Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உறவுகளிற்கு வணக்கம். சாத்திரி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உறவுகள் அனைவரிற்கும் வணக்கம்.இதுவரை காலமும் பலரோடு நானும் சேர்ந்து தொடக்கி இயக்கிய நேசக்கரம் அமைப்பிலிருந்து விலகுவதாக முடிவெடுத்துள்ளேன். காரணம் நான் தனிப்பட்ட முறையில் எழுதும் கட்டுரைகள் மற்றும் ஆக்கங்கள் பற்றிபலர் கருத்தாடி விமர்சனங்களை முன்வைக்கும் பொழுது . அவர்கள் நேசக்கரம் அமைப்பையும் அதனுள் இழுத்து விமர்சிக்கின்றனர். நேசகச்கரம் அமைப்பு என்பது தனியாக சாத்திரி சாந்தி ஆகிய இருவரால் மட்டும் இயக்கப்படும் அமைப்பு அல்ல அதற்கென்றொரு குழு உள்ளது அதில் உள்ள மற்றையவர்களாலும்தான் அது இயக்கப்படுகின்றது எனவே என்னை விமர்சிப்பதாக நினைத்து நேசக்கரத்தின் நோக்கங்களையும் அதன் செயற்பாடுகளையும் தேவையில்லாமல் விமர்சிப்பதாலும் எவ்வித ஆதாரங்களும் இன்றி குற்றச் சாட்டுக்களை வைப்பதாலும் அதனால் பாதிக்கப்படப் போவது விமர்சிப்பவரோ அல்லது நானோ கிடையாது. உதவிக்காக கரம் நீட்டும் தாயகத்து மக்களே . என்று பலதடைவை எடுத்துச்சொல்லியும் அதனை பலர் உதாசீனம் செய்து என்மீதானதானதும் மற்றும் சாந்தி மீதான விமர்சனங்களை சரியாக வைக்கமுடியாமல் நேசக்கரத்தின் செயற்பாடுகளை இழுத்து விவாவிப்பது தெடர்கின்றது.

இதன்காரணமாக சாந்தி நேசக்கரம் தவிர்ந்த வேறு எதையும் எழுதுவதில்லையென முடிவெடுத்திருக்கிறார். ஆனால் ஆடிய காலும் பாடிய வாயும் சும்மாயிருக்காது என்பதைப்போல என்னைச் சுற்றி நடப்பவைகளை பார்த்துக்கொண்டு என்னால் எழுதால் இருக்கமுடியவில்லை. எனவேதான் நேசக்கரம் அமைப்பிலிருந்து ஒதுங்கிக் கொண்டு எனது எழுத்தை தொடர்வதென முடிவெடுத்துள்ளேன்.

எனவே இனிவருங்காலங்களில் எனது கட்டுரைகளையோ ஆக்கங்களையோ விமர்சிப்பவர்கள். சம்பத்தப்பட்ட விடயத்தை மட்டுமே விமர்சிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். ஆனால் அது பலரிற்கு சரிப்பட்டுவராது என்பதும் எனக்குத் தெரியும். எனவே என்னை என் குடும்பத்தை திட்டித்தீர்க்கலாம். நேசக்கரம் அமைப்பினை விமர்சனத்திற்குள்ளாக்கக்கூடாது என்பதற்காகவே அதிலிருந்து வெளியேறுகிறேன் என்பதனை தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி வணக்கம்.

ஏன் அடிச்சது போதுமா....?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஏன் அடிச்சது போதுமா....?

இல்லியே திருப்பி கொடுக்கவேண்டுமல்லவா?? அதுதான்.. :lol: :lol: :lol:

அடங்கொய்யா..... என்ன வக்காலத்தா.....?

நேசக்கர அமைப்பை பொறுத்தவரையில், இது சரியான முடிவு என்பது எனது எண்ணம்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல முடிவு!

ஒரு பெண் கற்புள்ளவளாக இருப்பதை உலகம் கணக்கில் எடுப்பதில்லை!

அவள் கற்புள்ளவளாகத் தன்னைக் காட்டிக் கொள்வதையே உலகம் கணக்கிலெடுக்கின்றது!

உங்கள் பங்களிப்பு நேசக்கரத்திற்கு, எப்போதும் இருக்கட்டும்!

ஏதோ ஒரு விதத்தில் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி சென்றடைவதை தடுப்பதில் பலர் குறியாக இருக்கின்றனர். இங்கேதான் தமிழ்த்தேசியவாதமும் சிங்கள பேரினவாதமும் ஒன்றை ஒன்று தழுவிநிற்கின்றது.

