Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஆங்கிலம் தெரியாத உமக்கு லண்டன் போக வேண்டுமா?

Featured Replies

சுமந்திரனிடம் செவிப்பறை வெடிக்க வாங்கிக்கட்டினார் யோகேஸ்வரன்.

மக்களால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினரான யோகேஸ்வரனுக்கு தேசியப் பட்டியல் எம்பி செவிப்பறை வெடிக்க அடித்தாரா? தலையங்கம் சற்றுச் சங்கடமாகத்தான் இருக்கும், ஆனால் செவிப்பறை வெடிக்க கையால் அல்ல சொல்லாலும் செயலாலும் குடுத்திருக்கின்றார் சுமந்திரன் யோகேஸ்வரனுக்கு.

இன்ரர்நெஷ்னல் அலேட் என்கின்ற அமைப்பினால் 40 வயதுக்கு உட்பட்ட பாரளுமன்ற உறுப்பினர்களுக்கான பயிற்சிப் பட்டறை ஒன்று பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான உரிமைகள், மக்கள் தொடர்பாடல், முகாமைத்துவம், பல்லினச்சமூகங்களுடனான உறவைபேணுதல் போன்ற விடயங்களில் இளம் பாராளுமன்ற உறுப்பினர்கள் எவ்வாறு தம் ஆற்றலை வழர்த்துக்கொள்வது என்ற பயிற்சியை வழங்குவதே இப்பட்டறையின் நோக்கமாகும்.

இப்பயிற்சிக்காக நமது பாராளுமன்றிலிருந்தும் 40 வயதுக்குட்பட்டவர்களை இன்ரர்நெஷ்னல் அலேட் சார்பாக வன் ரெக்ஸ்ட் இனிசியேட் என்கின்ற நிறுவனம் ஒருங்கிணைக்கும் வேலையினைச் செய்துள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிலிருந்து 3 உறுப்பினர்கள், ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து 2 பாராளுமன்ற உறுப்பினர்கள், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸிலிருந்து 1 பாராளுமன்ற உறுப்பினர் என மேற்படி நிகழ்வுக்காக தெரிவு செய்யப்பட்டிருந்ததுடன் அவர்கள் தற்போது பிரித்தானியாவில் தங்கியுள்ளனர். அவர்களுடன் பாராளுமன்ற உறுப்பினர் அல்லாத தமிழர் ஒருவரும். யார் இந்த தமிழர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து மேற்படி குழுவிற்கான தெரிவு என்ற விடயம் வந்தபோது கூட்டமைப்பில் 40 வயதுக்கு குறைவான பாராளுமன்ற உறுப்பினராக உள்ள ஒரே ஒருவர் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன். அவர் இப்பயிற்சியினை பெற்றுக்கொள்ளும் நோக்கில் தலைமையிடம் அனுமதி கோரியபோது யோகேஸ்வரனின் செவிப்பறை வெடித்துள்ளது. ஆங்கிலம் தெரியாமல் லண்டன் சென்று மானத்தை கப்பலேற்ற போறீரோ என கேட்டகப்பட்டாராம்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு இத்துடன் நின்று விடவில்லை பாராளுமன்ற உறுப்பினரின் இடத்திற்கு பிரதேச சபைச் தலைவர் ஒருவரை அனுப்புவதற்கு தீர்மானித்துள்ளது. அத்தேர்வு எவ்வாறு இடம்பெற்றது. அவர் சுரேஸ் அணியைச் சேர்ந்தவரா? சம்பந்தன் அணியைச் சேர்ந்தவரா? அன்றில் சுபந்திரனுக்கு மிகவும் நெருக்கமானவரா என்பதெல்லாம் கேட்க்கக்கூடாது.

