Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

போர்க்குற்றத்தை ஒப்புக்கொண்ட சிங்கள தளபதி. அமெரிக்காவிடம் பல தடயங்கள்

Featured Replies

போர்க்குற்றத்தை ஒப்புக்கொண்ட சிங்கள தளபதி. அமெரிக்காவிடம் பல தடயங்கள்.

ஆட்களை கடத்தி கொன்றமை, சரணடைந்த போராளிகளை கொன்றமை மற்றும் ஊடகலவியலார்களின் கொலையில் சிங்கள அரசு நேரடியாக தொடர்பு பட்டது என உயர்மட்ட தொடர்புகளை கொண்டிருந்த இராணுவ தளபதி கூறியுள்ளார். பாதுகாப்பு காரணங்களுக்காக பெயர் மறைப்பு செய்யப்பட்ட இந்த அதிகாரி, விடுதலைப்புலிகளுக்கு எதிரான இறுதி யுத்தயுத்த காலகட்டத்தில் பங்காற்றியவர்.

2010nஆம் ஆண்டு அமெரிக்காவில் நியூயார்க் சட்டத்தரணிக்கு இவர் வாக்குமூலம் கொடுத்துள்ளார். அவை மனித உரிமை அமைப்புக்கும் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்களுடன் ஒத்தகருத்தை கொண்டவையாக உள்ளன என்பது முக்கியமாகின்றது.

அமெரிக்க வெளியுறவு (இராஜாங்க திணைக்கள ) அதிகாரி இந்த இராணுவ அதிகாரியுடன் கதைத்துள்ளார் என உறுதியாக நம்மப்படுகின்றது. அத்துடன் அனைத்து சாட்சியங்களும் பதிவாக்கப்பட்டுள்ளன.

மூலம் : http://www.truth-out...ence/1327078686

Edited by akootha

வலிமையான ஆதாரங்கள். 2 வருடங்களாக தம் வசம் வைத்துக்கொண்டு ஒன்றுமே செய்யவில்லை. :mellow:

  • தொடங்கியவர்

வலிமையான ஆதாரங்கள். 2 வருடங்களாக தம் வசம் வைத்துக்கொண்டு ஒன்றுமே செய்யவில்லை. :mellow:

ஓடு மீன் ஓடிஉருமீன் வருமளவும் வாடி இருக்குமாங் கொக்கு என்பதைப்போன்றதே அமெரிக்க அணுகுமுறை, அத்துடன் இதில் எமக்கென்ன இலாபம் என எதிலும் பார்ப்பவர்கள் அமெரிக்கர்கள்.

இங்கே நிச்சயம் இந்தியா வேறு தடைக்கல்லாக இருக்கும். கடந்தவாரம் ஹிலரி - நிருபாமா சந்திப்பில் கூட இந்தியா திருப்தி என்ற செய்தி நமக்கெல்லாம் தெரியப்படுத்தப்பட்டது.

ஓடு மீன் ஓடிஉருமீன் வருமளவும் வாடி இருக்குமாங் கொக்கு என்பதைப்போன்றதே அமெரிக்க அணுகுமுறை, அத்துடன் இதில் எமக்கென்ன இலாபம் என எதிலும் பார்ப்பவர்கள் அமெரிக்கர்கள்.

இங்கே நிச்சயம் இந்தியா வேறு தடைக்கல்லாக இருக்கும். கடந்தவாரம் ஹிலரி - நிருபாமா சந்திப்பில் கூட இந்தியா திருப்தி என்ற செய்தி நமக்கெல்லாம் தெரியப்படுத்தப்பட்டது.

சோளியன் குடும்பி சும்மா ஆடாது. அமெரிக்க இதுவரையில் தமிழர்கள் தனக்கு கொடுக்க எதையாவது உருப்படியாக வைத்திருக்கிறார்களா என்பதை நிச்சயம் செய்யாததால் தான் இன்னமும் காலைப் போட்டு வேலையைத்தொடங்க பின்வாங்குகிறது. நமது அணுகு முறை விரலை வெட்டித்தன்னும் கையை காப்பற்ற முன் வர வேணும். 99 வருடம் புதுபிக்க தக்க வாடகைக்கு திகோணமலையை தரத்தாயார் என்று தமிழ்த்தலைவர்கள் பகிரங்கமாக கூற வேண்டும். சுதந்திரம் கிடைத்தால் இந்தியாவை நாம் அமெரிக்காவுக்காக கைவிடத்தாயார் என்பதை அறிவிக்க வேண்டும்.

Edited by மல்லையூரான்

அமெரிக்கச் செயற்பாடுகள் எப்போது தொடங்கும் என்று சொல்ல முடியாதது. தமது தேவைகளை முன்வைத்தே செயற்பாடுகள் தொடங்கும். அது நல்லதொரு நேரடி ஆதாரம்.

