Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டங்கோ- 9 லெப்டினன் கேணல் சங்கீதனும் london சங்கீதனும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

டங்கோ 9 புலிகளின் புலனாய்வு முகாம்: சங்கீதன் குட்டுகள் அம்பலம் !

23 January, 2012 by admin

விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவு போராளி என்று சொல்லி 2009ம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னர் லண்டன் வந்த சங்கீதன் என்பவர் தாம் தான் தலைமைச் செயலகம் எனக் கூறி பல குழப்பங்களைத் தோற்றுவித்து இருந்தார் என்பது யாவரும் அறிந்த விடையம். மாவீரர் தின நிகழ்வுகளில் பிழவு விளையாட்டுப் போட்டிகளில் பிழவு என பல பிழவுகளை இவர் ஏற்படுத்தி இருந்தார். சங்கீதன் என்னும் பெயரை இவர் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி வந்துள்ளார் என்பதும் சங்கீதன் என்பது இவர் பெயர் அல்ல என்பதும் தற்போது ஆதாரபூர்வமாக நிரூபனமாகியுள்ளது. சங்கீதன் என்னும் புலனாய்வுப் போராளி 2009ம் ஆண்டு மே மாதம் 16ம் திகதி முள்ளிவாய்க்காலில் வீரமரணம் அடைந்துள்ளார். லெப்டினன் கேணல் தரத்தில் இருந்த சங்கீதன் இறந்த பின்னர் அவர் பெயரை எடுத்துக்கொண்டு அப்படியே லண்டன் வந்த இந் நபர் தன்னை சங்கீதன் என எல்லோருக்கும் அறிமுகப்படுத்தியுள்ளார்.

தற்போது லண்டனில் தன்னை சங்கீதன் என எல்லோருக்கும் அறிமுகப்படுத்திய இவரின் பெயர் தயாபரன் என்று சொல்லப்படுகிறது. இறந்துபோன உண்மையான சங்கீதனின் படம் இங்கே இணைக்கப்பட்டுள்ளது.
true-sangeethan.jpg
அவர் முள்ளிவாக்காலில் ஒரு பிரத்தியேகமான செயலில் ஈடுபட்டிருந்தார்.(அது பாதுகாப்பான செய்தி). 1990 - 1991 ல் டங்கோ- 9 என்று சொல்லப்படும் புலிகளின் புலனாய்வு முகாமில் கடமையாற்றிய மல்லி மற்றும் காந்தி போன்ற போராளிகளோடு வீரமரணம் அடைந்த சங்கீதன் இருந்திருக்கிறார். 1993ல் மல்லி எனப்படும் புலனாய்வுப் போராளியின் தலையை வெட்டி சிங்கள இராணுவம் அவரைக் கொலைசெய்ய அவ்விடத்திற்கு காந்தி நியமிக்கப்பட்டார். வீரமரணம் அடைந்த சங்கீதன் மாத்தையாவை விசாரணை செய்யும் குழுவிலும் அங்கத்துவம் வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

london-sangeethan.jpg
இவற்றை தெரிந்துகொண்ட தயாபரன் என்னும் நபர் வீரமரணம் அடைந்த சங்கீதன் பெயரைச் செல்லி லண்டன் வந்து ..தற்போது லண்டனில் பல குழப்பங்களை மேற்கொண்டு வருகிறார். உருவ ஒற்றுமையைப் பயன்படுத்தி இவர் போலியான பெயரில் லண்டனில் உலாவருவதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கு மேலதிக சான்றுகளும் ஆதாரங்கள் இருக்கிறது. மிக மிகப் பிரத்தியேகமான கடமை ஒன்று வழங்கப்பட்டு பல உயர் ரகசியங்களை தன்னோடு காத்து காயமடைந்த நிலையில் அவை அனைத்தும் எதிரியின் கைகளில் சென்றுவிடக்கூடாது என்பதற்காக அவற்றை எல்லாம் சேர்த்து தன்னோடு அழித்துக்கொண்டவர் சங்கீதன் ! அவர் தியாகங்களுக்கு மதிப்புக் கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை ஆனால் அவர் பெயரைத் திருடி தன்னை அவர்போலக் காட்டி ஒரு பித்தலாட்டத்தை நடத்திவருகிறார் தற்போது லண்டனில் சங்கீதன் என்று தன்னைத் தானே சொல்லிவரும் இந் நபர் !

