Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மாவீரர் தினத்தை புலத்தில் விமர்சனத்துக்குள்ளாக்காதீர்

Featured Replies

மாவீரர் தினத்தை புலத்தில் விமர்சனத்துக்குள்ளாக்காதீர்

ஆக்கம்: ச. வி. கிருபாகரன், பிரான்ஸ்

இரண்டு மாவீரர் தினம் நடக்காது தடுக்கக் கூடிய மனிதர்கள் இன்றைய கால கட்டத்தில் நிச்சயம் புலம் பெயர்வாழ்வில் இருக்கிறார்கள், அவர்களால் இரண்டு மாவீரர் தினம் நடக்கவிருப்பதை நிச்சயம் தடுக்க முடியும்.

எதிர்காலத்தை மனதில் கொண்டு, தமிழ் தேசியம் சிதறடிக்கப்படாது, இலங்கை அரசு முள்ளிவாய்காலுக்கு அடுத்து புலம் பெயரில் ஓர் மாபெரும் வெற்றியை பெற நாம் துணை போனதாக சரித்திரம் இருக்கப்படாது என எண்ணும் ஒவ்வொரு பொறுப்பு வாய்ந்த செயற்பாட்டாளர்களால் இரண்டு மாவீரர் தினம் நடைபெறுவதை நிட்சயம் தடுத்து நிறுத்த முடியும்.

பொறுப்பு வாய்ந்தவர்களின் அறிக்கையினால் இதைத் தடுக்க முடியும்.

மாவீரர்களை, தேசியத் தலைவரை மதித்து, கடந்த பல தசாப்தங்களாக நடைபெற்று வந்த தமிழரின் விடுதலை போராட்டம், தாயாக பூமியில் வாழும் எமது உடன் பிறவாச் சகோதரர்கள் மானத்துடன் வாழ வேண்டும் என்பது போன்ற காரணிகளை மனதில் கொண்டு இரண்டு மாவீரர் தினம் நடக்கவிருப்பதை உடன் பொறுப்பு வாய்ந்தவர்கள் நிச்சயம் தடுக்க வேண்டும்.

இவ் விடயத்தில் விட்டுகொடுப்பதனால் யாரும் சிறியவராகவோ பெரியாவராகவோமாட்டீர்கள்.

வழமையாக வருடா வருடமாக மாவீரர் தினம் செய்தவர்கள் தொடர்ந்து செய்ய அனுமதியுங்கள். இவ்விடயத்தில் தயவு செய்து பேரம் பேசாதீர்கள். இவ்விடயத்தில் விடாப்பிடியாக நிற்கும் உங்களை, இலங்கை அரசின் நிகழ்ச்சி நிரலுக்கு துணை போபவர்களென்று மக்களினால் சுமத்தப்படும் வீண் பழியை நீங்கள் சுமப்பீர்கள்.

வழமையாக வருடாவருடமாக மாவீரர் தினம் செய்தவர்கள் தொடர்ந்து செய்ய நீங்கள் அனுமதிப்பதன் மூலம் உங்கள் அமைப்பிற்கும் ஒர் மாபெரும் பெருமையை நீங்கள் தேடிக் கொள்வீர்களென்பதில் எவ்வித ஐயமுமில்லை.

உங்கள் தரப்பில் நின்று குழப்பங்களை விரும்புவோர், நீங்கள் இன்னுமோர் மாவீரர் தினம் நிச்சயம் நடத்தியே ஆக வேண்டும் என்பதில் விடாபிடியாக நிற்பார்கள்.

காரணம், இவர்களது இலக்கு தமிழ் தேசியம் சிதைக்கப்பட வேண்டுமென்பது மட்டுமல்லாது, இவர்களுக்கு இதன் அருமை பெருமை பற்றி அறியுமளவிற்கு அரசியல் அறிவோ, பொது அறிவோ போதாமையும் காரணங்களாகவுள்ளான.

