அறிவியல் தொழில்நுட்பம்
அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்
அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.
அத்துடன் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3265 topics in this forum
-
எனி மனிதர்கள் இறந்தால் அவர்களின் உடலை தகனம் செய்யவோ.. அல்லது ஒரு ஒதுக்குப்புறமாக புதைக்கவோ தேவையில்லை. மனித உடலை பசளையாக்கி உறவினர்கள்.. இறந்தவர்களின் ஞாபகார்த்தமாக தமது வீட்டுத் தோட்டத்திலேயே தாவரங்களுக்கு தூவி விடலாம். அமெரிக்காவில் இறந்த உடல்களை வைத்து மேற்கொண்ட ஆய்வில்.. மனித உடலில் உள்ள மென் திசுக்களையெல்லாம்.. 30 நாளைக்குள் பாதுகாப்பாகவும் திறமையாகவும்.. உக்க வைத்துவிட முடியும் என்று கண்டறிந்துள்ளனர். மேலும்.. இதனால்.. யாருக்கும் தீங்கும் வராதாம். அதுமட்டுமன்றி இது ஒரு சுற்றுச்சூழலுக்கு அதிகம் பாதிப்பை உண்டு பண்ணாத வழிமுறையாகவும் கருதப்படுகிறது. A US firm has given scientific details of its "human composting" process for environmental…
-
- 10 replies
- 1.1k views
-
-
வெள்ளி உள்ளிட்ட கோள்கள் குறித்து புதிய பரிமாணத்தில் ஆராய்ந்து விண்வெளி ரகசியங்களை வெளிக்கொண்டுவரும் புதிய முயற்சியில் நாசா களமிறங்கியுள்ளது. வெள்ளி, வியாழனின் துணைக்கோளான ஐஓ, நெப்டியூனின் துணைக்கோளான ட்ரைடெண்ட் ஆகியவற்றை ஆராய 4 புதிய திட்டங்களை நாசா வகுத்துவருகிறது. வெள்ளி கிரகத்துக்கு இரண்டு ஆராய்ச்சிக்குழுவும் மற்ற இரண்டிற்கும் தலா ஒரு ஆராய்ச்சி குழுவும் நியமிக்கப்படவுள்ளது. இதுவரை கண்டிராத விண்வெளி ரகசியங்களை வெளிக்கொண்டுவரும் விதமான பல்வேறு யோசனைகளை அறிக்கையாக தயார் செய்து வழங்க கேட்டுக்கொண்டுள்ள நாசா, அதற்காக தலா 9 மாதங்கள் கால அவகாசமும், இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 21 கோடி நிதியும் ஒதுக்கவும் முடிவுசெய்துள்ளது. https://www.polimernews.com/dnews/100…
-
- 1 reply
- 323 views
-
-
ஊக்கி | தொழில்நுட்பத் துறைக்கு வடக்கின் மாற்று வழி! 4 வளரும் வடக்கு -3 ஜெகன் அருளையா ஜெகன் அருளையா டிசம்பர் 2019 இல் புதிய அரசு பதவியேற்றதும் 64,000 வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலைகள் வழங்கப்படுமென அமைச்சரொருவர் அறிவித்திருந்தார். இருந்தும் இலங்கை அவ்வப்போது பல்லாயிரக்கணக்கான புதிய பட்டதாரிகளை உருவாக்கிக்கொண்டேயிருக்கிறது. அத்தனை பேரும் அரச சேவைக்குள்ளேதான் நுழைய விரும்புகின்றனர். அரச சேவைகள் ஏற்கெனவே இப்படியானவர்களினால் வீங்கிப்போயிருக்கிறது. அதிகாரிகள் அதிகரிப்பதனால் அதிகாரத்துவமும் (bureaucracy) அதிகரிக்கிறது. அதிக அதிகாரத்துவம் முன்ன்னேற்றத்தைத் தாமதப்படுத்துகிறது. இவ்வேளையில் இலங்கைக்கு மேலும் பட்டதாரிகள் தேவைதானா? …
-
- 0 replies
- 577 views
-
-
