Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இழிவு விருது : கொடுத்துக் கேவலப்படுத்துதலும் கொடுக்காமல் கேவலப்படுத்துதலும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

jeeva.jpg

சென்ற வருடம் 2011 இல் கொழும்பில் தோழர் மனோரஞ்சனுடன் சுதந்திரத்தை அனுபவித்துக்கொண்டிருந்த ஒரு நாளில் பூபாலசிங்கம் புத்தகசாலையில் தோழர் டொமினிக் ஜீவா அவர்களை சந்திக்க வாய்த்தது. புத்தகத்தைக் கையில் தூக்கி வைத்திருக்கமுடியாத கை நடுங்கும் நிலையிலும் உயிரைக் கையில் பிடித்து வைத்திருப்பதுபோல் அப்புத்தகத்தை அவர் பிடித்து வைத்துக்கொண்டிருந்தார். கர்ப்பக்கிரகத்திலிருக்கும் மூலவரை வெளியே நின்று வணங்குவதுபோல மானசீகமாக வணங்கிவிட்டு அவ்விடம் விட்டகன்றேன்.

யாழ்ப்பணத்தவரின் பொற்கோவிலான பல்கலைக்கழக விருதை அவர் திருப்பி வழங்கியவர். முகத்திலே தூக்கி எறிந்ததிலிருந்து நமது சுயமரியாதையையும் கௌரவத்தையும் போர்க்குணாம்சத்தையும் தனி ஒரு மனிதனாக நின்று காப்பாற்றினார். நாமறிந்து உலகத்தில் எந்தப் பல்கலைக்கழகமுமே ஒருவரைக் கௌரவிப்பதற்கு கௌரவ டாக்டர் பட்டத்தை வழங்குமே தவிர, கற்கைகளின் அடிப்படையிலான இளங்கலை, முதுகலைப் பட்டத்தை வழங்குவதில்லை. அப்படி ஒரு வழக்கம் உலகத்தில் இல்லை. இழிந்த சாதியில் பிறந்த குடிமகனுக்கு கௌரவ டாக்டர் பட்டத்தை வழங்குவதிலுள்ள மேற்சாதியத் திமிர், தடை, மனக்கட்டமைப்பு இவற்றோடு சாதியக் குள்ளத்தனமும் குயுக்தியும் சேர்ந்து அவருக்கு கௌரவம் கொடுப்பதைத்தவிர்த்துக் கேவலப்படுத்தியது.

„வேண்டுமானால் கவுரவமாக ஒரு முதுகலைப் பட்டம் கொடுத்துவிடலாம்“ என்று அப்படி ஒரு பரிந்துரையைச் செய்த மேற்சாதிய மனக் கட்டமைப்புள்ள அந்த மனோவிகாரி யார்? பல்கலைக்கழகத்துக்குள்ளேயே அது தொடர்பாக நடந்த உரையாடல், விவாதங்கள் என்ன?

யாழ்ப்பாண சாதியம் எவ்வாறு நுண் சாதுரியமாக, நுண் தளங்களிலும் நுண் தருணங்களிலும் தொழிற்படும் என்பதற்கான ஒரு வகைமாதிரி இது.

கேடுகெட்ட, அபத்தமான முன்னுதாரணத்திற்காக யாழ் பல்கலைக்கழகம் எப்போதும் பெயர்போனது.

இப்போது இயல்விருது அப்படி ஒரு கொள்கையை வரித்துள்ளது.

தமிழில் தோழர் டொமினிக் ஜீவா அவர்களைப்போல வாழ்நாள் சாதனையாளரை யாரேனும் காட்டமுடியுமா?

அவரைப்போல் தமிழில் இலக்கியத்திற்காக என்று இயங்கியவர்கள் வேறுயாரும் உண்டா?

இதுவரை கொடுத்த இயல்விருது, வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றவர்கள் எவரையும்விட தோழர் டொமினிக் ஜீவா எவ்வளவு பெரிய சாதனையாளர்!

உங்களுக்குச் சற்றே மனச்சாட்சியிருந்தால் நேர்மையுடன் தேர்வொட்டித் தொழிற்படுபவர்களாயிருந்தால் முதலில் அவருக்கல்லவா நீங்கள் கொடுத்திருக்க வேண்டும்.

