Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புத்திசீவிகளின் அறிக்கை கையப்பத்திற்கு உமா வரதராஜன் மறுப்பு

Featured Replies

Uma_CI.png

'தமிழ் சமூகத்திற்கும், அதனுடைய சிவில், அரசியல் பிரதிநிதிகளுக்கும் ஒரு வேண்டுகோள்' என்ற தலைப்பின் கீழ் வெளியான அறிக்கையில் தனது ஒப்புதல் இல்லாமல் தான் கையப்பமிட்டதாக குறிப்பிட்டதில் உண்மையில்லை என்று ஈழத்தின் எழுத்தாளர் உமா வரதராஜன் தெரிவித்துள்ளார்.

'தமிழ் சமூகத்திற்கும், அதனுடைய சிவில், அரசியல் பிரதிநிதிகளுக்கும் ஒரு வேண்டுகோள்' என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் 71 புத்திசீவிகள் கையெழுத்திட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் குறித்த அறிக்கையில் பெயர் இடம்பெற்ற ஈழத்தின் கிழக்கைச் சேர்ந்த எழுத்தாளர் உமா வரதராஜன் தனது ஒப்புதல் இன்றி தனது பெயர் குறித்த அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அவர் இத தொடர்பில் மேலும் குறிப்பிடுகையில்:

'தமிழ் சமூகத்திற்கும், அதனுடைய சிவில், அரசியல் பிரதிநிதிகளுக்கும் ஒரு வேண்டுகோள்' என்ற தலைப்பின் கீழ் வெளியான அறிக்கையில் கையெழுத்திட்டதாகக் குறிப்பிடப்படும் 71 புத்திசீவிகளின் பட்டியலில் என்னுடைய பெயரும் இருப்பதைக் கண்ணுற்றேன்.

இரண்டு மறுப்புக்களை கூற வேண்டியுள்ளது.

01. நான் புத்திசீவியல்ல.

02. முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் அவசியமானதொன்று என்பதில் மாற்றுக்கருத்திற்கு இடமில்லை.

ஆனால் அரசியல் தீர்வொன்றை நோக்கிய பேச்சுவார்த்தைகள் நடைபெறும் இந்த முக்கிய கால கட்டத்தில் இத்தகைய அறிக்கை ஒன்று வெளியாவதை உள்நோக்கம் கொண்டதாகவும் திசை திருப்பும் எண்ணம் உள்ளதாகவுமே கருத இடம் உள்ளது.

கடந்த 29 ஆம் திகதியிலிருந்து இணையத்துடன் எதுவித தொடர்புமற்று வெளிநாட்டுப் பயணமொன்றில் இருந்த, என்னுடைய பெயர் எனது சம்மதம் இல்லாமல் இந்தப் பட்டியலில் இடம்பெற்றிருப்பது குறித்து எனது அதிருப்தியையும், மறுப்பையும், ஆட்சேபணையையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/72696/language/ta-IN/article.aspx

அறிக்கையில் இவருடைய பெயரைப் பார்த்தவுடன் சீ.. என்று இருந்தது.

புத்தி சீவிகளும் கள்ளக் கையெழுத்து வைக்கிற ஆக்கள் போல கிடக்கு. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

தீபம் தொலைக்காட்சியும் இப்போ.. அனஸ் என்பவரின் சுயாதீன விருப்பத்திற்கு இணங்க நிகழ்ச்சிகளில் பொய்களை கொட்டி வருகிறது போல.

தீபத்தில் தோன்றிய அந்த நிர்மலா என்ற அரைவேக்காட்டுப் பொம்பிள.. மென்று விழுங்கும் போதே உண்மை வெளியாகிட்டுது.

அவா அதில சொன்னவா தானே.. நாங்கள் வெளிப்படையாக.. கையெழுத்துக்கு விடல்ல.. எல்லாம் எங்களுக்க தான் என்று... அதன் அர்த்தம் இது தான்.

