Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

2011 மாவீரர் நாள் ஏற்பாட்டாளர்களுக்கு….

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

2011 மாவீரர் நாள் ஏற்பாட்டாளர்களுக்கு….

(யாழ்க் களமூடாக மட்டுமே இந்தக் கருத்தைப் பதிவு செய்ய முடிகிறது. ஏனெனில் நாம் நம்பிய, போற்றிய ஊடகங்கள் பல இன்று தமிழரோடு இல்லை. சரி யாழ்க்களத்திலே பதியப்படும் நியாய பூர்வமான விடயங்களை பதிவிடத்தான் இவர்கள் முன்வருவார்களா?)

தமிழீழ விடுதலைபற்றியும் மாவீரரது ஈகம்பற்றியும் தமிழருக்குத் தமிழரே விளக்கும் நிலையில் தமிழினம் இல்லையென்ற போதிலும்(நித்திரை கொள்வதுபோல் பாசாங்கு செய்பவரை எழுப்ப முடியாது) தமிழீழ விடுதலைக்கான அர்த்த பரிமாணங்களை நாங்கள் புரிந்து கொண்டோமா? என்றால் மிஞ்சுவது(0) சுழியமேயாகும். முள்ளிவாய்க்கால் அவலத்தின் பின் ஒருதிரள்நிலையெடுத்துத் தகர்க்க முடியாத ஒன்றிணைந்த சக்தியாக நிற்க வேண்டிய தமிழினம் இன்று பிளவுபட்டு, பிறழ்வுபட்டுச் சுக்கு நூறாககச் சிதைந்து நிற்கின்றது. இதனை ஒட்டுமொத்தத் தமிழினமும் கையாலாகாத நிலையில் பரிதவிப்போடு நின்று பார்த்தவாறு இருக்கிறது. ஊடகங்கள் வசைபாடுகின்றன. ஆய்வாளர்கள் அணிபிரிந்து நிற்கின்றனர். ஏனிந்த அவலநிலை? யாரிதன் சூத்திரதாரிகள்?

தமிழரின் ஒற்றுமைக்காக, ஒரு தேசியமாக்க விலைமதிப்பற்ற உயிர்கள் அர்பணிக்கப்பட்டடிருக்கிறது. ஆனால் அதனை இவளவு விரைவாக மறுதலித்து வியாபாரப் பண்டமாக மாற்றும் துணிவை யாரிவர்களுக்குக் கொடுத்தது. தலைவன் ஆயுதப் போராட்டத்தை மௌனித்து ஒரு அரசியல் இராஜதந்திர வழியைத் திறந்து தொடர்ந்து தமிழர் தாயகத்தை மீட்கும் தமிழரது இருப்புக்கான போராட்டத்தை முன்னெடுக்குமாறு விட்டுள்ள பணியை யாராவது முன்னெடுத்தார்களா(?) என்றால், இல்லையென்பதே விடையாகும். எனவே எந்தப் புரிதலுமற்ற, நெருக்கடிகள் நிறைந்த இந்தக் காலகட்டத்தில் வரலாற்றின் அசைவியக்கத்தோடு இவ்வருட மாவீரர் நாளைத் தமிழினம் எதிர்கொள்கின்றது. இந்த நாளில் தமிழீழ தேசியத் தலைவரரவர்கள் ஆற்றிய உரைகள் மீண்டும் எமது மக்களின் காதுகளைச்சென்றடைவது ஒரு தெளிவையும் அனைத்துலக அரசியல் பரிமாணத்தையும் புரிந்து கொள்ள உதவும். எனவே தேசியத் தலைவரவர்களால் 2007, 2008ம் ஆண்டுகளில் ஆற்றிய உரையினை இவ்வாண்டு மாவீரர் நாள் நடைபெறும் மண்டபங்களில் ஒலிபரப்புச் செய்வது பொருத்தமாகும். இந்த உரைகளைச் செவிமடுப்பதனூடாகவேணும் மக்களிடையே ஒரு சரியான செயல்திறன் கொண்ட மாற்றத்தையும் எழுச்சியையும் காணலாமென்பதே அவா.

சுய விருப்பு வெறுப்புகளுக்கப்பால் தமிழினத்தின் விடுதலையை நேசித்துக் களமாடி விடுதலை வேள்வியில் தம்மை அர்பணித்தோரை பூசித்துப் போற்றி வழிபடும் இவ்வேளையில் அவர்களது கனவை நனவாக்க எமது மக்களது எழுச்சி அவசியமானது என்பதை உலகில் நடைபெற்றுவரும் அரசியல் பூகோள நலன் சார்ந்த மாற்றங்கள் உணர்த்தி நிற்குமிவ் வேளையில் “ நான் பெரிது நீ பெரிது என்று வாழாமல் நாடு பெரிதென்று வாழுங்கள். நாடு நமக்குப் பெரிதானால் நாம் எல்லோரும் அதற்குச் சிறியவர்களே, எமது நிலையற்ற வாழ்விலும் பார்க்க நாட்டின் வாழ்வே பெரியது „ என்ற எம் தேசியத் தலைவரின் சிந்தனைக்குச் செயல்வடிவம் கொடுக்க மக்களுக்காக, தேசியத்துக்காக என்போர் முன்வருவார்களா?

