Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அமெரிக்கா முன்வைத்த பிரேரணையால் ஈழத் தமிழர்களுக்கு விடுதலையை பெற்று கொடுக்காது!-பிரான்சு தமிழீழ மக்கள் பேரவை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா முன்வைத்த பிரேரணையால் ஈழத் தமிழர்களுக்கு விடுதலையை பெற்று கொடுக்காது!-பிரான்சு தமிழீழ மக்கள் பேரவை!

resize_20120322194913.jpg

அமெரிக்காவும் சிறிலங்காவும் கற்றுக்கொண்ட பாடங்கள்- நல்லிணக்க ஆணைக்குழு, ஜெனீவா மனிதவுரிமை பேரவையின் அமர்வில் கொண்டுவரப்பட்ட பிரேரணையும்சிறிலங்கா அரசு இந்திய ஆகிய நாடுகள் அமெரிக்க மனிதவுரிமை ஆணைக்குழுவில் முன்வைத்த பிரேரணையை பார்த்து அஞ்சுவது போன்ற பார்வையை எமக்கு அளித்து கொண்டு இருக்கிறார்கள்.

இந்த பிரேரணை தமிழர்களுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமை சபையில் ஒரு சிறு கதவு திறக்கப்பட்டுள்ளது என்ற பார்வையில் எமக்குள் நாம் ஒரு திருப்தியை ஏற்படுத்தி கொண்டாலும், இதற்காக அமெரிக்காவின் இந்த முயற்சிக்கு நாம் ஆதரவு குரல் கொடுத்தாலும் அமெரிக்க முன்வைத்து இருக்கும் பிரேரணையால் ஈழத் தமிழர்களுக்கு எவ்விதமான நீதியையும் விடுதலையையும் பெற்று கொடுக்காது என்பதை ஈழத் தமிழர்கள் ஆகிய நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

எமது போராட்டம் 64 வருடங்களாக வடக்கு கிழக்கு தமிழர்களின் தாயகம் என்றும் தமிழர்க்கு தேசிய வளங்கள் இருக்கிறது என்றும் சிறி லங்கா என்ற நாட்டிற்குள் சுதந்திரமாக வாழ முடியாத கட்டத்தில் அவர்கள் தமிழீழ மக்கள் அதற்குரிய அங்கீகாரத்தை கொடுக்கும் பட்சத்தில் தனியாக பிரிந்து சென்று தம்மை தாமே ஆளும் தன்னாட்சி உரிமை உள்ளது என்ற மனிதவுரிமை கோட்பாட்டுக்கு அமைய உருவான போராட்டத்தை எந்தவித உரிமைகளும் அற்ற வடக்கு கிழக்கு என்ற பிரிந்த மாகாணசபை கோட்பாட்டை தமிழர்கள் மேல் திணிக்கும் பிரேரணையாகவே நாம் பார்க்கவேண்டும்.

கற்றுக்கொண்ட பாடங்கள் - நல்லிணக்க ஆணைகுழு முன்வைத்த சில நல்ல கூற்றுக்கலாக பார்க்கப்படும் வட மாகாணத்தில் இருந்து ராணுவத்தை வெளியேற்ற வேண்டும், ஆயுதக் குழுக்களிடம் இருந்து ஆயுதங்களை அகற்றுவது போன்ற சில அறிவுரைகளை சிறி லங்கா அரசு நடைமுறை படுத்த வேண்டும் என்றும் இந்த பிரேரணையில் உள்ளது, தமிழர்கள் வாழும் பிரதேசங்கள் ஆகிய வடக்கு கிழக்கு மாகாணங்களில் ராணுவ மயப்படுத்தப்பட்டு இருக்கும் நிலையில் வட மாகாணத்தை மாத்திரம் முன்னிலை படுத்துவது என்பது வடக்கு மற்று கிழக்கு மாகாண தமிழர்களை பிரித்து பார்ப்பது போல்தான் உள்ளது.

இந்த நிலையில் பிரான்சில் இன்று அமெரிக்க மற்றும் பிரித்தானிய அரசுகளை இந்த நாடுகளின் தூதரகதிட்கு அண்மையில் பிரான்சு தமிழீழ மக்கள் பேரவையால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று ஒழுங்கு அமைக்கப்பட்டது. பல நூறு தமிழ் மக்கள் கலந்து கொண்ட இந்த கவனயீர்ப்பு போராட்டம் உணர்வு பூர்வமாக மகிந்த- கோத்தபயாவின் கொண்டும்பாவிகள் முன்வைக்கப்பட்டு சிறி லங்கா அரசு செய்த மனிதவுரிமை எதிராக செய்த கொடுமைகளை பதாதைகள் மூலம் காட்சியாக பார்வைக்கு முன்வைக்கப்பட்டு சிறி லங்கா அரசு தமிழர்களுக்கு செய்த கொடுமைகள் துண்டு பிரசுரங்கள் மூலம் மக்களுக்கு தெரிவிக்கப்பட்டது.

