Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழக மக்களின் தலையில் மிளகாய் அரைத்த சுமந்திரன்! (காணொளி)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

sumanthiran12-100x100.png

ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதும் அதனை எதிர்கொள்வதற்கு எவ்வாறான முனைப்புக்களை மேற்கொள்ளலாம், மக்களை எவ்வாறு வழிப்படுத்தலாம் போன்ற முனைப்புக்களில் அரசாங்கம் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்ற அதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது வழமையிலான பாணியில் அதனை வைத்து எவ்வாறு அரசியல் செய்யலாம் என்று செயற்படுவதற்கு முனைப்புக்காட்டி வருகின்றது.தீர்மானம் நிறைவேற்றபட்டு சில நிமிடங்களிலேயே தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் பெயரில் கையொப்பம் இடப்படாத அறிக்கை அனைத்து ஊடகங்களுக்கு அனுப்பப்பட்டதும் அன்றி, ஜெனீவாவில் தீர்மானம் நிறைவேறியதும் இப்போது புரிகிறதா? கூட்டமைப்பின் இராஜதந்திரம் என்று கேள்வி எழுப்பிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களும் இருக்கிறார்கள்.

சரியான நேரத்தில் தவறான முடிவு எடுத்த கூட்டமைப்பு

ஜெனீவாவில் தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு இறுதி நேரத்தில் இந்தியா எடுத்துக் கொண்ட முடிவும் ஒரு காரணம் என்றே நோக்கர்கள் குறிப்பிடுகின்றனர். இந்தியா அவ்வாறு தீர்மானம் எடுப்பதற்கு அடிப்படையில் தமிழகத்தின் ஒன்றுபட்ட எழுச்சிக்குரலே அடிப்படையாக அமைந்திருந்தது என்பதை மறுக்க முடியாது.

ஆனால் எமது நாட்டில் அவ்வாறான எழுச்சியினை தமிழ் மக்களால் மேற்கொள்ளமுடியாத சூழலே நிலவுகின்றது. ஆனால் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக தமிழ் மக்கள் தேர்ந்தெடுக்கின்ற தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு சரியான நேரத்தில் தவறான முடிவினையே எடுத்திருந்தது. ஜெனீவாத் தீர்மானத்தினை முறியடிப்பதற்கு அரசாங்கம் கடுமையான பிரயத்தனத்தினை மேற்கொண்டிருந்தது. முடிந்தவரையில் அரச இயந்திரம் ஜெனீவாச் சூறாவளியில் சுழன்றடித்திருந்தது. ஆனால் கூட்டமைப்பு அறிக்கைப் போர் செய்தது. குறிப்பாக ஜெனீவா செல்லாமைக்கான காரணங்களைத் தேடித் தேடி முரண்பட்ட கருத்துக்களை மக்களுக்குச் சொல்வதிலேயே குறியாக இருந்தது. ஜெனீவாக்களத்தில் கூட்டமைப்பு நின்றிருந்தால், அங்கு நடைபெற்ற பிரத்தியேக சந்திப்புக்களில் பங்கேற்று தமிழ் மக்களின் நியாயப்பாடுகளை விளக்கியிருக்கமுடியும்.

எமக்காக சர்வதேசம் கொண்டுவந்த தீர்மானத்தினை நிறைவேற்றுவதற்கு எங்களின் பிரதிநிதிகள் எம் மண்ணில் இருந்து செல்லவில்லையே? என்ற ஏக்கம் தமிழ்மக்கள் மத்தியில் வலுவாக எழுந்து நின்றது.

ஜெனீவாத் தீர்மானத்தினை ஆலோசித்து நடைமுறைப்படுத்தியதும் கூட்டமைப்பாம்(!)

ஜெனீவாத் தீர்மானத்தின் பின்னர் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் பின்னணில் தாமே இருந்தாகவும், கடந்த ஆண்டு நடைபெற்ற மனித உரிமைகள் கூட்டத் தொடரில் கனடா கொண்டுவர இருந்த தீர்மானம் பாரிய தாக்கத்தினை விளைவிக்கவல்லதாக அமைந்திருக்கவில்லை என்றும் அதனைக் கருத்தில் கொண்டே தற்போது நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கான ஏற்பாடுகளைத் தாமே மேற்கொண்டிருந்தாகவும் சாரப்பட தமிழக மக்களுக்கு கதை அவிழ்த்துவிட்டிருக்கின்றார் கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்.

நல்லிணக்க ஆணைக்குழு அற்புதமானது

சென்னை லயோலா கல்லூரியில் நடைபெற்ற கருத்தரங்கில் உரையாற்றிய சுமந்திரன் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையினை மிகவும் புகழ்ந்து தள்ளியிருக்கின்றார். சர்வதேச விசாரணை தேவையில்லை என்ற விடயத்தினைத் தவிர அற்புதமான பல விடயங்கள் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையில் இருப்பதாகக் குறிப்பிட்டிருக்கின்ற சுமந்திரன் அந்த அறிக்கையில் உள்ள விடயங்களை அறிமுகப்படுத்தினாலேயே போதும் என்ற தொனியிலும் உரையாற்றியிருக்கின்றார்.

