Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மூன்று தலைமைகளில் தங்கியுள்ள தீர்வு!

Featured Replies

மூன்று தலைமைகளில் தங்கியுள்ள தீர்வு!

மக்கள் நிச்சயம் ஏற்பர்: இனவாதிகள், சர்வதேசம், உதிரிகள் தீய சக்திகளை அடக்க இதுவே வழி

விடாப்பிடி, விட்டுக்கொடுக்காமை தொடர்ந்தால் நாட்டின் எதிர்காலம் கேள்விக்குறியே?

n1.jpg

முழுநாட்டு மக்களினாலும் ஏற்றுக் கொள்ளப்படும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கமும், தமிழர்களின் பெரும்பான்மையான ஆதரவைப் பெற்ற இரா. சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதேபோன்று முஸ்லிம் மக்களின் பெரும்பான் மையான ஆதரவைப் பெற்ற ரவூப் ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸ¤ம் இணைந்து நாட்டில் முப்பது வருட காலமாக புரை யோடிப்போயுள்ள இனப்பிரச் சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்பதுடன் இது அவர்கள் முன்பாக வுள்ள பாரிய பொறுப்பு எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

இம்மூவரினாலும் இணைந்து மேற் கொள்ளப்படும் தீர்வை முழு நாட்டு மக்களுமே நிச்சயம் ஏற்றுக்கொள் வார்கள் எனத் தெரிவிக் கப்படுவதுடன், அவ்வாறு மேற் கொள்ளப்படின் இனவாதிகள், சர்வதேசம், உதிரிகள், தீய சக்திகள் எனச் சகல தரப்புக்களும் ஒதுக்கப்பட்டு விடும் எனவும் தெரிவிக்கப்பட் டுள்ளது.

அரசாங்கமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தத்தமது நிலைப்பாடுகளையே தொடர்ந்தும் விடாப்பிடியாகவும், விட்டுக்கொடுக்காமலும் பற்றிக் கொண்டிருந்தால் எதிர்கால இலங்கை தொடர்பாகச் சிந்திக்கவே பயமாக உள்ளது. எனவே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினதும் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனின் காலப் பகுதியினுள் ஒரு நல்ல தீர்வைக் காண்பதே முப்பது வருடங்களாக பல்வேறு இடர்களை அனுபவித்து வரும் தமிழ் மக்களுக்குச் சிறப்பாக அமையும் என்று சர்வதேச இந்து மத பீடத்தின் தலைவரும், ஜனாதிபதியின் இந்துமத விவகார இணைப்பாளருமான தேசபந்து சிவஸ்ரீ பாளி ரவிசங்கரக் குருக்கள் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் விடயத்தில் அரசாங்கம் மற்றும் தமிழ்த்தரப்புடன் இணைந்து தமது பிரச்சினைகளை முன்வைத்து அவற்றை வென்றெடுப்பதுடன் தீர்வு காணும் விடயத்தில் தமது ஒத்துழைப்பை முஸ்லிம் தலைமைகள் வழங்க வேண்டும் என்று ஜனாதிபதியின் முஸ்லிம் மத விவகார ஆலோசகர் கலாநிதி அஸ்ஸெய்யத் ஹஸன் மெளலானா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பொலிஸ், காணி அதிகாரப் பகிர்வு காலத்தின் தேவையாகவே உள்ளது. எனவே அது குறித்தே விவாதித்துக் கொண்டிராது திருத்தங்களோடு ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒரு தீர்வைக் காண இருதரப்பும் முன்வர வேண்டும். அந்நிய அழுத்தங்களுக்கு இடமளியாது திறந்த மனதுடன் இரு தரப்பும் தீர்வை நோக்கிப் பயணிக்க வேண்டும் என பால ரவிசங்கரக் குருக்கள் கேட்டுள்ளார்.

n11.jpg

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் ஆகியோருடன் முஸ்லிம் மக்களின் தலைவர்களான அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ரிசாத் பதியுதீன், அதாவுல்லாஹ் போன்றோர் ஒன்றிணைந்து தமது சமூகத்திற்கான தேவைகளை முன்வைத்து தீர்வைக் காண முன்வர வேண்டும். அரசும் கூட்டமைப்பும் எட்டும் தீர்வுக்குள் உள்வாங்காது விட்டால் பிற்காலத்தில் முஸ்லிம் சமூகத்தின் தேவைகளுக்காகத் தனித்துநின்று வாதாடும் சூழலே தோன்றும் என தெரிவித்துள்ளார்.

