Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கையில் பதற்றமான நிலை! தமிழர்கள் மீது வன்முறை ஏவப்படடும் அபாயம்!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

sandai.jpg

newsgif.gif

ஜெனீவாவில் சிறிலங்கா அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி , இலங்கைத் தீவில் பதற்றமான சூழலை தோற்றுவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிங்கள இனவாதிகளால், தமிழர்கள் மீது வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்படலாம் என்ற அச்சம் நிலை பரவியுள்ளதாக அறியமுகின்றது.

குறிப்பாக கொழும்பில் உள்ள தமிழ் மக்கள் தேவையான உணவு மற்றும் அடிப்படைப் பொருட்களை வாங்கி சேமித்து வருகின்றனர்.

தேவை நிமிர்த்தம் கொழுப்புக்கு வந்த பல தமிழ் மக்கள் சொந்த இடங்களுக்கு விரைந்து திரும்பி வருவதாக அறியமுடிகின்றது.

பல தமிழ் வர்த்தகர்கள் தங்களது கடைகளையோ நிறுவனங்களை பாதுகாப்பதற்குரிய முன்னேற்பாடுகளில் இறங்கியுள்ளதாக அறியமுடிகின்றது.

சிறிலங்காவில் உள்ள வெளிநாட்டுத் தூதர அதிகாரிகள், இது தொடர்பிலான தகவல்களை தமிழர் தரப்பு பிரதிநிதிகளிடம் இருந்து தொடர்சியாக பெற்று வருவதாக அறிமுடிகின்றது.

ஜெனீவாப் பிரேரணையினை முன்வைத்து, சிறிலங்கா அரசாங்கம் இனக்கலவரத்தை இலங்கைத்தீவில் ஏற்படுத்த முனைவதாக தமிழர் தரப்பு பிரதிநிதிகள் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

ஜெனீவாப் பிரேரணையூடாக இலங்கையின் இனநல்லிணக்கத்துக்கு சர்வதேசம் ஆபத்தினை ஏற்படுத்த விளைகின்றதென சிறிலங்கா அரச தரப்பு குற்றஞ்சாட்டியிருந்தது.

ஜெனீவாப் பிரேரணை, சிறிலங்கா இராணுவத்தினரை கூண்டில் ஏற்றத்திட்டம், மகிந்த ராஜபச்சவை மின்சாரக் கதிரையில் உட்கார வைக்க முயற்சி போன்ற முழக்கங்கள் தென்னிலங்கையெங்கும் ஒலிக்கவிடப்பட்டிருந்தன.

ஜெனீவாத் தீர்மானத்தால் பின்னடைவுகளையும், ஆபத்துக்களையும் சந்திக்கப் போகின்றவர்கள், இலங்கையில் வாழும் தமிழ் மக்களேயாவர் சிங்கள இனவாதிகளும் தொடர்சியாக குரலெழுப்பி வருகின்றனர்.

சிறிலங்கா அரசாங்கத்தின் ஆசீர்வாதத்துடன் மேற்கொள்ளப்பட்ட இத்தகைய போக்கு சிங்கள இனவாதத்தை மேலெழுச் செய்துள்ளதோடு, தமிழர்கள் மீதான வெறுப்புணர்வை மேலோங்கச் செய்துள்ளதாக சமூக அறிஞர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்

http://www.eeladhesa...lle-nachrichten

  • கருத்துக்கள உறவுகள்

இதுவும் உலகத்தை வெருட்ட எடுக்கப்படும் நடவடிக்கை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதுவும் உலகத்தை வெருட்ட எடுக்கப்படும் நடவடிக்கை.

இது உலக தமிழரை வெகுண்டு எழ வைக்கும் நடவடிக்கை. 

தமிழர் ஒன்பது கோடி.  சிங்களவன் வெறும் ஒன்றரை கோடி. 

மற்றும், வெளிநாடுகளில் இருக்கும் சிங்களவருக்கும், சிறி லங்கா தமிழ் கூலிகளுக்கும் ஆபத்து தான்.

வதந்திகளைப் பரப்பாமல் இருப்பது நல்லது.

முடிந்தளவு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தாயகத் தமிழர் எடுத்து வருகின்றனர்.

இந்தப் பிரேரினை நிறைவேற்றப் பட்டால் நாட்டில் காணப்படும் இன ஒற்றுமை பாதிக்கப் படுமேண்டு சிங்களவங்கள் ஏற்கனவே சொன்னவங்கள்.

இந்த நாசமறுப்பு அமேரிக்கா இதை கேளாமல் உதைக் கொண்டுவந்து சிங்களவங்களுக்கு சினத்தை கிளப்பி விட்டுட்டுது.

சிங்களவனுக்கு சினம் வந்தால் உலகம் தாங்காது... அகவே சிங்களவர்களின் மனதைப் புண்படுத்தும் வேலைகளை உலகம் உடனடியாக நிறுத்த வேண்டும்.

பொதுவாக இப்படிப்பட்ட இணையங்கள் மேலோட்டமாகச் செய்தியென்று எதையோ வெளியிட்டுவிட்டு புலம்யெபயர் தமிழர் சமூகத்தினை நாடி பிடித்துப் பார்க்கிறார்கள். இனக்கலவரம் என்பது இனியொருபோதும் சிறிலங்காவிற்குச் சாதகமாக இருக்கப்போவதில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.