Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசியல் தீர்வை எட்ட தெரிவுக்குழு அமைப்பு

Featured Replies

அரசியல் தீர்வை எட்ட தெரிவுக்குழு அமைப்பு

இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாணும் வகையில் அரசமைப்பிலுள்ள விடயங்களை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கென நாடாளுமன்றத் தெரிவுக்குழு ஒன்றை நியமிக்கக் கோரும் பிரேரணை நாடாளுமன்றில் நேற்று முன்மொழியப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது.

இந்தப் பிரேரணை நேற்று சபை முதல்வர் நிமால் சிறிபால டி சில்வாவினால் நாடாளுமன்றில் முன்மொழியப்பட்டது. பின்னர் ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டது.

6 மாதங்களுக்குள் தீர்வை முன்வைக்கும் வகையில் இந்தக் குழு அறிக்கை சமர்ப்பிக்கவேண்டும் எனவும், இக்குழுவில் ஆளும் கட்சிப் பிரதிநிதிகள் 19 பேரும் எதிர்க்கட்சிப் பிரதிநிதிகள் 12 பேரும் உள்ளடங்குகின்றனர் எனவும் பிரேரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கு வாழும் அனைத்து இனமக்களும் தத்தமது தனித்துவத்தையும், பாதுகாப்பையும் மேம்படுத்தவும், கண்ணிய மாகவும் பாதுகாப்பாகவும் ஒரே தேச மக்களாக வாழ்வதற்கான தத்துவம் அளிப்பதை அரசமைப்பின் மூலம் உறுதிப்படு த்தவும் தேவையான விடயங்களை ஆராய்ந்து அறிக்கை ஒன்றைச் சமர்ப்பிப்பதற்கென நாடாளுமன்றத் தெரிவுக்குழு ஒன்றை நியமிக்கவேண்டும் எனக் கோரும் பிரேரணையே அங்கீகரிக்கப்பட்டது.

இவ்வாறு தெரிவுசெய்யப்படும் தெரிவுக்குழு, நியமித்த தினத்திலிருந்து ஆறு மாதங்களுக்குள் தமது அறிக்கையைச் சமர்ப்பிக்கவேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பிரேரணையில் ஆளுந்தரப்பு உறுப்பினர்களான அமைச்சர்கள் மைத்திரிபால சிறிசேன, வாசுதேவ நாணயக்கார, டியூ குணசேகர, பஸில் ராஜபக்ஷ, ஆறுமுகன் தொண்டமான், சம்பிக்க ரணவக்க, டக்ளஸ் தேவானந்தா, ரவூப் ஹக்கீம், அநுர பிரியதர்ஷன யாப்பா, பேராசிரியர் திஸ்ஸ வித்தாரண, ரஜீவ விஜேசிங்க, ஏ.எச்.எம்.அஸ்வர், பி.பியசே ன ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.

இந்தத் தெரிவுக்குழுவில் மக்கள் பிரதிநிதிகளான 31 பேர் இடம்பெறவேண்டும். தெரிவுக்குழுவின் தலைவரை சபாநாயகரே நியமிப்பார். இத்தெரிவுக்குழுவினர் தமது பரிந்துரை அறிக்கையை நியமிக்கப்பட்ட தினத்திலிருந்து ஆறு மாதங்களுக்குள் சமர்ப்பிக்கவேண்டும்.

ஆராயப்படவேண்டிய விடயங்கள் அனைத்து இனமக்களும் தமது தனித்துவத்தையும், பாதுகாப்பையும், மேம்படுத்தவும், கண்ணியமாகவும், பாதுகாப்பாகவும் ஒரே தேச மக்களாக வாழ்வதை உறுதிப்படுத்தல். இலங்கையில் வாழும் மக்களின் மத்தியில் ஐக்கியத்தை மேம்படுத்துதல். சமூக, பொருளாதார, அரசியல் மற்றும் கலாசார அபிவிருத்திகளை மேம்படுத்துவதற்கு தத்துவமளித்தல்.

தெரிவுக்குழுவுக்கான அதிகாரங்கள் அவசியம் எனக் கருதும் எவரையும் அழைத்து விசாரிக்கவும், ஆவணங்களைப் பரிசீலனை செய்யவும் இவ்வாறு அழைக்கப்படும் நபரை சத்தியப்பிரமாணம் அல்லது உறுதிமொழியின்பேரில் விசாரணை செய்யவும் தெரிவுக்குழுவுக்கு துணைபுரியும் பொருட்டு உரிய துறையிலுள்ள நிபுணர்களினதும், வல்லுநர்களினதும் சேவைகளைப் பெற்றுக்கொள்ளவும் காலத்திற்கு காலம் இடைக்கால அறிக்கைகளைச் சமர்ப்பிக்கவும் இந்தத் தெரிவுக்குழுவுக்கு அதிகாரம் அளிக்கப்படவேண்டும் எனவும் இந்தப் பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

http://www.alaikal.com/news/?p=88854

  • தொடங்கியவர்

நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்கேற்காது! - சுரேஸ் பிரேமச்சந்திரன்

இலங்கையின் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்காக நியமிக்கப்படவுள்ள நாடாளுமன்றத் தெரிவுக் குழுவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புறக்கணிக்கவுள்ளது.