தமிழில் 45 வருடங்களாக இலக்கியப் பத்திரிகையை வெளிக்கொண்டுவரும் ஆளுமை உலகத்தில் உண்டா?

தமிழினி விழாவில் சுந்தரராமசாமி அவரிடம் மன்னிப்புக்கேட்டுக்கொண்டது தெரியுமா?

சுய முன்னேற்றத்திலும் இடதுசாரி எதிர்ப்பிலும் பாசிசத்திலும் கை நனைத்தவர்களின் மனச்சாட்சியை, தோழர் டொமினிக் ஜீவா அவர்கள் உறுத்தவே செய்வார்.

நன்றிகள் சுகன் அண்ணா...!

Edited by சுபேஸ்

  • கருத்துக்கள உறவுகள்

டொமினிக் ஜீவா, ஈழத்து இலக்கியத்தின் உயிர் மூச்சு!

குமுதம், ஆனந்தவிகடன் போன்ற குப்பைகளினால், கொதித்துப் போன ஈழத்து இலக்கியவாதிகளுக்கு, வடிகால் அமைத்துக் கொடுத்தவர், இவர்!

தன் சொந்தப் பணத்தை, பல தடைவைகள் இழந்தாலும், மல்லிகை எனும், சஞ்சிகை மூலம், வரலாற்றில் முத்திரை பதித்தவர் இவர்!

தனது செயலின் மூலம், யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம், தன்னைத் தாழ்த்திக் கொண்டுள்ளது!

கிருபன், நிழலி, பொயட் போன்றோர் 'யாழ் மேட்டுக்குடி சிந்தனை' பற்றிக் கருத்துக்களை,எழுதும் போது, ஏன் இவர்கள் இறந்து போன காலத்துக் கருத்துக்களை இப்போது எழுதுகிறார்கள், என நினைப்பதுண்டு!

ஆனால், இந்த வர்க்க சிந்தனை, இன்னும் சாகவில்லை என்பதையே, டொமினிக் ஜீவாவின் கதை உணர்த்துகின்றது!

'யாழ் மேட்டுக்குடி சிந்தனை' பற்றிக் கருத்துக்களை,எழுதும் போது, ஏன் இவர்கள் இறந்து போன காலத்துக் கருத்துக்களை இப்போது எழுதுகிறார்கள், என நினைப்பதுண்டு!

அது இறக்கவில்லை.... முழுப்போராட்டத்தையும் புதை குழிக்குள் தள்ளிவிட்டு முன் இருந்ததை விட முனைப்புடன் இருக்கின்றது

அண்மையில் எனக்கு நடந்த ஒரு விடயம்

என் மனைவிக்கு ஒரு காணி இருக்கு கைதடியில்.. இனி இலங்கைப் பக்கம் போய் வாழப்போவதில்லை என்பதால் அதை விற்க முனைந்தோம். அந்த காணியைச் சுற்றி மனைவிவியின் முழுச் சொந்தங்களும் பரவி இருக்கின்றனர். அந்தக் காணியை ஒரு பரப்புக்கு 6 இலட்சம் என்று விலை கூறி அவவின் ஆட்கள் வரத் தொடங்க, இவர்களால் குறைந்த சாதி என்று சொல்லப்படும் ஒருவர் ஏழு இலட்சத்துக்கு வாங்க முனைந்தார். அவர் அதிக விலை கொடுக்க தயாராக இருப்பதால் அவரிற்கே கொடுக்க முற்பட எமக்கு வந்த வசவுகள், தொலைபேசி அழைப்புகள், கரைச்சல்கள் ... கடைசியில் இப்போதைக்கு காணியை விற்பதில்லை...சிங்களவர் வலுக்கட்டாயமாக எடுத்தாலும் எடுக்கட்டும் என்று அப்படியே விட்டு விட்டோம்.

எம் சமூகத்தில் சாதியை 1000 முள்ளிவாய்க்கால்கள் வந்தாலும் மாற்ற முடியாது....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.