Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிருஷ்ணா வந்தான் வெண்ணெய் திருடினான் : கூத்தாட்டம்

Featured Replies

கிருஷ்ணா வந்தான் வெண்ணெய் திருடினான் : கூத்தாட்டம்

ஜனாதிபதி பதின்மூன்றாம் திருத்தம் என்பதற்கு அப்பால் போவார் என இந்திய வெளிவிவகார அமைச்சர் கிருஷ்ணா சொல்லிவிட்டு போய் விட்டார். ஆனால் அவர் நாட்டில் இருந்த அன்றே அரசு கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தையை நடத்தாமல் புறக்கணித்தது. இதைவிட பதின்மூன்றாம் திருத்தம் என்பதற்கு அப்பால் என்றால் செனற் சபை என்பதுதான் அர்த்தம் என அமைச்சர் கெஹெலிய ரம்புக்வல புதிய கதை சொல்கிறார். இந்நிலையில் இந்தியாவிலிருந்து கண்ணன் வந்து கதை சொன்னான் என தமிழ் மகா ஜனங்கள் பேசத் தொடங்கிவிட்டார்கள் என ஜனநாயக மக்கள் முன்னணித் தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார்.

.

kri52.jpg

பதின்மூன்றாம் திருத்தம் என்பதற்கு அப்பால் செல்ல அரசாங்கம் தயார் என இந்திய வெளிவிவகார அமைச்சர் சொல்லிய செய்தி தொடர்பில் கருத்துத் தெரிவித்த மனோ கணேசன் மேலும் கூறியதாவது,

மார்ச் மாதம் மனித உரிமை ஆணைய கூட்டத்திற்கு முன்னர் பாராளுமன்றத் தேர்வுக் குழுவுக்குள் கூட்டமைப்பைக் கொண்டு நிறுத்துவதற்கு முஸ்தீபு நடை பெறுகிறது. பதின்மூன்றாம் திருத்தத்திற்கு அப்பால் மற்றும் செனற் சபை ஆகிய கதைகள் எல்லாம் இதை நோக்கியே நகர்கின்றன. இது தமிழ் மக்களுக்கு நன்கு புரிகிறது. மக்களுடன் வாழும் எங்களுக்கும் மக்களின் நாடித்துடிப்பு புரிகிறது.

பதின்மூன்றாம் திருத்தத்தையே அமுல் செய்ய முடியாதவர்கள் அதற்கு அப்பால் எப்படிப் போக முடியும் என யாராவது இந்திய வெளிவிவகார அமைச்சரைக் கேட்டார்களா எனத் தெரியவில்லை. கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போவான் என்பதாக இந்தியாவின் கருத்து அமைந்துள்ளது.

பதின்மூன்றாம் திருத்தம் இனப்பிரச்சினைக்கு தீர்வு அல்ல. ஆனால் அதையோ அல்லது அப்பாலோ அரசாங்கம் செல்லும் என்றால் அதை யாரும் வேண்டாம் என்று சொல்லப்போவதில்லை. ஆனால் நம்ப முடியாத வாக்குறுதிகளைக் கேட்டுவைப்பதில் எந்த ஒரு நன்மையும் கிடைக்கப் போவதில்லை.

அரசாங்கம் பதின்மூன்றாம் திருத்தம் என்பதற்கு அப்பால் செல்லும் என்ற செய்தியைக் கூட்டமைப்பைச் சார்ந்த ஓர் எம்பி வரவேற்று இந்திய ஊடகம் ஒன்றிற்கு கருத்து தெரிவித்துள்ளார். இது அக்கட்சியின் அதிகார பூர்வமான நிலைப்பாடா என எமக்கு விளங்கவில்லை. எது எப்படி இருந்தாலும் இந்தகைய நம்ப முடியாத அறிவிப்புகளை நம்பி அவசர அவசரமாக விழுந்தடித்துகொண்டு மகிழ்ச்சி தெரிவித்து கொண்டாட்டம் நடத்த நாம் தயார் இல்லை.

http://www.alaikal.com/news/?p=94459

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

http://www.youtube.com/watch?v=UuvSM-fsQLI&feature=fvwrel

சென்ற வருடம் ஐ.நா.சபையில் நடந்த, வெளி நாட்டமைச்சர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட கிருஷ்ணா, தனது நாட்டைப் பற்றி பேசாமல்.. போத்துக்கேய வெளிநாட்டமைச்சரின் அறிக்கையை, மூன்று நிமிடம் வாசித்த முட்டாள் தான் இவர். அதனையும்... அவரின் செயலாளர் சுட்டிக் காட்டியிருக்கா விட்டால்... போத்துக்கல் அமைச்சராகவே, முழு அறிக்கையையும் வாசித்திருப்பார். இவர்களை நம்பும் ஈழத்தமிழன், இன்னும் இருப்பானா... என்பது சந்தேகம்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஒளிப்பதிவின் 50 வது வினாடியில்,

கிருஷ்ணா தனது நாக்கால்... சொக்கையை, வெளியே.. தள்ளுவதற்கு என்ன.. அர்த்தம்? :rolleyes::D

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்

இந்த ஒளிப்பதிவின் 50 வது வினாடியில்,

கிருஷ்ணா தனது நாக்கால்... சொக்கையை, வெளியே.. தள்ளுவதற்கு என்ன.. அர்த்தம்? :rolleyes::D

21:50 வது வினாடியில், அணிலேற விட்ட நாய் போல முழிக்கின்றார் :D

ஜெயலலித்தா அம்மையாரை பிரதமராக்க வேண்டும். இந்த கோமாளி பீரிசுடன் சேர்ந்து ஒருவருடத்திற்கு முன் அறிக்கை வெளிவிட்டதைக்கூட மறந்து விட்டது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த ஈரானிய பார்பனன் ஒரு போதும் தமிழருக்கு தீர்வு தரமாட்டான்.

சும்மா நின்ற பேச்சை திருப்பி முடுக்க வந்திருக்கும்.

தமிழ் ஈழம் மட்டும் தான் தீர்வு.  இந்திய அரசியல் குப்பைகளுக்கு இந்த ஈரானிய பார்பனன் ஒரு போதும் தமிழருக்கு தீர்வு தரமாட்டான்.

சும்மா நின்ற பேச்சை திருப்பி முடுக்க வந்திருக்கும்.

Edited by KuLavi

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.