Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இரா. சம்பந்தனின் முடிவில் தவறுமில்லை தமிழ்க் கூட்டமைப்பிற்குள் பிளவுமில்லை

Featured Replies

[சிங்கள அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஏரிக்கரை பத்திரிகை நிறுவனமான தினகரன்]

இரா. சம்பந்தனின் முடிவில் தவறுமில்லை தமிழ்க் கூட்டமைப்பிற்குள் பிளவுமில்லை

தமிழரை வழிநடத்த சம்பந்தனே சரியான தலைவர் எனப் புகழாரம்

விளங்கிக் கொள்ளாதோர் வெறும் விதண்டாவாதக்காரரே!

ஜெனீவாவில் இலங்கை அரசாங்கம் மீது உலக நாடுகள் சில வேண்டுமென்றே பொய்யான

குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி அங்கு எமது நாட்டைச் தர்மசங்கடத்திற்குள் ஆழ்த்திவரும் நிலையில் அதனை மேலும் சிக்கலுக்குள் தள்ளிவிட விரும்பாமலேயே தமிழ்க் கூட்டமைப்பு அதன் ஜெனீவா பயணத்தை நிறுத்தியது.

கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் இந்த அறிவிப்பை விடுத்ததும் விடயத்தை அதன் அர்த்தத்தைச் சரியாக விளங்கிக் கொள்ளாத சிலர் அவர் மீது ஏறிப்பாய்ந்தனர். ஆனால் இப்போது சம்பந்தன் ஏன் அவ்வாறு நடந்து கொண்டார் என்பதை விரல் விட்டு எண்ணக்கூடிய ஓரிரு தமிழ்த் தலைவர்களையும், அதேபோன்று விதண்டாவாதத்தை மட்டுமே குதர்க்கமாகப் பேசிவரும் ஓரிரு பொது மகன்களையும் தவிர ஒட்டுமொத்த தமிழ் சமூகமுமே ஏற்றுக் கொண்டுள்ளது.

எந்தவொரு நிலையிலும் தமிழினத்தைக் காட்டிக் கொடுக்கும் வகையிலோ அல்லது அந்த இனத்தைப் பிறர் குறைத்து மதிப்பிடும் வகையிலோ தமிழ்க் கூட்டமைப்பு நடந்து கொள்ளவில்லை என்பது தற்போது விளக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் உள்நாட்டில் ஏனைய இனங்களுடன் சகோதரத்துவத்துடன் வாழப் போகும் நிலையிலும், தீர்வை வென்றெடுத்த பின்னர் அரசாங்கங்களுடன் இணைந்து அவற்றை நடைமுறைப்படுத்துவதையும் உறுதி செய்ய வேண்டிய பாரிய பொறுப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு உள்ளது.

இந்நிலையில் தாய்நாட்டை காட்டிக் கொடுத்துவிட்டு அதே தாய் நாட்டில் எவ்வாறு ஏனைய இனங்களுடன் இணைந்து வாழ முடியும்? ஜெனீவா மாநாடு முடிந்ததும் தமிழருக்கு தனிநாடு பிரித்துக் கொடுக்கப்பட்டு விடுமா? இனி இலங்கைக்கும் தமிழருக்கும் தொடர்பு இல்லையென்று ஆகிவிடுமா? எனும் கேள்விகளுக்கு புலம் பெயர் நாடுகளில் அந்நாட்டுக் குடியுரிமையும், வட்டியில்லாக் கடனில் இரண்டு வீடுகளும் வாங்கி வசதியாக வாழும் மக்களுக்கு பதிலளிக்க முடியாது.