நன்றிhttp://kishanthips.b.../2012/01/9.html

Edited by purmaal

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு வேற வேலையில்லை, இந்த அதிர்வுக்காரனும் வேற வேலை போய் வேலையைப் பாருங்கோ...கொசிப் இணையங்கள தான் கூடிப் போச்சு

இது எப்படி கொசிப் என்டு சொல்லுறீங்ள்? ஆதாரத்தோட தானே போட்டிருக்கு?

true-sangeethan.jpg

ஈழத்தமிழினத்தின் விடுதலைக்காக உழைத்த விடுதலைப்புலிகளின் புலனாய்வுத்துறையில் பணியாற்றிய மாவீரன் சங்கீதன்

____________________________________________________________________________________________________________________

london-sangeethan.jpg

இது ஈழத்தமிழினத்தின் அழிவிற்காக உழைக்கும் இந்திய புலனாய்வுத்துறையின் கூலி சங்கீதன்

இது யாருடைய பிரச்னை இல்லை. இது தமிழர்களின் பிரச்னை. இதில் உள்ள ஆழம் யாருக்கும் புரியல. இதனால் எதிர்காலத்தில் ஏற்பட போகும் குழப்பங்கள் எண்ணில் அடங்காதவை. இவர்கள் விடயத்தில் விழிப்பாக இருப்பது நல்லது. இலங்கை இந்திய கைக் கூலிகளின் கைகளில் புலம்பெயர் தமிழர் போராட்டங்கள் செல்ல கூடாது.

சிறிலங்கா இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டதாகக் கூறப்பட்ட பல விடுதலைப் புலி முக்கியஸ்தர்கள்,

திடீரென்று புலம்பெயர் நாடுகளில் தோன்றி தேசியம் பேசுவது இன்று சாதாரண நிகழ்வாக மாறி வருகின்றது. ‘நான் வன்னியில் தலைவருடன்

நின்றனான்.. “- என்று கூறிக்கொண்டு நிறையப் பேர் ஐரோப்பாவில் தற்பொழுது அரசியல் செய்ய ஆரம்பித்துள்ளார்கள்.

தலைவருடன்

நின்ற நீங்கள் எப்படித் தப்பி வந்தீர்கள்? ஏன் தலைவரை விட்டுவிட்டு இங்கு வந்தீர்கள்? இதுபோன்ற கேள்விகளை நாங்களும்

கேட்பதில்லை. அதற்கான பதிலை அவர்களும் சொல்வதில்லை.

இன்றும் குறிப்பாகப் பார்த்தால், இவர்களில் அனேகமானோர் சிறிலங்கா விமான

நிலையம் வழியாகவே வந்திருக்கின்றார்கள். இவர்களில் பலர், வவுனியாவில் சிறிலங்கா தடுப்பு முகாமில் மாதக்கணக்காக சிறிலங்காப்

படையினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்கள். வன்னியில் புலிகளுக்குச் சாப்பாடு கொடுத்தவர்கள், சென்றியில் நின்றவர்கள்,

எல்லைக் காவல் கடமைகளில் ஈடுபட்டவர்கள் என்று பலரும் இப்பொழுது கூட சிறிலங்கா படையினரைல் தடுத்துவைக்கப்பட்டிருக்கும்

நிலையில், அனைவரும் அறிந்த விடுதலைப்புலி முக்கியஸ்தர்கள், தவைருடன் இருந்தவர்களால் எப்படி சிறிலங்கா இராணுவத்தின்

வாய்களுக்குள் இருந்து வெளியேற முடிந்தது? எப்படி சிறிலங்கா படையினரின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு சிறிலங்காவின் ஒரே

சர்வதேச விமான நிலையம் ஊடாக ஐரோப்பிய நாடுகளுக்கு வர முடிந்தது? இது பலராலும் சந்தேகத்துடனேயே பார்க்கப்படுகின்றது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விடுதலை புலிகளின் புலனாய்வு பிரிவில் இருந்தவர்கள் போராளிகளோ ,அதில் இருந்து மரணித்தவர்கள் மாவீரர்களோ அல்ல .மகா கொடூரமான மனித விரோதிகள் .சந்தேகத்தில் அவர்களால் பிடிக்கப்பட்டு பின் விடுவிக்கப்பட்டு /தப்பியவர்கள் வாய் திறந்தால் உண்மைகள் அனைவருக்கும் தெரியவரும் .இங்கு குறிப்பிடுவது புலனாய்வு பிரிவினரை மட்டுமே .

