stream_title_14
Showing all content posted in for the last 365 days.
- Past hour
-
கருத்து படங்கள்
- அமெரிக்காவின் 2ஆவது F-35 ரக அதிநவீன போர் விமானம் ஈரானால் சுட்டு வீழ்த்தப்பட்டது
இரண்டு அமெரிக்கப் போர் விமானங்களை சுட்டு வீழ்த்திய ஈரான்! ஈரான் மற்றும் வளைகுடா வான் பரப்பில் இரண்டு அமெரிக்கப் போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை அடுத்து, இரண்டு விமானிகள் மீட்கப்பட்டதாகவும், மூன்றாவது விமானி காணாமல் போயுள்ள நிலையில், அவரை தேடும் பணிகள் இடம்பெற்று வருவதாகவும் ஈரான் மற்றும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பும், பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்ஸெத்தும் வளைகுடா வான்வெளி மீது தங்கள் படைகளுக்கு முழுமையான கட்டுப்பாடு இருப்பதாகக் கூறி வரும் நிலையில், ஈரான் வான்பரப்பில் அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய விமானங்கள் இன்னமும் எதிர்கொள்ளும் அபாயங்களை இந்தச் சம்பவங்கள் அடிக்கோடிட்டுக் காட்டுவதாக அமைந்துள்ளன. இரு இருக்கைகள் கொண்ட முதல் அமெரிக்க F-15E ரக விமானம் ஈரானியத் தாக்குதலால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக இரு நாடுகளின் அதிகாரிகளும் தெரிவித்தனர். இரண்டாவது விமானமான, A-10 வார்ஹொக் (Warthog) ரகப் போர் விமானம் ஈரானியத் தாக்குதலுக்கு உள்ளாகி குவைத்தின் மீது விழுந்து நொறுங்கியதில், விமானி வெளியே குதித்ததாக இரண்டு அமெரிக்க அதிகாரிகள் கூறினர். ஈரானியத் தாக்குதலுக்கு உள்ளான போதிலும் குறித்த விமானங்கள் ஈரானிய வான்வெளியை விட்டு வெளியேறிவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது. விமானக் குழுவினருக்கு ஏற்பட்ட காயங்களின் அளவு தெளிவாகத் தெரியவில்லை. அதேநேரம், காணாமல் போன F-15E விமானக் குழு உறுப்பினரை தேடும் பணிகள் மும்முரமாக இடம்பெற்று வருகின்றன. ஈரானின் தென்மேற்குப் பகுதியில் எதிரியின் விமானம் விழுந்த இடத்திற்கு அருகிலுள்ள ஒரு பகுதியைத் தாங்கள் சல்லடை போட்டுத் தேடி வருவதாக ஈரானின் புரட்சிகரப் பாதுகாப்புப் படை கூறியுள்ளது. அதேநேரம், எதிரியின் படைகளை பிடிப்பவர்கள் அல்லது அவர்களை கொல்பவர்களுக்குப் பாராட்டு வழங்கப்படும் என்று பிராந்திய ஆளுநர் உறுதியளித்தார். https://athavannews.com/2026/1470940- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2026
# Question Team1 Team 2 Prediction 1) மார்ச் 28, சனி, 14:00 UK, பெங்களூரு, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs சன்ரைசர்ஸ் ஐதராபாத் RCB SRH RCB 2) மார்ச் 29, ஞாயிறு, 15:00 UK, மும்பை, மும்பை இந்தியன்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் MI KKR MI 3) மார்ச் 30, திங்கள், 15:00 UK, குவஹாத்தி, ராஜஸ்தான் ராயல்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் RR CSK RR 4) மார்ச் 31, செவ்வாய், 15:00 UK, முலான்பூர், பஞ்சாப் கிங்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் PBKS GT PBKS 5) ஏப்ரல் 1, புதன், 15:00 UK, லக்னோ, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் LSG DC DC 6) ஏப்ரல் 2, வியாழன், 15:00 UK, கொல்கத்தா, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs சன்ரைசர்ஸ் ஐதராபாத் KKR SRH SRH 7) ஏப்ரல் 3, வெள்ளி, 15:00 UK, சென்னை, சென்னை சூப்பர் கிங்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் CSK PBKS PBKS 8) ஏப்ரல் 4, சனி, 11:00 UK, டெல்லி, டெல்லி கேப்பிட்டல்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் DC MI MI 9) ஏப்ரல் 4, சனி, 15:00 UK, அஹமதாபாத், குஜராத் டைட்டன்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் GT RR RR 10) ஏப்ரல் 5, ஞாயிறு, 11:00 UK, ஐதராபாத், சன்ரைசர்ஸ் ஐதராபாத் vs லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் SRH LSG SRH 11) ஏப்ரல் 5, ஞாயிறு, 15:00 UK, பெங்களூரு, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs சென்னை சூப்பர் கிங்ஸ் RCB CSK RCB 12) ஏப்ரல் 6, திங்கள், 15:00 UK, கொல்கத்தா, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் KKR PBKS PBKS 13) ஏப்ரல் 7, செவ்வாய், 15:00 UK, குவஹாத்தி, ராஜஸ்தான் ராயல்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் RR MI MI 14) ஏப்ரல் 8, புதன், 15:00 UK, டெல்லி, டெல்லி கேப்பிட்டல்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் DC GT DC 15) ஏப்ரல் 9, வியாழன், 15:00 UK, கொல்கத்தா, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் KKR LSG KKR 16) ஏப்ரல் 10, வெள்ளி, 15:00 UK, குவஹாத்தி, ராஜஸ்தான் ராயல்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு RR RCB RCB 17) ஏப்ரல் 11, சனி, 11:00 UK, முலான்பூர், பஞ்சாப் கிங்ஸ் vs சன்ரைசர்ஸ் ஐதராபாத் PBKS SRH PBKS 18) ஏப்ரல் 11, சனி, 15:00 UK, சென்னை, சென்னை சூப்பர் கிங்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் CSK DC CSK 19) ஏப்ரல் 12, ஞாயிறு, 11:00 UK, லக்னோ, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் LSG GT GT 20) ஏப்ரல் 12, ஞாயிறு, 15:00 UK, மும்பை, மும்பை இந்தியன்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு MI RCB MI 21) ஏப்ரல் 13, திங்கள், 15:00 UK, ஐதராபாத், சன்ரைசர்ஸ் ஐதராபாத் vs ராஜஸ்தான் ராயல்ஸ் SRH RR SRH 22) ஏப்ரல் 14, செவ்வாய், 15:00 UK, சென்னை, சென்னை சூப்பர் கிங்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் CSK KKR CSK 23) ஏப்ரல் 15, புதன், 15:00 UK, பெங்களூரு, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் RCB LSG RCB 24) ஏப்ரல் 16, வியாழன், 15:00 UK, மும்பை, மும்பை இந்தியன்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் MI