Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கைக்கு எதிராக வாக்களிக்கிறது இந்தியா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் விமானம் மூலம் உணவுப்பொதி போட்ட நாடகம் தான் நடக்க போகுது.

  • தொடங்கியவர்

தமிழக எம்.பி.க்கள் கருத்துகளுக்கு முக்கியத்துவம் தர கிருஷ்ணா முடிவு

இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமை பேரவையில் அமெரிக்கா கொண்டுவந்துள்ள தீர்மானத்தின் வரைவை மத்திய அரசு முழுமையாக ஆய்வு செய்யும் என்று வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா கூறியிருக்கிறார்.

தமிழக எம்.பி.க்களிடம் ஆலோசனை நடத்திய பிறகே இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் இந்தியா முடிவு எடுக்கும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

"மனித உரிமைகள் விஷயத்தில் அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா கவலை வெளியிட்டுள்ளார். தீர்மானத்தின் வரைவு இறுதி செய்யப்பட்டவுடன், அதனை இந்தியா ஆய்வு செய்யும். அதன்பின், தமிழக எம்.பி.க்களிடம் ஆலோசித்த பிறகு முடிவு மேற்கொள்ளப்படும்," என்று நம்பகத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், "தமிழக எம்.பி.க்களின் கருத்துகளுக்கு எஸ்.எம்.கிருஷ்ணா முக்கியத்துவம் அளிப்பார், " என்று அந்த வட்டாரங்கள் கூறின.

இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமை பேரவையில் அமெரிக்கா, பிரான்ஸ், நார்வே ஆகிய நாடுகள் கொண்டுவந்த இலங்கைக்கு எதிரான தீர்மானம், ஜெனிவாவில் வரும் 23-ம் தேதி நடைபெறும் கூட்டத்தில் முன்மொழியப்படுகிறது. அதைத் தொடர்ந்து, அந்தத் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெறும்.

இந்த வாக்கெடுப்பில், இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களிக்க வேண்டும் என்றும் அதிமுக, திமுக, இடதுசாரிகள் உள்ளிட்ட தமிழக கட்சிகள் அனைத்தும் ஒருமித்த குரல் கொடுத்து வருகின்றன.

விடுதலைப்புலிகள் உடனான போர் முடிவுக்கு வந்த பிறகு, சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுடன் இலங்கை மிக அதிக நெருக்கம் காட்டி வருவது, அந்நாட்டின் மீது இந்தியாவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தக் கோணத்தையும் கருத்தில்கொண்டு, இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களிப்பதற்கான சாத்தியம் மிகுந்திருப்பதாக டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றன.

http://news.vikatan.com/?nid=7102

தயவுசெய்து இவர்கள் படங்களை இனியும் இங்கே இணைக்காதீர்கள்.

சாரி தாத்ஸ் இனிமேல் இணைப்பதை இயன்றவரை தவிர்க்கிறேன்..

அமெரிக்காவின் பிரேரணையில் என்ன திருத்தம் செய்யப் போகிறார்கள்? கூர்ந்து கவனியுங்கப்பா :unsure:

ஒரு சின்ன மாற்றம் தான். இலங்கை அரசு செய்த குற்றம் அனைத்தையும் தமிழர் தரப்பு மேல் மாற்றிவிடுவது.

இன்னும் இந்தியாவை நம்பி இருந்தால் கோவணமும் பறிபோகும்.

ஏன் சிராந்தியோட டக்கி தாயம் விளையாடினா மகிந்தா இவனைப் பாத்து எடுக்கவோ கோர்க்கவோ என்பானோ? :lol:

:D அது விளையாட்டின் வேகத்தையும் தாக்கத்தையும் பொறுத்தது.

  • தொடங்கியவர்

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும்: பிரதமர்

இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமை பேரவையில் அமெரிக்கா கொண்டுவந்துள்ள தீர்மானத்தை ஆதரித்து இந்தியா வாக்களிக்கும் என்று நாடாளுமன்றத்தில் பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.

