Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அறிவியல் தொழில்நுட்பம்

அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.

அத்துடன் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. தொடுதிரை தொழில்நுட்பத்தினைக் கொண்ட ஸ்மார்ட் கைக்கடிகாரங்களை உற்பத்தி செய்யும் முயற்சியில் அப்பிள் நிறுவனம் மற்றும் சம்சுங் நிறுவனம் என்பன ஏற்கனவே ஈடுபட்டுள்ள நேரத்தில் சற்று தாமதமாக மைக்ரோசொப்ட் நிறுவனமும் களத்தில் குதித்துள்ளது. இதன் அடிப்படையில் விண்டோஸ் 8 இயங்குதளத்தினைக் கொண்டதும் 1.5 அங்குல அளவுடைய தொடுதிரையினை உள்ளடக்கியதுமான ஸ்மார்ட் கடிகாரத்தை உருவாக்குவதில் மைக்ரோசொப்ட் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. மேலும் இக்கைக் கடிகாரமானது சிறிய கணினி ஒன்றினைப் போல செயற்படக்கூடியதாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. http://www.seithy.com/breifNews.php?newsID=80874&category=CommonNews&language=tamil

  2. பூமியைப் போன்று மனிதன் வாழ ஏற்ற சூழ்நிலை கொண்ட 2 புதிய கோள்களை நாசா விண்வெளி ஆய்வு மையம் கண்டுபிடித்துள்ளது. இந்த இரண்டு கோள்களும் பார்ப்பதற்கு பூமியைப் போலவே உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சூரியனுக்கு அருகில் உள்ள 5 கோள்களில் பூமியைப் போலவே இருக்கும் 2 கோள்களில் அதிக வெப்பமோ, அதிக குளிரோ இல்லாமல் இருப்பதாகவும், நீர் ஆதாரம் போதிய அளவு இருப்பதாகவும் நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இது பூமியை விட சுற்றளவில் பெரியதாகும். இருப்பினும் இந்த கோள்களில் நிலப்பரப்பு பாறை அமைப்பை கொண்டதா அல்லது நீர் அமைப்பை கொண்டதா என்பது குறித்து விஞ்ஞானிகள் எந்த ஒரு தகவலையும் வெளியிடவில்லை. ஆனால் இந்த கோள்கள் மனிதன் வாழ ஏற்ற சூழலை கொண்டதாக இருக்கும் என மட்டும் அவர்கள் தெரிவித்துள்ளனர். …

  3. பரிசோதனைக் கூடத்தில் வளர்ந்த சிறுநீரகம் சிறுநீர் கழிக்கிறது! பரிசோதனைக் கூடத்திலேயே வளர்த்தெடுக்கப்பட்டு பின்னர் விலங்குகளில் பொருத்தப்பட்ட சிறுநீரகம் சிறுநீர் கழிக்கத் தொடங்கியுள்ளது. இந்த மருத்துவத் தொழிநுட்பம் ஏனைய உடல் உறுப்புகளில் கையாளப்பட்டு நோயாளிகளிடத்திலும் ஏற்கனவே வெற்றியடைந்திருந்தாலும் மிகவும் நூதனமான உடலுறுப்பான சிறுநீரகத்தில் இப்போது தான் சாத்தியப்பட்டுள்ளது. இயற்கையான சிறுநீரகத்தை விட இந்த தொழிநுட்ப- சிறுநீரகத்தின் தொழிற்பாடு கொஞ்சம் மெதுவாகத் தான் இருக்கிறது. ஆனாலும், இப்போது எட்டப்பட்டுள்ள இந்த முன்னேற்றம், உடல் உறுப்பு- மீள்உருவாக்க மருத்துவத் துறையில் ஒரு புதிய நம்பிக்கையைக் கொடுத்துள்ளதாக நேச்சர் மெடிஸின் என்ற மருத்துவச் சஞ்சிகை கூறு…

  4. மூளைக்கு சிறு வேலை.. உங்கள் மூளையின் உணர்வு திறனுக்கும், உடனடியான செயல்படும் திறனுக்கும் சிறிய சவாலாக இந்த இணைப்பிலுள்ள புதிர்களை, வேகமாக 'க்ளிக்' செய்து முடிவில் வரும் உங்கள் பெறுபேறுகளை இங்கே பதியுங்கள்... முதல்முறை முயன்று பெற்ற மதிப்பெண்களைத் தான் பகிரணும்...ஓ.கே? http://www.bbc.co.uk/science/humanbody/body/interactives/senseschallenge/senses.swf? உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்...!

