All Activity
- Past hour
-
ஈரான் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!
உக்ரெய்ன் ரஷ்ய போர் ஆரம்பித்தபின் மரபுவழிப் போரில் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இராணுவ வீரர்கள் நேரடியாக மோதிக் கொள்வதில்லை. ட்றோன்கள்தான் இராணு வீரர்களின் எதிரி. ரஷ்யா இதுவரை ஸ்ரார்லிங்கை (அமெரிக்கத் தொழில்நுட்பம்) களமுனையில் அதிகம் நம்பியிருந்தத. ட்றோன்கள், கண்காணிப்பு, களமுனைத் தொடர்பாடல்கள் எல்லாவற்றிற்கும் இது அவசியமாக இருந்தது. கடந்த ஒரு மாதமாக ஸ்ரார்லிங்க் மட்டுப்படுத்தப்பட்டபோது களாமுனையில் மாற்றங்கள் தெரிகின்றன. ரஷ்யாவின் Yamal-602 அதிக பலன் தரவில்லை. இந்த ஒரு மாதத்தில் குண்டுவீச்சுக்களையே அதிகம் நம்பியுள்ளதால் போர் ஆரம்பித்ததிலிருந்து காணாத அளவு மிக மந்தமாக ரஷ்யா முன்னேறியுள்ளதது. ஈரானுக்கு இத்தகைய தொழில்நுட்பம் இல்லாவிட்டால் மரபுவழிப் போரை முன்னெடுக்க முடியாது. இக் கருத்து, அமெரிக்கா தரைவழித் தாக்குதலில் குதிக்கும் என்ற அர்த்தத்தில் எழுதவில்லை.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
பிரித்தானிய நேரப்படி நாளை புதன் (04 பெப்), நாளை மறுதினம் வியாழன் (05 பெப்) இரண்டு அரையிறுதிப் போட்டிகள் நடைபெறவுள்ளன. புள்ளிகள் பின்வருமாறு வழங்கப்படும். போட்டியில் வெற்றிபெறும் அணியை ஏதாவது ஒரு அரையிறுதிப் போட்டியில் சரியாகக் கணித்திருந்தால் மூன்று புள்ளிகள் வழங்கப்படும். போட்டியில் ஈடுபடும் அணிகளைச் சரியாகக் கணித்திருந்தும், வெல்லும் எனக் கணித்த அணி தோற்றால் புள்ளிகள் கிடைக்காது அரையிறுதிப் போட்டிகளுக்கு தகுதியடையாத அணிகளை வெல்லும் எனக் கணித்திருந்தால் புள்ளிகள் கிடையாது போட்டி மழை காரணமாகக் கைவிடப்பட்டால் ஒருவருக்கும் புள்ளிகள் கிடையாது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 71) முதலாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அரையிறுதி 1: புதன் 04 மார்ச்: 1:30 PM, ஏடென் கார்டன்ஸ், தென்னாபிரிக்கா எதிர் நியூஸிலாந்து SA எதிர் NZ போட்டியாளர் பதில் செம்பாட்டான் AUS ஏராளன் IND வசீ AUS புலவர் AUS சுவைப்பிரியன் AUS அல்வாயன் AUS ஈழப்பிரியன் IND நியூ பலன்ஸ் IND வாத்தியார் AUS கறுப்பி AUS வாதவூரான் IND வீரப் பையன்26 PAK சுவி IND கிருபன் SA கோஷான் சே SA அஹஸ்தியன் IND கந்தப்பு IND நியாயம் AUS எப்போதும் தமிழன் IND ரசோதரன் IND பிரபா IND நிலாமதி IND நந்தன் AUS 72) இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அரையிறுதி 2: வியாழன் 05 மார்ச்: 1:30 PM, வாங்கெடே, இங்கிலாந்து எதிர் இந்தியா ENG எதிர் IND போட்டியாளர் பதில் செம்பாட்டான் IND ஏராளன் AUS வசீ IND புலவர் IND சுவைப்பிரியன் ENG அல்வாயன் IND ஈழப்பிரியன் ENG நியூ பலன்ஸ் ENG வாத்தியார் IND கறுப்பி IND வாதவூரான் SL வீரப் பையன்26 IND சுவி ENG கிருபன் IND கோஷான் சே ENG அஹஸ்தியன் SA கந்தப்பு AUS நியாயம் IND எப்போதும் தமிழன் SA ரசோதரன் AUS பிரபா ENG நிலாமதி AUS நந்தன் IND இரு அரையிறுதிப் போட்டிகளிலும் உள்ள தெரிவுகளின்படி: தென்னாபிரிக்கா அணி வெல்லும் 04 பேர் கணித்துள்ளனர். நியூஸிலாந்து அணி வெல்லும் என எவரும் கணிக்கவில்லை. இங்கிலாந்து அணி வெல்லும் என 06 பேர் கணித்துள்ளனர். இந்திய அணி வெல்லும் என 21 பேர் கணித்துள்ளனர். இரு அரையிறுதிப் போட்டிகளிலும் எவருக்குப் புள்ளிகள் கிடைக்கும்?