PBKS MI 25) ஏப்ரல் 17, வெள்ளி, 15:00 UK, அஹமதாபாத், குஜராத் டைட்டன்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் GT KKR GT 26) ஏப்ரல் 18, சனி, 11:00 UK, பெங்களூரு, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs டெல்லி கேப்பிட்டல்ஸ் RCB DC RCB 27) ஏப்ரல் 18, சனி, 15:00 UK, ஐதராபாத், சன்ரைசர்ஸ் ஐதராபாத் vs சென்னை சூப்பர் கிங்ஸ் SRH CSK SRH 28) ஏப்ரல் 19, ஞாயிறு, 11:00 UK, கொல்கத்தா, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் KKR RR RR 29) ஏப்ரல் 19, ஞாயிறு, 15:00 UK, நியூ சண்டிகார், பஞ்சாப் கிங்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் PBKS LSG PBKS 30) ஏப்ரல் 20, திங்கள், 15:00 UK, அஹமதாபாத், குஜராத் டைட்டன்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் GT MI MI 31) ஏப்ரல் 21, செவ்வாய், 15:00 UK, ஐதராபாத், சன்ரைசர்ஸ் ஐதராபாத் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் SRH DC SRH 32) ஏப்ரல் 22, புதன், 15:00 UK, லக்னோ, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் LSG RR RR 33) ஏப்ரல் 23, வியாழன், 15:00 UK, மும்பை, மும்பை இந்தியன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் MI CSK MI 34) ஏப்ரல் 24, வெள்ளி, 15:00 UK, பெங்களூரு, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs குஜராத் டைட்டன்ஸ் RCB GT RCB 35) ஏப்ரல் 25, சனி, 11:00 UK, டெல்லி, டெல்லி கேப்பிட்டல்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் DC PBKS PBKS 36) ஏப்ரல் 25, சனி, 15:00 UK, ஜெய்பூர், ராஜஸ்தான் ராயல்ஸ் vs சன்ரைசர்ஸ் ஐதராபாத் RR SRH SRH 37) ஏப்ரல் 26, ஞாயிறு, 11:00 UK, அஹமதாபாத், குஜராத் டைட்டன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் GT CSK CSK 38) ஏப்ரல் 26, ஞாயிறு, 15:00 UK, லக்னோ, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் LSG KKR KKR 39) ஏப்ரல் 27, திங்கள், 15:00 UK, டெல்லி, டெல்லி கேப்பிட்டல்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு DC RCB RCB 40) ஏப்ரல் 28, செவ்வாய், 15:00 UK, நியூ சண்டிகார், பஞ்சாப் கிங்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் PBKS RR PBKS 41) ஏப்ரல் 29, புதன், 15:00 UK, மும்பை, மும்பை இந்தியன்ஸ் vs சன்ரைசர்ஸ் ஐதராபாத் MI SRH MI 42) ஏப்ரல் 30, வியாழன், 15:00 UK, அஹமதாபாத், குஜராத் டைட்டன்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு GT RCB RCB 43) மே 1, வெள்ளி, 15:00 UK, ஜெய்பூர், ராஜஸ்தான் ராயல்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் RR DC DC 44) மே 2, சனி, 15:00 UK, சென்னை, சென்னை சூப்பர் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் CSK MI MI 45) மே 3, ஞாயிறு, 11:00 UK, ஐதராபாத், சன்ரைசர்ஸ் ஐதராபாத் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் SRH KKR SRH 46) மே 3, ஞாயிறு, 15:00 UK, அஹமதாபாத், குஜராத் டைட்டன்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் GT PBKS PBKS 47) மே 4, திங்கள், 15:00 UK, மும்பை, மும்பை இந்தியன்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் MI LSG MI 48) மே 5, செவ்வாய், 15:00 UK, டெல்லி, டெல்லி கேப்பிட்டல்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் DC CSK CSK 49) மே 6, புதன், 15:00 UK, ஐதராபாத், சன்ரைசர்ஸ் ஐதராபாத் vs பஞ்சாப் கிங்ஸ் SRH PBKS PBKS 50) மே 7, வியாழன், 15:00 UK, லக்னோ, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு LSG RCB RCB 51) மே 8, வெள்ளி, 15:00 UK, டெல்லி, டெல்லி கேப்பிட்டல்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் DC KKR DC 52) மே 9, சனி, 15:00 UK, ஜெய்பூர், ராஜஸ்தான் ராயல்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் RR GT RR 53) மே 10, ஞாயிறு, 11:00 UK, சென்னை, சென்னை சூப்பர் கிங்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் CSK LSG CSK 54) மே 10, ஞாயிறு, 15:00 UK, ராய்பூர், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs மும்பை இந்தியன்ஸ் RCB MI MI 55) மே 11, திங்கள், 15:00 UK, தர்மசாலா, பஞ்சாப் கிங்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் PBKS DC PBKS 56) மே 12, செவ்வாய், 15:00 UK, அஹமதாபாத், குஜராத் டைட்டன்ஸ் vs சன்ரைசர்ஸ் ஐதராபாத் GT SRH SRH 57) மே 13, புதன், 15:00 UK, ராய்பூர், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் RCB KKR RCB 58) மே 14, வியாழன், 15:00 UK, தர்மசாலா, பஞ்சாப் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் PBKS MI MI 59) மே 15, வெள்ளி, 15:00 UK, லக்னோ, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் LSG CSK LSG 60) மே 16, சனி, 15:00 UK, கொல்கத்தா, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் KKR GT GT 61) மே 17, ஞாயிறு, 11:00 UK, தர்மசாலா, பஞ்சாப் கிங்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு PBKS RCB PBKS 62) மே 17, ஞாயிறு, 15:00 UK, டெல்லி, டெல்லி கேப்பிட்டல்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் DC RR DC 63) மே 18, திங்கள், 15:00 UK, சென்னை, சென்னை சூப்பர் கிங்ஸ் vs சன்ரைசர்ஸ் ஐதராபாத் CSK SRH SRH 64) மே 19, செவ்வாய், 15:00 UK, ஜெய்பூர், ராஜஸ்தான் ராயல்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் RR LSG RR 65) மே 20, புதன், 15:00 UK, கொல்கத்தா, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் KKR MI MI 66) மே 21, வியாழன், 15:00 UK, சென்னை, சென்னை சூப்பர் கிங்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் CSK GT CSK 67) மே 22, வெள்ளி, 