ஆனால், உங்கள் அமைப்பு எதிர்காலத்தில் உண்மையான அரசியல் செயற்பாடுகளை மனதில் கொண்டதாக இருந்தால், தயவு செய்து இலங்கை அரசின் சிந்தனைக்கு துணை போகாதீர்கள்.

ஐரோப்பிய குழப்பக்காரர்கள் மூலம் நீங்கள் புலம் பெயர் வாழ் மக்களின் உண்மை நிலையை ஒரு பொழுதும் அறிய மாட்டீர்கள். இவர்கள் மக்கள் எண்ணங்கள் அபிப்பிராயத்தை தினம் திரிபு படுத்திக் கொண்டிருப்பதுடன், தமது சிந்தனைகளை, திட்டங்களை தினம் தமது மூன்றாம் நான்காம் தரகர்கள் மூலம் மிகத் தவறான தகவல்களை உங்களுக்கு ஊட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்பது மிக நீண்ட காலமாக நாம் அறிந்த உண்மை.

இறுதியாக, இப்பொழுது பெரும்பான்மையான புலம் பெயர் வாழ் மக்கள் குழப்பமடைந்த நிலையில் உள்ளார்கள் என்பது தான் இன்றைய உண்மை நிலை?

புலம் பெயர் வாழ்வில் ஓர் குறிப்பிட்ட மக்கள் முள்ளிவாய்காலின் பின்னர் எந்த பிரிவிற்கும் ஆதரவு அளிக்காது நடு நிலையாக வாழ்வதை ஐரோப்பாவில் நாம் பெரிதும் காண்கிறோம்.

ஆனால், இரண்டு மாவீரர் தினம் நடைபெற்றால், ஐரோப்பாவில் நாடு நிலையாக வாழும் மக்கள் கூட, இலங்கை அரசின் எதிர்பார்ப்புக்கு துணை போபவர்களை நிச்சயம் நிராகரிக்க முனைவார்கள்.

“வளரும் பிள்ளையை மண் விளையாட்டில் தெரியும்” என்பது தமிழ் பழமொழி. மாவீரர் தினம் செய்வது சிறிய விடயமல்லா என்பதை ஒத்துக் கொள்கிறேன். இதேவேளை, ஒரு முழு வளர்ச்சி அடையும் முன்பே தேவையற்ற விடயங்களை செய்ய முனைவதால், மக்களின் ஆதரவை நீங்கள் பெறமுடியுமா என்பதையும் நீங்கள் கடுமையாக சிந்திக்க வேண்டும்.

ஆகையால் மக்களின் ஆதரவு குறையக்கூடிய எந்த வேலை திட்டங்களிலும் தயவு செய்து இறங்காதீர்களென மிகத் தாழ்மையுடன் வேண்டுகிறேன்.

மூலம்: வீரகேசரி – கார்த்திகை 13, 2011

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உணர்வுபூர்வமான விடங்களில் ஒதுங்கி இருப்பதே அனைவருக்கு நன்மை பயக்கும். இதை குழப்ப நினைப்பவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

சொலமன் மன்னரின் முன்னால் ஒரு விசித்திரமான வழக்கு விசாரணைக்கு வந்தது. ஒரு பிள்ளைக்கு உரிமை கோரி இரண்டு தாய்மார்கள் அரசனிடம் நீதி கோரினார்கள். சொலமன் மன்னருக்கோ ஆச்சரியம். ஒரே பிள்ளைக்கு இரண்டு அம்மாக்கள் எப்படி இருக்க முடியும்? என்று அரசவை குழப்பமுற்றது.

அந்தப் பிள்ளையை நானே பெற்றேன் என்று ஒரு தாயும், இல்லை... இல்லை, அந்தப் பிள்ளைக்கு நானேதான் தாய் என்று மற்றவரும் அடம் பிடித்தனர். முடிவாக, சொலமன் மன்னன் ஒரு தீர்ப்பை வழங்கினான். அந்தப் பிள்ளையை இரு கூறாக்கி, இருவரிடமும் பகிர்ந்து கொடுக்கக் கட்டளையிட்டான்.