  • கருத்துக்கள உறவுகள்

லண்டனில் இருக்கும் சங்கீதன் எப்பவாவது நான் தான் அந்த சங்கீதன் என சொன்னாரா? ஆதாரத்தைக் காட்டவும்...இவருக்கு வன்னியில் வேறு பெயர் இருந்திருக்கலாம் புலம் பெயர்ந்து ஓடி வரும் போது பெயரை மாற்றி இருக்கலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

லண்டனில் இருக்கும் சங்கீதன் எப்பவாவது நான் தான் அந்த சங்கீதன் என சொன்னாரா? ஆதாரத்தைக் காட்டவும்...இவருக்கு வன்னியில் வேறு பெயர் இருந்திருக்கலாம் புலம் பெயர்ந்து ஓடி வரும் போது பெயரை மாற்றி இருக்கலாம்.

'விழிப்புத்தான் விடுதலையின் முதற்படி' தலைவரின் வரிகள்.

இங்கு இப்போது போராளிகள் என்ற பெயரில் வந்துநிற்பவர்கள் சிறிலங்கா அரசாங்கம் எப்படியான செயல்களைச் செய்து

தற்போதைய எமது போராட்டத்தின் ஒரே நம்பிக்கையாக இருக்கும் புலம் பெயர் தேசத்தில் குழப்பங்களை ஏற்படுத்த

முனைகின்றதோ அவ்வளவற்றையும் சிறப்பாகச் செய்து முடிக்கின்றனர். பிரித்தானியாவில் கடந்த சில மாதங்களாக

தேசியச் செயற்பாட்டாளர்கள் மீதான வன்முறைத்தாக்குதலில்

இந்த சங்கீதன் குழுவினர் (இவர்கள் 'தலைமைச் செயலகம்' என்ற பெயரில் புலம்பெயர் தேசத்தில் இயங்குகின்றனர்)

நேரடியாகவே சம்பந்தப்பட்டுள்ளனர். இறுதியாக ஆங்கிலப் புதுவருடத்தன்று ஈலிங் அம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற

தாக்குதலை பல மக்கள் நேரடியாகவே பார்த்தும் உள்ளனர். எனவே இந்த மேற்குறிப்பிடப்படும் பெயர்வழிகள்

தொடர்பாக மிகக் கவனமாக இருப்பது அவசியம்.

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு வேற வேலையில்லை, இந்த அதிர்வுக்காரனும் வேற வேலை போய் வேலையைப் பாருங்கோ...கொசிப் இணையங்கள தான் கூடிப் போச்சு

வாம்மா ரதி இந்த இந்திய புலனாய்வுத்துறையின் கூலி சங்கீதன் ukயில் இதுவரையும் செய்த ஒரு நன்மையான விடயத்தை சொல்லுங்கள் பார்ப்பம்

  • கருத்துக்கள உறவுகள்

<p>

வாம்மா ரதி இந்த இந்திய புலனாய்வுத்துறையின் கூலி சங்கீதன் ukயில் இதுவரையும் செய்த ஒரு நன்மையான விடயத்தை சொல்லுங்கள் பார்ப்பம்

நான் இந்த சங்கீதன் நல்லவன்,மக்களுக்காக ஏதோ வெட்டிப் புடுங்கிறார் என சொன்னேனா?...முதலில் மற்றவர்களில் பிழை பிடிக்க முன்னர் நீங்கள் அந்த மக்களுக்கு என்ன செய்தனீர்கள் என மனசாட்சியை தொட்டுக் கேளுங்கோ
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

லண்டனில் இருக்கும் சங்கீதன் எப்பவாவது நான் தான் அந்த சங்கீதன் என சொன்னாரா? ஆதாரத்தைக் காட்டவும்...இவருக்கு வன்னியில் வேறு பெயர் இருந்திருக்கலாம் புலம் பெயர்ந்து ஓடி வரும் போது பெயரை மாற்றி இருக்கலாம்.

"இன்று முழுவதும், நான் சாப்பிடவே இல்லை" என்ற சொல்லல் என்னால் மட்டுமே சொல்லப்படக்கூடியது. அப்படி அல்லாமல் இன்னொருவரால் சொல்லப்படல் பொருள், இடம், காலத்தால் வில்லங்கப்படும்!