அதேவேளையில், அமெரிக்கா கொண்டுவந்துள்ள தீர்மானத்தின் இறுதி வரைவை மத்திய அரசு ஆய்வு செய்யும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

"தீர்மானத்தின் இறுதி வரைவுக்காக காத்திருக்கிறோம். ஆனால், அந்தத் தீர்மானத்தை ஆதரிப்பது என்று விருப்பம் கொண்டுள்ளோம்," என்று மக்களவையில் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார்.

இலங்கை அரசின் போர்க்குற்றங்கள் தொடர்பாக அவர் பேசுகையில், "இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தி வருகிறது. அதேபோல், அதிகாரப் பகிர்வு விஷயத்தில் அர்த்தமுள்ள தீர்வை எட்டவும் இலங்கை அரசை வலியுறுத்துகிறோம்," என்றார்.

இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமை பேரவையில் அமெரிக்கா, பிரான்ஸ், நார்வே ஆகிய நாடுகள் கொண்டுவந்த இலங்கைக்கு எதிரான தீர்மானம், ஜெனிவாவில் வரும் 23-ம் தேதி நடைபெறும் கூட்டத்தில் முன்மொழியப்படுகிறது. அதைத் தொடர்ந்து, அந்தத் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெறும்.

இந்த வாக்கெடுப்பில், இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களிக்க வேண்டும் என்றும் அதிமுக, திமுக, இடதுசாரிகள் உள்ளிட்ட தமிழக கட்சிகள் அனைத்தும் ஒருமித்த குரல் கொடுத்து வருகின்றன.

விடுதலைப்புலிகள் உடனான போர் முடிவுக்கு வந்த பிறகு, சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுடன் இலங்கை மிக அதிக நெருக்கம் காட்டி வருவது, அந்நாட்டின் மீது இந்தியாவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தக் கோணத்தையும் கருத்தில்கொண்டு, இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களிப்பதற்கான சாத்தியம் மிகுந்திருப்பதாக டெல்லி வட்டாரங்கள் கூறின.

இதனிடையே, இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்காவிட்டால், மத்திய அரசில் இருந்து திமுக வெளியேறிவிடும் என்று அக்கட்சி மறைமுகமாக மிரட்டல் விடுத்தாக செய்திகள் வெளியாகின.

இந்த நிலையில், இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமை பேரவையில் அமெரிக்கா கொண்டுவந்துள்ள தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும் என பிரதமர் மன்மோகன் சிங் கூறியிருக்கிறார்.

http://news.vikatan.com/?nid=7104

தமிழக மக்களுக்கு நன்றிகள். ஆனால், இது ஒரு முடிவாக இல்லாது தொடக்கமாக இருக்கட்டும்.

இந்த வாக்கெடுப்பில், இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களிக்க வேண்டும் என்றும் அதிமுக, திமுக, இடதுசாரிகள் உள்ளிட்ட தமிழக கட்சிகள் அனைத்தும் ஒருமித்த குரல் கொடுத்து வருகின்றன.

விடுதலைப்புலிகள் உடனான போர் முடிவுக்கு வந்த பிறகு, சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுடன் இலங்கை மிக அதிக நெருக்கம் காட்டி வருவது, அந்நாட்டின் மீது இந்தியாவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்தும் சீனா நெருக்கமான உறவைப்பேணவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகம் கட்சி பேதமற்று (சிதம்பரம் உட்பட) உசாரடைந்துள்ள நிலையில் இனி மேல் இந்தியா நயவஞசக நாடகங்கள் செல்லுபடியாகாது. தமிழர்கள் தமது பணியை செவ்வனே செய்யின் தமிழரது தாகத்துக்கான அடுத்த படிக்கல்லை இதன் மூலம் தொடமுடியும்.

இலங்கை அரசு அன்றறுக்கும் அமெரிக்கா அரசு நின்றறுக்கும்

[செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2012-03-19 09:49:26| யாழ்ப்பாணம்]

இராவணனின் கொடுந் துயரம் தாங்க முடியாத தேவர்கள் இறைவனிடம் முறையிடுகின்றனர். இறைவன் அரக்கர்களை அழிப்பது தொடர்பில் ஆலோசிக்கின்றார். அழிப்பதென்றாலும் அதற்கும் திட்டம் தீட்டவேண்டும். இப்போதெல்லாம் யாழ்ப்பாணத்தில் எவரைக் கால்தட்டுபோட்டு வீழ்த்துவதாக இருந்தால் அவரை பெண்கள் சமாச்சாரத்துடன் ஈடுபடுத்தும் ஒருவகைப் பண்பாடு இருக்கிறது அல்லவா! அதுபோல தேவலோகத்திலும் இப்படியயாரு பண்பாடு.