கள்ளக் கையெழுத்துப் போட்டு.. தங்களுக்கு வேண்டிய ஊடகங்களில் சுற்றவிட்டிட்டு.. அனஸ் என்ற கேணையை பிடிச்சால்.. அவர்.. ஒரு நிகழ்ச்சியை தீபத்தில போடுவார். மாற்று கருத்து பேசினால் தான் அது சுதந்திர ஊடகம் என்று வியாக்கியானம் வேற பேசுவினம். மாற்றுக் கருத்து என்பது.. பொய்யும்.... புரளியும்.. களவும்.. கப்பமும்.. கொலையும்.. காட்டிக் கொடுப்பும் செய்வதை நியாயப்படுத்துவது என்றதை சொல்ல மாட்டினம்..! இதெல்லாம் ஒரு சுதந்திர ஊடகம்..??!

Edited by nedukkalapoovan

'தமிழ் சமூகத்திற்கும், அதனுடைய சிவில், அரசியல் பிரதிநிதிகளுக்கும் ஒரு வேண்டுகோள்' என்ற தலைப்பின் கீழ் வெளியான அறிக்கையில் தனது ஒப்புதல் இல்லாமல் தான் கையப்பமிட்டதாக குறிப்பிட்டதில் உண்மையில்லை என்று ஈழத்தின் எழுத்தாளர் உமா வரதராஜன் தெரிவித்துள்ளார்.

இந்த வாக்கியத்தின் உண்மையான அர்த்தம் என்ன?

இது உமா வரதராஜனின் தவறா? ஊடகவியலாளரின் தவறா?

மயக்கமான வாக்கியத்தின் மூலம் யார் யாரை ஏமாற்ற முனைகிறார்கள்!

முதல் பந்தியில் தெளிவாக தனது ஒப்புதலுடன் கையெழுத்திட்டதாகவும், பின்னர் ஒப்புதல் அளிக்கவில்லை என்றும் மாறி மாறி கதை விடுகிறார்.

வாக்கியம் அமைக்கத் தெரியாத இந்த அரைவேக்காடுகள் எல்லாம் தம்மை புத்திசீவிகள் எனவும், ஊடகவியலாளர்கள் என்றும் அதை விடக் கொடுமை - தமிழ் இலக்கியவாதிகள் என்றெல்லாம் அழைத்துக் கொள்கிறார்கள்?

சமூகத்திற்கும், அதனுடைய சிவில், அரசியல் பிரதிநிதிகளுக்கும் ஒரு வேண்டுகோள்’ என்ற தலைப்பின் கீழ் வெளியான அறிக்கையில் கையெழுத்திட்டதாகக் குறிப்பிடப்படும் 71 புத்திசீவிகளின் பட்டியலில் என்னுடைய பெயரும் இருப்பதைக் கண்ணுற்றேன். இரண்டு மறுப்புக்களை கூற வேண்டியுள்ளது.

01. நான் புத்திசீவியல்ல.

02. முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் அவசியமானதொன்று என்பதில் மாற்றுக்கருத்திற்கு இடமில்லை. ஆனால் அரசியல் தீர்வொன்றை நோக்கிய பேச்சுவார்த்தைகள் நடைபெறும் இந்த முக்கிய கால கட்டத்தில் இத்தகைய அறிக்கை ஒன்று வெளியாவதை உள்நோக்கம் கொண்டதாகவும் திசை திருப்பும் எண்ணம் உள்ளதாகவுமே கருத இடம் உள்ளது.

