Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இராணுவ நீதிமன்றத்தை நிராகரித்தார் சம்பந்தன்!

Featured Replies

போர்க்குற்றங்களை இழைத்த படையினரை பிறிதொரு இராணுவக் குழு விசாரணை செய்வதா? - இராணுவ நீதிமன்றத்தை நிராகரித்தார் சம்பந்தன்!

சிறிலங்கா அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டுள்ள இராணுவ நீதிமன்றத்தின் ஊடாக இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின் போது படைத்தரப்பினரால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பிலான உண்மைத் தன்மைகள் வெளிவரும் என்ற நம்பிக்கை கிடையாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இப்போரின் போது மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களை இழைத்த படைத்தரப்பினரை சிறிலங்காவின் பிறிதொரு இராணுவக் குழு விசாரணை செய்கின்றது என்றால், அதனை எவராலும் ஏற்றுக் கொள்ள முடியாது என்பதை உலகமே அறியும் என அவர் கூறியுள்ளார்.

உண்மைகளைக் கண்டறிவதற்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளின் பிரகாரம் சிறிலங்கா அரசாங்கத்தினால் அமைக்கப்பட்டுள்ள இராணுவ நீதிமன்றம் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் மேற்ண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

'சிறிலங்கா அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டுள்ள இராணுவ நீதிமன்றமானது போர்க் குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்கானதாக அமையவில்லை. எவ்வாறிருப்பினும் படைத்தரப்பினரால் இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் அநீதிகளை சிறிலங்காவின் படைத்தரப்பைக் கொண்ட பிறிதொரு குழு விசாரிக்கின்றது என்றால் அங்கு எந்தவொரு உண்மையும் வெளிவரப்போவதில்லை. எனவே, இந்த இராணுவ நீதிமன்றம் தொடர்பில் நாம் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை.

உண்மைகளைக் கண்டறிவதற்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய தாம் செயற்படுவதாகவும், அப்பரிந்துரைகளை தாம் நிறைவேற்றியிருப்பதாகவும் காட்டிக் கொள்வதற்காகவே சிறிலங்கா அரசாங்கம் இவ்வாறு செயற்பட்டிருக்கின்றது. எனவே இந்த இராணுவ நீதிமன்றத்தில் எமக்கு நம்பிக்கை இல்லை.

இலங்கையில் இடம்பெற்ற போரின் போது படைத்தரப்பினரால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் சிறிலங்காவின் பிறிதொரு இராணுவக் குழுவின் ஊடாக விசாரணைகளை மேற்கொள்வது என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. இதனை சர்வதேசம் அறிந்திருக்கின்றது' என சம்பந்தன் மேலும் தெரிவித்துள்ளார்.

உண்மைகளைக் கண்டறிவதற்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள அவதானிப்புகள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ள அமைக்கப்பட்டுள்ள இராணுவ நீதிமன்றம் வெறும் கண்துடைப்பு நடவடிக்கை என சர்வதேச மனிதவுரிமை அமைப்புகளும் சுட்டிக்காட்டியிருந்தன.

இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின் போது மேற்கொள்ளப்பட்ட போர்ச் சட்ட மீறல்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்துவதற்காக ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட இராணுவ நீதிமன்றம் ஒன்றை அமைப்பதாக சிறிலங்கா படைத்துறை அறிவித்திருப்பது சர்வதேச அழுத்தங்களைப் புறந்தள்ளுவதற்கான காலத்தைக் கடத்தும் ஓர் உபாயம் என மனிதவுரிமைகள் கண்காணிப்பகம் குற்றம் சுமத்தியிருந்தது.

போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பிலான ஆதாரங்களுக்கு முகம் கொடுக்க முடியாத நிலையில் தான், சிறிலங்கா அரசாங்கம் இராணுவ நீதிமன்றம் ஒன்றை நியமிக்கும் முடிவுக்கு வந்துள்ளதாக சர்வதேச மன்னிப்புச் சபையும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://www.ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=1&contentid=67303dab-d49b-47bd-a002-321f147931ca

அப்பாடா ஒரு மாதிரி அறிக்கைவந்துவிட்டது.

  • தொடங்கியவர்

அப்பாடா ஒரு மாதிரி அறிக்கைவந்துவிட்டது.