  5. விஞ்ஞானிகள் விண்வெளி ஓடங்களை அனுப்பி ஆய்வு செய்வதுடன் சில சமயங்களில் தாமும் நேரடியாக சென்று ஆய்வுகளை மேற்கொள்ளுகின்றனர். இவ்வாறே செவ்வாய்க்கு தற்போது விண்வெளி ஓடங்கள் அனுப்பப்பட்டுள்ள போதிலும் அவை செல்வதற்கு மாதக்கணக்கில் பயணம் மேற்கொள்ள வேண்டி இருக்கின்றது. எனவே இப்பிரச்சினையை தீர்க்கும் முகமாக தற்போது பூமியிலிருந்து வெறும் 30 நாட்கள் பயணத்தின் பின்னர் செவ்வாயை சென்றடையக் கூடிய அதிநவீன இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இக்கண்டுபிடிப்பானது செவ்வாயில் ஆராய்ச்சியை துரிதப்படுத்துவதற்கும் விரிவுபட்ட ஆய்வினை மேற்கொள்ளவும் உதவும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். thanks http://tamilmedia24.com/component/option,com_money/id,495/view,addmoney/

  6. சனி கிரகத்தில் மழை பெய்வதற்கு, அதைச் சுற்றியுள்ள வளையம் போன்ற பகுதிதான் காரணம் என்று வானியல் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதை அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். அவர்களின் கண்டுபிடிப்புகளை ஆய்வு செய்து லண்டனில் உள்ள லெய்ஸ்டர் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.விஞ்ஞானிகள் கூறியுள்ளதாவது- சனி கிரகத்தை சுற்றியுள்ள வளையத்தில் இருக்கும் மின்னூட்டப்பட்ட தண்ணீர் மூலக்கூறு அணுக்கள், அக்கிரகத்தின் வளி மண்டலத்தில் மழையாக பெய்கிறது. இந்த மழைப் பொழிவு அக்கிரகத்தின் பெரும்பாலான பகுதிகளில் காணப்படுகிறது. மழைப் பொழிவு காரணமாக சனிக் கிரகத்தின் மேல் பகுதி வெப்ப நிலையில் மாற்றம் ஏற்படுகிறது. இதன் மூலம், அந்தக் கிரகத்தின் வளையம் போன்ற பகுதிக்கும், அ…

  7. சாம்சங் கேலக்சி S3 கனகாலமாக ஒரு கைத்தொலைபேசியைப் பாவிக்காமல் மட்டுமல்ல தேவையும் இல்லாமல் இருந்தது.ஒப்பந்த அடிப்படையில் வாங்கிய அந்தக் கைத் தொலைபேசிக்கு வீணாகப் பணம் செல்கின்றது என நினைத்து அந்த ஒப்பந்தத்தை நிறுத்துவதற்காக ஒரு இடைத்தரகுக்கடை ஒன்றிற்குச் சென்றேன். வாசலில் விளம்பரப்பலகையில் சாம்சங் கலக்சி S 3 ஒப்பந்த அடிப்படையில் 1 யூரோவிற்கு விற்பனை என எழுதப்பட்டிருந்தது. ஆனால் அந்த சலுகை அடிப்படையிலான விற்பனை முதல் நாளுடன் முடிவடைந்துவிட்டது. ஒரு நாள் முந்தி வந்திருந்தால் அதை வாங்கியிருக்கலாம் என நினைத்துவிட்டுக் கடைக்காரரிடம் விசாரிக்கும்போது நீ இப்போது இந்த இடத்திலேயே புதிய ஒப்பந்த்ததிற்குத் தயார் என்றால் நான் உனக்கு அந்தக் கைத் தொலைபேசியை சலுகை அ…