இது குறித்து AP செய்தி நிறுவனத்திற்கு கருத்துத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன்,நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்கேற்காது எனக் கூறியுள்ளார்.

அத்துடன், நாடாளுமன்றத் தெரிவுக் குழு நியமனமானது காலத்தை இழுத்தடிக்கும் சிறிலங்கா அரசாங்கத்தின் தந்திரங்களில் ஒன்று என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்காக நாடாளுமன்றத் தெரிவுக் குழுவை நியமிக்கும் யோசனை தொடர்பான பிரேரணை சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று நிறைவேற்றப்பட்டமை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையிலுள்ள மக்கள் ஒரே நாட்டுக்குள் வாழும் வகையிலான அரசியல் மற்றும் அரசியல் அமைப்பு மாற்றங்களை செய்வது தொடர்பாக பரிந்துரைகளை முன்வைப்பதற்காகவே சிறிலங்கா அரசாங்கத்தினால் இந்தத் தெரிவுக்குழு நியமிக்கப்படவுள்ளது.

இந்த நாடாளுமன்றத் தெரிவுக் குழுவுக்கு உறுப்பினர்களை நியமிக்கும்படி அரசியல் கட்சிகளிடம் சிறிலங்கா அரசாங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.

19 ஆளும் கட்சி உறுப்பினர்களையும், 12 எதிர்க்கட்சி உறுப்பினர்களையும் கொண்டதாக இந்தத் தெரிவுக்குழு அமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கும் தலா ஒரு இடம் நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் ஒதுக்கப்படவுள்ள நிலையில். சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கு 4 ஆசனங்கள் ஒதுக்கப்படவுள்ளன.

இலங்கையின் இனப்பிரச்சினைக்கு ஒரு அரசியல் தீர்வைக் காணும் வகையிலும், எல்லா இன மக்களின் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணும் வகையிலும் அரசியல் அமைப்பு ரீதியாக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து நாடாளுமன்ற தெரிவுக் குழு ஆறு மாதங்களுக்குள் பரிந்துரைகளை சமர்ப்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, இலங்கையின் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பில் சிறிலங்கா அரசாங்கத்துடன் இடம்பெற்று வரும் பேச்சுவார்த்தைகளை இவ்வருட இறுதிக்குள் முடிவுக்கு கொண்டுவர எண்ணியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்திருந்தது.

இலங்கையின் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பில் சிறிலங்கா அரசாங்கமும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இதுவரை 13 சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ள நிலையில், அடுத்த கட்டப் பேச்சுவார்த்தைகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 5, 6, 14 மற்றும் 15ஆம் திகதிகளில் நடத்த இருதரப்பினரும் இணக்கம் கண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=1&contentid=a14309e1-cdfb-4c03-b9c2-d842d273f5e0

  • கருத்துக்கள உறவுகள்

நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்கேற்காது! - சுரேஸ் பிரேமச்சந்திரன்

டிஸ்கி:

புலிகள் விட்டு சென்ற அடையாளங்களில் ஒன்றான தமிழ்தேசிய கூட்டமைப்பு இவ்வாறு கூறுவதில் வியப்பு ஏதும் இல்லை . பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண கடந்த காலங்களில் புலிகளோடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டோம் ஆனால் அவர்கள் மாறாக இதய சுத்தியோடு நடந்து கொள்ளவில்லை.அதே வழியை பின்பற்றி வரும் தமிழ்தேசிய கூட்டமைப்பு பேச்சு வார்த்தையில் பங்கேற்காதது தமக்கு வியப்பை ஏற்படுத்தவில்லை என்று நவ் டைம்ஸ் நியூசுக்கு மகிந்தராஜபக்சே தெரிவித்தார்

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் வழங்கப்பட்ட கால அவகாசம் போதாது என ஆறு மாதம் 1 வருடமாக நீட்டப்படும் பின் தமிழின துவேசக் கட்சிகளில் ஒன்று இந்த தெரிவுக்குழுவிற்கு வழங்கப்பட்ட அதிகாரங்களைக் கேள்விக்குறியாக்கி வழக்குத் தாக்கல் செய்து அதன் பரிந்துரைகள் யாவற்றையும் குப்பையில் போடும்படி செய்யும். சரி இதையும் தாண்டி போனால் அவற்றை நடைமுறைப் படுத்துவதற்கு நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்புக்கு விடவேண்டும் என்று சொல்லி எல்லா சிங்களக் கட்சிகளும் சேர்ந்து அதைத் தோர்க்கடிப்பார்கள். இது தானே காலம் காலமா இலங்கையில் தமிழர் விவகாரத்தில் சிங்களவன் தமிழனுக்கு செய்தது.

சிங்கள அரச பயங்கரவாதிகளின் ஏமாற்று வித்தையை தமிழர் நலனில் அக்கறையுள்ள அனைவரும் சிதறடிக்க வேண்டும்.

தமிழினத்துக்கு குழிபறிக்க நினைக்கும் தமிழ் ஒட்டுக்குழுக்கள் சிதறடிக்கப்படும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.