போர் வீரன் ஒருவன் வாளை உருவி, அந்தப் பிள்ளையை இரு கூறாகப் பிளப்பதற்குத் தயாரானான். உடனே, ஒரு தாய் மன்னனின் காலில் வீழ்ந்து, 'மன்னா! அது என் பிள்ளையே இல்லை... அதனை அவளிடமே கொடுத்து விடுங்கள்' என்று கதறினாள். மற்றப் பெண்ணோ, மன்னனின் கட்டளையை நிறைவேற்றப்போகும் போர் வீரனையும், அவனது கையில் பயத்துடன் வீறிடும் குழந்தையையும் பார்த்துப் பழிவாங்கும் நிறைவுடன் சிரித்தாள்.

http://tamilseithekal.blogspot.com/2011/10/blog-post_17.html

  • கருத்துக்கள உறவுகள்

இந்த அக்கபோர்களுக்குள் சிக்காமல்..அவரவர் வீட்டில் மெழுகுவத்தி ஏற்றி வணங்குங்கள் அதான் நல்லது.. :(

  • தொடங்கியவர்

இந்த அக்கபோர்களுக்குள் சிக்காமல்..அவரவர் வீட்டில் மெழுகுவத்தி ஏற்றி வணங்குங்கள் அதான் நல்லது.. :(

அப்படி செய்தால் அது தேசியத்தை மழுங்கடிக்கும், புதிதாக செய்ய முனைபவர்களும் வெற்றிகண்டு விடுவார்கள்.

ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து ஒரே நிகழ்வாக நடாத்துவதே எமது இருப்பை தக்க வைக்கும்.

இரு குழுக்களும் இணைந்து நடத்த முடியாது! தற்போது வந்த குழு, தாம் இணைந்து நடாத்த தயார் என்கிறது ... உண்மை என்னவெனில், எவ்வாறாவது இந்த மாவீரர் நிகழ்வுகளில் மூலம் அங்கீகரிக்கப்பட்டு உள்நுளைய முயற்சியில் முகமூடி மனிதர்கள்!

... சரி வேறு பிழை வேறு ... இணைந்து செய்தல், வேண்டவே வேண்டாம்!!

http://www.yarl.com/...showtopic=94296

http://www.yarl.com/...opic=92404&st=0

... முள்ளிவாய்க்காலோடு, கேபியின் கீழ் செல்ல அழைப்பு, அதனை மறுத்ததும் சேர்ந்து செல்லவும் முயற்சிகள் பெருமளவில் நடைபெற்றது!! .. அதற்கும் சிலர் மூர்க்கத்தனமாக எதிர்த்தமையினால் தான் இன்றுவரை புலத்தில் ஏதோ சிறிதாயினும் செய்வதற்கு, சிலர் எஞ்சி இருக்கின்றனர்! .. அப்பாடம் இன்றும்!!! ... உண்மைகள் வெளிவரும் ... அதுவரை ... சிலராவது உறுதியாக நிலைத்து இருக்கட்டும்!!!!

Edited by Nellaiyan

உண்மைகள் வெளி வரும் வெளி வரும் என்று சொல்கிறீர்கள், அப்படியானால் உங்களுக்கு உண்மை தெரிந்தா எழுதுகிறீர்கள்.அப்படித் தெரிந்தால் எங்களுக்கும் எல்லா மக்களுக்கும் பகிரங்கமாகத் தெருவிக்கலாமே. நாங்கள் உங்களை மாதிரி முடிவு எடுக்கலாம்.எல்லாரும் துரோகி நாங்கள் மட்டும் தான் தேசியவாதிகள் என்று சொல்லி நீங்கள் மட்டும் தான் தனிய நிக்கப் போறியள்.

... சரி வேறு பிழை வேறு ... இணைந்து செய்தல், வேண்டவே வேண்டாம்!!

ஏன் சிறிலங்கா அரசினதும் அதனுடன் இணைந்து பணியாற்றுபவர்களின் நோக்கம் நிறைவேறாமல் போய்விடும் என்பதற்காகவா?????

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.