  8. பேரண்டத்தில் உள்ள எண்ணற்ற‌ விண்மீன் திரட்சிகளின் ஒன்றான நமது பால்வீதி மண்டலத்தில் உள்ள எண்ணற்ற விண்மீன்களுள் ஒன்றுதான் நமது சூரியன். அதனைச் சுற்றும் மூன்றாவது கோள் நாம் வாழும் பூமி எனப் படித்து இருக்கிறோம். கோபர் நிகஸ்[19 February 1473 – 24 May 1543)] இத்னை முதலில் வரையறுக்கும் வரை டாலமியின்[CE 90 – CE 168)] புவி மையக் கொள்கையே அதிகம் ஏற்கப்பட்ட கொள்கையாக இருந்தது என்பது வரலாற்று உண்மை. நாம் உணரும் உலகம் முப்பரிமாணம், நேரத்தையும் சேர்த்தால் நான்கு எனலாம். டாலமியின் கருத்து ஏன் நீண்ட காலமாக எதிர்க்கப்படவில்லை?. அது முற்றும் முழுதான தவறான கொள்கை எனில்,இது மிகவும் வியப்பான விடயம் ஆகும். டாலமி பூமி மையத்தில் இருக்கிறது சூரியன்,சந்திரன் ,இதர கோள்கள் பூமியை [நீள்] வட்டத்தி…

  9. டி என் ஏ எனப்படும் மரபணு சோதனை கண்டறிய இது வரை 3 நாட்களில் இருந்து சுமார் 15 நாட்கள் வரை ஆகும். இப்போது பானஸோனிக் நிறுவனமும் பெல்ஜியத்தில் உள்ள ஐ எம் ஈ சியும் சேர்ந்து ஒரு அதி வேக சிப்பை கண்டுபிடித்திருக்கின்றனர். ஒரு துளி ரத்தம் மூலம் 9 நிமிடத்தில் ஹை ஸ்பீட் பீ சி ஆர் வேலை செய்து உலகத்தின் அதி வேக கண்டுபிடிப்பாய் இதை அறிவித்துள்ளனர். இதன் மூலம் சிலருக்கு சிகிச்சை அளிக்க அவர்களுக்கு மாற்று உறுப்பு, அரிய மருந்து வகைகள் ஒத்து கொள்ளுமா என உடனடியாக கன்டுப்பிடிக்க மட்டுமில்லாமல் கிரிமினல் இன்வெஸ்டிகேஷனுக்கும் இது பெரிய அளவில் உதவும். http://www.seithy.com/breifNews.php?newsID=80248&category=CommonNews&language=tamil

  10. FILE வரலாற்றுப் புகழ்மிக்க கலையின் ஊற்றுக்கண் அமைந்துள்ள எல்லோரா குகைகள் உள்ளூரில் 'Verul Leni' என்று அறியப்படுகிறது. இது அவுரங்காபாதிற்கு 30 கிமீ வட‌‌க்கு வடமேற்கு திசையில் அவுரங்காபாதுஸாலிஸ்கான் சாலையில் அமைந்துள்ளது இந்த உலகப்புகழ்பெற்ற எல்லோரா குகைகள். உலகில் எங்கும் காணப்படாத குகைக் கோயில்கள் கொண்டது எல்லோரா. அதிலும் ஒரே கல்லை குடைந்து செதுக்கப்பட்ட கைலாசா குகை உலகப்புகழ் பெற்றது என்பதில் இருவேரு கருத்துகள் இல்லை. மழைக்காலங்களில் இந்த எல்லோரா குகைகளை பார்ப்பதே மனதிற்கும் ஆன்மாவிற்கு உடலுக்கும் மிகவும் ஆரோக்கியமானது. காட்சியழகும், கருத்தழகும் மிகுந்தது எல்லோரா. மழைக்காலங்களில் அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி பச்சைப் பசேலென்று காட்சியளிக்கும்போது எல்லோரா ஒரு பெரிய காவ…

  11. "Copyright info" என்பது நாம் நம்முடைய புகைபடக்கருவியில் எடுக்கும் படங்களுக்கு நாம் தான் உரிமையாளர் என்பதனை நிரூபிக்க உதவும் ஒன்றாகும்.தற்பொழுது சந்தைக்கு வரும் பெரும்பாலான DSLR கேமராக்களில் நம்முடைய பெயரை பொதிந்துவைக்கும் படி வழிவகை இருக்கின்றது.ஆனால் இதனை நம்மில் பலரும் செய்வது கிடையாது. இதனால் நமக்கு என்ன நன்மை: நம்மில் பலரும் தாம் எடுத்த படங்களை இணையதில் பகிர்கின்றனர், சான்றாக புகைப்பட போட்டிக்கு நாம் அனுப்பும் படங்கள் அல்லது சில இணையதளங்களில் பகிரும் படங்கள் பலவும் எந்த நேரத்திலும் யாராலும் களவாடப்படலாம்.ஏன் ஒரு சில பெரிய நிறுவனங்களே இதனை செய்கின்றனர்.சமீபத்தில் நான் எடுத்திருந்த ஒரு Deodorant படத்தினை ருமேனியாவை சேர்ந்த பிரபல இணையவழி விற்பனையாளர் அவரது இணையதளத்…

