Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இந்தியப் பெருங்கடலில் ராணுவத் தளம்: சீனா அமைக்கிறது

Featured Replies

இந்தியப் பெருங்கடலில் ராணுவத் தளம்: சீனா அமைக்கிறது

பெய்ஜிங், டிச.12 (டிஎன்எஸ்) சீனா தனது கடற்படைக்கு எரிபொருள், ஆயுத சப்ளை செய்ய வசதிக்காக தனது முதல் ராணுவ தளத்தை இந்திய பெருங்கடலில் ஷெசல்ஸ் தீவில் அமைக்கபோவதாக அறிவித்துள்ளது.

ஏற்கனவே தனது தென் சீனக் கடல் பகுதியிலிருந்தும், இலங்கையின் வட பகுதியில் அமைத்துள்ள கடற்படைத் தளத்தின் மூலமூம் இந்திய நீர்மூழ்கிகள், போர்க் கப்பல்களை சீனா கண்காணித்து வருகிறது.

இப்போது ஆப்பிரிக்க கண்டத்துக்கு கிழக்கே உள்ள இந்த ஷெசல்ஸ் தீவிலும் தனது ராணுவத் தளத்தை அமைப்பதன் மூலம் இந்தியாவை மூன்று பக்கத்தில் இருந்து சீனா கண்காணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

தனது தென் சீனக் கடல் பகுதியிலிருந்தும், இலங்கையின் வட பகுதியில் அமைத்துள்ள கடற்படைத் தளத்தின் மூலமூம் இந்திய நீர்மூழ்கிகள், போர்க் கப்பல்களை சீனா கண்காணித்து வருகிறது.

இப்போது ஆப்பிரிக்க கண்டத்துக்கு கிழக்கே உள்ள இந்த ஷெசல்ஸ் தீவிலும் தனது ராணுவத் தளத்தை அமைப்பதன் மூலம் இந்தியாவை மூன்று பக்கத்தில் இருந்து சீனா கண்காணிக்க முடியும். (டிஎன்எஸ்)

http://tamil.chennaionline.com/news/newsitem.aspx?NEWSID=917e20f2-8c85-4533-a631-728827c416ba&CATEGORYNAME=TINTL

இந்தியாவே அதன் வருத்தத்தை தெரிவிக்கும் போது நாம் என்ன செய்ய முடியும்.

தன்வினை தன்னைசுடும்

ஓட்டப்பம் வீட்டைசுடும்.

ஒரே ஒரு வருத்தம் அரசியல் சதுரங்க விளையாட்டில் பாதிக்கப்படுவது அப்பாவிகளே!என்ன முன் ஜென்ம வினையோ.......

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ராணுவத் தளத்தை அமைப்பதன் மூலம் இந்தியாவை மூன்று பக்கத்தில் இருந்து சீனா கண்காணிக்க முடியும்.

சீனா காரனுக்கு இந்தியாவை கண்காணிக்கிறதெல்லாம் ஜூஜூபி மாட்டர். அவனுடைய இலக்கு பிராந்திய ஆதிக்கமும் எதிர்காலத்தில் அமெரிக்காவை விஞ்சுவதும் தான். இந்திய ஊடகங்கள் தான் "நானும் ரவுடி தான்" என்பது போல் சீனா இந்தியாவை சீரியஸ்சாக எடுப்பதாக கதை விடுகின்றன.

  • கருத்துக்கள உறவுகள்

சீனா காரனுக்கு இந்தியாவை கண்காணிக்கிறதெல்லாம் ஜூஜூபி மாட்டர். அவனுடைய இலக்கு பிராந்திய ஆதிக்கமும் எதிர்காலத்தில் அமெரிக்காவை விஞ்சுவதும் தான். இந்திய ஊடகங்கள் தான் "நானும் ரவுடி தான்" என்பது போல் சீனா இந்தியாவை சீரியஸ்சாக எடுப்பதாக கதை விடுகின்றன.

ஆனாலும் ஐரோப்பாவும் அமெரிக்காவும் இன்று தமது பொருளாதார எதிரியாக மிகவும் பயப்படும் நாடுகள் இவை இரண்டும தானே அகோதா?

Edited by விசுகு

  • தொடங்கியவர்

ஆனாலும் ஐரோப்பாவும் அமெரிக்காவும் இன்று தமது பொருளாதார எதிரியாக மிகவும் பயப்படும் நாடுகள் இவை இரண்டும தானே அகோதா?

பிரேசில் - உருசியா-இந்தியா- சீனா நாடுகள் உருவாக்கிய பொருளாதார அமைப்பு (BRIC) பலம் அடைய மேற்குலகம் விடாது. இவர்கள் தமக்குள் ஒற்றுமையாக பலமடையாத வரைக்கும், மேற்குலகம் முதலாவதாக இருக்கும்.

ஐரோப்பாவும் அமெரிக்காவும் நிச்சயம் சீனாவினதும் இந்தியாவினதும் பொருளாதார வளர்ச்சியைக்கண்டு

அதிருப்தி அடைந்தாலும், அந்த வளர்ச்சியை தமக்கு சாதகமாக பயன்படுத்தும் வழியை தெரிந்தும் உள்ளன. என்னதான் புதிய பணம் சீனர்களுக்கோ இல்லை இந்தியர்களுக்கோ கிட்டும்பொழுது அவர்களின் அந்த செல்வந்தம் காரணமாக மேற்குலகம் பயனடைகின்றது. அதேவேளை சீனாவிடம் இருந்து கடனை பெற்று, பின்னர் கடனில் ஒரு பகுதியை சீனா 'மன்னித்து விடுகின்றது', காரணம் மேற்குலகத்தின் 'நுகர்வோர்களே' சீனாவின் முதுகெலும்பு.