இறந்த மகளை.. கண்முன் கொண்டுவந்த தொழில்நுட்பம்- அனைவரையும் நெகிழவைத்த தருணம்! தென்கொரியாவில் தொலைக்காட்சி நிகழ்ச்சியில், விசுவல் ரியாலிற்றி தொழில்நுட்பம் (Visual Reality Technology) மூலம் 4 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த தனது மகளை தாய் சந்திக்கும் காட்சி அனைவரையும் நெகிழவைத்துள்ளது. VR எனப்படும் விசுவல் ரியாலிற்றி என்பது, அசல் போலவே இருக்கும் கற்பனைக் காட்சிகளை நேரடியாகப் பார்க்கும் தொழில்நுட்பமாகும். இதற்காக கற்பனையான ஒரு உலகத்தை உருவாக்கி அந்த மாய உலகத்தில் பயணிப்பது தான் இதன் சிறப்பம்சமாக உள்ளது. இந்நிலையில், தென்கொரியாவில் ‘Meeting You’ என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஜாங் ஜி சங் என்ற பெண், கடந்த 2016இல் மர்ம நோயால் இறந்துபோன தன் மகள் நயோன்…
-
- 2 replies
- 925 views
-
-
விண்வெளிக்கு அப்பால் இருந்து மர்மமான ரேடியோ சிக்னல்கள் வருவதை வானியல் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். ஃஎப் ஆர் பி எனப்படும் அதிவேக ரேடியோ அலைவரிசைகள் ஆற்றல் மிக்கதாக வருகின்றன என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இத்தகைய ரேடியோ சிக்னல்கள் 50 கோடி ஒளி ஆண்டு தொலைவில் இருந்து வருவதாகவும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். முன்னதாக கடந்த 2018 செப்டம்பர் மற்றும் 2019 அக்டோபர் மாதங்களில் கனடாவில் செயல்பட்டு வரும் விண்வெளி ஆய்வு மையம் ஒவ்வொரு 16 நாட்களுக்கு ஒரு முறை இதுபோன்ற அதிவேக ரேடியோ சிக்னல்கள் வருவதையும் அவர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த நிலையில் விண்வெளியில் இருந்து புதிதாக 8 ரேடியோ சிக்னல்கள் வருவதையும் கண்டுபிடித்துள்ள வானியல் ஆய்வாளர்கள், இத்தகைய சிக்னல்கள் எங்கிருந்து வர…
-
- 4 replies
- 591 views
- 1 follower
-
-
சூரியனுக்கு மிகவும் அருகில் சென்று ஆய்வு நடத்தக்கூடிய செய்மதி விண்ணில் ஏவப்பட்டது! சூரியனுக்கு மிகவும் அருகில் சென்று ஆய்வு நடத்தக்கூடிய ஐரோப்பாவின் செய்மதி விண்ணில் ஏவப்பட்டுள்ளது. அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்திலுள்ள கேப் கனவெரல் தளத்திலிருந்து இது விண்ணில் ஏவப்பட்டுள்ளது. இந்தத் திட்டமானது 1.5 பில்லியன் யூரோ பெறுமதியானது என அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த செய்மதியில் கெமராக்கள், சென்ஸர்கள் உட்பட பல்வேறு உயர்தொழில்நுட்ப சாதனங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இவற்றினைக் கொண்டு சூரியனின் இயக்கத்திலுள்ள மிகவும் நுண்மையான விடயங்கள் கண்டறியப்படவுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. http://athavannews.com/சூரியனுக்கு-மிகவும்-அருக/
-
- 0 replies
- 311 views
-
-