சிங்கள காட்டுமிராண்டிகள் மத்தியில் மெலிந்துபோன தமிழர் அரசியலை வேறு எந்தவிதமாகவும் நகர்த்துவது ஆபத்தை தரலாம். பரராஜசிங்கம், ரவிராஜ், பொன்னம்பலம் எனப்பலரையும் கொலைசெய்த சிங்கள அரசியல் யாரையும் எங்கும் பதம் பார்க்கலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிங்கள காட்டுமிராண்டிகள் மத்தியில் மெலிந்துபோன தமிழர் அரசியலை வேறு எந்தவிதமாகவும் நகர்த்துவது ஆபத்தை தரலாம். பரராஜசிங்கம், ரவிராஜ், பொன்னம்பலம் எனப்பலரையும் கொலைசெய்த சிங்கள அரசியல் யாரையும் எங்கும் பதம் பார்க்கலாம்.

சம்பந்தன் ஐயா,  துணிந்து குரல் கொடுக்கிறார்.  நீங்கள் கூறியது போல் அவருடைய உயிருக்கு ஸ்ரீ லங்கா இனவெறியரிடம் இருந்து ஆபத்து வர வாய்ப்பிருகிறது.

சம்பந்தன் ஐயா,  துணிந்து குரல் கொடுக்கிறார்.  நீங்கள் கூறியது போல் அவருடைய உயிருக்கு ஸ்ரீ லங்கா இனவெறியரிடம் இருந்து ஆபத்து வர வாய்ப்பிருகிறது.

இப்ப சம்பந்தன் ஐயா துணிந்து கொடுக்கிறார் என்டு சொல்லுங்கோ... கொஞ்ச காலம் போனபின் குணிஞ்சு குடுக்கிறார் என்டு சொல்லுங்கோ.தேர்தலில போட்டியிட்டு எம்பியாகி ததேகூ வினது தலைவராய் இருந்து இதையும் விடாட்டி ஒரு பிரியோசனமும் இல்லை.உப்புடி உயிருக்கு ஆபத்தெண்டு மனிசன பப்பாவில ஏதுங்கோ... உயிர்பயம் என்டால் விலகவேண்டியது தானே?

Edited by Donkey

  • கருத்துக்கள உறவுகள்

இதைப்பற்றி ஐயாவின்றை வாரிசு என்ன கருத்தை சொல்லுமோ தெரியேல்லை.

பொறுத்திருந்துதான் பாக்கணும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதைப்பற்றி ஐயாவின்றை வாரிசு என்ன கருத்தை சொல்லுமோ தெரியேல்லை.

பொறுத்திருந்துதான் பாக்கணும்.

:D :D

சிங்கள காட்டுமிராண்டிகள் மத்தியில் மெலிந்துபோன தமிழர் அரசியலை வேறு எந்தவிதமாகவும் நகர்த்துவது ஆபத்தை தரலாம். பரராஜசிங்கம், ரவிராஜ், பொன்னம்பலம் எனப்பலரையும் கொலைசெய்த சிங்கள அரசியல் யாரையும் எங்கும் பதம் பார்க்கலாம்.

தெளிவான பதில்

சிங்கள காட்டுமிராண்டிகள் மத்தியில் மெலிந்துபோன தமிழர் அரசியலை வேறு எந்தவிதமாகவும் நகர்த்துவது ஆபத்தை தரலாம். பரராஜசிங்கம், ரவிராஜ், பொன்னம்பலம் எனப்பலரையும் கொலைசெய்த சிங்கள அரசியல் யாரையும் எங்கும் பதம் பார்க்கலாம்.

இது உண்மைதான். முடிந்தளவு முன்னெச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்பதற்கு மாற்றுக் கருத்துக்கள் இல்லை!

ஆனால், குமார் பொன்னம்பலம், பரராஜசிங்கம், ரவிராஜ், சிங்களப் பயங்கரவாதிகளுடன் இணைந்து அரசியல் செய்த மகேஸ்வரன் போன்றவர்கள் சிங்களப் பயங்கரவாதிகள் சந்திரகா, மகிந்த தலைமையிலான சிங்களப் பயங்கரவாத அரசுகளால் படுகொலை செய்யப்பட்டபோது போதிய எதிர்ப்பு நடவடிக்கைகளை எடுக்காமல் ஓடி ஒழித்தவர்கள், அதன் மூலம் சிங்களப் பயங்கரவாதிகள் தொடர்ந்து படுகொலைகளை செய்யும் தைரியத்தை வழங்கியபின், ஒன்றில் அரசியலில் இருந்து ஒதுங்கியிருக்க வேண்டும் அல்லது மரணத்துக்குப் பயமின்றி அரசியல் செய்தல் வேண்டும். இது அவர்களே உருவாகிய களம். எக் காரணத்தின் பொருட்டும் தமிழரின் உரிமைகளை அடகுவைக்க தமிழர் பிரதிநிதிகளுக்கு உரிமையில்லை.