எந்த ஒரு அமைப்பு பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதரத்துக்கு உதவ முற்படுகின்றதோ அவ் அமைப்பை சிங்களத்துடன் முடிச்சுப்போட்டு அவ் அமைப்பை முடக்குவது வழமையாக நடந்துவருகின்றது. இதன் நோக்கமும் சிங்களப்பேரினவாதத்தின் நோக்கமும் மக்களை நலிவடையச்செய்வது ஒன்றேதான்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அகூதா மற்றும் புங்கையூரானிற்கு நன்றிகள். இனிவருங்காலங்களில் நீங்கள்கூட என்னைத் திட்டக்கூடிய சந்தர்ப்பம் ஏற்படாலாம் எனவே அதற்காகவே முன்னதாகவே நட்புடன் ஒரு நன்றி .வணக்கம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஏதோ ஒரு விதத்தில் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி சென்றடைவதை தடுப்பதில் பலர் குறியாக இருக்கின்றனர். இங்கேதான் தமிழ்த்தேசியவாதமும் சிங்கள பேரினவாதமும் ஒன்றை ஒன்று தழுவிநிற்கின்றது.

எந்த ஒரு அமைப்பு பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதரத்துக்கு உதவ முற்படுகின்றதோ அவ் அமைப்பை சிங்களத்துடன் முடிச்சுப்போட்டு அவ் அமைப்பை முடக்குவது வழமையாக நடந்துவருகின்றது. இதன் நோக்கமும் சிங்களப்பேரினவாதத்தின் நோக்கமும் மக்களை நலிவடையச்செய்வது ஒன்றேதான்.

சுகன் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் தேர்தல் விஞ்ஞாபனத்தில் சிங்கள இடதுசாரித்தலைவர் விக்கிரமபாகு கருணாரத்ன தமிழர்கள் ஒடுக்கப்படுகிறார்கள் தான் ஆட்சிக்குவந்தால் அவர்களிற்கு சுயநிர்ணய முறைப்படி உரிமைகள் வழங்கப்படும் என்று பகிரங்கமாக அறிவித்திருந்தார் அவரது செவ்வியினையும் ஜரோப்பிய வானலைகளிற்கு நான் எடுத்து வந்திருந்தேன். அதற்கு பி.பி.சியின். சிங்களசேவை சாந்தவும் பெரும் உதவி புரிந்திருந்தார். அனால் கூட்டமைப்பு பொன்சேகாவிற்கு உதவியதன் மூலம் தமிழர் வாக்குகள் தமிழர் போராட்டத்தையும் தமிழரையும் அழித்த பொன்சேகாவிற்கு விழுந்தது. தேரதல் முடிந்தபின்னர் என்னுடன் சாந்த கதைத்தபொழுது என்னமச்சான் இப்படி செய்திட்டாங்களே தமிழர் என்று கலைப்பட்டார். அதற்கு நான் சொன்னது தமிழர் இனவாதம் என்பது சிங்கள இனவாதத்திற்கு கொஞ்சமும் சளைத்ததல்ல .. ஆனால் ஒரு பேரினவாதத்திற்கு இருப்பு பிரச்சனையென்று வரும் பொழுது அது இன்னொரு பேரினவாதத்துடன் தாராளமாக கைகுலுக்கிக் கொள்ளுமே தவிர பாதிப்புக்களைபற்றி அதற்கு கவலையில்லையென்பதுதான்

Edited by sathiri

  • கருத்துக்கள உறவுகள்

ஆயிரம் அடிபிடிப்பட்டு.. நம்ம யாழ் டன்னு ஒரு அமைப்பைத் தொடங்கினாலும் தொடங்கினாய்யா (இப்ப அவரையும் இங்கே காணக்கிடைப்பதில்லை)... அது இப்ப இப்படி வந்து நிற்குது. ம்ம்ம்... நேசக்கரம்.. தொடர்ந்து நீளட்டும்.. உதவி கோரும் கரங்களைப் பற்றட்டும். அதைவிட சொல்ல எதுவும் இல்லை..! நேசக்கரத்தால் பயன்பெறும் மக்கள் உள்ளவரை அதன் கரம் பற்றப்படும்..!

இப்ப உள்ள நேசக்கரம் அப்ப யாழில் ஆரம்பித்த நேசக்கரம் போல இல்லை..! இன்று நிறைய வளர்ச்சி இருக்கிற அதேவேளை.. நிறைய புடுங்குப்பாடுகளும்.. கூடவே கொஞ்சத் திமிரும் வளர்ந்திருக்குது..! இயன்ற வரை நேசக்கரம் அநாவசியமானவற்றை தவிர்த்துக் கொண்டு.. அதன் சேவை மக்களை சென்றடைய உழைப்பின்.. அது இன்னும் பலமடையும்..!