ஈரானின் மூன்றாவது செயற்கை கோள் முயற்சியும் தோல்வி! நீண்டகால விண்வெளி திட்டங்களுள் ஒன்றான, ஜாபர் செயற்கைக்கோளை விண்ணில் ஏவுவதில் ஈரான் தோல்வி கண்டுள்ளதாக ஈரானின் விண்வெளி திட்டங்களுக்கான பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அஹ்மத் ஹொசைனி தெரிவித்துள்ளார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) செயற்கைக்கோளை பூமியின் சுற்று வட்டப்பாதையில் செலுத்தப்பட வேண்டிய விண்கலம் அதன் வேகத்தை எட்ட முடியவில்லை என அவர் விளக்கம் அளித்துள்ளார். எனினும், ஈரானிய விண்வெளி வல்லுநர்கள் தரவுகளை ஆராய்ந்து செயற்படுவார்கள் எனவும், சிக்கல்களை சரி செய்து செயற்கைக்கோளை மீண்டும் ஏவுவதற்கு தயார் செய்வார்கள் என்றும் அவர் கூறினார். செயற்கைக்கோள் ஜாபரை 540 கி.மீ உயரத்துக்கு அனுப்பியது, ஆனால் தக…
-
- 4 replies
- 621 views
-
-
சூரியனை ஆய்வு செய்வதற்கான திட்டத்தின் கீழ், அதிநவீன கேமிராக்கள், ஆய்வுக்கருவிகளை உள்ளடக்கிய சோலார் ஆர்பிட்டர் என்று பெயரிடப்பட்ட விண்கலத்தை, நாசாவும், ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையமும் இணைந்து, அண்டவெளிக்குள் செலுத்தியிருக்கின்றன. அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள கேப் கனாவெரல் ஏவுதளத்தில் இருந்து, ஞாயிறு இரவு 11.03 மணிக்கு, அட்லஸ் 5 ராக்கெட் மூலம் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. சோலோ என சுருங்க அழைக்கப்படும் இந்த சோலார் ஆர்ப்பிட்டர் விண்கலம், சூரியனின் மேற்பரப்பையும், அதில் நிமிடத்திற்கு, நிமிடம் ஏற்படும் மாற்றங்களையும், தெளிவாக படம்பிடிப்பதோடு, அங்கும் ஏற்படும் ரசாயன மாற்றங்கள் குறித்த ஒப்பீட்டு ஆய்விலும் ஈடுபடும். சூரியனை, அதன் மேற்பரப்பிலிருந்து, 2…
-
- 0 replies
- 303 views
-
-
மைக்ரோசாப்ட் நிறுவனரும் உலக பணக்காரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளவருமான பில்கேட்ஸ், மிக பிரமாண்டமான சொகுசு கப்பல் ஒன்றை வாங்கியுள்ளார். தாராளம்: உலகின் பெரும் செல்வந்தர்களில் ஒருவரான பில்கேட்ஸ், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் மற்றும் பாதிப்பு ஏற்படுத்தாத முயற்சிகளுக்கு ஆதரவு அளிப்பது, உலகின் ஆரோக்கியத்தை மேம்படுத்த செயல்படும் நிறுவனங்களுக்கு உதவுவது உள்ளிட்ட செயல்களுக்காக தொடர்ந்து தனது பணத்தை தாராளமாக செலவிட்டு வருகிறார். பிரமாண்ட கப்பல்: சுற்றுசூழலை பாதுகாக்கும் வகையில் உருவாக்கப்படும் பசுமை சொகுசு கப்பல்களை வாங்குவதில் அதிக முதலீடு செய்து வருகிறார். இதன் பொருட்டு பில்கேட்ஸ் இந்திய மதிப்பில் ரூ.4,600 கோடி மதிப்புடைய சூப்பர் கப்பல் ஒன்றை வாங்க சம…
-
- 0 replies
- 307 views
-
-
அனைவருமே பயன்படுத்தும் வகையில், நேரடியாக சிக்னல்களிலிருந்து நாம் புரிந்துகொள்ள முடிகிற மொழிக்கு (ஆங்கிலம்) அந்தத் தகவல்களை மாற்ற முடிந்தால் எப்படி இருக்கும்..? மூளையிலிருந்து வரும் சமிக்ஞைகளை நாம் புரிந்துகொள்ள முடிந்த மொழியாக மாற்றும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை சென்னை ஐஐடி-யைச் (IIT) சேர்ந்த துணைப் பேராசிரியர் விஷால் நந்திகானா மற்றும் அவருடைய மாணவர்கள் இணைந்து உருவாக்கியுள்ளனர். சிக்னல்கள் என்றாலே அலை வடிவில் (Waveforms) தான் இருக்கும். அந்த அலை வடிவில் உள்ள சிக்னல்களை நாம் புரிந்துகொள்ளும் வகையில் மாற்ற ஃபோரியர் ட்ரான்ஸ்பார்ம் (Fourier Transform) அல்லது லேப்லாஸ் ட்ரான்ஸ்பார்ம் (Laplace Transform) போன்ற கணிதக் கோட்பாடுகளைப் பயன்படுத்துவோம். இதுபோன்ற கண…