இந்தியா, சீனா எமக்கே ஆதரவு என அரசாங்கமும், சர்வதேசத்தின் ஆதரவு எமக்கே எனத் தமிழ்க் கூட்டமைப்பும் கூறிக் கொண்டிராது பேச்சைத் தொடர முன்வர வேண்டும். உண்மையில் இந்தியாவின் ஆதரவு என்பது இரு தரப்பிற்குமே அவசியமானதொரு பலமான சக்தி என்பதை இருதரப்பும் விளங்கிக் கொள்ள வேண்டும் என்று தேசபந்து சிவஸ்ரீ பால ரவிசங்கரக் குழுக்கள் தெரிவித்துள்ளார்.

http://www.thinakaran.lk/Vaaramanjari/2012/01/08/?fn=n1201081

  • கருத்துக்கள உறவுகள்

தெரிவிக்கப் பட்டுள்ளது.

தெரிவித்துள்ளார்

வேண்டுகோள் விடுத்துள்ளார்

குருக்கள் கேட்டுள்ளார்.

என தெரிவித்துள்ளார்.

தெரிவித்துள்ளார்.

எனக்கு இந்த பதிவு பாம்பாட்டி பாம்புக்கு மகுடி ஊதுவதுபோல் தெரிகிறது இது முஸ்லிம்களையும் பேச்சுவார்த்தைக்குள் இழுத்துவிட்டு அதை குளப்பியடிக்கும் ஒரு முயற்சி.

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் தமிழ்மொழி பேசும் தமிழர்களுக்குச் சார்பான கட்சிகள் யாவும்

ஒரு கூட்டமைப்புக்குள் ஒன்று சேர வேண்டும்.

தமிழ் மொழி பேசும் கத்தோலிக்க மதத்தவர்களுக்கு இன்று வரை

வட கிழக்கில் ஒரு கட்சியும் இல்லை.

ஆனால்கிழக்கு மாகாணத்தில் மட்டும் தமிழ் மொழி பேசும்

முஸ்லீம்களுக்குப் பல கட்சிகள்.

சிங்களவனின் மகுடிக்குத் தலையாட்டாமல் தமிழர்களாக

தமிழை நேசிப்பவர்களாக முஸ்லீம் கட்சிகள் தங்களை

அடையாளப் படுத்தும் தருணத்தில் அவர்களுடைய

கருத்துக்களும் உள்வாங்கப்படுவது அவசியம்.

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த அரசு திறந்த மனதுடன் சிறுபான்மை கட்சிகளுடன் பேச்சுக்களில் ஈடுபட வேண்டும்.30 ஆண்டு குள்ளத்தனம் இன்றும் தொடர்ந்து அரங்கேறுவதை தமிழ் பேசும் மக்கள் இன்னும் அரசை சந்தேக கண்ணுடனே பார்க்க வேண்டியுள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசுடன் பல சுற்று பேச்சுவார்த்தை நடாத்துவது போல் முஸ்லிம் கட்சிகளுடனும் நேர்மையான முறையில் பேச்சுக்களை தொடரவேண்டும்.

  • தொடங்கியவர்

முதலில் சிறுபான்மை இனம் தாம் என்பதை முஸ்லீம் சகோதரர்கள் ஏற்று பெரும்பான்மை இனமான சிங்களத்திடம் இருந்து ஒரு நிரந்தர தீர்வை / உரிமையை பெற முழுமையாக மனம் வைக்கவேண்டும். அவர்கள் தமிழர்களை சிங்களவர்கள் வதைக்குவரை தமக்கு எதுவும் நடக்காது என்ற மனப்பான்மையையும் மாறிமாறி அரசுக்கு வரும் சிங்கள அரசுகளுடன் நடாத்தும் அரசியலையும் கைவிடவேண்டும். இந்த அரசியல் ஓரளவுக்கு 'வேலைசெய்கின்றது' என்ற பிரமிப்பை தந்தாலும் உண்மையில் முஸ்லீம் சமூகம் ஏமாற்றப்பட்டே வந்துள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைத்தீவில் இருப்பது மொழி சம்பந்தமான பிரச்சினையா அல்லது மதப்பிரச்சினையா? :rolleyes:

மதப்பிரச்சினை என்றால் ஆயரையும் கூப்பிட வேணும்..! :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.