15:00 UK, ஐதராபாத், சன்ரைசர்ஸ் ஐதராபாத் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு SRH RCB SRH 68) மே 23, சனி, 15:00 UK, லக்னோ, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் LSG PBKS PBKS 69) மே 24, ஞாயிறு, 11:00 UK, மும்பை, மும்பை இந்தியன்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் MI RR MI 70) மே 24, ஞாயிறு, 15:00 UK, கொல்கத்தா, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் KKR DC DC 71) குழுநிலைப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 8 புள்ளிகள் கிடைக்கலாம்) CSK Select DC Select GT Select KKR Select LSG Select MI MI PBKS PBKS RR Select RCB RCB SRH SRH 72) குழுநிலைப் போட்டிகளில் முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. (அதிக பட்சம் 10 புள்ளிகள் கிடைக்கலாம்) #1 - ? (4 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக MI #2 - ? (3 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக PBKS #3 - ? (2 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக SRH #4 - ? (1 புள்ளி) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக RCB 73) குழுநிலைப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 2 புள்ளிகள் வழங்கப்படும்! மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக LSG 74) செவ்வாய் 26 மே 15:00 UK, Venue TBC - Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (4 புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team MI 75) புதன் 27 மே 15:00 UK, Venue TBC - Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (4 புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team SRH 76) வெள்ளி 29 மே 15:00, Venue TBC - Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (4புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator PBKS 77) ஞாயிறு 31 மே 15:00 UK, பெங்களூரு - இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (7 புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2 MI 78) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) SRH 79) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) LSG 80) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Shreyas Iyer 81) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், இதற்கான பதில் கேள்வி 80 க்கான வீரரின் அணியாக இருக்கவேண்டிய அவசியமில்லை! ) PBKS 82) இந்த தொடரில் அதிக விக்கெட்டுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Arshdeep Singh 83) இந்த தொடரில் அதிக விக்கெட்டுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், இதற்கான பதில் கேள்வி 82 க்கான வீரரின் அணியாக இருக்கவேண்டிய அவசியமில்லை! ) PBKS 84) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள் ) Mitchell Marsh 85) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், இதற்கான பதில் கேள்வி 84 க்கான வீரரின் அணியாக இருக்கவேண்டிய அவசியமில்லை! ) LSG 86) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட்டுகள் (Best Bowling Figures) எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Mohammed Siraj 87) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட்டுகள் (Best Bowling Figures) எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், இதற்கான பதில் கேள்வி 86 க்கான வீரரின் அணியாக இருக்கவேண்டிய அவசியமில்லை! ) GT 88) இந்த தொடரில் மிக மதிப்பான ஆட்டக்காரர் (Most Valuable Player) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Ishan Kishan 89) இந்த தொடரில் மிக மதிப்பான ஆட்டக்காரர் (Most Valuable Player) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், இதற்கான பதில் கேள்வி 88 க்கான வீரரின் அணியாக இருக்கவேண்டிய அவசியமில்லை! ) SRH 90) இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) CSK- பிள்ளையானை மீண்டும் தடுப்புக்காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு!
அதுமட்டுமா? முதலமைச்சர் பதவி, கூட்டம், உரை. பலி கொடுக்கப்போகும் கடாவுக்கும் வெட்டுவதற்கு முதல் மாலை சந்தணம் தூபம் காட்டப்படுவதுண்டு. பாவம் இந்த உளறுவாயன் கம்மன்பில! அவர் எதற்காக கைது செய்யப்பட்டால் இவருக்கு என்ன? ஏன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் என அலறுகிறார்? ஏன் விசாரணைகளில் தலையிடுகிறார்? சந்திரகாந்தனுக்கு எதிராக அவரோடு இயங்கியவர்களே சாட்சி வழங்கியுள்ளார்கள். இவர் ஏன் இப்படி துடிக்கிறார்? இதில் ஏதோ மர்மம் இருக்கிறது இவருக்குப்பின்னால். இவருக்கு பதட்டத்தில் பைத்தியம் பிடித்து முன்னுக்கு பின் முரணாக உளறுகிறார்.- Today
- பிள்ளையானை மீண்டும் தடுப்புக்காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு!
கொலை குற்றவாளிக்கு சிறப்பான பிறந்தநாள்..சிறையில் கொண்டாடலாம் என்றால் ...டை அடிப்பு பெரிய விசயமா...ஆளைப்பார்க்க 2 வருசம் சிறையில் இருப்பவர் மாதிரியா இருக்கு.... வசந்தமாளிகை சிவாசி மாதிரி இருக்கு- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .- விடுதலைப்புலிகளுக்கே அஞ்சாத புலனாய்வாளர்கள் ..! நாமல் வெளியிட்ட தகவல்