  12. சுவிசின் நீண்ட குகை (உலகின் மிக நீண்ட குகையும் கூட) https://www.youtube.com/watch?v=pEthcurLaeU To most of the world, the majestic Alps present a scene of wonder. But to European merchants and truckers, they present a troublesome and costly roadblock. Enter the ambitious AlpTransit Tunnel. At just over 56 miles, this Swiss monster is the longest tunnel in the world. That is, it will be once workers complete this enormous project. Follow a team of miners as they risk death beneath billions of pounds of mountain, slowly but surely carving out massive support and maintenance tunnels. For the main channel, engineers use custom-designed TBMs (Tunnel Boring Machines) --…

  13. மோனாலிசா ஒரு விபச்சாரி ‘லியோனார்டோ டா வின்சி’யின் மோனாலிசா ஓவியம் உலகப் புகழ் பெற்றது என்பதை நாம் அறிவோம். ‘டா வின்சி’யின் பெயரை சுலபமாய் நினைவு கொள்ள இவ்வோவியம் பெரிதும் துணை புரிகிறது என்றும் சொல்லலாம். சிறு வயதில் பல இடங்களில் மோனாலிசா ஓவியத்தைக் கண்டிருக்கிறேன். ஒரு முறை தாத்தாவிடம் கேட்டேன். ஏன் பலர் இந்த படத்தை விரும்புகிறார்கள் என்று. அது புகழ் பெற்ற ஓவியம் என்றார். ஏன் புகழ் பெற்றது என்றேன். புகைப்படத்தில் இருக்கும் பெண்ணின் சிரிப்பிற்கு இன்று வரை அர்த்தம் சொல்ல முடியவில்லை. அவள் சிரிப்பு துக்கச் சிரிப்பா அல்லது மகிழ்ச்சியின் சாயலா என நிச்சய படுத்திச் சொல்வது சிரமம் என்றார். அதன் பின் மோனாலிசா ஓவியத்தை எங்கு கண்டாலும் கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தேன். அது ப…

    • 10 replies
    • 2.3k views
  14. பேஸ்புக் நிறுவனம் "பேஸ்புக் ஹோம்" என்ற ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை வெளியிட்டுள்ளது. ஆப்ஸ் போன்ற இந்த செயலி ஆண்ட்ராய்டு போன்களை பேஸ்புக் போனாக மாற்றக்கூடியது. தைவானின் ஹெச்டிசி நிறுவனம் இந்த போனைத் தயாரிக்க உள்ளது. இந்த போன் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துபவர்களுக்குப் பொருத்தமாக இருக்கும். பேஸ்புக் போனின் 5 சுவாரஸ்யமான அம்சங்கள் 1. ஹோம் என்ற புதிய மென்பொருள், பயனாளர்களை ஆண்ட்ராய்டு போனை கூகுளால் உருவாக்கப்பட்ட புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு மாற்றக்கூடியது. இந்த புதிய மென்பொருள் தொடர்ச்சியாக பேஸ்புக் செய்திகளையும், மற்ற தகவல்களையும் இந்த போனின் ஹோமில் பார்க்க முடியும். இந்த வசதி மற்ற ஆப்ஸ்களில் கிடையாது. 2. முகப்புப் பகுதியில் எப்போதும் போல வால் பேப்பர்கள் அல்லது …

  15. உலகின் மிக லேசான பொருளை உருவாக்கி சீன விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர். கார்பன் ஏரோ ஜெல் என அழைக்கப்படும் இப்பொருள் காற்றின் எடையை விட 6ல் ஒரு பங்கே எடை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. சீனாவின் ஜி ஜியாங் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் உலகின் மிக லேசான பொருளை உருவாக்கியுள்ளனர். காற்றின் எடையில் 6ல் ஒரு பங்கு எடையே கொண்ட இந்த ஏரோஜெல் எனப்படும் பொருள் 0.16 மி.கி/கன செ.மீ., எடை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பாக மிகவும் எடை கொண்ட பொருளாக கருதப்பட்ட கிராபைட் ஏரோஜெல் எடையை விட கார்பன் ஏரோ ஜெல் மிகவும் எடை குறைவானதாகும். முன்னதாக, கடந்த ஆண்டு ஜெர்மனியைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கிராபைட் ஏரோஜெல்லை உருவாக்கினர். இதன் எடை 0.18 மி.கி/கன செ.மீ., ஆகும். இத்தகைய…