- Today
-
அயத்துல்லா அலி காமெனி மறைவு: சம்மாந்துறையில் துக்கக் கொடியேற்றம்!
சென்ற ஞாயிற்றுக்கிழமை இரவு நான் வேலை செய்யும் உணவகத்தில் ஈரானியர்களால் நிரம்பி வழிந்தது.கிட்டத்தட்ட 50,60 பேர் வரும். சிலர் இனிப்புகளை பரிமாறிக்கொண்டார்கள். எல்லோரும் ஆட்டு இறைச்சி,கோழி,வாத்து இறைச்சியென ஒரு புடி புடித்தார்கள். சாப்பாட்டின் பின்னர் பழங்கள் கலந்த ஐஸ்,தனி ஐஸ் என ஒரே அமர்க்களப்படுத்தி விட்டார்கள். எங்களுக்கு அந்தமாதிரி வருமானம்.😂 இப்பிடி நாளுக்கொரு அயத்துல்லா போனால்........😎
-
"நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
நீங்கள் சொல்வது போல் வளர்ச்சியடைந்து என்ன பிரயோசனம்? சாதி கொடுமைகளும் சாதி கொலைகளும் குறைந்தபாடில்லை.தமிழ் மக்களுக்குள் பல இனக்குழுக்கள்.சாதிக்கொரு கட்சி. இனக்குழுக்களுக்கென ஏராளமான கட்சிகள்.பிச்சைகாரர்களும் குறைந்தபாடில்லை. உலகில் ஓரளவிற்கு எல்லா இடங்களும் வளர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
கண்ணிலே இருப்பதென்ன ........! 😍
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . ........! இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன் ஆண் : { உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி } (2) ஆண் : என் கண்ணில் பாவை அன்றோ கண்ணம்மா என்னுயிர் நின்னதன்றோ ஆண் : { உன்னை கரம் பிடித்தேன் வாழ்க்கை ஒளிமயம் ஆனதடி } (2) ஆண் : உன்னை மணந்ததனால் சபையில் புகழும் வளர்ந்ததடி ஆண் : கால சுமைதாங்கி போலே மார்பில் எனை தாங்கி வீழும் கண்ணீர் துடைப்பாய் அதில் என் இன்னல் தணியுமடி ஆண் : { ஆழம் விழுதுகள் போல் உறவு ஆயிரம் வந்தும் என்ன } (2) வேர் என நீ இருந்தாய் அதில் நான் வீழ்ந்து விடாதிருந்தேன் ஆண் : முள்ளில் படுக்கையிட்டு இமையை மூடவிடாதிருக்கும் பிள்ளை குலமடியோ என்ன பேதமை செய்ததடி ஆண் : { பேருக்கு பிள்ளை உண்டு பேசும் பேச்சுக்கு சொந்தமுண்டு } (2) { என் தேவையை யார் அறிவார் } (2) உன்னை போல் தெய்வம் ஒன்றே அறியும் .........! --- உன் கண்ணில் நீர் வழிந்தால் ---
-
தமிழர்களின் அபிலாசைகளை முன்னிறுத்தி நீதியமைச்சர் பதவி அழைப்பை நிராகரித்தேன்; ஒருபோதும் சுயதேவைகளின் அடிப்படையில் செயற்படவில்லை - சுமந்திரன்
உண்மையாவா.?🤭
-
ஈரான் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!