சுந்தரர் பரவையாரை பார்த்ததும் இந்தப் பண் பாட்டிற்குள் அடங்கும். அந்தப் பண்பாடு அணுகு முறை இராவணனின் அழிப்புக்கும் பயன்படுத்தப்பட்டது. இராமரை சூர்ப்பனகை காண்பதன் ஊடாக இராவண சேனைக்கான அழிவு கருக்கட்டுகிறது ...அருந்துயில் துறந்த ஐயனைக் கண்டனள் தன் கிளைக்கு இறுதி காணுவாள் என்று கம்பன் கூறுகிறான். சூர்ப்பனகை இராமரைக் கண்டு மயங்க, லட்சு மணன் சூர்ப்பனகையின் மூக்கை அறுக்க, இராமாயணப் போர் தொடங்கி தேவர்களின் முறைப்பாட்டுக்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இது போன்றதுதான் இலங்கை விவகாரமும். வன்னியில் நடந்த கொடும்போர் இறைவா!... இறைவா... என்று மக்கள் செய்த முறைப்பாடு... அதற்கு இறைவன் இப்போது நடவடிக்கை எடுக்கத் தலைப்பட்டுவிட்டான். நடவடிக்கை எடுப்பதாக இருந்தாலும் அதில் ஒரு ஜனநாயகம் இருக்க வேண்டும். இலங்கை உட்பட 47 நாடுகள் கூடி மனித உரிமைபற்றி ஜெனிவாவில் ஆராய்கின்றன. மலையாக நம்பியிருந்த இந்தியா துரோகம் இழைத்த பின்பு, முடிந்தால் இந்த இறைவன் பார்த்துக் கொள்ளட்டும் என்றிருந்த ஈழத்தமிழ் மக்களின் பிரச்சினையை உலகின் அதி உன்னத வல்லரசான அமெரிக்கா தன்கையில் எடுத்துக் கொண்டது. எங்கள் பிரச்சினையை அமெரிக்கா கையில் எடுக்கும் என்று யாரும் நினைத்திலர். எல்லாம் அவன் செயல்.

இப்போது இலங்கை அரசுக்கு எதிரான தீர் மானத்தை ஜெனிவாவில் அமெரிக்கா கொண்டு வருகின்றது. தீர்மானம் வெற்றி தருமா? தோற்றுப்போகுமா? என்பதெல்லாம் தேவையற்ற விவாதம். அமெரிக்கா எடுத்த விவகாரம். அது பிசுபிசுத்து போனால் அமெரிக்காவுக்கு மானபங்கம் மட்டுமல்ல, உலகில் இனத்தால், மதத்தால், மொழியால் மக்கள் சமூகத்தை கசக்கிப்பிழியும் வன்மம் கொண்ட அரசுகளை கட்டுப்படுத்தவும் முடியாமல் போகும். ஜெனிவாத் தீர்மானம் தோற்றாலும் வென்றா லும் இலங்கை அரசு அன்றறுத்ததற்கு அமெரிக்கா நின்றறுக்கும். இதுதான் நிஜம்.

http://www.valampurii.com/online/viewnews.php?ID=27712

டில்லியின் ஆதரவைதிரட்ட இலங்கை ரகசியமாகப் பேச்சு; மூத்த இராஜதந்திரி அங்கு விரைவு

ஜெனிவா மாநாட்டில் புதுடில்லியின் ஆதரவைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் இந்தியாவுடன் இலங்கை அவசர இரகசிய மந்திராலோசனை நடத்தி வருகின்றது என நம்பகரமாகத் தெரியவருகின்றது. இலங்கை அரசுடன் தொடர்புடைய முக்கிய இராஜதந்திரி ஒருவரே டில்லி அரசின் முக்கியஸ்தர்களுடன் இது விடயம் தொடர்பில் பேச்சு நடத்தி வருகின்றார் என்றும் அறியமுடிகின்றது.

