Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரபாகரன் செய்த மாபெரும் தவறு!

Featured Replies

அது என்ன பிரபாகரன் செய்த மாபெரும் தவறு? சொல்கிறேன் கேளுங்கள்! அது வேறொன்றும் இல்லை! தமிழர்களுக்காகப் போராடினார் பாருங்கள்! ( அதுவும், உலகில் தமிழனுக்கு என்று ஒரு நாடு இல்லை! எனவே, உலகில் மூத்த குடியாகிய, தமிழினத்துக்காக, ஒரு நாடு வேண்டும் என்பதற்காக, அவர் போராடினார் பாருங்கள்! ) அதுதான் அவர் செய்த மாபெரும் தவறு!

4.jpg

இதனை சற்று விபரமாக சொல்கிறேன் கேளுங்கள்! இப்போ, ஒரு உதாரணத்துக்கு, இந்திய மத்திய அரசில் இருந்து பிரிந்து, தனித் தமிழ்நாட்டை உருவாக்குவதற்காக , தமிழகத்திலே ஒரு போராட்டம் நடக்கிறது என்று வைத்துக்கொள்வோம்! ஒரு உதாரணத்துக்காகத்தான் சொல்கிறேன்! யாரும் கோபிக்க வேண்டாம்! ஒரு ஆயுதம் தாங்கிய அமைப்பு, தமிழக இளைஞர்களைத் திரட்டி, படையணிகளை உருவாக்கி, இந்திய மத்திய அரசுக்கு எதிராக, தமிழகத்தைப் பிரித்துக்கொடு எனும் கோரிக்கையோடு போராடுகிறது என்று வைத்துக்கொள்வோம்!

தமிழ்நாட்டில் எட்டுக் கோடி தமிழர்கள் இருக்கிறார்கள்! இந்நிலையில், திடீரென்று அந்த எட்டுக்கோடி மக்களில், ஏழரைக்கோடி மக்கள், தமிழ் நாட்டை விட்டுக் கிளம்பிப்போய், “ எங்களுக்கு தனித் தமிழ் நாடு வேண்டாம்! நாங்கள் மத்திய அரசுடனேயே இருந்துடுறோம்” என்று டெல்லிக்குப் போய், அங்கேயே தங்கிவிட்டால், உலகம் என்ன சொல்லும்?

“ பாருய்யா! ஏழரைக்கோடி தமிழனுக்கு, மத்திய அரசோடு எந்தப் பிரச்சனையும் இல்லை! ஆனா வெறும் 50 லட்சம் தமிழனுக்கு தனி நாடு வேணுமாம்ல!” என்று உலகம் நம்மைப் பரிகசிக்குமா? இல்லையா?

இதேதானய்யா, ஈழத்திலும் நடந்திச்சு! ஈழத்தமிழர் 35 லட்சம் பேரில் 33 லட்சம் பேர், கெளம்பிப்போய், இலங்கை அரசாங்கத்தோட சேர்ந்துக்கிட்டாங்க! மிகுதி 3 லட்சம் பேர் தனி நாடு வேணும்னு கேட்டு போராடினாங்க! இதைப் பார்த்த உலகம், “ ஏன்யா, இம்புட்டு பேரு, இலங்கை அரசு நமக்கு ஓகேன்னு சொல்லிகிட்டு, அவங்க கன்ரோல்ல இருக்காங்க! உங்களுக்கு தனிநாடு கேக்குதா? தனிநாடு!” அப்டீன்னு சொல்லிச்சு!

ஈழத்தமிழர்களில், 95 வீதம்பேர், புலிகளுக்கு அல்வா குடுத்துட்டு, கொழும்பு, வவுனியா, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம்னு இலங்கை அரசாங்க கன்ரோல் ஏரியாவுல வசிக்க ஆரம்பிச்சுட்டாங்க! இன்னும் நெறையப் பேர் கெளம்பிப்போய், லண்டன், கனடா, ஃபிரான்ஸ்னு வெளிநாடுகள்ள செட்டில் ஆகிட்டாங்க! “ என்னாங்கடா இது? ஸ்ரீலங்கன் இராணுவம், கொல்றான்கறீங்க! வெட்டுறான், கொத்துறான், ரேப் பண்றான்ங்கறீங்க? அப்புறம் எப்புடி இம்புட்டு தமிழனும், இலங்கை இராணுவ கன்ரோல் ஏரியாவுல வாழ்ந்தாங்க?” அப்டீன்னு நீங்க கேக்கணும்?