சுமந்திரனின் கருத்துக்களுக்கு முரணான சம்பந்தரின் இந்த அறிக்கை பாராட்டக் கூடியது. இது தமிழ் மக்களின் அழுத்தங்களின் பின்னர் வெளிவந்த அறிக்கையாகும்.

சர்வதேசத்தால் மறுகேள்வி இன்றி ஏற்றுக்கொள்ளப்படும் சக்தி உடைய BBC சேவையில் சிங்கள அரச பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக விடப்பட்ட அறிக்கைக்கும், சர்வதேச கவனத்தை பெரிதும் ஈர்க்க முடியாத - குறிப்பாக தமிழ் பத்திரிகைகளுக்கு விடப்படும் மறுப்பு அறிக்கைக்கும் ஒரேயளவு பெறுமதி உண்டு என நினைத்து தமிழர் ஏமாறாமல் இருப்பது நல்லது!

சர்வதேச ஊடகங்களில் கிடைக்கும் வாய்ப்புக்களை சரியாக பயன்படுத்தாதவர்கள் சிங்கள அரச பயங்கரவாதிகளுக்கும், அவர்களால் மேற்கொள்ளப்படும் தமிழின அழிப்புக்கும் ஆதரவாக செயற்படுபவர்களாகவே கணிக்கப்படுவர்.

அதுசரி கூட்டமைப்பின் உத்தியோக பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் மௌனமாக இருக்கையில் சுமந்திரன் எப்படி BBC க்கு செவ்வி வழங்கினார்?

  • தொடங்கியவர்

அதுசரி கூட்டமைப்பின் உத்தியோக பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் மௌனமாக இருக்கையில் சுமந்திரன் எப்படி BBC க்கு செவ்வி வழங்கினார்?

இறுதி போரில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கு, இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய நியமித்த இராணுவ நீதிமன்றத்தை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முற்றாக நிராகரித்திருக்கிறது.

இந்த இராணுவ நீதிமன்றத்தை தாம்; ஏற்றுக் கொள்ளவில்லை எனவும் இது சர்வதேசத்தை ஏமாற்றும் ஒரு தந்திரோபாயம் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குறிப்பிட்டுள்ளது.

எனவே இதனைக் கூட்டமைப்பு முற்றாக நிராகரிக்கின்றது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.

ஜெனிவா மாநாட்டில் இலங்கை அரசாங்கத்துக்கு பெரும் நெருக்கடி ஏற்பnவுள்ளதாகவும் அந்த நெருக்கடியில் இருந்து தம்மை பாதுகாத்துக்கொள்ளவே இவ்வாறான விடயங்களை மேற்கொள்வதாக சுரேஸ்பிரேமத்தசந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த இராணுவ நீதிமன்றத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தீர்வுக்கிடைக்கப் போவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக படிப்பினைகள் மற்றும்; மீழிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் தொடர்பாக விசாரணை செய்வதற்கு இராணுவ நீதிமன்றம் ஒன்றை இலங்கை அரசு நியமித்துள்ளதாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://thamilfm.com/thamilfm/NewClients/NewsDetail.aspx?ID=11149

  • தொடங்கியவர்

இப்ப சம்பந்தன் ஐயா துணிந்து கொடுக்கிறார் என்டு சொல்லுங்கோ... கொஞ்ச காலம் போனபின் குணிஞ்சு குடுக்கிறார் என்டு சொல்லுங்கோ.தேர்தலில போட்டியிட்டு எம்பியாகி ததேகூ வினது தலைவராய் இருந்து இதையும் விடாட்டி ஒரு பிரியோசனமும் இல்லை.உப்புடி உயிருக்கு ஆபத்தெண்டு மனிசன பப்பாவில ஏதுங்கோ... உயிர்பயம் என்டால் விலகவேண்டியது தானே?

நீங்கள் சொல்லுவது நியாயமே, ஒரு உண்மையான மக்களாட்சியை மதிக்கும் நாட்டில். ஆனால், சிங்கள தேசத்தில், குறிப்பாக கூட்டமைப்பை ஆயுதம் தாங்காத புலிகள் என அரசே கூறுகையில், வீராப்பு பேசுவது தற்கொலைக்கு சமமானது.

இன்று நாம் உள்ள நிலையில் வீரத்தை விட விவேகமே அதிகம் தேவைப்படுகிறது. அரசியல் சாணக்கியம் மூலம் எமது மக்களுக்கு ஒரு தீர்வை பெறக்கூடிய விதத்தில் நகரவேண்டும்.

எதற்க்கும் வருங்காள முதலமைச்சர் சுமந்திரன் ஜயா வின் கருத்துக்கள் வரும் வரை பொறுத்து இருப்பது நல்லது...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.