Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

All Activity

This stream auto-updates

  1. Past hour
  2. என் கணிப்பின் படி, 9 வீதத்துக்கும் குறைவாகவே சீமான் இந்த முறை பெறுவார். விஜையால் அதிகம் பாதிக்கப்படப் போவது சீமான். அதிக லாபமடையப் போவது ஸ்டாலின். எனக்கு தமிழகத்தில் வாக்குரிமை இருக்கும் பட்சத்தில், சீமானா விஜையா என இருவருக்கும் இடையில் மட்டும் போட்டி இருப்பின், கண்டிப்பாக சீமானுக்குத்தான் நான் வாக்களிப்பேன். தனிப்பட்ட ரீதியில் விஜைய் எனும் வெற்று நடிக விம்பத்தை மட்டுமே கொண்டுள்ள, எந்தவொரு தலைமைத்துவ மற்றும் ஆளுமை அற்ற தகர டப்பாவுக்கு வாக்களிக்க மாட்டேன்.
  3. Today
  4. அப்படி வந்தால்.... ரோபோவுக்கு லஞ்சம் கொடுத்தும், பொலிசார் தப்ப முடியாது. 😂
  5. ரோபோ பொலிசாரை கைது செய்யும் காலம் வெகுவிரைவில் வரும்😇
  6. வணக்கம் வாத்தியார் ........! இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி ஆண் : { கொடுத்ததெல்லாம் கொடுத்தான் அவன் யாருக்காக கொடுத்தான் ஒருத்தருக்கா கொடுத்தான் இல்லை ஊருக்காக கொடுத்தான் } (2) ஆண் : ஒருத்தருக்கா கொடுத்தான் இல்லை ஊருக்காக கொடுத்தான் ஆண் : { மண்குடிசை வாசலென்றால் தென்றல் வர வெறுத்திடுமா } (2) ஆண் : மாலை நிலா ஏழையென்றால் வெளிச்சம் தர மறுத்திடுமா ஆண் : உனக்காக ஒன்று எனக்காக ஒன்று ஒருபோதும் தெய்வம் கொடுத்ததில்லை ஆண் : படைத்தவன் மேல் பழியுமில்லை பசித்தவன் மேல் பாவம் இல்லை ஆண் : கிடைத்தவர்கள் பிரித்துக்கொண்டார் உழைத்தவர்கள் தெருவில் நின்றார் ஆண் : பலர் வாட வாட சிலர் வாழ வாழ ஒரு போதும் தெய்வம் கொடுத்ததில்லை ஆண் : { இல்லை என்போர் இருக்கையிலே இருப்பவர்கள் இல்லை என்பார் } (2) மடி நிறைய பொருள் இருக்கும் மனம் நிறைய இருள் இருக்கும் ஆண் : எதுவந்த போதும் பொதுவென்று வைத்து வாழ்கின்ற பேரை வாழ்த்திடுவோம் .......! --- கொடுத்ததெல்லாம் கொடுத்தான் ---
  7. மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
  8. தென்னங்கீற்று ஊஞ்சலிலே ......... படம் : பாதை தெரியுது பார் . ......! 😍
  9. அப்பாடா .....நான் வாக்களித்து விட்டேன் ........! நான் ஒருபோதும் வாக்களிக்கத் தவறுவதில்லை........ அப்படி எப்போதாவது தவறியிருந்தால் அந்நேரம் நான் வேறிடத்தில் இருந்திருப்பேன் . .......! 😀
  10. கிருபன், கிரிதரன். குமரன், குயிலன், குமணன், குறளமுதன், குறளரசு, குழந்தை. கேசவன், கேதீசன், கேதீஸ், கேதீஸ்வரன். கூலன், கூடலமுதன், கூடலரசன், கூடற்கதிர்.