ராஜபக்ஸாக்களுடைய கொலை, கொள்ளை, ஊழல் வெளிவரும்போது விடுதலைப்புலிகளை கோர்த்து தம்மை மறைக்கப்பார்ப்பது ராஜ பாக்ஸர்களின் தந்திரம். அது இனிமேல் எடுபடாது. சரி, உங்கள் படைகள் நிஞாயமாக போர் புரிந்திருந்தால் சர்வதேச போர்க்குற்ற விசாரணைக்கு அனுமதியுங்கள் பார்க்கலாம்? அப்போ, எமது இராணுவ வீரர்களை சர்வதேசத்திற்கு காட்டிக்கொடுக்கிறார்கள் என்று கூவுவீர்கள். சர்வதேசத்திற்கு முன் விசாரணையை விரும்பாத நீங்கள், அவர்களை வைத்து ஒரு படுகொலையை செய்துள்ளீர்கள் என்பதை தானாகாவே ஏற்றுக்கொள்கிறீர்கள். நீங்களே இராணுவ வீரரை காட்டிக்கொடுத்துள்ளீர்கள், வேறொருவரும் தேவையில்லை அவர்களை காட்டிக்கொடுப்பதற்கு. இராணுவவீரருக்காக நானே தூக்கில் தொங்குவேனென வீர வசனம் பேசி அவர்கள் எத்தகைய குற்றமிழைத்துள்ளனர் என ஏற்றுக்கொண்டார் இவரின் தந்தையார். அதன்பின் தேர்தல் காலங்களில் தன்னை வெல்ல வைக்காவிட்டால் என்னை மின்சாரக்கதிரையில் ஏற்றிவிடுவார்கள் எனக்கூறி தன் குற்றத்தை ஒப்புக்கொண்டவரும் அவரே. இப்போ, கொலைக்குற்றவாளிகளை விசாரிக்கும் போது இவர்கள் ஏன் பதறித்துடிக்கிறார்கள்? அவர்கள் குற்றம் இழைக்காதவர்கள் என்றால், இந்த கலக்கம் கதை எல்லாம் தேவையில்லையே? இவர்களுக்கு நீதித்துறையில் நம்பிக்கை இல்லை என்றால், இவர்கள் எப்படி தமிழருக்கெதிரான இராணுவத்தினரின் கொடுமைகளை விசாரிக்க முடியும்? அப்போ, சர்வதேச விசாரணைதான் சரியானது. அதற்கு ராஜபக்சக்கள் ஒத்துக்கொள்வார்களா? ம்..... எதிர்கால ஆட்சிக்கனவுதான் விசாரணை என்றவுடன் இவ்வளவு கலக்கம் இவருக்கு.- தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்
நான் விஜய்யின் சினிமா ரசிகர் இல்லை, வசீ. அஜித்தின் ரசிகரும் இல்லை, ரஜனியின் ரசிகரும் இல்லை. கமலின் ரசிகரும் இல்லை. ஆனால் கமலின் படங்களை சிரமப்பட்டாவது பார்ப்பேன். போன வாரம் கூட ஒரு அலைவரிசையில் கமலின் 'உத்தம வில்லன்' போய்க் கொண்டிருந்தது. அப்படியே உட்கார்ந்து பார்த்து முடித்தேன். இது முன்னரே நான் தியேட்டரில் பார்த்த படம் தான். விழலுக்கு இறைத்த நீர் என்று தான் கமலின் பல நேர்மையான சினிமா முயற்சிகளை சொல்லவேண்டும். அவருடைய சினிமா முயற்சிகளுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்று நினைக்கின்றேன். ஆனால் கமலின் அரசியல் பிரவேசத்தை, அரசியல் நடவடிக்கைகளை மிகவும் விமர்சித்தே எழுதி வருகின்றேன். விஜய்யிடம் இருக்கும் அரசியல் முதிர்ச்சியின்மை, அவர் காட்டும் தவறான முன்னுதாரணங்கள், மேம்போக்கான பார்வைகள், இப்படியான பல காரணங்களாலேயே நான் அவருடைய அரசியலை விமர்சிக்கின்றேன். தனிப்பட்ட ரீதியில் விஜயையோ அல்லது எவரையுமோ வெறுப்பதும் இல்லை; எவருக்கும் ரசிகனாக இருந்து, அந்த தனி மனிதனின் நடவடிக்கைகள் எல்லாவற்றையும் ஆதரிக்கும் மனமும் கிட்டவில்லை. ஞானபீட விருது விவகாரத்தில் வைரமுத்துவின் படைப்புகளையும், நடவடிக்கைகளையும் நான் விமர்சித்து இருந்ததும் இதே வகையே. கீழே இருப்பது சேரன் அவருடைய எக்ஸ் தளக் கணக்கில் நேற்று விஜய்யின் அரசியல் பற்றி எழுதியிருப்பது: நீங்கள் ஒரு புதிய கட்சியைத் தொடங்கி மக்களிடம் வாக்கு கேட்டு வந்தால், மக்களுக்கு என்ன பிரச்சனை, அதை உங்கள் கட்சி எப்படித் தீர்க்கும், நாட்டில் நீங்கள் என்ன மாற்றங்களைக் கொண்டு வர முடியும்… அதற்காக உங்களிடம் என்ன திட்டங்கள் உள்ளன என்பதைப் பற்றி நீங்கள் பேச வேண்டுமா, அல்லது ஸ்டாலின் ஆட்சிக்கு வர வேண்டுமா அல்லது நீங்கள் வர வேண்டுமா என்று கேட்டால் மட்டும் போதுமா? ஒரு நாட்டை ஆள அந்தத் தகுதி போதுமானதா? உங்கள் இருவருக்கும் என்ன பிரச்சனை என்று எங்களுக்குத் தெரியாது… உங்கள் ரசிகர்களுக்குக் கூடத் தெரியாது என்று நினைக்கிறேன். எதுவாக இருந்தாலும், இது எப்போதும் இந்த இரண்டு கட்சிகளுக்கு இடையேயான போட்டியாகவே முடியும்… எனவே, திமுக மீது உங்களுக்கு என்ன கோபம் இருக்கிறது என்று சொல்லுங்கள், விஜய்… நாங்கள் உங்களையும் ஆதரிப்போம். நீங்கள் எதுவும் சொல்லாமல் சினிமா வசனங்களை மட்டும் பேசிக்கொண்டிருந்தால், உங்களுக்கு ஏன் வாக்களிக்க வேண்டும் என்று மக்கள் கேட்கத்தான் போகிறார்கள். இங்கே, ஐம்பது ஆண்டுகளாக நிலைத்திருக்கும் கட்சிகள் ஏராளமாக உள்ளன, மேலும் பதினைந்து ஆண்டுகளாக மக்களுடன் களத்தில் நின்று, புதிய மாற்றங்களுடன் தமிழ்நாட்டை மறுவடிவமைக்க மக்களிடமிருந்து வாக்குகளைச் சேகரித்து வரும் கட்சிகளும் உள்ளன. அந்தக் கட்சிகளை விட நீங்கள் உயர்ந்தவர் என்று எந்த வகையில் உரிமை கோர முடியும்? எந்தப் போராட்டத்தில் நீங்கள் மக்களுக்காக மக்களுடன் நின்று, இது இந்த இரண்டு கட்சிகளுக்கு இடையேயான சண்டை மட்டுமே என்று கூறியிருக்கிறீர்கள்? ‘ மனசாட்சி இல்லாமல், எப்படி நீங்கள் ஒரு மக்கள் தலைவராக ஆவீர்கள், விஜய்? முதலில், கடின உழைப்பை மதியுங்கள்… உங்கள் கவர்ச்சி மட்டுமே மக்கள் அரசியல் ஆகாது. இனிமேல், மக்களிடம் வெறும் வீரதீர வார்த்தைகளை முழங்குவதற்குப் பதிலாக, உங்கள் கட்சியின் கொள்கைகளையும் திட்டங்களையும் எல்லா இடங்களிலும் முறையாகப் பேசுங்கள். ஒவ்வொரு தொகுதியிலும் என்ன பிரச்சனை என்பதை ஆராய்ந்து படியுங்கள்… பொதுவாக வீரதீரச் செயல்களில் ஈடுபடுவது போலப் பேசுவது—இது ஒரு நகைச்சுவை மேடை அல்ல, இது மக்களின் களம். நாம் ஏற்கனவே 50 ஆண்டுகளை இழந்துவிட்டோம். இப்போது வந்து ஆட்டத்தைக் கெடுக்காதீர்கள். மக்களின் பிரச்சனைகளை உணராத இன்னொரு முதலமைச்சர் எங்களுக்கு மீண்டும் வேண்டாம். மக்களுடன் ஒருவராக நின்று, எங்களுக்கும் எங்கள் இளைய தலைமுறைக்கும் வழிகாட்டும் ஒரு தலைமைதான் எங்களுக்கு வேண்டும்.- Yesterday
- ஈரான் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!
- அமெரிக்காவின் 2ஆவது F-35 ரக அதிநவீன போர் விமானம் ஈரானால் சுட்டு வீழ்த்தப்பட்டது
இன்றைய தாக்குதலில் ஈரான், இரண்டு இராணுவ விமானங்களை - எஃப்-15 மற்றும் ஏ-10 - வீழ்த்தியுள்ளது, மேலும் இரண்டு பிளாக்ஹாக் ( Blackhawk) உலங்குவானொர்திகளுக்கு சேதத்தை எற்படித்தியுள்ளது.- பிள்ளையானை மீண்டும் தடுப்புக்காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு!
என்னையா இது… கிழக்கின் மண்டேலாவை… பிடல் கஸ்ரோ ஆக்கி வச்சிருக்கிறியள்😂- முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம்
எனது அபிப்பிராயமும் அதுவே.- தனியார் கடன் குறித்த அச்சங்கள், கடன்களைத் திரும்பப் பெறுவதற்கான வரம்புகளையும், கடன் வழங்குவதைக் கடுமையாக்குவதையும் தூண்டுகின்றன.