வடக்கிலும் கிழக்கிலும், என்னமும் யுத்த வடுக்களிலிருந்து விடுபட முடியாது ஏதோ வாழ்கின்றோம் என்று வாழ்ந்துவரும் மக்களுக்குத்தான் மேலெழந்த கேள்விகளுக்கு விடை கூறமுடியும். எனவே இம் மக்களின் நிலையை உணர்ந்தே சம்பந்தன், இம்முடிவைத் தலைவருக்குரிய சாணக்கியத்துடன் எடுத்துள்ளார். அதனை, இன்று தமிழ் மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். இனப்பற்றுடன் அவர் நாட்டுப்பற்றுக்கும் முன்னுரிமை அளித்து தமிழருக்குத் தானே சரியான தலைவர் என்பதை முழு உலகிற்கும் உணர்த்தியுள்ளார்.

http://www.thinakara...04/?fn=n1203042

Edited by akootha

கூட்டமைப்புக்குள் ஏற்பட்டுள்ள சலசலப்பு பற்றி எம்முள் நடக்கும் விவாதம் எமக்கு மட்டுமே தேவையான ஒரு விவாதம். சம்பந்தர் எமது விரோதியில்லை. புலிகளின் ஜனநாயகம் பற்றி பேசித் திரிந்த சம்பந்தருக்கு ஜனநாயகம் என்றால் என்னவென்று இப்போது தான் பாடம் படிப்பிக்கப்படுகிறது.

இதில் சிங்கள - இந்திய அரச பயங்கரவாதிகள், சிங்கள - இந்திய அரச பயங்கரவாதிகளின் கைக்கூலிகள் குளிர் காய்வதற்கு, தமிழர் யாரும் இடம் கொடுக்கப் போவதில்லை.

  • தொடங்கியவர்

நேற்று மகிந்தர் சம்பந்தரை பாராட்டி எழுதுமாறு பணித்ததாக ஒரு செய்தி வெளியாகி இருந்தது. அதனுடன் இணைத்தே இதைப்பார்க்க வேண்டி உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று மகிந்தர் சம்பந்தரை பாராட்டி எழுதுமாறு பணித்ததாக ஒரு செய்தி வெளியாகி இருந்தது. அதனுடன் இணைத்தே இதைப்பார்க்க வேண்டி உள்ளது.

நேற்றொன்று இன்றொன்றாக எழுதுபவர்களின் நம்பிக்கை தன்மை கேள்விக்குரியது.

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தர் சரியில்லை .. வேறு நல்ல தலைமைக்கு (சுயமாக சிந்திக்கும் தலைமைக்கு வாய்ப்பளிக்கலாம்).. என்னடா இங்க இணக்க அரசியல்.. இணக்க அரசியல் செய்து யாராவது உரிமை பெற்று கொண்டார்களா..? உலக அரசியலில் டெல் மீ டெல் மீ..? சரி இது ஆகாது .. இவர்களை பற்றி உலக தளத்தில் எடுத்து சொல்லவேண்டுமா வேண்டாமா..? உட்கார்ந்த இடத்தில் இருந்து கடிதம் எழுதி போட்டால் ஆகிடுமா..?

நான் கூடத்தான் ஒபாமவுக்கு கடிதம் எழுத முடியும்..அதை அவர் படிப்பாரா..? ஆனால் கூத்தமைப்பு இப்பொது எழுதினால் கட்டாயம் படிப்பார்.. அது பல்லாயிரம் உயிரை வேள்வியாக்கிய பல புலிகளால் வந்தது..

தயவு செய்து இதை சார் என்னை இவன் கிள்ளிட்டான் சார் .. இவன் என்னை திருகிறான் சார் ...

அப்பொ கிந்தியாகாரன் செய்வான் என்று சொன்னான் சார்... இப்ப செய்யல சார்...

என ஸ்கூல் பிள்ளைகள் மாறி நேரத்திற்கு ஒரு முடிவு எடுக்காமல் ஒரேமுடிவில் நிற்க வேண்டும்.. இல்லையெனில் அந்த உயிர்களும் கேலிபொருள் ஆகும் நீங்களும் கேலி பொருள் ஆவீர்கள்

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்

அட தினகரன் ஆரம்பித்த காலத்திலிருந்து சிறிலங்காவின் ஊதுகுழல் பத்திரிகை அவன் இப்பிடித்தான் தலையங்கம் எழுதுவான்.

Edited by புலவர்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.