  11. அவர் தனக்கு தானே தீ வைக்கும் நோக்கத்தில் இருக்கவில்லை. மனநல பிரச்சனைகளில் ஏற்கனவே இவர் இருந்ததாக தெரியவருகிறது. பேருந்தில் இருந்த ஏனையவர்கள் ஏன் தப்பிச்செல்ல முடியாமல் இருந்தது என்பதற்கான விசாரணைகள் நடக்கின்றன. உள்ளே என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியாது. ஆனால் இங்கே பேருந்து ஓடிக்கொண்டிருக்கும் பொழுது கதவு திறக்கப்படமாட்டாது. இந்த சம்பவமும் பேருந்து ஓடிக்கொண்டிருக்கும் பொழுது நடந்திருக்கிறது. யாரும் தப்ப முடியாததற்கு அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். மற்றும் அவர் பெட்ரோல் மூலம் பேருந்தை நனைப்பதற்கு சில வினாடிகளே பொதுமனாகாத இருந்திருக்கும். அதற்குள் தப்பி செல்வதற்கு போதிய அளவு நேரம் ஒருவருக்கும் இருந்திருக்காது.
  12. 😂 நீங்கள் நினைத்தது சரி விஜய் இரசிகையின் பேட்டி ஒன்று பார்த்தேன் ஏன் அவர் தான் முதலமைச்சராக வர வேண்டும் என்று விரும்புகிறீர்கள் என்ற கேள்விக்கு அவாவின் பதில் விஜய் அண்ணாவின் X படம் (எனக்கு பெயர் நினைவில்லை) பார்த்தேன் அதில் இருந்து அவர் முதலமைச்சரா வந்தால் தமிழ்நாட்டிற்கு நல்லது செய்வார் என்று முடிவு எடுத்தேன். உண்மை
  13. கிரிராஜன், கிரிதரன், கிஷோர், கிருத்திக், கிளிவளவன். கு: குணாளன், குமரவேல், குரு, குலசேகரன், குணசேகர், குமரேசன், குயிலன். கூ: கூத்தன், கூத்தபிரான், கூர்மன், கூத்தன், கூத்தவேல். கே: கேசவன், கேதாரீஸ்வரன், கேடயன், கேயன், கேசவன், கேதார். எனது நட்சத்திரத்தில் பையன் பிறந்தபடியால் நல்லாயிருப்பான்.
  14. senthil21 joined the community
  15. திருவோணம் நட்சத்திரத்திற்குரிய கி, கூ, கே, கோ (Khi, Koo, Ke, Ko) ஆகிய எழுத்துக்களில் தொடங்கும் தூய தமிழ் பெயர்கள் Male Baby
  16. ஆரம்பத்தில் விஜயின் கட்சிக்கு 10% இற்கும் குறைவான வாக்குகளே வரலாம் என நினைத்தேன், விஜையின் கட்சி கொள்கை எதுவும் இருப்பது போல எனக்கு தெரியவில்லை (கட்சிக்கென ஏதாவது கொள்கை உண்டா என தெரிந்தவர்கள் கூறவும்), அதனால் மக்கள் கண்டு கொள்ளமாட்டார்கள் என நினைத்தேன், ஒரு காணொளியில் விஜையின் பெயரை கூறியது அரங்கிலிருந்த மக்கள் ஆர்ப்பரிப்பதனை பார்க்கும் போது விஜையிற்கு வாக்குகள் கணிசமாக கிடைக்கும் போல உள்ளது. ஆனால் அந்த கூட்டம் ஒரு இளையவர்கள் அதிகமாக உள்ள கூட்டம் .
