Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையிலிருந்து சீனாவை இந்தியா உதைக்க வேண்டும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையிலிருந்து சீனாவை இந்தியா உதைக்க வேண்டும் 12d160a971a3e56b94cc54c98291b336.jpgஅமெரிக்காவின் முன்னாள் இராஜதந்திரியான வில்லியம் எச் அவேறி, ஆசிய மற்றும் தெற்காசிய அரசியல் குறித்து புதிய புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். சீனாவுக்கு கெட்ட சகுனமாகவும் அமெரிக்காவின் கனவாகவும் விளங்கும், உலகின் அடுத்த வல்லரசு இந்தியா என்ற தொனிப் பொருளில் அவர் அந்தப் புத்தகத்தை எழுதியுள்ளார். அடுத்த வல்லரசாக வேண்டுமானால் இலங்கையில் இருந்து சீனாவை இந்தியா வெளியேற்ற வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதைப் பற்றி உத்ரா சௌத்திரி எழுதிய கட்டுரையின் தமிழ் மொழியாக்கம் இங்கு தரப்படுகின்றது

அவாயுதப் பரிசோதனையை புதுடில்லி மேற்கொண்டதனால் அமெரிக்காவுடனான அதன் உறவில் 1990களில் விரிசல் ஏற்பட்டது. அந்தக் காலப் பகுதியில் சென்னையில் அமெரிக்கத் தூதராகக் கடமையாற்றிய அமெரிக்காவின் முன்னாள் இராஜதந்திரியான வில்லியம் எச் அவேறி போன்ற மிகக் குறைவானவர்களே அமெரிக்க இந்திய உறவுகள் தொடர்பாக நன்கறிந்து வைத்துள்ளனர்.

"சீனாவுக்கு கெட்ட சகுணம், அமெரிக்காவின் கனவு:

அடுத்த பூகோள வல்லரசாக இந்தியா' எனத் தலைப்பிடப்பட்டு அவேறியால் எழுதப்பட்ட புதிய நூலில், உலகின் மிகப்பெரிய மற்றும் செல்வந்த நாடுகளுக்கிடையில் வளர்ந்து வரும் உறவுகள், தொடர்புகள் குறித்து விளக்கமாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த நூலில் சீனாவுக்கு எதிரான கருத்துக்களையும் அவேரி குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் பாகிஸ்தான், மியான்மர், இலங்கை போன்ற நாடுகளுடன் அந்தப் பிராந்தியத்தில் சீனா எவ்வாறு தனது செல்வாக்கை அதிகரித்து வருகின்றது என்பதை விளக்கியுள்ளார் அவர். சீனாவின் இந்த நடவடிக்கைக்குத் தக்க பதிலை இந்தியா வழங்க வேண்டும் என்பது அவரது வாதமாக உள்ளது.

இந்தியாவின் அயல்நாடுகளில் சீனா தனது தலையீடுகளை அதிகரித்து வருகிறது. சிலநேரங்களில் அதற்காகத் தனது அதிகாரத்தையும் பயன்படுத்தி வருகின்றது. தென்கிழக்காசிய நாடுகளுக்கான கூட்டமைப்பில் உறுப்பினராக உள்ள இந்தியா மற்றும் பெரும்பாலான நாடுகள் சீனாவுடன் முரண்பாடுகளைக் கொண்டுள்ளன. இந்தியாவானது தனது அயல்நாடுகளின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார விடயங்களில் செல்வாக்குச் செலுத்துவதன் மூலம் சீனாவின் பிராந்திய வளர்ச்சிப் போக்குக்கு எதிராகப் பதிலளிக்க வேண்டும் என அவேறி தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.

"இலங்கை மீதான சீனாவின் அதிகரித்த செல்வாக்குத் தொடர்பாக இந்தியா உடனடியாகக் கவனத்தில் எடுக்கவேண்டும். இலங்கை விவகாரத்தில் விரைவில் இந்தியா எதுவும் செய்ய முடியாமல் போவதைத் தவிர்க்க இது உதவும்'' எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை தொடர்பான சீனக் கொள்கைக்கு, பனிப் போர்க் காலத்தில் சோவியத் யூனியனால் பின்லாந்து அடிமைப்படுத்தப்பட்ட வரலாற்றுச் சம்பவத்தை அவேறி எடுத்துக்காட்டியுள்ளார்.

இந்தியாவின் தென் கிழக்குக் கரையோரத்தில் அமைந்துள்ள, தென்னாசிய வர்த்தகத்தில் கேந்திர முக்கிய இடம் வகிக்கும் இலங்கையின் அம்பாந்தோட்டையில் வெற்றிகரமான புதிய துறைமுகம் ஒன்றை அமைக்கச் சீனா எவ்வாறு மில்லியன் கணக்கான நிதியை முதலீடு செய்துள்ளது என்பதை அவேறி தனது நூலில் விரிவாக விளக்கியுள்ளார். சீனாவின் இந்த நடவடிக்கை தெற்காசியப் பிராந்தியத்தை மீளமைத்துள்ளது. அத்துடன் அயல் நாடுகளுடனான தனது உறவில் இந்தியா ஆதிக்கம் செலுத்த வேண்டிய நிலை பற்றி சிந்திப்பதற்கான நிலையையும் ஏற்படுத்தி உள்ளதாக அவர் கூறியுள்ளார்.

சீனா தற்போது பாகிஸ்தான், பங்களாதேஷ், மியான்மர் போன்ற நாடுகளில் துறைமுகங்களை அபிவிருத்தி செய்து வருகின்றது. அத்துடன் நேபாளத்தில் ரயில் பாதைகளை அமைப்பதற்கான திட்டத்தையும் சீனா முன்னெடுக்கிறது.