வலிகாமம் வடக்கு பிரதேச சபைத் தலைவர் ஆங்கிலம் பேசுவாராம் எனச்சொல்லி பிரித்தானிய வீசாவிற்கு அனுப்பியுள்ளார்கள். குறிப்பிட்ட நிகழ்வு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கானது என்ற கூறப்பட்டு வீசா நிராகரிக்கப்பட்டுள்ளது. சுகிர்தர் என்ற வலி வடக்கு பிரதேச சபைத்தலைவர் பாஸ்போர்டில் றிஜெக்ட் சீலை குத்தி கொண்டு வெளியில் வந்தவுடன், பிறிதொருவர் வெளியில் பாஸ்போர்டுடன் நின்றுள்ளார். அவருக்கு வீசா வழங்கப்பட்டுள்ளது. அவர் குறிப்பிட்ட குழுவுடன் லண்டன் சென்று மேற்படி பயிற்சியில் கலந்து கொண்டுள்ளார்.

ragu.jpg

இவர் யார்? இவர் பெயர் ரகு பாலச்சந்திரன். சுமந்திரனின் நெருங்கிய சகாவாம்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பும் தேசியமும் எங்கே போகின்றது. மக்கள் பிரதிநிதி ஒருவரை ஆங்கிலம் தெரியாது என நிராகரிக்கின்றார்கள். அதேநேரம் ஆங்கிலம் தெரிந்தவர் என பாராளுமன்ற உறுப்பினர் அல்லாதவர் ஒருவரை வீசா கேட்டு அனுப்புகின்றார்கள். பிரித்தானியா வீசாவை நிராகரிப்பதற்கு காரணம் பாராளுமன்ற உறுப்பினர் இல்லை என சொல்லப்பட்டுள்ளது. ஆனால் பாராளுமன்ற உறுப்பினர் அல்லா சுமந்திரனின் சகாவிற்கு அதே நிகழ்வில் பங்கேற்பதற்கு வீசா வழங்கப்பட்டுள்ளது.

பின்தங்கிய பிரதேசத்திலிருந்து , மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதி பின்தங்கியவராகவே இருக்கவேண்டும். ஆங்கிலம் பேசத்தெரிந்த மேல்தட்டு வர்க்கத்தினராகிய நாங்கள் சகலவற்றையும் பார்த்துக்கொள்வோம் , மக்கள் எங்களுக்கு வாக்குப்போட வேண்டும், அத்துடன் நீங்கள் தெரிவு செய்கின்றவர்கள், நாங்கள் சொல்லற பக்கத்துக்கு தலையாட்டவும், கைதூக்கவும் தயாராகவிருக்கவேண்டும், மீறினால் செவிப்பறை வெடிக்கும் எனச் செயல்படுகின்றது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை.

Source - ilankanet.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையிலேயே யோகேஸ்வரனுக்கு ஆங்கிலம் தெரியாதென்றால் பயிற்சிக்குப் போய் பயன் இருந்திருக்கப் போவதில்லை. மேலும், இந்த ஆங்கில அறிவு விஷயம் பிரித்தானிய தூதரகத்திற்குத் தெரியவந்திருந்தால் அவர்கள் நுழைவு அனுமதியும் கொடுத்திருக்க மாட்டார்கள். அதி சரி மொட்ஸ், யோகேஸ்வரனுக்கு ஆங்கிலம் தெரியுமா தெரியாதா?

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் பல்கலைகழகத்தில் கற்பித்த ஒரு பௌதீகவியல் பேராசிரியரை ஆங்கிலம் தெரியாதவர் என கூறுவதுண்டு அதற்காக அவருக்கு ஆங்கிலம் தெரியாது என்றில்லை ஆங்கிலத்தில் பேசுவதற்கு சிறிது சிரமமாக இருப்பதை பெரிதாக காட்டி தம்மை உயர்த்திக்கொண்டவர்களின் வேலை,ஆனால் அவர் அது பற்றிக்கவலைப்படாமல்