  17. திமுகவை தோற்கடிப்பதற்கு அதிமுக பலமடைய வேண்டும். விஜை வரும்பேதே கூட்டணிக்கு தயாரக இருப்பதாகச் சொன்னார். ஆனால் அளவுக்கு மீறி ஆசைப்பட்டதால் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க முடியவில்லை.தற்போதைய நிலையில் 25 தொகுதிகள் அவருக்குப் போதுமானது. எடுத்த எடுப்பிலேயே முதல்வர் பதவிக்கு ஆசைப்படலாமா? அவர் தனித்து நின்றால் திமுகவின் வெற்றி எளிதாக இருக்கும். சீமான் எப்போதும் தனித்தே நிற்பார். விஜையின் வருகையால் சீமானின் வக்கு வங்கிக்கு எந்தப்பாதிப்பும் இல்லை. சீமான் எதிராளிகளின் எதிர்பார்ப்புகளுக்கு மேலாக அவர் தன்னுடைய வாக்கு சத வீதத்தை உயர்த்துவார். விஜை தனித்து நின்றால் அவருக்கு இது கடைசித் தேர்தலில் சீமானின் தனித்து நின்று இப்போதிருக்கும் வாக்கு சதவீதத்தை தக்க வைத்தாலே எதரிர்காலத்தில் தவிர்க்க முடியாத அரசியல்சக்தியாகி விடுவார்.
  18. பனையாலை விழுந்தவனை மாடேறி மிதித்தது போல இன்று வட்டி விகிதத்தினை 0.25% ஆக உயர்த்தியுள்ளார்கள், பொருளாதார சரிவு வரும் போல உள்ளது (எனது கருத்து - பொருள்களின் விலை அதிகரிக்கிறது மக்கள் செலவு செய்ய தயாராக இல்லை) , ஆனாலும் வட்டி விகிதத்தினை உயர்த்தியுள்ளார்கள்.
  19. பிபி ட்ரம்பை மாட்டிவிட்டுட்டார் என கூறுகிறார்கள், கடந்த கால அமெரிக்க அதிபர்களது மேசையிலும் ஈரானிற்கெதிரான தாக்குதல் கோப்பு காணப்படுமாம், ஆனால் அவர்கள் மாட்டுப்படவில்லை, ட்ரம்ப் மாட்டுப்பட்டுவிட்டார் என கூறுகிறார்கள்.
  20. இங்கு 91 பெற்றோல் விலை முன்னர் 1.48 - 2.09 எனும் விலைக்குள் காணப்படும் ஆண்டு சராசரி விலை $1.72, இங்கிலாந்து பவுண்ஸில் 0.91(தற்போதய நாணய மாற்று), இங்கிலாந்து சராசரி பெற்றோல் விலை (91) பவுண்ஸில் 1.31 என இணையத்தில் கூறுகிறது அது அவுஸின் நாணயத்தில் $2.47, தற்போது பெற்றோல் விலை தொடர்ந்து இங்கு அதிகரித்து செல்கிறது இன்று $2.27 ($3 டொலர் வரை உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது). ஒப்பீட்டளவில் இங்கிலாந்தில் பெற்றோல் விலை சாதாரணமாகவே அதிகமாக உள்ளது, அத்துடன் மூன்றாம் தரப்பு காப்புறுதி மிக அதிகமாக உள்ளது, வாகன வரி கிட்டத்தட்ட ஒரே அளவாக உள்ளது (5 வருடத்திற்கு குறைவான காரிற்கு குறைவாக இருக்கும்). பெற்றோல் மிகையாக உற்பத்தி செய்யும் நாடு என கூறியுள்ளீர்கள், ஏன் இங்கிலாந்தில் பெற்றோல் விலை அதிகமாக உள்ளது?