ஐ.நா.மனித உரி மைகள் சபையில் இலங்கைக்கு எதிரான பிரேரணையைத் தாம் எதிர்ப்போம் என இந்தியா முன்னதாக இலங்கையிடம் தனிப் பட்ட முறையில் உறுதி யளித்திருந்தது. எனினும், இலங்கைக்கு எதிரான பிரே ரணையை மத்திய அரசு ஆதரிக்க வேண்டும் எனத் தமிழ்நாட்டிலிருந்து தொடர்ச்சியா கப் பிரயோகிக்கப்பட்ட அழுத்தங்களை அடுத்து தனது நிலைப்பாட்டில் இந்தியா தளர்வுப் போக்கை கடைப்பிடிக்கத் தொடங்கியது.

இந்நிலையில், இலங்கைக்கு எதிரான பிரேரணை வாக் கெடுப்புக்கு விடப்படும் நாள் நெருங்கி வருவதால் இந்தியாவின் ஆதரவை உறு திப்படுத்தும் நோக்கிலேயே மேற்படி இராஜ தந்திரி பேச்சு களை முன்னெடுத்துள்ளார் என்று தெரியவரு கின்றது.

இந்திய மத்திய அரசின் மூத்த அமைச்சர்கள் இருவரைச் சந்தித்துப் பேசியுள்ள மேற்படி இராஜதந்திரி, பிராந்தியத்தின் ஸ்திரமான நிலையைத் தளர்வடையச் செய்யும் எந்தச் செயற்பாடுகளுக்கும் இந்தியா துணைபோகக்கூடாதென்றும் இதன் பிரகாரம் ஜெனிவாவில் இலங்கைக்கு ஆதரவாகச் செயற்படவேண்டிய தேவை பற்றியும் விரிவாக எடுத்துக் கூறியிருக்கிறார்கள் என்று அறியவருகிறது.

அதேசமயம், இலங்கைக்கு எதிரான பிரேரணை எதிர்வரும் 22 ஆம் திகதி வாக்கெடுப்புக்கு விடப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

  • கருத்துக்கள உறவுகள்

ஆதரிக்கப் போகிறோம் என்று சொல்லிவிட்டு, இறுதியில் பிரேரணையின் சில விடயங்களில் எமக்கு உடன்பாடில்லை என்றுகூறி எதிர்த்து வாக்களித்தால்??!! :rolleyes: :rolleyes: :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

ஆதரிக்கப் போகிறோம் என்று சொல்லிவிட்டு, இறுதியில் பிரேரணையின் சில விடயங்களில் எமக்கு உடன்பாடில்லை என்றுகூறி எதிர்த்து வாக்களித்தால்??!! :rolleyes: :rolleyes: :rolleyes:

சிதம்பரத்தின் நிலை கவலைக்கிடமாகும்

தமிழரது நிலையை சிதம்பரமும் ஆதரிக்க தள்ளப்படுவார்.

இந்திரா காங்கிரசுக்குள் மீண்டும் பிரிவுகள் வரும்.

அடுத்த வெற்றி எமக்கு.

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

ஆதரிக்கப் போகிறோம் என்று சொல்லிவிட்டு, இறுதியில் பிரேரணையின் சில விடயங்களில் எமக்கு உடன்பாடில்லை என்றுகூறி எதிர்த்து வாக்களித்தால்??!! :rolleyes: :rolleyes: :rolleyes:

எனக்குத் தெரிந்த இந்தியா!

4168304.jpg

  • கருத்துக்கள உறவுகள்

ஆதரிக்கப் போகிறோம் என்று சொல்லிவிட்டு, இறுதியில் பிரேரணையின் சில விடயங்களில் எமக்கு உடன்பாடில்லை என்றுகூறி எதிர்த்து வாக்களித்தால்??!! :rolleyes: :rolleyes: :rolleyes:

இதில ஏதோ ஒரு உள் குத்து இருக்குப் போல தான் எனக்கு தோனுது...இந்த அறிக்கை வந்து இப்ப இரண்டு நாள் ஆச்சு ஆனா சொறிலங்கன் அரசாங்கத்திடம் இருந்து ஒரு பதிலையும் கானும்............ :rolleyes: :rolleyes: :mellow:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.