கடந்த 29 ஆம் திகதியிலிருந்து இணையத்துடன் எதுவித தொடர்புமற்று வெளிநாட்டுப் பயணமொன்றில் இருந்த, என்னுடைய பெயர் எனது சம்மதம் இல்லாமல் இந்தப் பட்டியலில் இடம்பெற்றிருப்பது குறித்து எனது அதிருப்தியையும், மறுப்பையும், ஆட்சேபணையையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

http://inioru.com/?p=25534

என்னப்பா இது கை அப்பமா? என்ட தமிழை விட கேவலமா இருகிது இது ? :icon_idea:

  • தொடங்கியவர்

புத்திசீவிகளின் அறிக்கை கையொப்பத்திற்கு உமா வரதராஜன் மறுப்பு

19 ஜனவரி 2012

lg-share-en.gif

UMA.jpg

'தமிழ் சமூகத்திற்கும், அதனுடைய சிவில், அரசியல் பிரதிநிதிகளுக்கும் ஒரு வேண்டுகோள்’ என வெளிவந்த 71 புத்திசீவிகளின் அறிக்கையில் கையொப்பமிடவில்லை என்று ஈழத்தின் பிரபல எழுத்தாளர் உமாவரதராஜன் மீண்டும் மறுப்புத் தெரிவித்துள்ளார். அறிக்கையில் ஒப்பமிட்டதாக கூறுவது அரசியல் பகடையாட்டத்தில் தன்னை சிக்க வைக்கும் கயமைத்தனம் என்றும் அவர் தனது கண்டனத்தை தெரிவித்தார்.

'தமிழ் சமூகத்திற்கும், அதனுடைய சிவில், அரசியல் பிரதிநிதிகளுக்கும் ஒரு வேண்டுகோள்’ என்ற தலைப்பில் அறிக்கையை வெளியிட்டுள்ளவர்கள் குறித்த அறிக்கையில் உமா வரதராஜன் பூரண சம்மதத்துடன் ஒப்பமிட்டார் என்று தெரிவித்துள்ளனர். குறித்த தகவலை எழுத்தாளர் உமாவரதராஜன் முற்றாக மறுத்துள்ளார்.

தற்பொழுது வெளிநாடு ஒன்றிற்கு பயணம் மேற்கொண்டுள்ள உமாவரதராஜனை குளோபல் தமிழ் செய்தியாளர் தொடர்பு கொண்டு கேட்ட பொழுது குறித்த அறிக்கையில் தான் கையப்பமிடவில்லை என்ற தகவலை மீண்டும் உமாவரதராஜன் உறுதிசெய்தார்.

தான் வெளிநாட்டுப் பயணம் ஒன்றில் இருப்பதாகவும் இணையத் தொடர்பற்றிருப்பதாகவும் குறிப்பிட்ட ஈழத்து எழுத்தாளர் உமாவரதராஜன் யாருடைய மின்னஞ்சலையும் பார்க்கவில்லை என்று தெரிவித்தார். அதவேளை தொலைபேசி வழியாகவோ வேறு எந்தத் தொடர்பாடல் ஊடாகவோ குறித்த அறிக்கையில் ஒப்பமிடுவது குறித்து தன்னுடன் எவரும் தொடர்பு கொள்ளவும் இல்லை என்றும் குறிப்பிட்டார்.

தான் அந்த அறிக்கையைப் பார்த்ததாகவோ, அதற்க்குப் பதிலளித்த தாகவோ, அல்லது அதில் கையொப்ப மிட்டதாகவோ நிரூபிக்குமாறு அதில் சம்மந்தப் பட்டவர்களைக் கேட்டுக் கொள்கிறேன் என்றும் அவர் குறிப்பிட்டார். அரசியல் பகடையாட்டத்தில் என்னைச் சிக்க வைக்கும் இந்த கயமைத் தனத்துக்கெதிரான கடும் கண்டனத்தை தெரிவிப்பதாகவும் ஈழத்தின் பிரபல எழுத்தாளர் உமாவரதராஜன் தெரிவித்தார்.

முதலாவது மற்றும் இரண்டாவது அறிக்கைகள் உமாவரதராஜனால் எமக்கு நேரடியாகத் தரப்பட்டவை. சமூக வலைத்தளங்களில் இருந்து அவற்றை நாம் பிரதி பண்ணவில்லை

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/72589/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.