நேசக்கரத்தில் சாத்திரியின் சேவை சோதனைகளைக் கண்டிருந்தாலும்.. பாராட்டிற்குரியது. :):icon_idea:

ஆரம்பித்தவனே பறிகொடுத்திட்டு ஓடிட்டான்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆயிரம் அடிபிடிப்பட்டு.. நம்ம யாழ் டன்னு ஒரு அமைப்பைத் தொடங்கினாலும் தொடங்கினாய்யா (இப்ப அவரையும் இங்கே காணக்கிடைப்பதில்லை)... அது இப்ப இப்படி வந்து நிற்குது. ம்ம்ம்... நேசக்கரம்.. தொடர்ந்து நீளட்டும்.. உதவி கோரும் கரங்களைப் பற்றட்டும். அதைவிட சொல்ல எதுவும் இல்லை..! நேசக்கரத்தால் பயன்பெறும் மக்கள் உள்ளவரை அதன் கரம் பற்றப்படும்..!

இப்ப உள்ள நேசக்கரம் அப்ப யாழில் ஆரம்பித்த நேசக்கரம் போல இல்லை..! இன்று நிறைய வளர்ச்சி இருக்கிற அதேவேளை.. நிறைய புடுங்குப்பாடுகளும்.. கூடவே கொஞ்சத் திமிரும் வளர்ந்திருக்குது..! இயன்ற வரை நேசக்கரம் அநாவசியமானவற்றை தவிர்த்துக் கொண்டு.. அதன் சேவை மக்களை சென்றடைய உழைப்பின்.. அது இன்னும் பலமடையும்..!

நேசக்கரத்தில் சாத்திரியின் சேவை சோதனைகளைக் கண்டிருந்தாலும்.. பாராட்டிற்குரியது. :):icon_idea:

நன்றிகள் நெடுக்கு டண் இப்பவும் யாழில்தான் நிற்கிறார். அவர் உதவி அமைப்பு ஒன்றை தொடங்கவேண்டும் என என்னிடம் கேட்டபொழுது நான்தான் நேசக்கரம் என்று பெயர் வைக்கலாமென்று கதைத்து இந்த அமைப்பை தொடங்கி பலரை இணைத்து இயக்கினோம். பின்னர் டண் அவருடைய தனிப்பட்ட காரணங்களிற்காக விலகிப் போய்விட்டார். ஆனாலும் அது இன்று பெரிதாய் வளர்ந்து நிறகின்றவேளை அதன் சேவைகள் பாதிப்படையாமல் அதற்கு வழிவிட்டு ஒதுங்குவது மேலானதே :wub: :wub:

ஆரம்பித்தவனே பறிகொடுத்திட்டு ஓடிட்டான்.

ஆரம்பிச்சது நானும் டண்ணும்தான் .டண் இப்பவும் யாழிலைதான் நிக்கிறார். ஆனால் பெயர்தான் வேறை

அதுதான் சொன்னனே பறி கொடுத்திட்டான் எல்லாத்ததையும்

பொது அமைப்பு என்றால் கடினமானதே. சேறு விழும் அடிக்கடி. ஆனால் கொஞ்சம் கவனமாக இருந்து, சில மக்கள் உறவு நிகழ்வுகளையும் முன்னெடுத்தால் சமாளிக்கலாம்.

தொடங்கிய டண் உட்பட்ட அனைவருக்கும் கொண்டு நடத்தும் அனைவருக்கும் பாராட்டுக்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அதுதான் சொன்னனே பறி கொடுத்திட்டான் எல்லாத்ததையும்

ஓ என்னை பற்றி சொல்லுறீங்களா?? நல்லது

ஓ என்னை பற்றி சொல்லுறீங்களா?? நல்லது

நீங்கள் அதை பறித்து எடுத்து விட்டு கதை விடுகிறீர்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பொது அமைப்பு என்றால் கடினமானதே. சேறு விழும் அடிக்கடி. ஆனால் கொஞ்சம் கவனமாக இருந்து, சில மக்கள் உறவு நிகழ்வுகளையும் முன்னெடுத்தால் சமாளிக்கலாம்.

தொடங்கிய டண் உட்பட்ட அனைவருக்கும் கொண்டு நடத்தும் அனைவருக்கும் பாராட்டுக்கள்.