நிபுணர்குழு அறிக்கையினை திசைதிருப்புவதற்காகவே நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை அரசினால் தயாரிக்கபட்டதாக குறிப்பிடுகின்ற சுமந்திரன், நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையில் மிகப் பிரியோசனமான பல விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருப்பதாகவும் சொல்லியிருக்கின்றார். அதேவேளை தொடக்கத்தில் தாமே அந்த அறிக்கை பொருத்தப்பாடற்ற ஒன்று என்று குறிப்பிட்டதாகவும் சுட்டிக்காட்டுகின்றார். ஆக, நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை தேவையானதா? தேவையற்றதா? என்ற கேள்விகளுக்கான தெளிவான பதில் அவரிடம் இருப்பதாகத் தெரியவில்லை.

உள்ளக சுயநிர்ணய உரிமைக்காகவே கூட்டமைப்புக்கு மக்கள் வாக்களித்தார்களாம்

இதேவேளை, இறுதியாக உள்ளக சுயநிர்ணய உரிமை தொடர்பிலான தீர்மானத்தின் அடிப்படையிலேயே தீர்வினை வலியுத்த வேண்டும் என்பதற்காவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு தமிழ் மக்கள் வாக்களித்திருக்கிறார்கள். ஒரு நாடு இருதேசம் என்ற கோரிக்கையினை முன்வைத்த ஒரு கட்சியினை மக்கள் புறக்கணித்ததாகவும் அவர்களால் ஒரு ஆசனத்தைக் கூட பெற்றுக்கொள்ளவில்லை என்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினை சுட்டிக்காட்டி சுமந்திரன் தமிழகத்தில் கருத்து வெளியிட்டிருக்கின்றார். அதனைவிடவும் உள்ளக சுயநிர்ணய உரிமை ஊடான தீர்வு எட்டப்படத் தவறினால் வெளியக சுயநிர்ணய உரிமையினை நோக்கி நகர்ந்து கருத்துக்கணிப்பு ஒன்றின் ஊடாகவே தீர்வினைப் பெற்றுக்கொள்ள முடியும். அதற்கான பணியினையும் நாங்கள் தான் செய்ய வேண்டும். அதற்கான வேலைகளை யாரும் செய்து தரமுடியாது என்றும் சுமந்திரன் தெரிவித்திருக்கின்றார். அவரிடம் கேட்கக்கூடிய கேள்வி, தற்போது மனித உரிமைகள் தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தினையும் நீங்கள் தானே செய்திருக்க வேண்டும், அவ்வாறு என்ன தான் செய்தீர்கள்? இவ்வாறு செய்வதற்காக ஜெனீவா செல்வதாக இருந்தால் இன்கலவரம் வெடிக்கும் என அஞ்சிய நீங்கள், தீர்வு பெற்றுத் தருவதற்கு சர்வசன வாக்கெடுப்பிற்காக சர்வதேசத்தினை நாடும்போது, சிங்களச் சகோரர்கள் உங்களுக்கு செங்கம்பளம் விரிப்பார்களா?

மனித உரிமைகள் கூட்டத் தொடரில் மனித உரிமை விடயங்கள் தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்காக சில நாட்டுப் பிரதிநிதிகளைச் சந்தித்து அந்த விடயங்கள் குறித்துக்கூட பேச்சு நடத்துவது அருவருக்கத்தக்க விடயம் போன்று ஒதுங்கிக் கொண்ட திரு.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியக சுயநிர்ண உரிமையினைக் கையிலெடுத்துக்கொண்டு சர்வதேசத்தினை நோக்கிச் செல்லும் என்ற கதையினை யாரை நம்பச் சொல்கிறார் சுமந்திரன்?

வெளியக சுயநிர்ணய உரிமை தொடர்பிலான நிலைப்பாட்டினை தாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை மூடிமறைப்பதற்காகவே, கடந்த தேர்தல்கள் தொடர்பிலான கதையினைக் கையிலெடுத்திருக்கின்றார் சுமந்திரன். கூட்டமைப்பு முன்வைத்த உள்ளக சுயநிர்ணய உரிமை தொடர்பிலான கொள்கையினை ஏற்றுக்கொண்டே தமிழ் மக்கள் கூட்டமைப்பிற்கு வாக்களித்ததாகச் சொல்கின்ற சுமந்திரன் வீம்புக்காக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினையும் இழுத்திருக்கின்றார்.

கூட்டமைப்பிற்கு ஏன் மக்கள் வாக்களிக்கிறார்கள்? சுமந்திரனுக்குப் புரியுமா?