அவேறி போன்ற ஆய்வாளர்களின் வாதத்தின்படி, இவ்வாறான சீனத் திட்டங்கள் இந்தியாவுக்கு சினத்தை ஏற்படுத்துகின்றன. இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் பொருளாதாரத்துக்கு அச்சுறுத்தல் விளைவிக்கக் கூடிய "முத்துமாலை' திட்டத்தின் மூலம் சீனா இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் தனது செல்வாக்கை விரிவுபடுத்தி வருவது தொடர்பாக ஆய்வாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

1991ஆம் ஆண்டிலிருந்து இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கேற்ப அதன் பூகோள அரசியல் செல்வாக்கானது பொருத்தமான வளர்ச்சியை எட்டவில்லை என அவேறி கவலை தெரிவித்துள்ளார்.

எவ்வாறிருப்பினும், முன்னைய புஷ் நிர்வாகம் போன்று தற்போதைய ஒபாமா நிர்வாகமும் இந்தியாவுடன் நீண்ட கால மூலோபாய கூட்டு நடவடிக்கைக்கான முதலீட்டை மேற்கொண்டுள்ளதா என்பது தொடர்பாகச் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும் அவேரி கூறுகிறார்.

அதற்கும் அப்பால், அமெரிக்காவானது ஆசியாவை முன்னுரிமைப்படுத்துகின்றது எனப் பிரகடனப்படுத்தும் அதேவேளையில் சீனா அங்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பதையும் அது அடையாளங் கண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.

பிரிட்டன் போன்று இந்தியா வளரவில்லை. அமெரிக்க நலன்களுக்காக இந்தியா ஒரு லெப்ரினன்ட் போல் பணியாற்றும் என நம்பும் எந்தவொரு அமெரிக்க கொள்கை வகுப்பாளர்களும் முழுமையான அறிவற்றவர்கள் என்றே கருதப்படவேண்டும் என்று அவேறி கூறுகிறார்.

இந்தியாவானது தனது பொருளாதார வெற்றிகளை உண்மையான பூகோள வல்லரசாக மாறுவதற்காகப் பயன்படுத்த வேண்டும் எனவும் அவர் ஆலோசனை சொல்கிறார்.

இப்போதைக்கு பொதுவான நலன்களை அதாவது விரிவான முன்னேற்றமடைந்த துறை சார் நலன்களைத் தேடிக்கொள்வதாகவே இந்திய அமெரிக்க உறவு இருக்கிறது எனக் குறிப்பிடும் அவேறி, இதைவிட, ஒத்துழைப்பு வழங்குவதற்கான விருப்பத்தை இந்தியா வழங்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

"இந்தியாவானது ஆங்கிலோ அமெரிக்க உறவில் கைக்கொள்ளப்பட்ட ஜனநாயகம், மனித உரிமைகள், சட்ட ஆளுமை, திறந்த சந்தைப் பொருளாதாரம் போன்ற அதே விழுமியங்களையே கொண்டுள்ளது. எனவே வலுவான இந்திய அமெரிக்க கூட்டானது வேரூன்றக்கூடிய நிலையில் உள்ளபோதிலும், 'காலனித்துவ அடிமைத்தனம்' போன்று இணையத்தளங்கள் ஊடாக அமெரிக்க நிறுவனங்களுக்கு அடிமட்ட விலையில் இந்தியா தனது தகவல் தொழில்நுட்ப அறிவுத்திறனை விற்கிறது'' என்று அவேறி தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.

வர்த்தகச் செயற்பாடுகளை மேற்கொள்ளும் தொழிற்சாலைகளுடன் கூடிய அமெரிக்க நிறுவனங்களுக்கான செயல் திறனை இந்திய நிறுவனங்கள் அதிகரித்து வருவதாகவும் அவேறி சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில் இந்தியா தனது பாதுகாப்பு விடயங்களில் கூடிய கவனம் எடுக்க வேண்டும் எனவும் அவேறி மீள வலியுறுத்தியுள்ளார்.

http://184.107.230.170/~onlineut/News_More.php?view=essay_more&id=5868524730504081

இந்தியா அடுத்த வல்லரசாக தடுப்பது இலங்கையில் சீன ஆதிக்கம் என்றால், மிக மிக சந்தோசமாக சீனாவின் ஆதிக்கம் இலங்கையில் பரவட்டும் என்றே விரும்புகின்றேன். எம்மை அழித்தொழிக்க அன்றில் இருந்து இன்று வரை இரட்டை வேடம் போட்ட இந்தியாவை விட, சீனா எவ்வளவோ மேல்

ஒரு நாளையில் நூற்றுகணக்கான under age சிறுமிகளை பாலியல் வல்லுறவுக்குள் ஈடுபடுத்தும்,

பல விவாசாயிகள் தற்கொலை செய்யும்,

பல தலித்துகள் நில சுவாந்தர்களால் சித்திரவதைக்குட்படுத்தப்படும்

கேடு கெட்ட,

தமிழர் விரோத / மானுட விரோத இந்திய பார்ப்பனிய அரசு வல்லரசாவதை விட

சீனா எவ்வளவோ மேல்

எப்பவும் துரோகி எதிரியை விட கீழானவன் !!

Edited by நிழலி

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவை கொம்பு சீவி விடுவதுபோல் இருக்கு..! :D

முதலில் அழிய வேண்டியது தமிழனப் படுகொலைகளை முன்னின்று நடாத்திய ஜனநாயகக் காட்டுமிராண்டிகளே!

  • கருத்துக்கள உறவுகள்

சீனாவை இலங்கையிலிருந்து உதைப்பதென்பது சிவபெருமான், மார்க்கண்டேயரைக் காக்க யமனை உதைத்த மாதிரியா?

சீனாவை உதைப்பது இனிக் கடினமானது! காலம் கடந்த ஞானம்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.