கடந்த காலங்களில் ஈராக், அப்கானிஸ்த்தான் ஆகிய நாடுகளுக்குள் அமெரிக்கா மரபுவழியாகத் தலையிட்டு ஈற்றில் முடிவின்றி வெளியேறியது போல ஈரானிலும் நடந்துவிடக்கூடாதென்ற காரணத்தினாலேயே அமெரிக்கத் துருப்புக்களை ஈரானிற்குள் இறக்கும் நோக்கம் அதற்கு இல்லை என்று கூறப்படுகிறது. இப்படிச் சொல்வதால் அமெரிக்கா ஈரானிடம் தோற்றுவிடும் என்பதல்ல, மாறாக நீண்டகாலமாக இப்போர் தொடருமாக இருந்தால், அமெரிக்காவிற்கு ஏற்படக் கூடிய ஆள்ப்பல இழப்பு, பணவிரயம் ஆகியவற்றை கருத்திற்கொண்டே இதனைத் தவிர்க்க விரும்புகிறார்கள். நீங்கள் ஈராக் மற்றும் அப்கானிஸ்த்தான் மீதான போர்களை பார்த்தாலும், இவ்விரு போர்களிலும் முற்றான ராணுவ வெற்றியை ஆரம்பத்தில் அமெரிக்க ஈட்டியிருந்தது. இந்த நாடுகளை தனது பூரண கட்டுப்பாட்டின் கீழ் அமெரிக்கா கொண்டுவந்திருந்தது. ஆனால் "அதன்பின்னர் என்ன எனும் கேள்வியில்த்தான்" இப்போர்கள் முற்றான மூலோபாய வெற்றியை கொடுத்தனவா இல்லையா என்கிற பேச்சு எழுகிறது.
-
ஈரான் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!
தற்போதைய நிலையில் அமெரிக்கா பலமான நாடாகத் தெரியவில்லை என்றால், இப்போதிருக்கும் பலமான நாடு எதுவாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள்? ரஸ்ஸியாவா அல்லது சீனாவா? மரபுவழிச் சமர் ஒன்றினை ஈரானுடன் நடத்த முடியாது என்று எதனை வைத்து அளவிடுகிறீர்கள்? The United States could overwhelmingly defeat Iran in a conventional military confrontation (meaning a straightforward fight between regular armies and forces) because of the huge gap in resources, technology, and global power-projection capabilities. 🇺🇸 U.S. Military Advantages The U.S. has vastly more manpower, advanced aircraft, naval power, missiles, and global logistics than Iran. Analysts rank the U.S. as the world’s most powerful military and Iran as a strong regional power, but not one that can match U.S. forces head-to-head. In a pure conventional fight — large-scale air strikes, naval blockades, missile barrages — American forces could destroy or neutralize many of Iran’s military assets. The U.S. also has far greater capacity to project force globally (aircraft carriers, long-range bombers, satellites, advanced cyber capabilities). 🇮🇷 Iran’s Strategy and Limits Iran’s strength is not in conventional forces aimed at defeating a superpower on the battlefield; it has focused instead on asymmetric tools: ballistic missiles, drones, cyber tactics, naval mines, fast attack boats, and regional proxy militias. These capabilities would not enable Iran to win a direct conventional war, but they could impose significant costs, disrupt U.S. operations, and complicate the conflict.
-
"நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
நீங்கள் எங்கே எழுதுவது, என்ன எழுதுவது என்பது உங்கள் இஸ்டம்தான். ஆனால் - நிர்வாகத்கை விமர்சிக்க மட்டுமே எழுதுகிறீர்கள் என்பதை சுட்டிகாட்ட வேண்டிய தேவை இருக்கிறது. அதன் அடிப்படையில் மேலே உள்ள விமர்சனங்களை வாசககள் எடை நிறுத்து கொள்ளட்டும். அதேபோல் அரசியல்வாதிகள், பணமுதலைகள் நடத்தும் ஊடகங்களுக்கு மத்தியில் இன்றளவும் நம்பகமான ஒரே தமிழ் ஊடக பரப்பாக இருப்பது யாழ் மட்டுமே. அதையும் இன்னொரு குப்பை ஊடகம் என்பது போல் சிருஸ்டிக்க முனையிம் போது அதையும் சுட்டி காட்ட வேண்டியதாகிறது. #காரணமாய்தான் வேர்கிறது😂 1948 இல் இருந்து தமிழ் நாடு அடைந்த வளர்சியையும்… அதே காலப்பகுதியில் ரிவேர்ஸ் கியரில் மட்டுமே போய் கொண்டிருக்கும் நம்மையும் ஒப்பிட்டால்… யார் பாமர முட்டாள் வாக்காளர் என்பது புரியும்😂
-
ஈரான் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!