பாவம் தயாபரன் இந்திய சுற்றிலா முடித்து இப்ப தான் லண்டன் வந்துள்ளார் அவரை வம்புக்கு இழுக்காதையுங்கோ

ஆதிமன் புது விளக்கம் கொடுக்கிறியள் தேசத்தின் மூளை புலனாய்வு பிரிவு . அதில் உள்ளவர்களை தாயகத்தில் அவர்கள் செய்த சேவைகளை கொச்சை படுத்தாதிர்கள். அவர்கள் சும்மா யாரையும் விசாரிக்கவில்லை அப்பிடி விசாரிச்சு இருந்தால் பல துரோகியள் இப்ப இருந்து இருக்க மாட்டினம்

  • கருத்துக்கள உறவுகள்

<p>

"இன்று முழுவதும், நான் சாப்பிடவே இல்லை" என்ற சொல்லல் என்னால் மட்டுமே சொல்லப்படக்கூடியது. அப்படி அல்லாமல் இன்னொருவரால் சொல்லப்படல் பொருள், இடம், காலத்தால் வில்லங்கப்படும்!

ஜயோ பாவம் நீங்கள் போய் கொஞ்சம் ஓய்வு எடுங்கோ
  • கருத்துக்கள உறவுகள்

விடுதலை புலிகளின் புலனாய்வு பிரிவில் இருந்தவர்கள் போராளிகளோ ,அதில் இருந்து மரணித்தவர்கள் மாவீரர்களோ அல்ல .மகா கொடூரமான மனித விரோதிகள் .சந்தேகத்தில் அவர்களால் பிடிக்கப்பட்டு பின் விடுவிக்கப்பட்டு /தப்பியவர்கள் வாய் திறந்தால் உண்மைகள் அனைவருக்கும் தெரியவரும் .இங்கு குறிப்பிடுவது புலனாய்வு பிரிவினரை மட்டுமே .

சில நேரங்களில் விமர்சனங்களை நான் எதிர்ப்பது இதற்காகத்தான். :( :( :(

<p>நான் இந்த சங்கீதன் நல்லவன்,மக்களுக்காக ஏதோ வெட்டிப் புடுங்கிறார் என சொன்னேனா?...முதலில் மற்றவர்களில் பிழை பிடிக்க முன்னர் நீங்கள் அந்த மக்களுக்கு என்ன செய்தனீர்கள் என மனசாட்சியை தொட்டுக் கேளுங்கோ

இதுவும் ஒரு நல்ல விடயம்தான்.. இது ஏன் உங்களுக்கு தேவை இல்லாத வேலை மாதிரி தெரியுதென்று எனக்கு தெரியவில்லை..வர வர இங்கு திரிகளிலை ரதி permission தந்தால் தான் கதைக்கலாம் போல கிடக்குது... :D :D :D :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

<p>ஜயோ பாவம் நீங்கள் போய் கொஞ்சம் ஓய்வு எடுங்கோ

தங்களின் தயவு, அடியேனின் ஒய்விற்கு றொம்ப அவசியம் என்பதை வெளிப்படுத்தும் தங்களின் தமிழறிவு என்னை பிரமிக்க வைக்கின்றது.

என் பதிவின் மறை பொருள் புரிந்துமா என்னை பாவம் பார்கின்றீர்கள்? றொம்ப நல்ல உள்ளம்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விடுதலை புலிகளின் புலனாய்வு பிரிவில் இருந்தவர்கள் போராளிகளோ ,அதில் இருந்து மரணித்தவர்கள் மாவீரர்களோ அல்ல .மகா கொடூரமான மனித விரோதிகள் .சந்தேகத்தில் அவர்களால் பிடிக்கப்பட்டு பின் விடுவிக்கப்பட்டு /தப்பியவர்கள் வாய் திறந்தால் உண்மைகள் அனைவருக்கும் தெரியவரும் .இங்கு குறிப்பிடுவது புலனாய்வு பிரிவினரை மட்டுமே .

ஆமாம், புலனாய்வு பிரிவுக்காக வந்து போராட்டத்தில் இணைந்தவர்கள், நரபுலால் விரும்பிகள்; ஏனய பிரிவில் இணைந்தவர்கள் சுதந்திரவிரும்பிகள்.

ஒரு அரசின் படைபலத்திற்கு முள்ளந்தண்டைப் போன்றதே புலனாய்வுப் பிரிவு. அதன் சிறப்புத்தான் எமது முப்பது வருட போராட்டத்தின் இருப்பிற்கும் ஒரே காரணம்!

அம்மி கல்லை கொத்த தெரியாதவன் கொத்தியது போல் உள்ளது சிலரது கருத்துகள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.