  21. பயங்கரவாத சதி வழக்கில் ஆறு உக்ரேனியர்களும், அமெரிக்க பிரஜையும் இந்தியாவில் கைது! இந்தியாவிற்கு எதிராகப் பயங்கரவாதச் செயல்களை மேற்கொள்ள சதித்திட்டம் தீட்டிய குற்றச்சாட்டில் ஆறு உக்ரேனிய நாட்டினரும் அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவரும் தேசிய புலனாய்வு முகமை (‍NIA) அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த வாரம் பல NIA குழுக்களால் ஒருங்கிணைந்த நடவடிக்கையில் மேற்கொள்ளப்பட்ட இந்த கைதுகள், சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் (UAPA) பிரிவு 18 இன் கீழ் மற்றும் பிற தொடர்புடைய பிரிவுகளின் கீழ் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்த வழக்கில் வெள்ளிக்கிழமை மாலை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. அமெரிக்காவைச் சேர்ந்த அந்த நபர் கொல்கத்தா விமான நிலையத்தில் குடிவரவுத் துறையினரால் தடுத்து வைக்கப்பட்டார். மேலும், ஆறு உக்ரேனியர்கள் லக்னோ மற்றும் டெல்லி விமான நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டனர். குற்றம் சாட்டப்பட்டவர் செல்லுபடியாகும் விசாக்களில் இந்தியாவிற்குள் நுழைந்ததாகவும், ஆனால் கட்டாய தடைசெய்யப்பட்ட பகுதி அனுமதி இல்லாமல் மிசோரமுக்குச் சென்றதாகவும் ஒரு வட்டாரம் தெரிவித்தது. அங்கு, இந்தியாவிற்கு விரோதமான இனக் குழுக்களை அவர்கள் சந்தித்ததாகக் கூறப்படுகிறது. மேலும், ஐரோப்பாவிலிருந்து வந்த பல ட்ரோன் சரக்குகளை அவர்கள் மிசோரம் மாநிலத்தில் கொண்டுவந்து சேர்த்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது என்றும் அந்த வட்டாரம் தெரிவித்தது. சந்தேக நபர்கள் டெல்லிக்கு அழைத்து வரப்பட்டு, சனிக்கிழமையன்று நீதிபதி முன் முன்னிலைப்படுத்தப்பட்டனர். அவர் அவர்களை மூன்று நாட்கள் நீதிமன்றக் காவலில் வைத்தார். சந்தேக நபர்களுக்கான தடுப்புக் காவல் திங்கட்கிழமையன்று மீண்டும் 11 நாட்கள் நீட்டிக்கப்பட்டு மார்ச் 27 வரை நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டனர். அந்தக் குழு பயங்கரவாதத் தாக்குதல்களைத் திட்டமிட்டு வந்ததாகவும், அவர்களின் நடமாட்டம் எல்லை தாண்டிய அச்சுறுத்தல்கள் குறித்து கவலையை ஏற்படுத்தியதாகவும் NIA குற்றம் சாட்டியுள்ளது. https://athavannews.com/2026/1468779
  22. சீனாவில் மனித வடிவ ரோபோவை கைது செய்த பொலிசார். சீனாவின் மகாவ் நகரில் 70 வயதுடைய ஒரு பெண்மணியை பயமுறுத்தியதாக கூறப்படும் மனித வடிவ ரோபோவை பொலிஸார் கைது செய்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. தகவல்களின் படி, வீதியில் நடந்து கொண்டிருந்த பெண் தனது கைபேசியை பார்க்கும்போது, பின்னால் ரோபோ வந்ததை கவனித்தார். ரோபோ அருகில் நின்றிருப்பதைப் பார்த்ததும் பெண் அதிர்ச்சியடைந்தார். இந்த ரோபோ மகாவ் நகரில் உள்ள ஒரு கல்வி மையத்திற்கு சொந்தமானது. சம்பவத்திற்கு பிறகு ரோபோ அதன் 50 வயதான உரிமையாளரிடம் மீண்டும் ஒப்படைக்கப்பட்டது. பொலிஸார் பொதுமக்கள் இருப்பிடங்களில் ரோபோக்களை அதிக எச்சரிக்கையுடன் பயன்படுத்தும்படி அறிவுறுத்தியுள்ளனர். கல்வி மையத்தின் பிரதிநிதி டோவின் மேக், ரோபோ சம்பவத்திற்குப் பின்னர் அந்த பகுதியை விட்டு வெளியேறிக் கொண்டிருந்ததாகவும், இதனால் இந்த