https://www.youtube.com/watch?v=yd_uJiRcl0Q
-
ஈரான் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!
போர் என்பது யாரிடம் மேலான ஆயுதம் , பெரும்படை என்பன போரின் போக்கினை தீர்மானிப்பதல்ல, யார் தம்மை தகவமைத்துக்கொள்கிறார்கள், அதனை கொண்டு செல்லும் திராணி என்பன தீர்மானிகின்றன, இந்த விடயத்திலேயே இந்த போர் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதில் சில திட்டமிடாத விளைவுகளை பார்க்கும் போது (ஆகாய எதிர்ப்பு கருவிகளின் பற்றாக்குறை மற்றும் எரிபொருள் விலையேற்றம் எதிர்பாராத அளவில் ஏற்படுத்தியுள்ள தாக்கம்) இந்த போர் வெகு சில நாள்கள் ஆயுளை கொண்ட போராகவே இருக்கும் என கருதுகிறேன், அமெரிக்க அதிகாரிகள் கூறுவது போல மாதக்கணக்கிலோ ஆண்டுக்கணக்கிலோ செல்லாது.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நீங்கள் சொல்வது சரி. நான் டெஸ்ட் போட்டியில் விளையாடிய தமிழ் வீரர்களை குறிப்பிட்டேன். T20 துடுப்பாட்டதில் விஜயகாந்த் விசயகாந்த் 2 போட்டிகள் இலங்கை அணி சார்பாக விளையாடியிருக்கிறார்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
ஜெயப்பிரகாஸ்தரன் என்றும் ஒருவர் விளையாடினவர் செவாக்கின்ரை விக்கெட் எடுத்தவர் ஒரே ஒரு ஒருநாள் போட்டி தான் விளையாடினவர் என்றுநினைக்கிறன்
-
தமிழர்களின் அபிலாசைகளை முன்னிறுத்தி நீதியமைச்சர் பதவி அழைப்பை நிராகரித்தேன்; ஒருபோதும் சுயதேவைகளின் அடிப்படையில் செயற்படவில்லை - சுமந்திரன்
- கிறுக்கல்கள்
கிறுக்கல்கள்-
கருத்துப்படம் 03.03.2026
-
கருத்துப்படம்17.02.2026
-
கருத்துப்படம் 14.02.2026
-
கருத்துப்படம் 29.01.2026
-
கருத்துப்படம் 28.01.2026
-
கருத்துப்படம் 24.01.2026
-
கருத்துப்படம் 06.06.2026
-
கருத்துப்படம் 01.01.2026
-
கருத்துப்படம் 01.01.2026
-
கருத்துப்படம் 31.12.2025
-
கருத்துப்படம் 30.12.2025
-
கருத்துப்படம் 29.12.2025
-
கருத்துப்படம் 28.12.2025
-
கருத்துப்படம் 27.12.2025
-
கருத்துப்படம் 27.12.2025
-
கருத்துப்படம் 26.12.2025
-
கருத்துப்படம் 24.12.2025
-
கருத்துப்படம் 21.12.2025
-
கருத்துப்படம் 21.12.2025
-
கருத்துப்படம் 21.12.2025
- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நில்லுங்க நில்லுங்க கிரிக்கட்டை விட்டுட்டு எப்படி போக மனம் வந்தது?- கருத்து படங்கள்
- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இன்னும் பயணிக்கவில்லை. மட்டுப்படுத்தப்பட்ட அளவில் விமானங்கள் பறக்கின்றன.- அயத்துல்லா அலி காமெனி மறைவு: சம்மாந்துறையில் துக்கக் கொடியேற்றம்!