"பிரித்தானியாவில் உள்ள மன நலம் குன்றியவன் கூட நன்றாக ஆங்கிலம் பேசுவான்" என்பார்

இந்த மாதிரியான கற்கை நெறிகள் எல்லாம் அரசியல்வாதிகளின் துறைசார் வளர்சியை மையமாக கொண்ட கற்கை நெறி அண்மையில் அவுஸ்திரேல்யாவில் பாட்டாளி மக்கள் கட்சியிலிருந்த அரசியல்வாதி $20,000 செலவில் தனது வெளினாட்டு கற்கை நெறியை பூர்த்தி செய்திருந்தார் விக்கிப்பீடியா மற்றும் இணைய தளங்களின் உதவியுடன் இப்பொது அது பெரும் சர்ச்சையில் உள்ளது. இவர் ஏற்கனவே பொது நிதியை கீழ்தரமான முறையில் தனது பொழுது போக்கிற்காக பயன்படுத்தி சிக்கலில் மாட்டிக்கொண்டவர்.

தக்கான் தகவிலான் என்பது தனிய தொடர்பாடல் மொழியின் அடிப்படையில் இருக்க கூடாது.

இந்த ஆக்கத்தின் இலக்கு கூட்டமைப்பை தாக்குவது, அதன் மேல் உள்ள மரியாதைக்கு வேட்டு வைப்பது.

பிரித்தானியாவை தளமாக கொண்டு இயங்கும் இந்த அரச சார்பற்ற நிறுவனம் ( http://www.international-alert.org/ ) சிங்களத்துடன் நெருங்கிய உறவுகளை கொண்ட அமைப்பா?

பல சுயாதீன அரச சார்பற்ற அமைப்புக்கள் வெளியேற்றப்படுகின்றன, இருக்கும் அமைப்புக்களுக்கு பலவிதமான நெருக்குவாரங்கள் தரப்படுகின்றன.

அப்படியிருக்கையில் எவ்வாறு இந்த அமைப்பு மட்டும் உறவுகளை கொண்டுள்ளது என்ற சந்தேகம் வருகின்றது : http://www.internati...isit-call-appli

Edited by akootha

இங்கிலாந்து, கனடா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா.....போன்ற நாடுகளில் குடியுரிமை பெற ஆங்கிலம் பரிசோதிக்க படும். ஆனால் இங்கிலாந்துக்கு போக ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டும் என்பது அறியப்படாதது. அப்படியாயின் பல நாட்டு சுற்றுலாப்பயணிகளை இழக்க நேரிடும்.வர இருக்கும் ஒலிம்பிக் போட்டிகள் தோல்வியில் முடியும். கருத்தரங்குகளுக்கு செல்வோரிடம் தகமை பார்க்க படலாம். அவர்கள் தமது திறமைகளை வெளியிட மொழியை தடங்கலாக நிறுத்த மாட்டார்கள்.

பயிற்சியின் பொது ஆங்கிலம் ஒரு முன்நிபந்தனையாக இருந்தால் மட்டுமே பயிற்சிக்கு போபவர்களிடம் அத்தகைய தகமை பரிசோதிக்க பட்டு வீசா மறுக்கப் படும். (உதாரணத்துக்கு கல்லூரி வீசா). சாதாரண நிலைமைகளில் யோகேஸ்வரன் தான் பா.உ என்பதை வைத்து வீசா பெறத்தக்கதாக இருக்கும். புலிகளுடன் தொடர்பு வைத்திருந்தவர் என்று மறுக்க பட்டால் அது வேறு வகை. கருணா ராச தந்திரிகளின் வீசாவைப் பெற்று பரிஸ், இங்கிலாந்து சென்றவன்.

யோகெஸ்வரனுக்கு ஆங்கிலம் தெரியாதென்பதை விட சுமந்திரன் த.தே.கூ அமைப்பு அங்கத்தவர்களை அந்நிய படுத்துகிறார் என்பதை காட்டத்தான் இந்த கட்டுரை முயல்கிறது. புலம் பெயர் மக்களின் மனங்களில் இருக்கும் சந்தேகங்களை வைத்து ஆப்பை இறுக்கி சுமந்திரனை இலகுவில் உடைக்கலாம் என்பது நோக்கமாயிருக்கலாம்.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்பின் நோக்கமே வேறு. அதாவது கட்டுரையின் நோக்கமே வேறு.நேற்று நரி சித்தாத்தன் கூறியதை பார்க்கவும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.