-
- 1 reply
- 473 views
-
-
சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து ஒரு பெண் உட்பட மூன்று விண்வெளி வீரர்கள் வெற்றிகரமாக, புவிக்கு திரும்பி கஜகஸ்தானில் தரை இறங்கினர். விண்வெளி நிலையத்திலிருந்து விண்வெளி ஓடம் மூலம் வெளியேறியவர்கள், குறிப்பிட்ட எல்லையை அடைந்த பிறகு பாரசூட் மூலம் தரை இறங்கினார்கள். இதில் அமெரிக்க வீராங்கனை க்ரிஷ்டினா கோச், இத்தாலிய வீரர் லூகா பர்மிடானோ மற்றும் ரஷ்யாவின் அலெக்சாண்டர் ஸ்க்வார்ட்சோவ் ஆகியோர் அடங்குவர். இதனிடையே, ஒரே பயணத்தில் தொடர்ந்து 328 நாட்கள் விண்வெளியில் தங்கியிருந்தன் மூலம் கிரிஷ்டினா கோச் புதிய சாதனை படைத்துள்ளார். https://www.polimernews.com/dnews/99526/விண்வெளிநிலையத்திலிருந்து-பூமிவந்தடைந்த-வீரர்கள் Astronaut Christina Koch sets new record …
-
- 0 replies
- 451 views
-
-
கொரோனா வைரஸினை ஒத்த வைரஸினை உருவாக்கியுள்ளதாக விஞ்ஞானிகள் அறிவிப்பு கொரோனா வைரஸினை ஒத்த வைரஸினை உருவாக்கியுள்ளதாக அவுஸ்ரேலிய விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். மெல்பேர்னின் பீட்டர் டொகெட்ரி நிறுவகத்தை சேர்ந்த விஞ்ஞானிகளே கொரோனோ வைரஸினை ஒத்த வைரஸ்களை உருவாக்கியுள்ளனர். உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஆராய்ச்சியாளர்களுடன் இந்த வைரஸினை அவுஸ்ரேலிய விஞ்ஞானிகள் பகிர்ந்து கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. குபேய் மாநிலத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸின் மரபணு வரிசையை சீனா விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர். எனினும் தங்களுடைய முயற்சி கொரோனா வைரஸ் குறித்த பல விடயங்களை அறிந்துகொள்வதற்கு மிக முக்கியமானதாக அமையும் என பீட்டர் டொகெட்ரி நிறுவகத்தின் தலைவர் யூலியன் டுரூஸ் தெர…
-
- 0 replies
- 320 views
-
-
முழுமையாக செயல்பாட்டிற்கு வந்த சீனாவின் பிரம்மாண்ட தொலைநோக்கி! உலகின் மிகப்பெரிய மற்றும் மிக முக்கியமான ரேடியோ தொலைநோக்கியானது அலுவல்ரீதியாக வணிகத்திற்காக திறக்கப்பட்டுள்ளது என சீனாவின் அதிகாரப்பூர்வ அரசு ஊடகமான சின்ஹுவா தெரிவித்துள்ளது. இந்த பாஸ்ட் ரேடியோ தொலைநோக்கி 2016ல் வெளிச்சத்திற்கு வந்திருந்தாலும், அதன் பின்னர் பரிசோதனை மற்றும் கட்டமைப்பதற்கு உட்பட்டிருந்தது. பாஸ்ட் என்பது ஐநூறு மீட்டர் துளை கோள தொலைநோக்கி ( FAST - Five-hundred meter Aperture Spherical Telescope) என்பதை குறிக்கிறது. பாஸ்ட்-ன் புனைப்பெயரான தியான்யான் என்பது, "வானத்தின் கண்" அல்லது "சொர்க்கத்தின் கண்"என பொருள்படுகிறது. இது தென்மேற்கு சீனாவின் குய்ஷோவில் இயற்கையான பள்ளத்தாக்கில் கட்டப்பட்டுள…
-
- 0 replies
- 341 views
-