அதாங்க தமிழன்! 1995 ல யாழ்ப்பாணத்தை இலங்கை இராணும் புடிச்சாங்க! அப்போ, யாழ்ப்பாணத்துல இருந்த தமிழர்கள்ள, இரண்டரை லட்சம் பேர், விடுதலைப்புலிகளோட சேர்ந்து வன்னிக்குப் போனாங்க! மிச்சம் இரண்டரை லட்சம் பேர் யாழ்ப்பாணத்துல இராணு கன்ரோலுக்குள்ள போயிட்டாங்க! அதுல ஒரு 600 பேரை கொலை பண்ணி, இராணுவம் செம்மணி அப்டீங்கற எடத்துல புதைச்சாங்க! ஸோ, இராணுவ கன்ரோல்ல வாழ்ந்தா நாம கொல்லப்படுவோம்! அதுனால எல் டி டி ஈ யோட நம்ம தங்கிக்குவோம்னு மக்கள் நெனைச்சிருப்பாங்க!” அப்டீன்னு நீங்க அப்பாவித்தனமா நெனைக்காதீங்க!

புலிகளோட வன்னிக்கு வந்த இரண்டரை லட்சம் பேரும் “ எங்களை யாழ்ப்பாணம் போக விடுங்க! யாழ்ப்பாணம் போக விடுங்க”ன்னு நச்சரிச்சாங்க! புலிகளும் “ சரி, போய்த் தொலைங்கன்னு” அனுப்பிட்டாங்க! அப்புறம், வன்னியில் புலிகளோட இருந்த இரண்டரை லட்சம் யாழ்ப்பாணத்து மக்களில், சில ஆயிரம் பேர், தொடர்ந்து வன்னியிலேயே தங்கியிருக்க, மிச்சம் பேர் எல்லாருமே எடுத்த்தாங்க பாருங்க ஓட்டம் யாழ்ப்பாணத்துக்கு!

ஸோ, விடுதலைப்புலிகளோட வெறும் 3 லட்சம் மக்கள் மட்டுமே தங்கியிருக்க, ஏனைய 30 லட்சம் பேரும் அரசாங்கம் பக்கம் போயிட்டாங்க! இப்ப சொல்லுங்க! இதைப் பார்த்து உலகம் என்ன சொல்லும்? 30 லட்சம் தமிழனுக்குத் தேவைப்படாத நாடு, உங்க 3 லட்சம் பேருக்கும் தேவைப்படுதா? அப்டீன்னு கேப்பாய்ங்களா? மாட்டாங்களா?

சரி, இந்த மாதிரி, புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் இருந்து, “ தப்பிச்சோம்டா சாமி”ன்னு ஓடினவங்கல்லாம், இராணுவ கன்ரோல் ஏரியாவுல என்ன “ கண்ணீரும் கம்பலையுமா?” வாழ்ந்தாங்க? ஹி ஹி ஹி அதுதான் இல்லை! தங்கள் பிள்ளைகளை நல்லா படிக்க வைச்சாங்க! டாக்டர், இஞ்சினியர் ஆக்கினாங்க! பல பேர் வெளிநாடு போனாங்க! “ சில நடுநிலைமையான ஊடகவியலாளர்கள்” உருவானாங்க! ( கறுமம்!) கல்யாணம், கச்சேரி நடத்தினாங்க! கொழும்புல - வெள்ளவத்தை, மருதானை, கொட்டாஞ்சேனை என பல இடங்கள்ள ப்ளாட் வாங்கினாங்க! பிசினெஸ் பண்ணாங்க! சில பேர் தமிழை வளர்த்தாங்க!

நாட்டின் ஒரு பகுதியில், அன்றாடம் சாப்பாட்டுக்கே வழியில்லாமல் தமிழன் வயிற்றுப் போராட்டத்தையும், வாழ்க்கைப் போராட்டத்தையும் நடத்திக்கிட்டு இருந்தான்! இன்னொரு பகுதியில், கம்பராமாயணத்தில் வாலிக்கு மறைசிருந்து அம்பு விட்டது சரியா? பிழையான்னு பட்டி மன்றம் நடத்தினாங்க! வன்னியில இராணுவம் மறைஞ்சிருந்து கிளைமோர் அடிச்சது! அதுல 11 பள்ளி மாணவர்கள் இறந்தது சரியா? தவறா?ன்னு விவாதிக்க வக்கில்லாத நாதாரிக்கூட்டங்கள், கம்பராமாயணம் பற்றி விவாதம் நடத்தி, ஒருத்தனுக்கு ஒருத்தன் பொன்னாடை போர்த்தி, பேப்பர்ல படம் போட்டாங்க!