நொச்சி

26.11.11

அன்பார்ந்த யாழ்க் கள உறவுகளே,இது பற்றிய உங்களின் கருத்தகளையும் பதிவு செய்யுங்கள்

நன்றி

என்னைப் பொறுத்தவரையில் முள்ளிவாய்க்காலோடு எமது உணர்வுகளும் செத்துப் போய்விட்டது. இப்போது நடப்பதெல்லாம் சந்தணம் மிஞ்சியவனின் கதைதான்.

நன்றி நொச்சி.

சுய விருப்பு வெறுப்புகளுக்கப்பால் தமிழினத்தின் விடுதலையை நேசித்துக் களமாடி விடுதலை வேள்வியில் தம்மை அர்பணித்தோரை பூசித்துப் போற்றி வழிபடும் இவ்வேளையில் அவர்களது கனவை நனவாக்க எமது மக்களது எழுச்சி அவசியமானது என்பதை உலகில் நடைபெற்றுவரும் அரசியல் பூகோள நலன் சார்ந்த மாற்றங்கள் உணர்த்தி நிற்குமிவ் வேளையில் “ நான் பெரிது நீ பெரிது என்று வாழாமல் நாடு பெரிதென்று வாழுங்கள். நாடு நமக்குப் பெரிதானால் நாம் எல்லோரும் அதற்குச் சிறியவர்களே, எமது நிலையற்ற வாழ்விலும் பார்க்க நாட்டின் வாழ்வே பெரியது „ என்ற எம் தேசியத் தலைவரின் சிந்தனைக்குச் செயல்வடிவம் கொடுக்க மக்களுக்காக, தேசியத்துக்காக என்போர் முன்வருவார்களா?

முள்ளிவாய்க்காலின் பின்னராக இன்றுவரை எம்மவர்கள் தொடர்ந்தும் மாவீரர் கனவை நனவாக்க முடியும் என்ற நம்பிக்கையுடன் செயல்பட்டு வருகிறார்கள். காலம் இன்று கைகூடி வருகிறது. ஆனால், ஒற்றுமையாக பயணிக்கவேண்டிய காலம் இது.

அடுத்த வருடம் பங்குனி மாதம் ஐ.நா. மனித உரிமை அமர்வு தொடரில் சிங்களம் மீது தீர்மானம் கொண்டுவந்து ஒரு சுயாதீன விசாரணைக்கு உழைப்பதே குறுகிய காலத்தின் தேவை.

இந்த இரண்டு வருட கால அவகாசத்தில் சிங்களத்தின் பாரிய முயற்சிகளுக்கும் மத்தியில் நாம் கணிசமான வெற்றிகளை சர்வதேசரீதியில் பெற்றுள்ளோம் ( சனல் நாலு ஆவணம், ஐ.நா. பகிரங்க அறிக்கை). உலகின் ஒரே வல்லரசான அமெரிக்க கூட்டமைப்பை அழைத்து பேசியதும், ஐரோப்பிய உடமை நாடுகளின் வரி விலக்குசலுகை நிறுத்தப்பட்டமை, பொதுநலவாய நாடுகளின் கூட்டத்தில் கொடுக்கப்பட்ட அழுத்தங்கள் என்பன வெற்றிகளே. ஆனால் இன்னும் கூடுதாலாக செய்திருக்கலாம்.

&feature=related

உணர்வார்களா??????????????????????? :( :( :( :(

Edited by komagan

மே 19 பின் சீரழிந்து போன போராளிகளினதும் மக்களினதும் புனர்வாழ்வை சிந்திக்காமல் அறிக்கைப் போர் செய்தவர்கள். காரணம், போராட்டத்தை வைத்து சேர்த்த பணத்திக் காப்பாற்ற.

இந்தக் கேடு கேட்ட ஆய்வாள அறிவிலிகளின் ஆய்வுகளைப் பற்றி உலகமே அறியும்.

பழைய புதிய செயல் வீரர்கள் மாவீரர் தினத்தை வைத்து ஏதும் காசு பார்க்கலாமா என்று அடிபடுகிறார்கள்.

எல்லாம் பிணத்தின் மீது பணம் தேடுபவர்களின் போலியானதும் கேலியானதுமொரு செயல்

இதைப் பற்றிச் சொல்ல ஒன்றுமில்லை.

நேற்றய மாவீரர் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றாலும் தொடர்ந்து மாவீரர் தின நகழ்வுகளை நடத்துவோர் விட்டுகொடுப்பு செய்யவேண்டும்,குறிப்பாக ஈசன் குலசேகரம் அவர்கள் மற்றவர்களுக்கும் வழிவிடவேண்டும் என்று கேட்டு கொள்கிறேன்,இன் நிலை தொடர்ந்தால் அடுத்தவருடம் மாவீரர் தின நிகழ்வுகளை அவரவர் வீடுகளில் தான் நடத்தவேண்டி வரும் என்பதோடு அதற்கான முயற்சிகள் இப்போதே ஆரம்பிக்க பட்டுள்ளன என்பதையும் இதன் மூலம் தெரியப்படுத்துகிறேன்.

இங்கனம்

நீலக்குருவி

அடுத்த மாவீரர் நிகழ்வுகளை தாயகத்தில் மக்கள் சுதந்திரமாக கொண்டாடும் நிலையை உருவாக்கினால், புலத்தில்

பிரச்சனைகள் தாமாகவே இல்லாமல் போய்விடலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.