அயத்துல்லா அலி காமெனி மறைவு: சம்மாந்துறையில் துக்கக் கொடியேற்றம்! அயத்துல்லா அலி காமெனீ அவர்களின் மறைவையொட்டி சம்மாந்துறையில் நேற்று துக்கக் கொடிகள் ஏற்றப்பட்டன. உலக இஸ்லாமிய தலைவர்களில் முக்கியத்துவம் வாய்ந்தவராகக் கருதப்பட்ட அவர்களின் இழப்பை நினைவுகூரும் வகையில், சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் அ.அப்னான் தலைமையில் இளைஞர்கள் இணைந்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர். இந்நிகழ்வில் பல இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர். மறைந்த தலைவரின் சேவைகளையும் அவரின் பங்களிப்புகளையும் நினைவுகூர்ந்து துக்கம் அனுசரிக்கப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். அமைதியான முறையில் நடைபெற்ற இந்நிகழ்வு பிரதேச மக்களின் கவனத்தை ஈர்த்தது. https://athavannews.com/2026/1466963- யாழ் மத்திய கல்லூரி – யாழ் பரியோவான் கல்லூரி மோதும் வடக்கின் போர் விரைவில் !
யாழ் மத்திய கல்லூரி – யாழ் பரியோவான் கல்லூரி மோதும் வடக்கின் போர் விரைவில் ! யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மற்றும் யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரி ஆகியவற்றுக்கு இடையிலான “வடக்கின் போர்” என்றழைக்கப்படும் மாபெரும் துடுப்பாட்டப் போட்டி மார்ச் 5ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இந்த துடுப்பாட்ட போட்டி இம் மாதம் (மார்ச்) 119வது முறையாக நடத்தப்பட உள்ளது. 119வது போட்டியானது 2026 மார்ச் 5, 6 மற்றும் 7ஆந் திகதிளில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளது. தொடர்ந்து, 23வது மட்டுப்படுத்தப்பட்ட பந்து வீச்சுக்கான (50 ஓவர்கள்) போட்டி 2026 மார்ச் 14ஆந் திகதியன்று புனித பரியோவான் கல்லூரி மைதானத்தில் நடைபெறும். வரலாற்றுப் பாரம்பரியம் கொண்ட முதலாவது வடக்கின் போர் 1904 ஆம் ஆண்டில் நடைபெற்றது. இதுவரை இடம்பெற்ற 118 போட்டிகளில், புனித பரியோவான் கல்லூரி 40 போட்டிகளிலும், யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி 29 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. அத்துடன், 41 போட்டிகள் வெற்றி தோல்வியின்றி நிறைடைந்தன. மேலும், 07 போட்டிகளுக்கான முடிவுகள் கிடைக்கப்பெறவில்லை என்பதுடன் ஒரு போட்டி இடையில் கைவிடப்பட்டது. https://athavannews.com/2026/1466970- மத்தியகிழக்கின் போர் நிலைமை காரணமாக கொழும்பில் இன்றும் 57 விமானங்கள் ரத்து!
மத்தியகிழக்கின் போர் நிலைமை காரணமாக கொழும்பில் இன்றும் 57 விமானங்கள் ரத்து! மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் காரணமாக, இலங்கையின் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்குப் பயணிக்கவிருந்த 28 விமானப் பயணங்களும், நாட்டிற்கு வருகை தரவிருந்த 29 விமானப் பயணங்களும் என மொத்தமாக 57 விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன. இதேவேளை, நாளை (04) தினத்திலும் 4 விமானப் பயணங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன. மத்திய கிழக்கிற்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து வரும் விமானங்கள், அதேபோன்று அந்தப் பிராந்தியத்தின் ஊடாக ஏனைய இடங்களுக்குப் பயணிக்கும் விமானங்கள் தொடர்ந்தும் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் பணிப்பாளர் நாயகமும் பிரதான நிறைவேற்று அதிகாரியுமான கேப்டன் தமிந்த ரம்புக்கெவ்ல்ல தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், இன்று காலை சில விமானப் பயணங்கள் மாத்திரம் அந்தப் பிராந்தியத்தின் ஊடாகப் பயணித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2026/1466988- இலங்கை கடற்படையினர் கச்சதீவில் தமிழக இளைஞர்களை தாக்கினர் – தமிழகத்தில் இருந்து குற்றச்சாட்டு!