-
இனிமேல் பல் துலக்க பேஸ்ட் தேவையில்லை: ஒரே ஒரு கேப்ஸ்யூல் போதும்! பல் துலக்கும் பேஸ்ட் பிளாஸ்டிக் டப்பாக்களில் வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே. இந்த காலி டூத்பேஸ்ட் பிளாஸ்டிக் டப்பாக்கள் உலகம் முழுவதும் மில்லியன் கணக்கில் தூக்கி வீசி படுவதால் இந்த மக்காத பிளாஸ்டிக் டப்பாக்கள் பல்வேறு சுற்றுச்சூழல் கேடு விளைவித்து வருகின்றன இதனை தவிர்க்கும் வகையில் கனடாவைச் சேர்ந்த மைக் மெடிகாஃப் (mike medicoff) மற்றும் டாமியென் வின்ஸ் (damien vince) ஆகிய இருவர் பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக கேப்ஸ்யூலை கண்டுபிடித்துள்ளனர். காகிதத்தால் ஆன இந்த கேப்சூலில் பற்பசை நிரப்பப்பட…
-
- 1 reply
- 864 views
-
-
நாசா கண்டுபிடித்த புதிய பூமி.? டிஸ்கி : சீக்கிரம் மூட்டை முடிச்சோட கிளம்பி வாய்யா.. விண்கலம் கிளம்பிட போகுது..☺️
-
- 2 replies
- 844 views
-
-
இந்திய விண்வெளி வீரர்களுக்கு ரஷ்யாவில் பயிற்சி.. 'ககன்யான்’ திட்டத்தில் விண்வெளிக்கு செல்ல தேர்வான 4 பேருக்கு ரஷ்யாவில் 11 மாதங்கள் பயிற்சி அளிக்கப்படும் என்றுஇந்திய மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அணுசக்தி மற்றும் விண்வெளித்துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் விடுத்துள்ள அறிக்கையில், தேர்வுக்கு பிறகு, 4 விண்வெளி வீரர்கள் இறுதி செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ரஷ்யாவில் 11 மாதங்கள் பயிற்சி அளிக்கப்படும் என்றும், இம்மாதம் 3-வது வாரத்தில் பயிற்சி தொடங்கும் என்றும் அவர் குறிப்பிட்டு உள்ளார். 11 மாத பயிற்சி முடிந்து திரும்பிய பிறகு, இந்தியாவிலும் அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என்றும்,விண்கலத்தை எப்படி இயக்குவது? எப்படி பணியாற்றுவது? உள்ளிட்ட பயி…
-
- 0 replies
- 466 views
-
-
கழிவு பொருட்களில் இருந்து உந்துருளி தயாாித்த கிளிநொச்சி மாணவன்..! உருத்திரபுரம்- எள்ளுக்காடு கிராமத்தை சோ்ந்த ப.கிருசாந்த் என்ற மாணவன் கழிவு பொருட்களை கொண்டு சிறிய உந்துருளி ஒன்றை உருவாக்கியுள்ளான். வடிவமைத்த உந்துருளியை நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களின் காரியாலயமான அறிவகத்தில் வைத்து செயற்படுத்திக்காட்டினார். உருத்திரபுரம் எள்ளுக்காடு கிராமத்தைச் சேர்ந்த கிளிநொச்சி இந்துக்கல்லூரியில் பொறியியல் தொழில்நுட்பப்பிரிவில் குறித்த மாணவன் கல்வி கற்கின்றமை குறிப்பிடத்தக்கது. https://jaffnazone.com/news/15365
-
- 0 replies
- 1.1k views
-
-