பொங்கு தமிழுக்கு கவிதை பாட முடியாதுன்னு மறுப்பு சொல்லிட்டு, சில தமிழ் அறிஞர்கள் ( ? ) தமிழ்கடல், தமிழ் ஆறு, தமிழ் ஓடை, தமிழ் குட்டைன்னு தங்கள் பேருக்கு முன்னாடி அடைமொழி வைச்சு ஊரை ஏமாத்தினாங்க! இன்னும் சில தமிழர்கள் 3 ஸ்டார் ஹோட்டல் கட்டி, சிங்களப் பொண்ணுங்கள அரை நிர்வாணமா ஆட வைச்சு, நம்ம கலாச்சாரத்தை கட்டிக் காத்தாங்க!

காடு, குளம், நஞ்சை, புஞ்சை எல்லா இடமும் தமிழன் காணி வாங்கி வீடு கட்டி, தன்னோட சோலியப் பார்த்தான்! ஆனா, வன்னிக்குள்ள மட்டும் ஒரு 3 லட்சம் தமிழன் “ நமக்கு ஒரு நாடு வேணும்! தமிழனின் தாகம் தமிழீழத்தாயகம்”னு முழங்கினான்! போராடினான்! ஒரு குடும்பத்தில் இருந்து ஒருத்தன் போராடினான்! ரெண்டு பேர் போராடினாங்க! மூணு பேர் போராடினாங்க! அப்புறம் ஒட்டு மொத்த குடும்பமுமே போராடிச்சு!

”ஒன்பது நாடுகள் சேர்ந்து செய்த துரோகத்துக்கு எதிராக, ஒட்டுமொத்த ஈழத்தமிழனும் போராடினான்” அப்டீன்னு யாராச்சும் சொன்னீங்க, வகுந்துடுவேன்! வகுந்து!! 3 லட்சம் பேர், முள்ளிவாய்க்காலில், ரெத்தம் கொட்டிக்கிட்டு இருக்கும் போது, நாட்டின் ஏனைய பகுதியில் இருந்த, தமிழன் மானாட மயிலாட பார்த்தான்! “ இலங்கையின் சூப்பர் சிங்கர் யாருன்னு” போட்டி வைச்சான்! இந்த மாதிரி நிகழ்ச்சியெல்லாம் இவங்களுக்கு சூப்பரா மட்டுமில்ல! சூ**றமாதிரியும் இருந்திருக்கும்!

வள்ளிபுனத்தில் 61 பள்ளி மாணவிகள் ரெத்தமும் சதையுமா பொணமா கெடந்தாங்க! கொழும்புத் தமிழன் விடிய விடிய குத்துப்பாட்டுப் போட்டான்! இந்த லட்சணத்துல தமிழன் இருந்தா, சிங்களவன் நம்மள அடிக்காம, அப்புறம் என்ன கட்டிப்புடிச்சுக் கொஞ்சுவானா? சொல்லுங்க?

அட, இம்புட்டு தமிழனும் காலை வாரிட்டு, எஸ்கேப் ஆனதுக்கு அப்புறமும் ” ஒட்டு மொத்த தமிழனுக்காகவும் தனிநாடு”ன்னு சொல்லிக்கிட்டு, அந்த மனுஷன் போராடினார் பாருங்க! என்னத்தை சொல்லுறது? அந்த மனுஷனுக்கு சுயநலம் இல்லை! தன்னோட வாழ்க்கையவே போராட்டத்துக்காக அர்ப்பணிச்சார்! அவரோட சேர்ந்து 40 ஆயிரம் வீரர்கள் தங்கள் உயிரைக் குடுத்தாங்க! எல்லாமே முடிஞ்சு போய்ச்சு!

ஒருவேளை ஒட்டுமொத்த ஈழத்தமிழனுமே ஒன்றாக, ஒற்றுமையாக போராடியிருந்தால், நாம் நினைச்சதை சாதிச்சிருக்கலாம்! ஆனா, தமிழன்கிட்ட ஒற்றுமைய வரவழைக்கிறதப் போல ஒரு கஷ்டமான வேலை உலகத்துல ஒண்ணுமே இல்லை!