இலங்கை கடற்படையினர் கச்சதீவில் தமிழக இளைஞர்களை தாக்கினர் – தமிழகத்தில் இருந்து குற்றச்சாட்டு! கச்சதீவு திருவிழாவின்போது இலங்கை கடற்படை அதிகாரி ஒருவர் தமிழக பக்தர்களை தாக்கினார் எனவும் இதன்போது தமிழக இளைஞர்கள் தரையில் இருந்து “இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு வேண்டும், குறித்த கடற்படை அதிகாரியை தண்டிக்க வேண்டும்” என எதிர்ப்பு தெரிவிக்க ஆரம்பித்தனர் எனவும் அதன்பின்னர் கடற்படை உயர் அதிகாரி ஒருவர் வந்து மக்களை சமாதானம் செய்ததாக தமிழக, கச்சதீவு பாரம்பரிய திருப்பயண குழு ஒருங்கிணைப்பாளர் சே.நல்லதம்பி தெரிவித்துள்ளார். கச்சதீவு திருவிழா குறித்து அவர் கருத்து தெரிவிக்கும் போது இதனை தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், நாங்கள் ஆரம்பத்தில் கச்சதீவுக்குள் உள்நுளையும் போது அங்கிருந்த கடற்படை மற்றும் பொலிசார் வரம்பு மீறி செய்யப்பட்டனர். கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தினார்கள். இதன் போது எனக்கும் அவர்களுக்கும் இடையே மோதல் ஏற்படக்கூடிய சூழ்நிலை கூட ஏற்பட்டது. இதன்போது இந்திய தூதரகத்துடன் நான் பேச முயற்சித்தாலும் பின்னர் அங்கிருந்த சூழ்நிலையுயும், ஏனையோரது நிலையையும் கருத்தில் கொண்டு சமாளித்துக் கொண்டு உள்ளே சென்றோம். திரும்பி வரும்போதும் அதே மாதிரியான சூழ்நிலையே ஏற்பட்டது. அங்கிருந்த சிறு வயதுடைய கடற்படை அதிகாரி ஒருவர் தமிழக இளைஞர்களுடன் மோதலில் ஈடுபடுவது போன்ற நிலையை கடைப்பிடித்தார். பலர் மயக்கமுறுகின்றார்கள், மூச்சு திணறல் ஏற்படுகின்றது எனவே மக்களை சிறிது நேரம் கடற்கரையில் பரவலாக அமர்ந்திருப்பதற்கு அனுமதிக்குமாறு இளைஞர்கள் கடற்படையிடம் கோரியவேளை இந்த முரண்பாடு ஏற்பட்டது. இதன்போது சிறிய கடற்படை அதிகாரி ஒருவர் இளைஞர்களை தாக்கினார். பின்னர் இளைஞர்கள் எதிர்ப்பு வெளியிட்ட நிலையில் அங்கு வந்த கடற்படை உயர் அதிகாரி ஒருவர் நிலைமையை சமாளித்து மக்களை கடற்கரையில் உட்கார அனுமதித்தார். கச்சதீவு திருவிழாவானது வருடா வருடம் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. இருப்பினும் சில குளறுபடிகள் அதில் இருக்கத்தான் செய்கின்றன. இந்திய பக்தர்கள் உள்நுழையும்போது அங்கே நான்கு வழிகளே காணப்படுகின்றன. அங்கே பெருமளவான கூட்டம் வரும்போது அதனை சமாளிக்க கூடிய நிலைமை காணப்படவில்லை. திருவிழா முடிந்து திரும்பும் போதும் பிரச்சினை ஏற்பட்டது. திருவிழாவிற்கு வந்த அதிகாரிகள், விருந்தினர்கள் என அனைவரும் செல்லும்வரை மக்கள் அங்கே ஓரிடத்தில் மறித்து வைக்கப்படுகின்றனர். அவர்கள் கடற்படையினர் மற்றும் பாதுகாப்பு பிரிவினரின் கப்பல்களில் திரும்பி செல்கின்றனர். ஆகையால் அவர்களின் பாதுகாப்பு கருதியே மக்கள் இவ்வாறு மறித்து வைக்கப்படுகின்றனர். இதனால் 10 தொடக்கம் 12 மணிவரை மக்கள் கடுமையான வெயிலில் நிற்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. 