  16. தஞ்சை பெரிய கோவில் கட்டப்பட்ட வரலாறு ஆயிரம் ஆண்டுகளாக தஞ்சையில் தமிழரின் பெருமையை பறை சாற்றி கொண்டு உயர்ந்து நிற்கிறது தஞ்சை பெரிய கோயில்... இது எப்படி சாத்தியமானது ? ? ? கோயில் எப்படி கட்டப்பட்டது ???? தஞ்சைப் பெருவுடையார் கோயில் அல்லது பிரகதீசுவரர் கோயில் அல்லது தஞ்சை பெரிய கோயில் என அழைக்கப்படும் இது இந்து சமயக் கோயில் மேலும் தமிழரின் பாரம்பரியச் சின்னம் ஆகும். 10 ஆம் நூற்றாண்டில், சோழப் பேரரசு அதன் உச்ச நிலையிலிருந்தபோது, இராஜராஜ சோழ மன்னனால் கட்டப்பட்டது. ஆரம்பத்தில் இராஜராஜேஸ்வரம் என்றும், பின்னர், தஞ்சையை நாயக்கர்கள் ஆண்டகாலத்தில், தஞ்சைப் பெருவுடையார் கோயில் என்றும் அழைக்கப்பட்ட இக் கோயில், 17, 18ஆம் நூற்றாண்டுகளில் மராட்டிய மன…

    • 8 replies
    • 107k views
  17. 2017ம் ஆண்டு அமெரிக்கா சவுதி அரேபியாவை பின் தள்ளி உலகின் முன்னனி கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடாகவும், 2030 ல் அமெரிக்கா நிகர எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடாகவும் மாற போகிறது என்ற செய்தியை கேட்டால் உங்களுக்கு ஆச்சர்யமாக இருக்கிறதா? களிப்பாறை எரிவாயு மற்றும் களிப்பாறை எண்ணையை எடுக்கும் ஆராய்ச்சியில் கடந்த பத்தாண்டுகளில் ஏற்பட்ட அராய்ச்சியின் முன்னேற்றத்தால் அமெரிக்காவின் எண்ணெய் சுயசார்பு பெற வேண்டும்என்ற 1970களின் கனவு நினைவாக தொடங்கியிருக்கிறது. சமீபத்தைய பொருளாதார மந்த நிலையால் வலுவிழந்து இருக்கும் அமெரிக்க பொருளாதாரத்தை மீண்டும் புத்தணர்வு ஊட்டும் ஒரு காரணியாக இருக்க இது வாய்ப்புள்ளது.இது அமெரிக்க பொருளாதாரத்திலும் உலக பொருளாதாரத்திலும், நாடுகளுக்கிடையிளான உறவுகள…

  18. நவீன தொழில்நுட்ப வளர்ச்சிகளின் காரணத்தினால் நாம் உபயோகிக்கும் செல்போன், லேப்-டாப், ஆன்லைன் வணிகம், வங்கிக் கணக்குகள் என ஒவ்வொன்றிற்கும் ஒரு பாஸ்வேர்டு உபயோகிக்கிறோம். சில நேரங்களில் அவற்றை மறந்து விடுவதால் திண்டாட நேரிடுகிறது. மேலும், அவற்றைத் திருட்டுத்தனமாக இயக்கி மோசடியில் ஈடுபட முடிகிறது. இவற்றை தவிர்க்க ரேகைப் பதிவு, குரல் பதிவு மற்றும் முக அடையாளம் போன்றவை பல்வேறு துறைகளில் ரகசிய குறயீடுகளாக பயன்படுத்தப்படுகிறது. இதுபோல் செல்போனிலும் மாற்றம் தேவை என எதிர்பார்ப்புகள் ஏற்பட்டுள்ளது. ஆப்பிள் நிறுவனம், தனது அடுத்த ஐ-போன் வெளியீட்டில் கைரேகையை ரகசிய குறயீடாக பதிவு செய்து செல்போனை இயக்கும் புதிய முறையை அறிமுகப்படுத்த இருக்கிறது. இதுபோன்ற முறைகள் இ- மெயில், வங்கிக் கண…