இவ்வாண்டில் நிகழவிருக்கும் முதல் சந்திர கிரகணத்திற்கு ‘ஓநாய் சந்திர கிரகணம்’ (Wolf Moon Eclipse) என அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா பெயரிட்டுள்ளது. சந்திர கிரகணம் என்பது நிலவுக்கும் சூரியனுக்கும் இடையே புவி கடக்கும்போது நடக்கும் ஒரு நிகழ்வாகும். இந்த சந்திர கிரகணத்தால் பூமியில் விழும் சூரியனின் ஒளி சிறிது நேரத்திற்கு சற்றே மங்கிய நிலையில் காணப்படும். கிரகணம் உச்சியில் வரும்போது நிலவின் வெளிப்புற அடுக்கு பூமியின் நிழலில் விழும். மேலும், கிரகணம் உச்சத்தில் இருக்கும்போது 90 சதவிகித நிலவு பூமியால் மறைக்கப்படும். இந்த நிகழ்வால் நிலவின் ஒளி மங்கும், பிறநாட்களில் காட்சியளிப்பது போல இருக்காது. இவ்வாண்டின் முதல் சந்திர கிரகணம் நாளை (10) நிகழவிருக்கிறது…
-
- 0 replies
- 623 views
-
-
மாற்று திறனாளிகளுக்காக சூாிய சக்தியில் இயங்கும் துவிச்சக்கர வண்டியை கண்டுபிடித்த 13 வயதான கிளிநொச்சி மாணவன்..! கிளிநொச்சி- ஆனந்தபுரம் கிராமத்தை சோ்ந்த 13 வயதான பாடசாலை மாணவன் மாற்றுத் திறனாளிக ளின் பயன்பாட்டுக்காக சோலாா் சக்தியில் இயங்கும் துவிச்சக்கர வண்டியை கண்டுபிடித்து சாதித்துள்ளான். கிளிநொச்சி மகாவித்தியாலயத்தில் 8ம் வகுப்பில் கல்வி கற்கும் சுந்தரலிங்கம் பிரணவன் என்ற மாணவனே மாற்றுத்திறனாளிகளுக்கான இந்த துவிச்சக்கர வண்டியை உருவாக்கியுள்ளான். தனது தாத்தாவின் உதவியுடன் கழிவு பொருட்களை கொண்டு இந்த துவிச்சக்கர வண்டியை உருவாக்கியிருக்கின்றான். இதனை பலரும் பாராட்டியிருக்கின்றனா். கண்டுபிடிப்புக்கள், தொழிநுட்ப வளா்ச்சி இன்று பல்வேறு நிலைகளை அடைந்து கொண்ட…
-
- 2 replies
- 462 views
-
-
ஜோனாதன் அமோஸ் பிபிசி அறிவியல் செய்தியாளர் …
-
- 0 replies
- 461 views
-
-
சாம்சங்கின் துணை நிறுவனமான ஸ்டார் லேப், நியான் என்கிற செயற்கை மனிதனை அறிமுகப்படுத்தியுள்ளது. Above: A few avatars generated by Neon. அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் நடைபெற்று வரும் நுகர்வோருக்கான மின்சாதன பொருட்களின் பொருட்காட்சியில், செயற்கை நுண்ணறிவு கொண்டு செயல்படும் 6 செயற்கை மனிதர்களை ஸ்டார் லேப் அறிமுகப்படுத்தியுள்ளது. சாதாரண மனிதர்களை போன்று இவை அனைத்து வகையான உணர்ச்சிகளை வெளிப்படுத்த கூடியதாய் உள்ளது. மனிதர்கள் உடனான உரையாடலை சேமித்து வைத்து அதன் மூலம் கற்றுகொண்டு, சூழ்நிலைக்கு ஏற்ப செயல்படும் திறன் கொண்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நடப்பாண்டின் இறுதியில் இந்த செயற்கை மனிதர்களுக்கான துணையை அறிமுகப்படுத்தும் திட்டம் உள்ளதாகவும் ஸ்டா…
-
- 0 replies
- 771 views
-
-
யாழ்.பல்கலைகழக மாணவா்கள் கண்டுபிடித்த ரோபோக்களுடன் கிளிநொச்சியில் மாபெரும் அறிவியல் கண்காட்சி..! யாழ் பல்கலைக்கழக பொறியியல்பீட மாணவர்களால் ஏற்பாடு செய்துள்ள வருடாந்த மாபெரும் கண்காட்சி (EXPO ARIVIYAL NAGAR- 2020 ) இன்று ஆரம்பமாகியுள்ளது.குறித்த கண்காட்சி இன்று காலை 8.30 மணியளவில் கிளிநொச்சி அறிவியல் நகரில் அமைந்துள்ள யாழ்.பல்கலைக்கழக பொறியியல் பீடத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இக்கண்காட்சி ஆரம்ப நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாண பல்கலைக்கழக தகுதி வாய்ந்த அதிகாரி பேராசிரியர் திரு.க.கந்தசாமி கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார் . இந்நிகழ்வில் 1 . யாழ் பொறியியல் பீட மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் கண்காட்சி. 2. இலவச மருத்துவ முகாம் (Medi…