ஏப்ரல் 2 - தனியார் கடன் சந்தையில் நிலவும் பதற்றம் வால் ஸ்ட்ரீட்டிலும் எதிரொலித்துள்ளது. பல நிதி நிறுவனங்கள் கடன் திரும்பப் பெறுவதற்கு வரம்பு விதித்துள்ளதோடு, சில முக்கிய அமெரிக்க வங்கிகள் 2 டிரில்லியன் டாலர் மதிப்பிலான இத்துறைக்குக் கடன் வழங்குவதையும் கடுமையாக்கியுள்ளன. மதிப்பீடுகள் மற்றும் வெளிப்படைத்தன்மை குறித்த பிரச்சினைகளாலும், அத்துடன் வாகன உதிரிபாகங்கள் வழங்கும் ஃபர்ஸ்ட் பிராண்ட்ஸ் மற்றும் கார் விற்பனையகமான டிரைகலர் ஆகியவற்றின் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய திவால் நடவடிக்கைகளாலும் சந்தை மனநிலை மோசமடைந்துள்ளது. மூடிஸ் நிறுவனத்தின்படி, டிசம்பர் 31 நிலவரப்படி, அமெரிக்க வங்கிகள், வைப்புத்தொகை அல்லாத நிதி நிறுவனங்களுக்கு கிட்டத்தட்ட 348 பில்லியன் டாலர் கடன்களையும், தனியார் பங்கு நிதிகளுக்கு மேலும் 341 பில்லியன் டாலர் கடன்களையும் வழங்கியிருந்தன. செயற்கை நுண்ணறிவில் ஏற்பட்டுள்ள விரைவான முன்னேற்றங்கள் பாரம்பரிய வணிக மாதிரிகளைச் சீர்குலைக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்துவதால், மாற்றுச் சொத்து மேலாளர்கள் சொந்தமாக வைத்திருக்கும் அல்லது நிதியளிக்கும் மென்பொருள் நிறுவனங்களின் மதிப்பீடு குறித்த கவலைகளுக்கு மத்தியில், இந்த ஆண்டு அவர்களின் பங்குகளும் சரிவைச் சந்தித்துள்ளன. வால் ஸ்ட்ரீட்டின் மிகப்பெரிய வங்கிகள் மற்றும் தனியார் கடன் நிதியங்களின் சமீபத்திய நடவடிக்கைகளில் சிலவற்றின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: நீல ஆந்தை தனியார் மூலதன நிறுவனம் ப்ளூ அவுல் கேப்பிட்டல் (OWL.N), புதிய தாவலில் திறக்கிறதுமீட்புக் கோரிக்கைகள் திடீரென அதிகரித்ததைத் தொடர்ந்து, சில்லறை முதலீட்டாளர்களை மையமாகக் கொண்ட இரண்டு நிதிகளிலிருந்து பணம் எடுப்பதற்கு வரம்பு விதிக்கப்படும் என்று ஏப்ரல் 2 அன்று அறிவித்தது . தொழில்நுட்பத்தை மையமாகக் கொண்ட ப்ளூ அவுல் டெக்னாலஜி இன்கம் கார்ப் (OTIC) நிறுவனத்தின் 40.7% பங்குகளையும், அதைவிடப் பெரிய நிதியான ப்ளூ அவுல் கிரெடிட் இன்கம் கார்ப் (OCIC) நிறுவனத்தின் 21.9% பங்குகளையும் முதலீட்டாளர்கள் திரும்பப் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர். ப்ளூ அவுல் நிறுவனம் , முதலீட்டாளர்களுக்கு மூலதனத்தைத் திருப்பிக் கொடுக்கவும் கடனைக் குறைக்கவும், தனது மூன்று கடன் நிதிகளிலிருந்து 1.4 பில்லியன் டாலர் மதிப்புள்ள சொத்துக்களை விற்பனை செய்வதாகவும், மேலும் அந்த நிதிகளில் ஒன்றில் மீட்பு நடவடிக்கைகளை நிரந்தரமாக நிறுத்தியதாகவும் பிப்ரவரி மாத இறுதியில் அறிவித்தது . "நாங்கள் சலுகைகளைப் பெறுவதை நிறுத்தவில்லை, அவற்றை வழங்கும் முறையை மட்டுமே மாற்றுகிறோம்," என்று ப்ளூ அவுல் நிறுவனத்தின் இணைத் தலைவர் கிரேக் பேக்கர் அப்போது கூறியிருந்தார். ஜேபிமோர்கன் சேஸ் அமெரிக்காவின் மிகப்பெரிய வங்கி (JPM.N), புதிய தாவலில் திறக்கிறதுமென்பொருள் நிறுவனங்களைச் சுற்றியுள்ள சந்தைக் கொந்தளிப்பின் தாக்கத்தை ஆய்வு செய்த பின்னர், தனியார் கடன் நிதிகளுக்கு வழங்கப்பட்ட சில கடன்களின் மதிப்பை அது குறைத்துள்ளது என்று, நிலைமை குறித்து அறிந்த இருவரை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் கடந்த வாரம் செய்தி வெளியிட்டது . ஜேபிமோர்கன் தனது நிதியளிப்புத் தொகுப்பை - பெயர் வாரியாகவும் பின்னர் துறை வாரியாகவும் - ஆய்வு செய்து, மென்பொருள் சார்ந்த கடன்கள் போன்றவற்றுக்கு வெவ்வேறு தரமதிப்பீடுகளை வழங்கியது என அந்த வட்டாரங்களில் ஒன்று தெரிவித்தது. கடன் மறுமதிப்பீடு அடிக்கடி நடப்பதில்லை, ஆனால் வங்கி கடன்களை மறுமதிப்பீடு செய்வது இது முதல் முறையல்ல என்று முதல் தகவல் மூலம் ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தது. மேலும், "ஒரு நெருக்கடி வரும் வரை காத்திருப்பதை விட, சந்தைகள் தேவைப்படும்போது இந்த நடவடிக்கையை மேற்கொள்வது முக்கியம்" என்றும் அது குறிப்பிட்டது. தனியார் கடன் துறைக்கான ஜேபிமார்கனின் கடன் ஒப்பந்தங்கள், சந்தையில் சீர்குலைவு ஏற்பட்டால் நிதியின் பிணையத்தின் அடிப்படையில் மதிப்பீடுகளை மறுமதிப்பீடு செய்ய அனுமதிக்கின்றன என்றும், அந்த மதிப்பீடுகள் குறிப்பிடத்தக்கவை அல்ல என்றும் அந்த வட்டாரம் தெரிவித்தது. தனியார் கடன் வழங்கும் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் சில கடன்களின் மதிப்பைக் குறைக்கும் இந்த நடவடிக்கை, அந்த நிதி நிறுவனங்களுக்கு வழங்கப்படும் கடன்களைக் குறைக்கும் என, இவ்விவகாரம் குறித்து நன்கு அறிந்த ஓர் வட்டாரத்தை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது . மோர்கன் ஸ்டான்லி வால் ஸ்ட்ரீட் வங்கி மாபெரும் நிறுவனம் (MS.N), புதிய தாவலில் திறக்கிறதுமுதலீட்டாளர்கள் புழக்கத்தில் உள்ள