  • தொடங்கியவர்

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் போரில் ஈடுபட்ட எந்தவொரு இராணுவ மேஜர் ஜெனரலும் அமெரிக்காவில் சாட்சியம் அளிக்கவில்லை என சிறிலங்காவின் படைத்துறைச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின் போது சரணடையும் விடுதலைப் புலிகளின் போராளிகளை கொலை செய்து விடுமாறு சிறிலங்கா படைத்துறைச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச படைத் தளபதிகளுக்கு உத்தரவிட்டதாக அமெரிக்காவில் தஞ்சமடைந்துள்ள சிறிலங்காவின் முன்னாள் மேஜர் ஜெனரல் ஒருவர் சாட்சியம் அளித்துள்ளதாக பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் 'தி ரெலிகிராப்' பத்திரிகை கடந்த எசெம்பர் மாதம் 19ஆம் திகதி செய்தி வெளியிட்டிருந்தது. இந்நிலையில், தமிழீழ விடுதலைப் புலிகளுடன் போரில் ஈடுபட்ட படைத்தரப்பின் சகல உயரதிகாரிகளும் இன்னமும் கடமையில் உள்ளதாகவும், அவர்கள் நாட்டுக்கு துரோகம் இழைக்க மாட்டார்கள் எனவும் கோத்தபாய ராஜபக்ச கூறியுள்ளார்.

அத்துடன், எதிர்வரும் பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத் தொடாரை முன்னிட்டு, நாட்டுக்கு எதிரான பரப்புரைகள் சூடுபிடிக்கக் கூடும் என்பதை அரசாங்கம் எதிர்பார்த்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதேவேளை, இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின் போது போர்க்குற்றங்கள் இடம்பெற்றதாக சிறிலங்காவின் இராணுவ ஜெனரல் ஒப்புக்கொண்டார் என வெளியிடப்பட்டிருந்த செய்தியில் குறிப்பிட்ட இராணுவ ஜெனரலின் பெயர் தெரிவிக்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் போர் இடம்பெற்ற போது கடமையாற்றிய சிலர் தண்டனை அடிப்படையில் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள போதிலும், இப்போரில் அவர்கள் எவரும் நேரடியாக ஈடுபடவில்லை என அவர் கூறியுள்ளார். இனந்தெரியாத நபர் ஒருவரினால் சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் நாட்டுக்கு எதிராக எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்க முடியாது என சிறிலங்காவின் படைத்துறைச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.

உயிருக்குப் பயந்து இலங்கையை விட்டு வெளியேறி தற்போது அமெரிக்காவில் தஞ்சம் அடைந்துள்ள சிறிலங்காவின் குறிப்பிட்ட முன்னாள் மேஜர் ஜெனரல், படைத்துறைச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச இறுதிக் கட்டப் போரின் போது சரணடையும் விடுதலைப் புலிகளின் போராளிகளை கொலை செய்து விடுமாறு உத்தரவிட்டதாக 'தி ரெலிகிராப்' பத்திரிகைக்கு வாக்குமூலம் வழங்கியிருந்தார். இந்த உத்தரவை சிறிலங்காவின் படைத்துறைச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச விடுத்திருந்த போதிலும், இது குறித்து சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் சம்பந்தப்பட்டிருக்க வேண்டும் எனவும் அவர் கூறியிருந்தார்.

அத்துடன், சிறிலங்கா படைத்தரப்பின் களமுனைத் தளபதிகளால் இத்தகையதொரு முடிவை எடுக்க முடியாது என தனது வாக்குமூலத்தில் சுட்டிக்காட்டிய அவர், இம்முடிவு குறித்து சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு தெரியாமல் இருந்திருக்க முடியாது எனவும் தெரிவித்திருந்தார். தனது பாதுகாப்புக் கருதி பெயரை வெளியிட விரும்பாத இவர், இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின் போது சரணடைந்த மற்றும் கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் போராளிகள் படுகொலை செய்யப்பட்டதை உறுதி செய்திருந்ததாக 'தி ரெலிகிராப்' பத்திரிகை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://www.ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=1&contentid=39ca90a2-db2e-4025-8c7e-70ddfb3f14fd

ஆதாரம் இருக்கிறதா இல்லையா என்பது பிரச்சனையல்ல. அமெரிக்கா நினைத்தால் ஆதாரத்தை உருவாக்கும் இல்லை என்றால் ஆதாரம் இல்லாமலே செய்ய வேண்டியதை செய்யும்.

இந்த வாரம் சுவிசிலயே பழைமை வாய்ந்த தனியார் வங்கி ஒன்று ஒரு பெரிய வங்கியிடம் அடைக்களம் புகுந்துள்ளது. அதாவது அந்த சின்ன வங்கி அமெரிக்காவிற்க்கு பயந்து ஒரு பெரிய வங்கி தன்னை வாங்குவதற்க்கு விட்டுள்ளது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.