அத்துடன் அமெரிக்க தூதுவருக்கும் அமெரிக்க வெளிவிவகார துறை , வெளிநாட்டு அமைச்சர் திருமதி ஹிலாரி கிளிண்டன் அவர்களுக்கு அமெரிக்க அரசின் இந்த முயற்சியை வரவேற்றும் அதேநேரத்தில் ஈழத் தமிழர்கள் எந்த கண்ணோட்டத்தில் கற்று கொண்ட பாடங்கள் ஆணைக்குழுவை பார்கின்றது என்றும் அதனால் தமிழர்களுக்கு கிடைக்க கூடிய நன்மைகள் மற்றும் தீமைகள் என்ன வென்று சுற்றி காட்டி, சிறி லங்கா அரசுக்கு இந்த நடைமுறை படுத்த கொடுக்கப்படும் இந்த ஒரு வருட கால அவகாசம் சிறி லங்கா அரசு தான் ஆரம்பித்த சிங்கள காலனித்துவத்தை வேகப்படுத்த உதவும் என்றும் அமெரிக்க அரசிடம் தமிழர்கள் எதை எதிர் பார்கிறார்கள் என்பதை வலியுறுத்தி மனுவொன்று கையளிக்கப்பட்டது.

அத்துடன் ஈழத் தமிழர்கள் விழிப்பாக இருந்து எமது போராட்டத்தை வலுவுடன் நடாத்த வேண்டும் இல்லையேல் சர்வதேசம் தனது நோக்கத்தை எமது மக்களின் மேல் திணித்து விடும் என்றும் உலக நாடுகள் அரசுகளின் நலனை பாதுகாப்பதை நிறுத்தி ஐக்கிய நாடுகள் சபை உருவாக்கப்பட்ட முக்கிய நோக்கமாகிய மக்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என்று கூறி இந்த கவனயிர்ப்பு போராட்டம் முடிவுக்கு வந்தது.

y-frances%20%2818%29.jpg

y-frances%20%2822%29.jpg

y-frances%20%2817%29.jpg

y-frances%20%287%29.jpg

y-frances%20%2819%29.jpg

y-frances%20%2821%29.jpg

y-frances%20%2820%29.jpg

y-frances%20%2811%29.jpg

y-frances%20%2815%29.jpg

y-frances%20%2814%29.jpg

y-frances%20%2813%29.jpg

y-frances%20%2812%29.jpg

y-frances%20%2810%29.jpg

y-frances%20%289%29.jpg

y-frances%20%288%29.jpg

y-frances%20%286%29.jpg

y-frances%20%285%29.jpg

y-frances%20%283%29.jpg

y-frances%20%284%29.jpg

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த 3 வருடத்தில் சாதித்த விடங்களைப் பட்டியலிட்டால் இது அதிகம் தான்..

இதை அத்திவாரமாகக் கொள்வோம்.

ஒரே விஷயத்தை பல முறையில சொல்லலாம்.

இப்பிடியும் சொல்லலாம், முயற்சி செய்து சம்பந்தப் பட்டவர்களுடன் நெருங்கி அவர்களில் நோக்கத்தை அறிந்து அதுக்கு சமாந்தரமாக எங்கட நோக்கத்தையும் நகர்த்தலாம்.

பலம் இல்லாதவர்கள் ஆக்கப்பட்டு விட்டோம், உள்ளதையும் தொலைப்பதை விட சிறிதளவை காப்பாற்றி காலூன்ற முதலில் பார்ப்போம்.

சரி எங்கள் நிலத்தை காப்பாற்ற இதுவே முதல் வழி.

கொடுமைகள் ஜ.நா வில் பதியப்பட்டுள்ளது. சிங்களம் இனி இலங்கையில் அப்படி ஒன்றும் இல்லை என்று சொல்ல முடியாது.

சிறுபான்மை இனம் மீது கோடுரமாக நடந்து கொள்கிறார்கள் என்பது வெட்ட வெளிச்சம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.