-
- 2 replies
- 884 views
-
-
மின்சாரத்தினை உற்பத்தி செய்வதற்கு பல முறைகள் காணப்படுகின்ற போதிலும் இயற்கை முறையில் சூழலுக்கு பாதிப்பின்றி மின்சாரத்தினை உற்பத்தி செய்வதற்கான வழிமுறைகளை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது நீரிலிருந்து மின்சாரத்தினை உற்பத்தி செய்யக்கூடிய பதார்த்தம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வீட்டின் சில தேவைகளுக்கு போதிய மின்சாரத்தினை உற்பத்தி செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தவிர மேலதிக மின்சாரத்தினை அயலிலிருக்கும் வீடுகளுக்கும் பகிர்ந்தளிக்க முடியும். குறைந்தளவு நீரினைப் பயன்படுத்தி மின்சாத்தினை உற்பத்தி செய்யும் electrokinetic streaming potential எனும் இம் முறையினை ஹவுகாத்தியிலுள்ள IIT நிறுவனத்தினை சேர்ந்த ஆராய்ச்சியாளர்களே கண்ட…
-
- 1 reply
- 885 views
-
-
சந்திரயான் 3 திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக இஸ்ரோ அமைப்பின் தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். இது தொடர்பான அனைத்து பணிகளும் நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார். புத்தாண்டு அன்று பெங்களூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய இஸ்ரோ தலைவர் சிவன், சந்திரயான் 2 திட்டத்தை போன்றே சந்திரயான் 3 இருக்கும் என்றும், ஒரு சில மாற்றங்கள் இதில் செய்யப்படும் என்றும் தெரிவித்தார். "சந்திரயான் 2 வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்படவில்லை என்றாலும், அதன் ஆர்ப்பிட்டர் இன்னும் செயல்பாட்டில்தான் இருக்கிறது. அடுத்த 7 ஆண்டுகளுக்கு அது அறிவியல் தரவுகளை அனுப்பும்" என்றும் சிவன் கூறினார். மேலும் விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் ககன்யான் திட்டத்திற்கு நான்கு பேர் தேர்வு செய்யப…
-
- 2 replies
- 698 views
-
-
செவ்வாய் கிரகத்தில் ரோபோ மூலம் ஆக்சிஜனை உற்பத்தி செய்ய நாசா திட்டமிட்டு உள்ளது. அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய, நடப்பு ஆண்டில் புதிய ரோவர் ரோபோவினை அனுப்பவுள்ளது. அந்த ரோவரின் புகைப்படத்தினை தற்போது வெளியிட்டுள்ளது நாசா. இந்த ரோவர் செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழக்கூடிய சாத்தியம் குறித்து ஆராயவுள்ளது. இதில் 23 கேமிராக்கள், 2 மைக்குகள் இணைக்கப்பட்டுள்ளன. வருகிற ஜுலை மாதம் ரோபோ விண்ணில் செலுத்தப்படவுள்ளது.செவ்வாய் கிரகத்தில் ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்கும் சாத்தியக்கூறுகள் குறித்து இந்த ரோபோ ஆராய உள்ளது. https://www.polimernews.com/dnews/95188/செவ்வாய்-கிரகத்தில்ஆக்சிஜன்-உற்பத்தி-செய்யநாசா-திட்டம்
-
- 1 reply
- 1.1k views
-