடுகலையும் இராசதந்திர நெருக்கடிகளுக்குள் தள்ளும் தமிழர் தரப்புடன் வேலை செய்வது தொடர்பாக சர்வதேச சமூகத்தின் நம்பகத் தன்மையை பாதிக்கும். இப்பவே எல்லாவல மேத்தானந்த தேரர் போன்ற இனவெறியர்கள் கூட்டமைப்பினரை தேசத் துரோகிகள் என்று சொல்ல ஆரம்பிதிருக்கும் பின்னணியில் இத்தகைய செய்திகள் தமிழருக்கு ஆபத்தானதும் கூட. ஈழ செய்தியாலர்கள் தயவு செய்து இவ்விடயத்தை கவனத்தில் எடுங்கள்.

இது இன்று நேற்று தொடங்கியதல்ல. 90 களிலேயே தமிழர்களை குஷிப்படுத்தி, சிங்களவர்களை உசாராக்கும் செய்திகளை வெளியிடுவது ஆரம்பமாகி விட்டது. நாங்கள் போராடும் ஒரு சிறுபான்மை இனம் என்பதை மறந்த நிலை. சிங்களவன் நல்ல அடிபோட்டு முதுகெலும்பை முறித்தும் கூட தலைக்கனம் போகவில்லை.தோல்வியில் இருந்து பாடம் படித்த மாதிரித் தெரியவில்லை. ௦

அமெரிக்க-கூட்டமைப்பு சந்திப்புச் சம்பந்தமாக அண்மையில் வெளிவரும் செய்திகளில் எவ்வளவு உண்மை பொய் உள்ளதென்பது தெரியவில்லை. ஆனால் மேற்குலகத்தினரைச் சங்கடத்திற்கு உள்ளாக்கும். பேரினவாதம் எமக்கு எதிராக, சிறப்பாக காய்களை நகர்த்தவே இந்தச் செய்திகள் உதவும். உணமையிலேயே கூட்டமைப்பினர் இந்தச் செய்திகளை கசிய விடுகிறார்களா? அந்தளவிற்கு முன்யோசனை அற்றவர்களாக இருக்க மாட்டார்கள் என நினைக்கிறேன். எல்லாவற்றையும் விட இத்தனை பேரழிவிற்குப் பின்னும் தமிழ் ஊடகங்களிற்கு ஒரு பொறுப்பு வேண்டாமா?

இராஜதந்திரத்திற்கும் தமிழர்களுக்கும் வெகு தூரம் என்பதை திரும்பத் திரும்ப நிரூபிக்கிறார்கள்.

பிளேக்கின் தாயகத்தில் நடந்த கலந்துரையாடலின் பின்னர், நிச்சயமாக கூட்டமைப்பு தாயக நிலைமையை விளக்கி, புள்ளிவிபரங்களுடன் ஒரு அறிக்கையை சமர்ப்பித்திருக்கும். இது வழமையானதே.

இதில் உள்ள விபரங்கள் என்ன என்று தெரியாத நிலைமையில் அதை சில ஊடகங்கள் 'இரகசியம்' என வர்ணித்துள்ளன.

Edited by akootha

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.