பங்குகளில் கிட்டத்தட்ட 11%-ஐ திரும்பப் பெற முயன்றதைத் தொடர்ந்து, அதன் தனியார் கடன் நிதிகளில் ஒன்றில் வரையறுக்கப்பட்ட மீட்புகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஒரு ஒழுங்குமுறைத் தாக்கல் தெரிவிக்கிறது. ஜனவரி 31 நிலவரப்படி, 44 தொழில்துறைகளைச் சேர்ந்த 312 கடன் வாங்குபவர்களிடம் முதலீடு செய்யப்பட்டிருந்த மார்கன் ஸ்டான்லியின் நார்த் ஹேவன் பிரைவேட் இன்கம் ஃபண்ட் (PIF), இந்தக் காலாண்டில் முதலீட்டாளர்களின் டெண்டர் கோரிக்கையில் சுமார் 45.8% ஆன ஏறத்தாழ $169 மில்லியனைத் திரும்ப அளித்துள்ளது. பிளாக்ராக் உலகின் மிகப்பெரிய சொத்து மேலாளர் (BLK.N), புதிய தாவலில் திறக்கிறதுகோரிக்கைகள் அதிகரித்ததைத் தொடர்ந்து, தனது முதன்மைத் திட்டமான HPS கார்ப்பரேட் கடன் நிதியத்தில் (HLEND) இருந்து பணம் எடுப்பதற்குக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாக மார்ச் 6 அன்று அது தெரிவித்தது. முதல் காலாண்டில், HLEND தனது நிகர சொத்து மதிப்பில் சுமார் 9.3%க்கு சமமான $1.2 பில்லியன் தொகையைத் திரும்பப் பெறுவதற்கான கோரிக்கைகளைப் பெற்றது. தனது காலாண்டு மீட்புத் திட்டத்தின் கீழ் $620 மில்லியனை விநியோகிக்கப் போவதாக அந்த நிதி நிறுவனம் முதலீட்டாளர்களிடம் தெரிவித்தது. இதன் மூலம், மேலாளர்கள் மேலும் பணம் எடுப்பதைக் கட்டுப்படுத்தக்கூடிய 5% வரம்பை அது எட்டியது. முதல் காலாண்டில் இந்த நிதிக்கான சந்தாக்கள் $840 மில்லியனாக இருந்தன, இது முதலீட்டாளர்கள் முதலில் திரும்பப் பெற விரும்பிய $1.2 பில்லியனை விடக் குறைவாகும். நிறுவன ஆவணங்களின்படி, HLEND-இன் முதலீட்டுத் தொகுப்பில் 19% மென்பொருள் துறையில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. ஓக் மரம் ஓக்ட்ரீ கேப்பிட்டல் மேனேஜ்மென்ட் நிறுவனத்திற்குச் சொந்தமான ஒரு தனியார் கடன் நிதியம், முதல் காலாண்டில் தனக்குக் கிடைத்த 8.5% முழுமையான மீட்புக் கோரிக்கைகளையும் ஏற்க முடிவு செய்துள்ளதாக மார்ச் 27 அன்று தாக்கல் செய்யப்பட்ட ஒரு ஒழுங்குமுறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிதியானது, ஓக்ட்ரீ ஸ்ட்ராடஜிக் கிரெடிட் ஃபண்டில் (OSC) உள்ள முதலீட்டாளர்களிடமிருந்து, புழக்கத்தில் உள்ள பங்குகளின் எண்ணிக்கையில் சுமார் 13.9 மில்லியன், அதாவது 6.8% பங்குகளைத் திரும்ப வாங்கும். அதே நேரத்தில், 100% மீட்புக் கோரிக்கைகளையும் பூர்த்தி செய்ய உதவும் வகையில், ஓக்ட்ரீயின் தாய் நிறுவனமான புரூக்ஃபீல்ட் மேலும் 1.7% பங்குகளை வாங்கும். பிளாக்ஸ்டோன் மாற்றுச் சொத்து மேலாளர் பிளாக்ஸ்டோன் (BX.N), புதிய தாவலில் திறக்கிறதுதனது முதன்மை தனியார் கடன் நிதியான BCRED-இல், முதல் காலாண்டில் பணம் எடுப்பதற்கான கோரிக்கைகள் கணிசமாக அதிகரித்துள்ளதாக மார்ச் 2 அன்று அது தெரிவித்தது. நிறுவனம் தனது 82 பில்லியன் டாலர் நிதியிலிருந்து, வழக்கத்தை விட அதிகமான தொகையான 3.7 பில்லியன் டாலரை வாடிக்கையாளர்கள் திரும்பப் பெற அனுமதித்தது. 2 பில்லியன் டாலர் புதிய முதலீட்டு உறுதிமொழிகள் சேர்க்கப்பட்டதால், நிகரத் திரும்பப் பெறுதல் 1.7 பில்லியன் டாலராக ஆனது. கோரிக்கைகளின் பெருக்கத்தால், அந்த நிதி நிறுவனம் தனது வழக்கமான 5% காலாண்டு மீட்பு வரம்பை 7% ஆக உயர்த்தியது; அதே நேரத்தில், அனைத்துத் திரும்பப் பெறுதல்களையும் ஈடுசெய்வதற்காக பிளாக்ஸ்டோனும் அதன் ஊழியர்களும் 400 மில்லியன் டாலர்களைச் செலுத்தினர். அப்பல்லோ குளோபல் அப்பல்லோ குளோபல் (APO.N), புதிய தாவலில் திறக்கிறதுமுதலீட்டாளர்கள் மொத்த புழக்கத்தில் உள்ள பங்குகளில் சுமார் 11.2%-ஐ திரும்பப் பெற முயன்றதைத் தொடர்ந்து, 25 பில்லியன் டாலர் மதிப்பிலான ஒரு தனியார் கடன் நிதி நிறுவனம், தனது பங்குகளில் 5%-ஐ மட்டுமே திரும்பப் பெறுவதற்கான வரம்பாக நிர்ணயிப்பதாக மார்ச் 23 அன்று அறிவித்தது . முதலீட்டாளர்கள் கோரியதை விடக் குறைவாகப் பங்குகளைத் திரும்ப வாங்கும் முடிவு, அதன் பணப்புழக்க நோக்கங்களான, அதாவது அதன் சொத்துக்களின் மதிப்பைச் சேதப்படுத்தாமல் செலுத்த வேண்டிய கடமைகளை நிறைவேற்றும் திறனுடன் ஒத்துப்போகிறது என்று அந்த நிதி நிறுவனம் கூறியது. இந்தத் திரும்பப் பெறுதல்களால், இந்தக் காலகட்டத்திற்கான நிதியத்தின் மொத்த வெளிப்பாய்வு சுமார் 730 மில்லியன் டாலராக உள்ளது; இது, சுமார் 724 மில்லியன் டாலர் உள்வரவுகளைச் சமன் செய்கிறது. கோரப்பட்ட மூலதனத்தில் சுமார் 45 சதவீதத்தை, முதலீட்டைத் திரும்பப் பெறும் ஒவ்வொரு முதலீட்டாளருக்கும் திருப்பித் தருவோம் என இந்த நிதி எதிர்பார்க்கிறது. AREகள் ஏரெஸ் மேனேஜ்மென்ட்டின் (ARES.N), புதிய தாவலில் திறக்கிறதுமுதலீட்டாளர்கள் மொத்த புழக்கத்தில் உள்ள பங்குகளில் சுமார் 11.6%-ஐ திரும்பப் பெற முயன்றதைத் தொடர்ந்து, ஒரு தனியார் கடன் நிதியம் மீட்பு நடவடிக்கைகளை 5% ஆகக் கட்டுப்படுத்தியதாக மார்ச் 24 அன்று ஒரு ஒழுங்குமுறைத் தாக்கல் மூலம் வெளிப்படுத்தியது. அதன் 20,000-க்கும் மேற்பட்ட பங்குதாரர்களில் 1%-க்கும் குறைவானவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான குடும்ப அலுவலகங்கள் மற்றும் சிறிய நிறுவனங்களால் பெரும்பாலான மீட்புக் கோரிக்கைகள் விடுக்கப்பட்டன என்று அது கூறியது. ஏரெஸ் ஸ்ட்ராடஜிக் இன்கம் ஃபண்ட், 524.5 மில்லியன் டாலர் அல்லது அதன் புழக்கத்தில் உள்ள பங்குகளின் 5 சதவீதத்தைத் திருப்பிக் கொடுக்கும். கேகேஆர் கேகேஆர் (கேகேஆர்.