30 லட்சம் “ புத்திசாலிகள்” ஒண்ணு சேர்ந்து 3 லட்சம் அப்பாவிகளை பலிக்கடா ஆக்கிப்புட்டு, இப்ப ஆய்வு எழுதிக்கிட்டு இருக்காங்க! “ புலிகள் அப்படிப் பண்ணியிருக்கலாம்! இப்படிப் பண்ணியிருக்கலாம்!” அப்டீன்னு ஐடியா குடுக்குறாங்க! போங்கையா போங்க! வாயில நல்ல நல்ல வார்த்தையா வருது!

தலைவா! நீங்க இருக்கீங்களா? இல்லையா?ன்னு எனக்கு நல்லாவே தெரியும்! நீங்க நலமாக இருக்கணும்னு ஆண்டவன்கிட்ட வேண்டிக்கறேன்! உங்ககிட்ட ஒரு வேண்டுகோள்! இனிமே, நமக்காக போராட வராதீங்க! நீங்க நல்லா ஓய்வு எடுத்துக்கோங்க! உங்கள் புலிப்படையை விட, ஸ்ரீலங்கன் இராணுவம் தான் சிறந்தது அப்டீன்னு 30 லட்சம் தமிழர்கள் ப்ரூ பண்ணிய பிறகும், இனிமேல் நீங்க போராடத்தான் வேணுமா? அண்ணே, இனிமேல் நீங்களும் சுயநலமாவே இருக்க கத்துக்கோங்க!

உங்க மேல குறையும் குத்தமும் கண்டுபுடிக்க பல ..., தமிழர்கள் தயாராக இருக்காங்க! உங்களைவிட்டா, அவங்களுக்கு வேற பொழைப்பும் இல்லை! அண்ணே, அவங்கள மன்னிச்சுடுங்க

<a href="http://www.tamilaathi.com">http://www.tamilaathi.com

உண்மையை அறிய ஐ.நா. ஆதரவுடன் தமிழர்களின் சுயநிர்ணய வாக்கெடுப்பை தென் சூடான் போன்று நடத்தலாம்.

மேலும் 1977 ஆம் ஆண்டு மக்கள் ஏற்கனேவ வாக்களித்ததும் நினைவுபடுத்தப்படல்

வேண்டும்.

எழுதியவர் உண்மையை, போராட்டத்தில் மக்களுக்கிருந்த பற்றில்லாமையை வயிற்றெரிச்சலோடு எழுதியிருக்கிறார்.

அது என்ன பிரபாகரன் செய்த மாபெரும் தவறு? சொல்கிறேன் கேளுங்கள்! அது வேறொன்றும் இல்லை! தமிழர்களுக்காகப் போராடினார் பாருங்கள்! ( அதுவும், உலகில் தமிழனுக்கு என்று ஒரு நாடு இல்லை! எனவே, உலகில் மூத்த குடியாகிய, தமிழினத்துக்காக, ஒரு நாடு வேண்டும் என்பதற்காக, அவர் போராடினார் பாருங்கள்! ) அதுதான் அவர் செய்த மாபெரும் தவறு!

4.jpg

http://www.youtube.com/watch?v=rxqSlQtapqI

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எழுதியவர் உண்மையை, போராட்டத்தில் மக்களுக்கிருந்த பற்றில்லாமையை வயிற்றெரிச்சலோடு எழுதியிருக்கிறார்.

பற்றில்லாமைக்கு காரணம் பல தமிழர் ஸ்ரீ லங்காவில் வைத்திருக்கும் சொத்துகளில் இருக்கும் பற்றும் ஒரு காரணம் தான்.

காணி சட்டம் வந்தவுடன் நமது தமிழ் அரசியல்வாதிகள் எல்லோரும் விசுகோத்தும், தேத்தண்ணியும் மட்டும் உண்டு குடித்து உண்ணாவிரத போராட்டமெல்லாம் நடத்தி இனப்பற்றை வெளிப்படுத்தினார்கள்.

இப்போது புது ஸ்ரீ லங்கா வியாபார சட்டம் இன்னும் ஒரு இடியாக இந்த ஸ்ரீ லங்கா தமிழர் மீது இறங்கியிருக்கிறது.

சொந்த இனத்திற்கே முதுகில் குத்துபவர்கள் எதிரியுடன் இருப்பது தான் எங்களுக்கு பாதுகாப்பு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.