சந்திப்பு ஏற்பட்டதாகவும் தெரிவித்தார். சம்பவத்திற்கு நேரில் சாட்சி பெற்ற சிலர் இதனை உறுதிப்படுத்தியுள்ளனர். பின்னர் பெண் மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சை பெற்றார், எந்தவித புகாரும் அளிக்க மாட்டேன் என தெரிவித்தார். சமூக ஊடகங்களில் இந்த சம்பவம் பரவியதைக் கண்ட பிறகு, பொலிஸார் ரோபோவை கைது செய்ததை நகைச்சுவையாகவும் பகிர்ந்து வருகின்றனர். https://athavannews.com/2026/1468772
  23. இலங்கை கடல் பகுதியில் அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு நிச்சயம் பதிலடி கொடுக்கப்படும் – ஈரான் உறுதி! இலங்கைக்கு அருகே இந்தியப் பெருங்கடலில் 100க்கும் மேற்பட்ட ஈரானிய மாலுமிகளைக் கொன்ற கொடூரமான கடற்படைத் தாக்குதலைத் தொடர்ந்து, ஈரானிய கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் ஷாராம் இரானி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்குக் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த தாக்குதலுக்கு தீர்க்கமான மற்றும் எதிர்பாராத பதிலடி கொடுக்கப்படும் என்றும் அவர் சூளுரைத்துள்ளார். ஈரானிய செய்திச் சேவையான Press TV தகவலின்படி, தனது வீரர்களின் மரணங்களுக்குப் பதிலடி கொடுக்காமல் விடமாட்டோம் என்று அந்த மூத்த அதிகாரி அறிவித்ததோடு, அந்த தாக்குதல் சற்றும் எதிர்பாராத இடத்திலிருந்து வழங்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளார். இந்த அறிக்கை, ஈரானின் இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் அமீர் ஹதாமியின் முந்தைய கருத்துக்களைத் தொடர்ந்து வந்துள்ளது. அனர் முன்னதாக ஐரிஸ் தேனா போர்க்கப்பலின் மாலுமிகளின் மரணங்களுக்கு ஈரான் பதிலளிக்காமல் போகாது என்று எச்சரித்திருந்தார். அந்தக் கப்பல் ஒரு அமைதியான பணியை முடித்துவிட்டு, போரில் ஈடுபடாத நிலையிலும் ஈரானுக்குத் திரும்பிக்கொண்டிருந்தபோது தாக்கப்பட்டதாக ஹதாமி விளக்கினார். மாலுமிகளின் தியாகத்தை ஈரானின் கடற்படை வரலாற்றில் தைரியத்தின் நீடித்த சின்னமாக அவர் விவரித்தார். மார்ச் 4 அன்று, இலங்கையின் காலி கடற்கரையிலிருந்து சுமார் 40 கடல் மைல் தொலைவில், ஈரானிய கடற்படையின் ‘தேனா’ என்ற போர்க்கப்பல், அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவப்பட்ட MK-48 ரக நீர்மூழ்கி ஏவுகணையால் தாக்கப்பட்டது. இந்தியாவில் நடைபெற்ற பன்னாட்டு கடற்படைப் பயிற்சியில் பங்கேற்றுத் திரும்பிக்கொண்டிருந்தபோது, சர்வதேச கடல் பகுதியில் இந்தக் கப்பல் குறிவைக்கப்பட்டது. இந்தத் தாக்குதலில் 104 மாலுமிகள் கொல்லப்பட்டதாகவும், 87 உடல்கள் மீட்கப்பட்டதாகவும், 32 மாலுமிகள் மீட்கப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது. இந்திய கடற்படையின் அழைப்பின் பேரில் ஐரிஸ் தேனா கூட்டுப் பயிற்சியில் பங்கேற்றதால், இந்தத் தாக்குதல் குறிப்பாக சர்ச்சைக்குரியதாகியுள்ளது. அமெரிக்கப் போர்ச் செயலர் பீட் ஹெக்ஸெத் இந்தத் தாக்குதலை உறுதிப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் சர்வதேச அளவில் பரவலான சீற்றத்தையும் கண்டனத்தையும் தூண்டியுள்ளது. https://athavannews.com/2026/1468790

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.