  19. சமூக வலைத்தளமான பேஸ்புக் ஒரு புதிய விஷயத்தில் அடியெடுத்து வைக்கிறது. வரும் ஏப்ரல் 4 ஆம் தேதி முதல் பேஸ்புக் போன் (Facebook phone) ஒலிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சமூக வலைத்தளமான பேஸ்புக் ஒரு புதிய விஷயத்தில் அடியெடுத்து வைக்கிறது. வரும் ஏப்ரல் 4 ஆம் தேதி முதல் பேஸ்புக் ஃபோன் (Facebook phone) ஒலிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து டெக் கிரன்ச் (TechCrunch) வெளியிட்டுள்ள தகவலில், பேஸ்புக் ஒரு புதிய ஸ்மார்ட் போனுக்கான மென்பொருளை வடிவமைப்பதில் தீவிரமாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் செய்தியாளர் சந்திப்பின்போது பேஸ்புக் இணை நிறுவனர்…

    • 0 replies
    • 770 views
  20. சோயுஸ் ரொக்கெட் கிளம்பிய தருணம் பூமிக்கு மேலே வட்டமிட்டுக்கொண்டிருக்கும் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சோயுஸ் விண்வெளி ஓடம் இந்த முறை மேற்கொண்ட பயணம் வழமைக்கும் மிகக் குறைவான நேரத்தில் நடந்துள்ளது. வியாழன் இரவு ஜிஎம்டி நேரப்படி சுமார் எட்டே முக்கால் மணிக்கு கஸக்ஸ்தானில் உள்ள பைக்கானூர் விண்ணேற்ற தளத்திலிருந்து கிளம்பிய ஸோயுஸ் ராக்கெட் பயணம் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. ஏனென்றால் சாதாரணமாக ரஷ்யாவின் சோயுஸ் ராக்கெட்டுகள் மூலமாக பூமிக்கு மேலே சுமார் நானூறு கிலோமீட்டர் உயரத்தில் மணிக்கு 27ஆயிரம் கிலோமீட்டர் வேகத்தில் வட்டமடித்துக் கொண்டிருக்கும் சர்வதேச விண்வெளி நிலையம் எனப்படுகின்ற இந்த செயற்கைக்கோளுக்கு செல்ல வேண்டுமானால் மொத்தம் ஐம்பது மணி ந…

  21. ஒரு அப்பா, ஒரு அம்மா, ஒரு அம்மம்மா ராமன் ராஜா ‘நேச்சர்’ இதழில் சமீபத்தில் ஒரு கட்டுரை வந்திருக்கிறது. ஆரெகான் மருத்துவப் பல்கலைக் கழகத்தில் மூன்று பெற்றோர் கொண்ட குழந்தைக் கரு ஒன்றை உருவாக்கிக் காட்டியிருக்கிறார்கள். ஒரு குழந்தைக்கு மூன்று பெற்றோர்களா ? ஆம், ஒரு அப்பா, இரண்டு அம்மா ! இது எப்படி சாத்தியம் என்று பார்ப்பதற்கு முன், நாம் மைடோகாண்ட்ரியாவை அறிமுகப்படுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது. புழுப் பூச்சி முதல் ஆண்ட்ரியா வரை அனைவரையும் இயக்குவது மைடோகாண்ட்ரியாதான். ஆரம்பத்திலிருந்து ஆரம்பிக்கலாம்: நம்முடைய உடல், செல்களால் ஆனது. முகம், முடி, நகம் எல்லாவற்றுக்கும் வெவ்வேறு வித செல்கள். ஒரு செல்லுக்குள் புகுந்து பார்த்தால், அங்கே ஒரு மாபெரும் கெமிக்கல்…

  22. http://youtu.be/kgjlUhv_PCE தனது வரலாற்றுப் பாடப் பரீட்சைக்காக கூகிளில் தேடல் செய்யும் போது நிறைய தெரிவுகள் வந்திருந்தன. அவற்றில் பல நீண்ட கட்டுரைகளைக் கொண்டிருந்துள்ளன. இன்னும் பலவற்றில் என்ன இருக்கென்றே அவனுக்குத் தெரியவில்லை. அவற்றை எல்லாம் வாசிக்க பொடியனுக்கு நேரமும் இல்லை.. பொறுமையும் இல்லை. உடனே ஒரு அப்ஸ் தயாரித்தான். அந்த அப்ஸின் வேலை கட்டுரைகளுக்குள் ஊடுருவி முக்கியமான விடயங்களை சாரம்சப்படுத்தி கொடுப்பதுதான். இதையே பல செய்தித் தளங்களிலும் பாவிக்க முடியும். அவற்றோடு இன்னும் சில பொறிமுறைகளையும் உட்புகுத்தி ஒரு எளிமையான ஆனால் பயனுள்ள செயற்பாட்டைக் கொண்ட.. ஒரு அப்ஸை தயாரித்து வெளியிட்டான் பொடியன். இப்போ.. அந்த அப்ஸையும் அவனையும்.. யாகூ நிறுவனம் பல மில்…