இந்தியாவே அதன் வருத்தத்தை தெரிவிக்கும் போது நாம் என்ன செய்ய முடியும்.

தன்வினை தன்னைசுடும்

ஓட்டப்பம் வீட்டைசுடும்.

ஒரே ஒரு வருத்தம் அரசியல் சதுரங்க விளையாட்டில் பாதிக்கப்படுவது அப்பாவிகளே!என்ன முன் ஜென்ம வினையோ.......

இந்த நூற்றாண்டில் இந்தியா உடைவது திண்ணம், ஆனால் எவ்வாறு எப்படி அது உடையும் என்பதி எதிர்வு கூறுவது கடினம்.

அவ்வாறு பாரத தேசம் உடையும் பொழுது தமிழர்களுக்கும் புதிய தேசங்கள் பிறக்கும்.

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

ஆனாலும் ஐரோப்பாவும் அமெரிக்காவும் இன்று தமது பொருளாதார எதிரியாக மிகவும் பயப்படும் நாடுகள் இவை இரண்டும தானே அகோதா?

இந்த இருநாடுக்களும்தான் உலக மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பகுதிமக்களை கொண்டுள்ளார்கள் :icon_mrgreen:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தியாவின் ராஜதந்திரங்கள் எதுவும் கடந்த காலங்களில் சரியான பாதையில் சென்றதாகச் சரித்திரம் இல்லை. பிள்ளையார் பிடிக்கப்போய் குரங்கான கதைதான் அதிகம். இந்தியா உடையும் என்பதில் ஐயப்பாடு இல்லை. ஆனால் எப்படி என்பதை அகோதா சொக்கதுபோல் எதிர்வு கூறமுடியாது தான். செய்தவினைகள் திரும்பி அவர்களைச்சூழும். ஆனால் இந்தியா உடைந்தால் தான் ஈழத்தமிழர்கள் அமைதியாக வாழவும் முடியும். சுதந்திரம் அடையவும் முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியப் பெருங்கடலில் ராணுவத் தளம்: சீனா அமைக்கிறது

பெய்ஜிங், டிச.12 (டிஎன்எஸ்) சீனா தனது கடற்படைக்கு எரிபொருள், ஆயுத சப்ளை செய்ய வசதிக்காக தனது முதல் ராணுவ தளத்தை இந்திய பெருங்கடலில் ஷெசல்ஸ் தீவில் அமைக்கபோவதாக அறிவித்துள்ளது.

ஏற்கனவே தனது தென் சீனக் கடல் பகுதியிலிருந்தும், இலங்கையின் வட பகுதியில் அமைத்துள்ள கடற்படைத் தளத்தின் மூலமூம் இந்திய நீர்மூழ்கிகள், போர்க் கப்பல்களை சீனா கண்காணித்து வருகிறது.

இப்போது ஆப்பிரிக்க கண்டத்துக்கு கிழக்கே உள்ள இந்த ஷெசல்ஸ் தீவிலும் தனது ராணுவத் தளத்தை அமைப்பதன் மூலம் இந்தியாவை மூன்று பக்கத்தில் இருந்து சீனா கண்காணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

தனது தென் சீனக் கடல் பகுதியிலிருந்தும், இலங்கையின் வட பகுதியில் அமைத்துள்ள கடற்படைத் தளத்தின் மூலமூம் இந்திய நீர்மூழ்கிகள், போர்க் கப்பல்களை சீனா கண்காணித்து வருகிறது.

இப்போது ஆப்பிரிக்க கண்டத்துக்கு கிழக்கே உள்ள இந்த ஷெசல்ஸ் தீவிலும் தனது ராணுவத் தளத்தை அமைப்பதன் மூலம் இந்தியாவை மூன்று பக்கத்தில் இருந்து சீனா கண்காணிக்க முடியும். (டிஎன்எஸ்)

http://tamil.chennai...EGORYNAME=TINTL

அகூதா, திபெத்தில் , இமயமலையின் உச்சியில் இருந்து பார்க்கும் போது, இந்தியாவின் நாலாம் பக்கத்தையும் கண்காணிக்கலாம்!!! :lol:

இந்தியா சரித்திரத்தில்,என்றைக்குமே ஒரு நாடாக இருந்ததில்லை! பல சிற்றரசுகள் சேர்ந்த ஒரு, கூட்டமாகவே எப்போதும் இருந்து வந்துள்ளது!

கேரளாக்காரனும், தமிழ் நாட்டுத் தமிழனும், ஒரே நாட்டுக்காரர் போல எனக்குத் தெரியவில்லை. உங்களுக்கு??? :D

  • தொடங்கியவர்

கேரளாக்காரனும், தமிழ் நாட்டுத் தமிழனும், ஒரே நாட்டுக்காரர் போல எனக்குத் தெரியவில்லை. உங்களுக்கு???

மத்திய அரசே இவ்வாறான புரையோடிப்போன வேறுபாடுகளுக்கு காரணம். மாநிலங்களுக்கு இடையே ஒற்றுமையை வளர்க்க அது தவறியது. அதனால் பலவேறு மொழிகள், கலாச்சாரங்கள் மற்றும் சரித்திரங்களை உடைய 'சிற்றரசுகளை' நீண்ட காலத்திற்கு கட்டிப்போட முடியாது.

  • தொடங்கியவர்
Seychelles_05.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.