என்), புதிய தாவலில் திறக்கிறதுமார்ச் 31 அன்று பங்குதாரர்களுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தின்படி, முதல் காலாண்டில் பணத்தை திரும்பப் பெறுவதற்கான கோரிக்கைகள் பெருமளவில் அதிகரித்ததைத் தொடர்ந்து, வர்த்தகம் செய்யப்படாத தனியார் கடன் நிதியம், பங்குகளின் 5% ஆக பணத்தை திரும்பப் பெறுவதைக் கட்டுப்படுத்தியுள்ளது. கேகேஆர் எஃப்எஸ் இன்கம் டிரஸ்ட் என்ற நிதி நிறுவனம் , 2026-ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில், நிலுவையில் உள்ள பங்குகளின் மொத்தத்தில் சுமார் 6.3% பங்குகளைத் திரும்ப வாங்குவதற்கான கோரிக்கைகளைப் பெற்றது; அவற்றில் சுமார் 80% கோரிக்கைகளை நிறைவேற்றத் திட்டமிட்டுள்ளது. கிளிஃப்வாட்டர் ப்ளூம்பெர்க் நியூஸ் அறிக்கையின்படி, கிளிஃப்வாட்டர் எல்எல்சி-யின் முதன்மை தனியார் கடன் நிதியத்தில் முதலீடு செய்தவர்கள் முதல் காலாண்டில் சுமார் 14% பங்குகளைத் திரும்பப் பெற முற்பட்டதால், அந்நிறுவனம் தனது பங்கு மீள் கொள்முதலை 7% ஆகக் கட்டுப்படுத்தியுள்ளது. ஒரு இடைவெளி நிதியாக, இது ஒவ்வொரு காலாண்டிலும் பங்குகளைத் திரும்ப வாங்க வேண்டும். அந்த விகிதத்தை 5% ஆக நிர்ணயித்துள்ளதாகவும், 7% வரை பங்குகளைத் திரும்ப வாங்குவதற்கான விருப்ப அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கை மேலும் கூறியது. https://www.reuters.com/business/finance/private-credit-strains-ripple-through-wall-street-investors-grow-wary-2026-04-02/#:~:text=JPMORGAN%20CHASE,source%20familiar%20with%20the%20matter. மார்ச் மாதம் இறுதிப்பகுதியில் ஜெரொம் பவலின் கருத்துப்பிரகாரம் இந்த தனியார் கடன் சந்தை பொருளாதார சரிவிற்கு இட்டு செல்லாது என கூறியுள்ளார், ஆனால் கோல்ட்மன் சக்ஸ் மற்றும் ஐ எம் எப் என்பவை இது ஒரு பொருளாதார சரிவிற்கு இட்டு செல்லலாம் என கூறியுள்ளனர்.- தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்
சில இடங்களில் தீவிர விஜய் எதிர்ப்பாளர் போல தோன்றினாலும், உங்கள் கருத்துக்கள் ஒரு மிக பரவலான பார்வையாக வேறுபட்டுள்ளது, தற்போதய நிலையில் இந்திய மற்றும் தமிழக அரசியல் பற்றிய புரிதல்கள் இன்மையால் ஓரளவிற்கு உங்கள் கருத்துக்கள் ஒரு சம நிலை உடையதாக எனக்கு தோன்றுகிறது (எந்த ஒரு விடயத்தினையும் தக்கவைப்பதுதான் கடினம்).- உங்களுக்கு தெரியாத வட கொரியா
எங்கு இருந்தாலும் தமிழன் தமிழனே… செம்பவள வாரிசு என் தலைவன்… தவிர சுவிஸ்லாந்தில் டேட்ட்லஸ் முடி ஸ்டைல் கற்று அதை பேணுபவர்… தனக்கு மட்டும் இன்றி ஊருக்கும் சேர்த்து டிரவுசர் தைத்துப்போடும் பரோபகாரி. செத்தகிளி, தம்பர், சீமானுக்கு அடுத்து யாழ்களத்தில் அதிக விருப்பு வாக்கு எண்டால் அது நம்ம தலைக்குத்தான்- தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்
இல்லை. மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பதற்கமைய தங்களுக்கு சீமான் விடயத்தில் எதுவுமே தவறாகத்தான் தெரியும். ஒருவன் பெட்டியோ அல்லது லஞ்சமோ கொடுக்கிறான் என்றால் அவனின் உண்மையான வரைவிலக்கணம் வெளியே சொல்லத் தேவையில்லை.- தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்
நஞ்சை கூட சொந்த காசில் வாங்கி சாப்பிடமாட்டார் அண்ணன்😂. #திரள் நிதி திருடன்- அமெரிக்கா சரணடையும் வரை போர் தொடரும்: ஈரானின் மூத்த ராணுவ அதிகாரி இப்ராஹிம் திட்டவட்டம்
சரணடைவது மட்டும் அல்ல… தம்பர் நேரடியாக தெஹ்ரான் வந்து லுங்கி டான்ஸும் ஆட வேண்டும்😂- உங்களுக்கு தெரியாத வட கொரியா
கையில் சாப்பாட்டு தட்டுடன் இந்த திரிக்கு வந்தது மகா தப்பு............. பீட்றூட் குழம்பு தரையெல்லாம் சிதறிவிட்டது................🤣. 'என்ன இரத்தம் இரத்தமாக கொட்டிக் கிடக்குது......... வாழ்வே மாயம் கமலின் அந்தப் பாட்டை இந்த மனுசன் அடிக்கடி பார்க்கிறதே............. அந்தப் பாட்டில் இருந்தே ஏதாவது வருத்தம் இந்த மனுசனுக்கு தொற்றி இருக்குமோ.................' என்று வாழ்வே மாயத்தையும், வைரஸையும் இணைத்து, இல்லாத பொல்லாத கதைகள் வருவதற்கு முன், நான் பாய்ந்து தரையை துடைத்துவிட்டேன்............. வட கொரியாவைப் பார்க்க வந்த என்னுடைய கறி போயிட்டுதே என்ற சின்னக் கவலை இருந்தாலும், இந்த திரிக்கு பொருத்தமாக நானும் ஏதோ எழுதி விட்டேனே என்று சந்தோசமாக இருக்கின்றது....................😜. மொத்தமாக வாசித்துப் பார்த்ததில், வட கொரியாவுக்கு கூட இரண்டு மூன்று வாக்குகள் தேறும் போல தெரியுதே..............🤭.- தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்