12 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் ஒரே இடத்தில் மணிக்கணக்காக இருக்கும்போது அங்கு காற்று வசதியும் இல்லாத காரணத்தினால் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது இருப்பினும் தெய்வாதீனமாக உயிரிழப்பு ஏற்படவில்லை. மீள்திரும்பும் போது 12 மணிவரை தடுத்து வைக்கின்ற அந்த முறையை சற்று பரிசீலனை செய்ய வேண்டும். அதேபோல இந்திய மக்களுக்கும் இலங்கை மக்களுக்கும் தனித்தனியாக வழியை பிரித்து விட்டால் அவர்கள் அவர்களது பாதையில் இலகுவாக செல்வார்கள். இந்த விடயத்தில் இந்திய அரசும் இலங்கையின் வெளியுறவுத் துறையும் கரிசினை செலுத்தி, அடுத்த ஆண்டு இதே பிரச்சினை நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இவை அனைத்தும் நிர்வாக பிரச்சினையாகவே காணப்படுகிறது. எதிர்காலத்தில் இந்த திருவிழாவை ஏற்பாடு செய்யும் யாழ்ப்பாணத்தில் உள்ள ஏற்பாட்டுக் குழுவானது நிர்வாக முறைகளை சீர் செய்ய வேண்டும் என்றார். https://athavannews.com/2026/1466973- மத்திய கிழக்கு பதட்டம்; எண்ணெய் விலை உயர்வு!
அமெரிக்காவில் பெற்றோல் விலை உயர்வு. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உக்கிரமடைந்துள்ள போர் மோதல்கள் காரணமாக, அமெரிக்காவில் பெற்றோல் விலை கடந்த நவம்பர் மாதத்திற்குப் பின்னர் முதல் முறையாக ஒரு கலன் 03 டொலரை கடந்துள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களுக்குப் பதிலடியாக ஈரான் நடத்திய பதில் தாக்குதல்கள் காரணமாக, சர்வதேச எண்ணெய் விநியோகத்தின் முக்கிய பாதையான ‘ஹோர்முஸ் நீரிணை’ ஊடான கப்பல் போக்குவரத்து மற்றும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களின் செயற்பாடுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நெருக்கடி நிலையினால் உலகச் சந்தையில் மசகு எண்ணெய் விலை 05 சதவீதத்திற்கும் மேலாக அதிகரித்துள்ளது. இதன் நேரடித் தாக்கம் அமெரிக்க நுகர்வோரைப் பாதித்துள்ளதுடன், அங்கு பெற்றோல் விலை உச்சத்தை தொட்டுள்ளது. தற்போதைய பதற்றமான சூழல் நீடித்தால்இ இந்த வார இறுதிக்குள் அமெரிக்காவில் பெற்றோல் விலை ஒரு கலனுக்கு 3.25 டொலர் வரை மேலும் அதிகரிக்கக்கூடும் என பொருளாதார ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். https://athavannews.com/2026/1466958- "நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
நான் யாரையோ சொன்னால் உங்களுக்கு ஏன் பின்பக்கம் வேர்க்கிறது? அவர் எனக்கும் இதையே செய்ததால்தான் சொல்ல வேண்டி வந்தது! நான் எந்த திரியில் எழுதவேண்டும் என்பதை நான்தான் தீர்மானிக்கவேண்டும். நிர்வாகம் ஒருதலைப்பட்சமாக நடந்தால் குறைகூறத்தான் வேண்டும்! ஏனென்றால் இப்ப ஒரு ஐந்து வருசமா யாழ், யாழ் மாதிரி இல்லை! ஒரு சிலரின் முகப்பு புத்தகமாக மாறிவிட்டது! பத்தி பத்தியாக கிறுக்கிக்கொண்டிருக்கும் உங்களை போன்றவர்களால்தான் யாழ் களம் உருண்டோடுது என்றால் அதையும் நம்பீட்டம்! - கிறுக்கல்கள்
Important Information
By using this site, you agree to our Terms of Use.