Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழீழம் இழந்த இளம் கருத்தாளர் சத்தியமூர்த்தி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

PSTW02161-241x300.jpg

ஊடகவியலாளர் சத்தியமூர்த்தி: நினைவுப் பதிவுஇலங்கைத் தீவில் ஊடகத்துறைக்கு எதிரான வன்முறைகள் மலிந்துள்ளன. ஊடகவியலாளர் படுகொலை, கடத்தல், காணாமற்போதல், தாக்கப்படுதல் என்பன தொடர்ச்சியாக நடக்கின்றன. ஊடக நிறுவனங்களுக்கு சேதம் விளைவித்தாலும் அரசு ஏவிய குண்டர்களால் நடத்தப்படுகின்றன.

ஊடகவியலாளர்கள் உயிருக்கு மிகவும் ஆபத்தான நாடுகளில் ஒன்றாக இந்த நாடு இடம் பெறுகிறது. வன்முறைகளுக்குக் காரணமானவர்களை இலங்கை அரசு கைது செய்யவோ தண்டிக்கவோ தவறியமைக்காக உள்ளுரிலும் சர்வதேச மட்டத்திலும் கண்டனம் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த முன்று ஆண்டுகளிலே ஜனவரி பெப்ரவரி மாதங்களில் பிரபல பத்திரிகையாளர்களும் ஊடகத்துறை விற்பன்னர்களும் படுகொலை செய்யப்பட்டுள்ளனா. இந்த இரு மாதங்களையும் கறுப்பு மாதங்களாக அடையாளப்படுத்தும் வழமையை ஊடகவியலாளர்கள் கொண்டுள்ளனர்.

தமிழர்களுடைய ஊடகத்துறை காலத்திற்க்குக் காலம் இலங்கை இந்திய அரச படைகளின் தாக்குதலால் கடுந் சேதத்தை எதிர் கொண்டுள்ளது. வண்ணை மேற்கு தெருவில் அமைந்த பழம் பெரும் ஈழநாடு பத்திரிகை அலுவலகக் கட்டிடம் இரு படைகளாலும் தாக்கி அழிக்கப்பட்டது. பல வருடங்களுக்குப் பிறகு ஈழநாடு புத்துயிர் பெற்று இயங்கத் தொடங்கியவுடன் அதன் ஆசிரியரை இலங்கைப் படையினர் சுட்டுக் கொன்று பத்திரிகை வெளியீட்டை நிறுத்தினர்.

தமிழீழம் இழந்த ஊடகவியலாளர்களின் எண்ணிக்கை இருபத்தியைந்தைத் தாண்டும. இவர்களில் மயில்வாகனம் விமலாராஜன். தராகி சிவராம், நடேசன், புண்ணியமூர்த்தி சத்தியமூர்த்தி போன்றோர் மிக முக்கியமானவர்கள்.

சத்தியமுர்த்தி 30.10.1972ல் பிறந்தார். 12.02.2009ல் வீரச்சாவடைந்தவர். சிறந்த ஊடகப் போராளியான அவர் தொலைக்காட்சி செய்திப் பரப்பல், நேர்காணல்கள் மூலம் தமிழர் தரப்பு நியாயப்பாடுகளை உலகிற்கு அறிவித்தவா.

மட்டக்களப்பு மாவட்டத்தைப் பிறப்பிடமாகக் கொண்டிருந்தாலும் அவர் தனது வாழ்நாளின் பெரும் பகுதியை யாழ்ப்பாணத்திலும் வன்னியிலும் கழித்தார். எழுத்தையும் தொலைக்காட்சியையும் தனது ஆயுதங்களாக்கிய சத்தியமூர்த்தி இளைய தலைமுறை ஊடகவியலாளர்களில் முதன்மையானவர்.

ஊடகப் பணியின் இலக்கை நன்கு புரிந்து கொண்ட பணியாளர் என்ற சிறப்பு அவருக்கு என்றென்றும் உண்டு. பரந்த அறிவும் திறனும,செய்திகளின் பின்னணியைக் கிரகிக்கும் கூர்மதியும் அவருடைய புகழுக்கும் பணிச் சிறப்புக்கும் காரணமாக அமைந்தன.

ஈழத்தமிழர்களின் விடுதலைப் போர் பற்றிய அறிவித்தலை உலகிற்கு எடுத்துச் சென்றவர் என்ற வரலாற்று முக்கியத்துவம் அவருக்கு உண்டு. ஈழத் தமிழர்களின் சுதந்திர வேட்கைக் குரலாக ஒலித்த அவர் உலகின் பார்வையை தமிழீழம் நோக்கித் திருப்பி விட்டார்.

இலங்கை அரச படைகள் அவரைக் குறிவைத்தனர். அவருக்கு வாழும் பாக்கியம் கிடைக்கவில்லை. படையினர் ஏவிய ரவைகள் வன்னியின் தேவிபுரத்தில் அவருடைய உயிரைக் குடித்தன. அந்த நெருக்கடி மிகுந்த காலகட்டத்தில் அவருடைய வித்துடலை எடுத்துச் சென்று அடக்கம் செய்வதே பெரும் பாடாக இருந்தது.

2009 ஈழத்தமிழர் வாழ்வில் மிகவும் நெருக்கடி மிகுந்த காலம். எத்தனை இடர்வரினும் தனது பணியை குறியாகச் சத்தியமூர்த்தி செயற்பட்டார். மக்களோடு மக்களாக அவர் தனது மனைவி, மகளோடு பலமுறை இடம்பெயர்ந்தார். அவருடைய தனிப்பட்ட இழப்புக்கள் மிக அதிகம்.

37 வயது நிரம்பாத ஒரு இளம் கருத்தாளனைத் தமிழீழம் இழந்து நிற்கிறது. அவருக்குச் சிறந்த எதிர்காலம் இருந்தது. அவரிடம் நிறைய எதிர்பார்த்தோம. ஈழத் தமிழர்களிடம் இப்போது இருக்கும் ஆயுதம் ஊடகம் ஒன்று மாத்திரமே. நவீன தொழில் நுட்பங்களைப் பயன்படுத்திக் கருத்து போரை நாம் முன்னெடுக்க வேண்டும்.

எமது வரலாற்றை நாம் அடுத்த தலைமுறைக்குத் தெரிவிக்க வேண்டும். மறதி மனித இயல்பு. சிந்தனை ஊற்று வற்றிவிடாமல் பார்ப்பதில் நாம் முனைப்பாக இருத்தல் அவசியம. இத்தனையையும் மிகவும் சிறப்பாகச் செயற்படுத்திய ஊடகப் போராளி புண்ணியமூர்த்தி சத்தியமூர்த்தியை நினைவு கூரும் இவ்வேளையில் அவருடைய பணியைத் தொடர உறுதி பூணுவோம்.

http://www.eelampres.../2012/02/50457/

  • கருத்துக்கள உறவுகள்

இவரின் மனைவியும் மகளும் தற்சமயம் தாய்லாந்து சிறையில் வாடுகின்றனர். இதைப்பற்றிய விபரமான பதிவு இந்த வார ஒரு பேப்பரில் வெளிவரும்.

இவரின் மனைவியுடன் C.T.R வானொலி இடைக்கிடை நேர்காணல் போட்டுக்கொண்டிருந்தார்கள் ,அண்மையில் பலகாலமாக இல்லை.நல்ல தெளிவாக அவர் வானொலியில் கதைப்பார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.