உண்மைதான் அகூதா ஆனால் சில நிமிடங்களிலேயே இங்கும் திண்ணையிலும் பார்த்திருப்பீர்களே . அந்தளவிற்கு நான் அனியாயத்திற்கு நல்லவன் அல்ல. எனவேதான் இந்த முடிபு

நீங்கள் அதை பறித்து எடுத்து விட்டு கதை விடுகிறீர்கள்

நானே தொடங்கியதை யாரிடம் இருந்து பறிப்பது என்பதையாவது புரியிறமாதிரி சொல்லாமே தொங்கியதே நானும் டண்ணும். . தமிழ் புரியாவிடடால் ஒண்டும் செய்யமுடியாது

இந்த நான் என்பதை விடுங்கள். இதில் இருந்துதான் உங்கள் திமிர் வெளிப்படுகிறது

நேசக்கரம் கணக்குகளை ஒழுங்காக தருகின்றது.

அதேவேளை நீண்டகால அடிப்படையில் தாயக மக்களுக்கு உதவ என்ன திட்டங்களை தன்னகத்தே கொண்டுள்ளது? ( எனது கேள்வியில் தவறு இருந்தால் , மன்னிக்கவும்)

Edited by akootha

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த நான் என்பதை விடுங்கள். இதில் இருந்துதான் உங்கள் திமிர் வெளிப்படுகிறது

ஓ அப்படியா அடுத்தது டண் அவர் தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் பலதை பறி கொடுத்ததால் நேசக்கரத்திலிருந்து ஒதுங்கினார் அதனை இங்கு பகிரங்கமாக எழுதுவது நாகரீகம் இல்லை . எங்கள் இருவரையும் விட்டால் வேறு யாரை நான் எழுதுவது என்று சொலுங்களேன் விபரம் தெரிந்வர் என்கிற முறையில்.

நீண்டகால அடிப்படையில் ஒரு மண்ணும் இல்லை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நேசக்கரம் கணக்குகளை ஒழுங்காக தருகின்றது.

அதேவேளை நீண்டகால அடிப்படையில் தாயக மக்களுக்கு உதவ என்ன திட்டங்களை தன்னகத்தே கொண்டுள்ளது? ( எனது கேள்வியில் தவறு இருந்தால் , மன்னிக்கவும்)

நிச்சயமாக அது ஒரு தொழில்சார் திட்டமிடல் குழுவினருடன் இய்ஙகுவதால் அவை தொடர்ந்தும் நடைபெறும் .நம்மை மாதிரி அள்ளக்கையள் அடிபட்டுக்கொண்டேயிருப்பம்

உலகில் இலகுவான விடயம் 'ஐடியா' கொடுப்பது :

- குறைந்த நீரில் வளரக்கூடிய மரக்கறி பயிர்களை அறிமுகப்படுத்தல்

- தாயகத்தில் சிறப்பு இன மாடுகளை, கோழிகளை அறிமுகப்படுத்தல்

- விதைகள் அற்ற முந்திரிகைப்பழத்தை அறிமுகப்படுத்துவது

- மழை நீரை சேமித்தல் , நீரை தூய்மைப்படுத்தல்

- நன்னீர் மீன்பிடிப்பு வசதிகள்

- http://www.yarl.com/...20

Edited by akootha

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீண்டகால அடிப்படையில் ஒரு மண்ணும் இல்லை

எமது மண்ணேயில்லை பிறகு எப்படி கழுதைக்கு மட்டும் மண் வருமாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உலகில் இலகுவான விடயம் 'ஐடியா' கொடுப்பது :

- குறைந்த நீரில் வளரக்கூடிய மரக்கறி பயிர்களை அறிமுகப்படுத்தல்

- தாயகத்தில் சிறப்பு இன மாடுகளை, கோழிகளை அறிமுகப்படுத்தல்

- விதைகள் அற்ற முந்திரிகைப்பழத்தை அறிமுகப்படுத்துவது

- மழை நீரை சேமித்தல் , நீரை தூய்மைப்படுத்தல்

- நன்னீர் மீன்பிடிப்பு வசதிகள்

- http://www.yarl.com/...20

அகூதா தமிழீழமும் கட்டுமானமும் என்கிறதொரு வெளியீடு பார்த்திருப்பீர்களோ தெரியாது அதில் இவை பற்றிய விபரங்கள் அடங்கியிருக்கினறது ஆனால் இப்பேது உள்ள நிலையில் மிக மெதுவாகவே முன்னேறவேண்டியுள்ளது. அதை நேசக்கரம் செய்துகொண்டிருக்கினற்து என நம்புகிறேன். அதே நேரம் இனிவரும் காலங்களில் கழுதை போன்றவர்கள் கத்திக் கொண்டிருப்பதால் நான் நேசக்கரம் பற்றிய கேள்விகளிற்கு பதில் கொடுப்பதை தவிர்த்து கழுதைகளிற்கே பதில் கொடுக்கிறேன்;

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.