வடக்கு – கிழக்குத் தமிழ்மக்களின் வாக்களிப்பு எந்தவகையில் அமைந்திருக்கின்றது என்பதை விளக்கமாக அவர் புரிந்து கொள்ளவேண்டிய கட்டாயம் அவருக்கு இருக்கின்றது. ஒன்று கொள்கை அடிப்படையில் வாக்களிப்பது மற்றையது உணர்வின் அடிப்படையில் வாக்களிப்பது. இங்கு உணர்வின் அடிப்படையில் வாக்களிக்கும் வீதம் தான் வடக்கு – கிழக்கில் உள்ள தமிழ் மக்களின் நிலைப்பாடாக இருக்கின்றது. தமிழீழ விடுதலைப்புலிகள் ஆதரித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களிக்கவேண்டும் என்ற நிலைப்பாடு தமிழ் மக்களிடம் இருந்ததே தவிர இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே தமிழ் மக்களின் உரிமையினை மீட்டுத்தரப்போகின்றது என்ற எண்ணப்பாட்டில் வாக்களிக்கவில்லை. அதனைவிடவும் கூட்டமைப்பு சமர்ப்பித்த உள்ளக சுயநிர்ணயம் தொடர்பிலான தீர்வினை உள்ளடக்கிய தேர்தல் விஞ்ஞாபனத்தை உட்கார்ந்து வாசித்து பகுத்தறிந்து சட்ட நுணுக்கங்களை ஆய்ந்து வாக்களிக்கவும் இல்லை.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியைச் சாடும் சுமந்திரன் தியாகங்களுக்குச் சவப்பெட்டி அடிக்கிறாரா?

ஒரு நாடு இரு தேசம் என்ற விடயத்தினை தமிழ் மக்கள் புறக்கணிப்பதாகத் தெரிவிக்கின்ற சுமந்திரன் இன்னொரு ஆபத்தான விடயத்தினையும் தனது உரையின் ஊடாக வெளிப்படுத்தி நிற்கின்றார். இனிவருகின்ற நெருக்கமான காலப் பகுதி ஈழத்தமிழ்மக்களுக்கான தீர்வினைப் பெற்றுத்தருவதற்கான உந்துதலான காலப்பகுதியாக அமையவிருக்கின்றது. இலங்கையில் இருக்கின்ற ஆட்சியாளர்கள் விரும்பியோ விரும்பாமலோ தமிழ்மக்களுக்கான தீர்வினை வழங்கவேண்டிய சமிக்ஞை மணியினை ஜெனீவாவில் அமெரிக்கா ஒலிக்கச் செய்திருக்கின்றது. இந்நிலையில் தீர்வினை வழங்குகின்ற அரசு தீர்வினைப் பெற்றுக் கொள்பவர்கள் கேட்கின்ற தீர்வில் இருந்து முடிந்தவரையில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு குறைவான தீர்வினையே வழங்குவதற்கான முயற்சியினை மேற்கொள்ளும் என்பது அனைவரும் விளங்கிக் கொள்ளக்கூடிய விடயமாகும். இந்நிலையில் அதிகாரம் கூடிய தீர்வினை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி முன்வைத்தது. அதனைத் தமிழ் மக்கள் நிராகரித்துவிட்டார்கள் என்று அரசாங்க அமைச்சர் ஒருவர் கூறுவது போல் புகழாங்கிதம் அடைந்து கூறுவது சுமந்திரனுக்கு பாரிய இனிப்பான செய்தியாக இருக்கலாம். ஆனால் சிந்திய உயிர்கள், தியாகங்கள் எல்லாவற்றுக்கும் சேர்த்து சவப்பெட்டி அடிக்கின்ற நடவடிக்கையாகத்தான் அது அமையும்.

இருக்கின்ற பற்றிப்பிடிப்பதே நோக்கம் என்பதை விட்டு, புதைக்கப்பட்ட புதைகுழிகளின் எண்ணிக்கைகளை திரும்பிப் பார்த்தால்.. இனிவருங்காலங்களிலாவது.. ஏதாவது செய்யலாம்…எம் இனத்திற்காக..

http://youtu.be/SJ7H8jNUUpw

http://www.saritham.com/?p=55311

  • கருத்துக்கள உறவுகள்

இவரை தமிழ்னாட்டில் பேச விட்டதே அங்குள்ள தமிழ் மக்களின் பிழை........இது ஒரு கொடிய விசப் பாம்பு......விரைவில் பல்லு பிடுங்கவேண்டும் .........

இது ஒரு கொடிய விசப் பாம்பு......விரைவில் பல்லு பிடுங்கவேண்டும் .........

  • கருத்துக்கள உறவுகள்

இவரை தமிழ்னாட்டில் பேச விட்டதே அங்குள்ள தமிழ் மக்களின் பிழை........இது ஒரு கொடிய விசப் பாம்பு......விரைவில் பல்லு பிடுங்கவேண்டும் .........

தோழர் யாராவது இவரை துரோகி என டிக்ளர் பண்ணாத்தான் ஏதாவது செய்ய முடியும்.. :) :)

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த தேர்த்தலில் கூட்டமைப்புக்கு மக்களின் ஆதரவு எந்தளவில் உள்ளது என்பதை வைத்து மக்கள் கூட்டமைப்பில் வைத்துள்ள நம்பிக்கையை சொல்லி விடலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.