  23. கைபேசியின் (செல்லிடப்பேசி) முக்கிய எண்கள்..! *#06# – அனைத்து மொபைலுக்கும் IMEI எண் பார்க்க *#0000# – தயாரிப்பு தேதி பார்க்க #*2472# – தங்கள் போனின் சார்ஜிங் நிலைமை அறிய *#7780# – பேக்டரி அமைப்பை கொண்டுவர *8375# – மொபைல் போனில் உள்ள சாப்ட்வேர் தொகுப்பின் பதிப்பு எண் என்று அறிய *#9999# – தங்கள் போனின் சாப்ட்வேர் சார்ந்த தகவல்களை அறிய *#0001# – *#8999*778# – சிம் கார்ட் பற்றிய தகவல்களை அறிய #*#8377466# – போனின் ஹாட்வேரின் தன்மை மற்றும் தயாரிப்பு அறிய *#67705646# – clears the LCD display(operator logo). *#147# – This lets you know who called you last (Only vodofone). *#1471# – Last call (Only vodofone). #pw+1234567890+1# – Provider Lock Status. #pw…

  24. பூமியை தாக்கவரும் எரிகல் - கடவுளைப் பிராத்திக்க சொல்லும் நாசா வெள்ளி, 22 மார்ச் 2013( 17:18 IST ) பூமியை நோக்கி விரைவாக வந்துகொண்டிருக்கும் எரிகல்லின் தாக்கத்தை எவ்வாறு சமாளிப்பது என்னும் கேள்விக்கு, அந்த எரிகல் பூமியை தாக்ககூடாது என கடவுளிடம் பிராத்தனை செய்யுங்கள் என நாசா தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பூமிக்கு அருகில் சுற்றிக்கொண்டிருக்கும் 95 சதவிகித எரிகற்களை நாசா கண்காணித்து வருகிறது. அதில் ஒரு கிலோ மீட்டர் விட்டமுடைய எரிகற்களும் அடங்கும். 10,000-க்கும் மேற்பட்ட நகரங்களை தாக்கி அழிக்கும் எரிகற்களில், 50 மீட்டர் விட்டமுடைய வெறும் 10 சதவிகித எரிகற்கள் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளன. விண்ணிலிருந்து அறியமுடியாத விண்பாறைகள் மற்றும் எரிகற்கள் பூமியை தாக்குவ…

    • 1 reply
    • 664 views
  25. சுமார்.. 60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் பூமியில் வாழ்ந்த டைனாசோர்கள் என்ற இராட்சத உயிரினங்கள் அழியக் காரணம் என்ன.. இந்தக் கேள்விக்கு இன்னும் சரியான விடை கிடைக்கவில்லை. ஆனாலும்.. சமீபத்தில் மெக்சிக்கோவை அண்டிக் காணப்படும் 180 கிலோமீற்றர்கள் விட்டமுள்ள பள்ளத்தில் மேற்கொள்ளப்பட்ட மீள்ஆய்வில் இருந்து இது விண்ணில் வேகமாகச் செல்லக் கூடிய வால்நட்சத்திரம் ஒன்று பூமியோடு மோதியதன் விளைவாக ஏற்பட்டிருக்கலாம் என்று கருத்துச் சொல்லப்பட்டுள்ளது. முன்னர் இந்தப் பள்ளத்திற்கு ஒப்பீட்டளவில் மெதுவாகச் செல்லக் கூடிய பெரிய விண்கல் ஒன்று மோதியதே காரணம் என்று நம்பப்பட்டு வந்தது. ஆனால் அதற்கான சாத்தியத்தை விட சிறிய ஆனால் வேகமாகச் செல்லக் கூடிய வால்நட்சத்திரம் ஒன்று மோதி இருக்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.