✅ சீமான் அவரை எனது பேரன்பிற்கும் பெருமதிப்பிற்குமுரிய ஐயா எடப்பாடி பழனிசாமி என்று பாசத்துடன் அழைப்பது என்றால் சும்மாவா- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் யாயினி ( @யாயினி ) !- நேட்டோவை விட்டு விலகும் அமெரிக்காவின் அதிரடிப் பரிசீலனை
😂 பதில் எப்படி வழைந்து, நெளிந்து, 180 பாகையால் திரும்பி வரப்போகிறது என ஆவலோடு எதிர்பார்கிறேன்😂. உலகத்தில் எப்போதும் ஒரு வல்லாதிக்க சக்தி இருந்து கொண்டே இருக்கும். அது யார் என்பதுதான் கேள்வி. அமெரிக்காவா, சீனாவா, அல்லது ஏதோ ஒரு அடிப்படைவாத சக்தியா என்பதே அந்த கேள்வி. எனக்கு அமெரிக்கா அல்லது சீனா ஓக்கே (அவர்கள் ஜனநாயக நாடில்லை எனிலும் 75% கடவுள் நம்பிக்கை அற்றோர்). உங்கள் ஆசை செத்த கிளி உலகாளுவது என நினைக்கிறேன். வாய்பில்ல ராஜா வாய்பில்ல.- காகிதக்கூழ் சிலையும் புட்டினும்
Tilly காகிதக்கூழ் சிற்பங்களை வடிவமைப்பதில் திறமையான யேர்மனியக் கலைஞர். யேர்மனியில் நடைபெறும் ரோசன்மொண்டாக் (Rosenmontag) கார்னிவலின் அணிவகுப்புகளில் இடம்பெறும் அவரது அரசியல் கேலிச்சிற்பங்கள் பரவலாகப் பேசப்படுபவை. அரசியல்வாதிகள், உலகத் தலைவர்கள் மற்றும் மதத் தலைவர்கள், குறிப்பாக தீவிர வலதுசாரிகளைக் கேலிச்சித்திர வடிவில் சித்தரிப்பதில் அவர் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். அவரது சிற்பங்கள் பெரும்பாலும் வெளிப்படையான அரசியல் செய்திகளை வெளிப்படுத்துகின்றன. 2024 ஆம் ஆண்டு, அவர் உருவாக்கிய ஒரு காகிதக்கூழ் சிற்பம் புடினுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. அதே ஆண்டில் நடைபெற்ற ரோசன்மொண்டாக் கார்னிவல் ஊர்வலத்தில் இடம்பெற்ற அந்தச் சிற்பத்தில், சீருடை அணிந்த புடினும், பேட்ரியார்க் கிரில்லும் ஓரினச்சேர்க்கை சார்ந்த அசிங்கமான காட்சியில் சித்தரிக்கப்பட்டிருந்தனர். இதனைத் தொடர்ந்து, ரஷ்யாவில் பதிவு செய்யப்பட்ட வழக்கில், மாஸ்கோ நீதிமன்றம் Tillyக்கு எட்டு ஆண்டுகள் மற்றும் ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. இந்த வழக்கில், அவர் மத உணர்வுகளைப் புண்படுத்தியதாகவும், ரஷ்ய ஆயுதப்படைகள் குறித்து தவறான தகவல்களைப் பரப்பியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. நீதிபதி கான்ஸ்டன்டின் ஓசிரோவ் இந்தத் தீர்ப்பை வழங்கியதுடன், 2,000 யூரோ குற்றப் பணமும் Tillyக்கு விதிக்கப்பட்டுள்ளது. மேலும், நான்கு ஆண்டுகள் கலைத்துறையில் பணியாற்றுவதற்கும் அவருக்குத் தடை விதிக்கப்பட்டிருக்கின்றது. Tilly தற்போது யேர்மனியிலேயே இருப்பதால், ரஷ்யாவிற்கு நாடுகடத்தப்படுவதற்கான ஆபத்து இல்லை. இருப்பினும், ரஷ்யாவுடன் நட்பு உறவு கொண்ட நாடுகளுக்கு அவர் பயணம் செய்யும் போது சிக்கல்கள் ஏற்படலாம். அத்தோடு மாஸ்கோ நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில், இன்டர்போல் மூலம் அவருக்கு எதிராக சர்வதேச கைது வாரண்ட் பிறப்பிக்கப்படவும் வாய்ப்பு இருக்கின்றது. யேர்மனியின் NRW மாநில முதலமைச்சர் ஹென்றிக் வூஸ்ட் இதுகுறித்து, “கலைஞர்கள் சுதந்திரமாக இருக்க வேண்டும். உலகம் முழுவதும் உள்ள சர்வாதிகார ஆட்சிகள் விமர்சனங்களை ஒடுக்க முயற்சிக்கின்றன. Tilly கடந்த 30 ஆண்டுகளாக தைரியமாக தனது கருத்துகளை வெளிப்படுத்தி வருகிறார். அவர் எந்த அதிகாரத்திற்கும் அஞ்சுவதில்லை. மாநில அரசின் முழுமையான ஆதரவு அவருக்கு உள்ளது” என்று தெரிவித்துள்ளார். காகிதக்கூழ் சிற்பத்தைப் பார்க்க விரும்பினால், tagesschau.deMoskau: Prozess gegen Karnevalswagenbauer Tilly wird fort..."Verunglimpfung der Staatsorgane" lautet der Vorwurf der russischen Justiz gegen den Düsseldorfer Karnevalswagenbauer Tilly. Heute hätte der Prozess gegen ihn in Abwesenheit fortgesetzt werden sollen- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிந்திய பிறந்த நாள் வாழ்த்துகள் யாயினி.- அமெரிக்காவின் 2ஆவது F-35 ரக அதிநவீன போர் விமானம் ஈரானால் சுட்டு வீழ்த்தப்பட்டது
இந்த வீடியோ காட்டுகிறது. ரேடார் பூட்டு, திரியும் ஏவுகணையில் இருந்தா, அல்லது நிலத்த்தில் இருந்த்து ஏவப்படும் விமான எதிர்ப்பு காகுத்தலில் இருந்தா என்பது காட்டப்படவில்லை. - அமெரிக்காவின் 2ஆவது F-35 ரக அதிநவீன போர் விமானம் ஈரானால் சுட்டு வீழ்த்தப்பட்டது
Important Information
By using this site, you agree to our Terms of Use.