Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. ஹஜ் யாத்திரை... குறித்து, முக்கிய தீர்மானம் ஹஜ் யாத்திரைக்கு இந்த ஆண்டு முஸ்லிம்களை அனுப்ப முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் தீர்மானித்துள்ளது. நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக இந்த ஆண்டு ஹஜ்ஜில் பங்கேற்பதில்லை என முஸ்லிம்கள் முன்னதாகவே தீர்மானித்திருந்தனர். எவ்வாறாயினும் குறித்த நபர்கள் ஹஜ்ஜுக்கு தேவையான டொலர்களை தமது நண்பர்கள் மூலம் கொண்டு வந்தபின்னரே ஹஜ் கடமையை நிறைவேற்ற அனுமதிக்கப்படுவர் என திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ்வருட ஹஜ் யாத்திரையில் 1,585 இலங்கையர்களுக்கு பங்குபற்ற வாய்ப்பு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. https://athavannews.com/2022/1285982

  2. தமிழர்களை வெருட்டும்போது வீர பரம்பரைபோல அறிக்கைவிடும் மனிதன், ஒரு ஆளை எதிர்கொள்ள பயந்து நடுங்கி கைபுள்ளபோல ஓடி தப்புறார். கொஞ்சம் எண்டால் மூஞ்சை பேந்திருக்கும்போல

  3. ஏழு வயது படசாலை மாணவியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய பூசகர் ஒருவரை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்ற மேலதிக நீதவான் திலினி கமகே உத்தரவிட்டார். இம்மாணவியின் தாய் பணிப் பெண்ணாக வெளிநாடு சென்றுள்ள நிலையில் மாணவி தனது பாட்டியுடன் வாழ்ந்து வருகிறார். கடந்த 10 ஆம் திகதி அன்னதானம் பெறுவதற்காகச் சென்ற வரிசையில் இறுதியாக நின்றுள்ளார். சந்தேக நபரான பூசகர் மாணவிக்கு அன்னதானம் வழங்கி விட்டு தம்முடன் வீடு செல்லலாமெனக் கூறி அறையொன்றுக்குள் அழைத்துச் சென்று துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார். மாணவி வீடு சென்று இது குறித்து பாட்டியிடம் தெரிவித்துள்ளார். பாட்டி கொம்பனித்தெரு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததை அடுத்து …

  4. விமானத்துக்குள் வந்த பாம்பு- 11,000 அடி உயரத்தில் விமானி செய்தது என்ன? பயணிகள் தப்பியது எப்படி? பட மூலாதாரம்,GETTY IMAGES 4 மணி நேரங்களுக்கு முன்னர் தென் ஆப்ரிக்காவைச் சேர்ந்த விமான ஓட்டுநர் ருடால்ப் எராஸ்மஸ், தனது விமானம் 11,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தபோதுதான் அந்த கூடுதல் பயணியை பார்த்துள்ளார். அந்த கூடுதல் பயணி, மனிதர் அல்ல. அவரது இருக்கைக்கு அடியில் சுற்றிக்கொண்டிருந்த பாம்புதான் அது. “உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், அப்போது என்ன நடக்கிறது என்பதே மூளையில் பதிவாகவில்லை ” என்று பிபிசியிடம் ருடால்ப் எராஸ்மஸ் தெரிவித்தார். "அது ஒரு அதிர்ச்சியான தருணம்" என்று மேலும் கூறிய அவர…

  5. Published By: RAJEEBAN 27 APR, 2023 | 03:31 PM பீகாரைச் சேர்ந்த ’ஏடிஎம் பாபா’ என்பவர் உத்தரப்பிரதேச இளைஞர்கள் சிலருக்கு ஏடிஎம்-ஐ எவ்வாறு கொள்ளையடிப்பது என்று 3 மாத பயிற்சி அளித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில், சுஷாந்த் கோல்ஃப் சிட்டி காவல் நிலையப் பகுதியில் உள்ள ஏடிஎம்மில் இருந்து ரூ.39.58 லட்சத்தை திருடியதாக நான்கு இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.9.13 லட்சத்தை மீட்ட போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தியதில் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் தெரியவந்தது. பீகார் மாநிலம் சப்ராவைச் சேர்ந்தவர் சுதிர் மிஸ்ரா. இவர் ‘ஏடிஎம் பாபா’ என்று அழ…

  6. சர்வதேச அளவில் GFK என்ற என்ற ஆய்வு நிறுவனம் 23 நாடுகளில் அந்தந்த நாட்டு மக்களின் ஆரோக்கியமான‌ உணவு பழக்கம், போதுமான தூக்கம், உடற்பயிற்சி உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் அன்றாட‌ வாழ்க்கை ஆகியவற்றை சர்வே செய்து வெளியிட்டுள்ளது. இதில் இந்தியர்கள் 79% சதவீதத்தில் ஆரோக்கியமான உணவை எடுத்து கொள்வதாக முதலிடம் பெற்றுள்ளனர். இந்தோனேசியர்கள் இரண்டாம் இடம் பெற்றுள்ளனர். இதில் ஜப்பானியர்கள் 29 % சதவீதம் பேரே ஆரோக்கியமான உணவை எடுத்து கொள்வதாகவும் கண்டறியப்பட்டு கடைசி இடம் பெற்றுள்ளனர். போதுமான அளவு தூங்கி ஓய்வு எடுப்பதில் இந்தோனேசியர்கள் 85% சதவீதத்தினர் என முதலிடம் பெற்றுள்ளனர். இந்தியர்கள் 77% சதவீதம் பேர் என இரண்டாம் இடம் பெற்றுள்ளனர். இதிலும் ஜப்பானியர்கள் 39% சதவீதத்தி…

  7. அமெரிக்காவில் சாண்டியாகோ சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சாக்ரமெண்டோவுக்கு செல்ல தயாராக நின்ற ஒரு விமானத்தில் ஜன்னல் வழியாக ‘பைலட்’ ஏறிக்குதித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த படத்தை எடுத்த மேக்ஸ் ரெக்ஸ்ரோட் என்ற பயணி, இது ஜோக் இல்லை, பயணி ஒருவர் எதிர்பாராதவிதமாக விமானத்தின் கதவை அடைத்த போது அது உள்பக்கமாக லொக் ஆகிவிட்டது. எனவே வேறு வழியின்றி ‘பைலட்’ ஜன்னல் வழியாக விமானி அறைக்குள் ஏறிக் குதித்தார் என பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் வேகமாக பரவி வரும் நிலையில், பைலட்டுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. https://thinakkural.lk/article/258424

  8. கிணற்றை காணவில்லை என பொலிஸில் முறைப்பாடு November 23, 2023 11:31 am கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழை காரணமாக கிளிநொச்சி, கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தர்மபுரம் கிராம அலுவலர் பிரிவில் உள்ள ஒருவரது கிணறு திடீரென நேற்று (22) தாழ்விறங்கியுள்ளது. தங்களது அன்றாட பயன்பாட்டை முடித்து மறுநாள் காலை எழுந்து கிணற்றைப் பார்த்த பொழுது கிணறு முற்று முழுதாக தாழ் இறங்கியதை அவதானித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக கிராம அலுவளர் நேரில் சென்று தொடப்பாக பார்வையிட்டுள்ளார். அத்துடன் கிணற்றில் பொருத்தப்பட்டிருந்த நீர் இறைக்கும் பம்பியும் கிணறில் முழ்கியுள்ளது. கடந்த 20…

  9. அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பில் கிளின்டனின் உயிரணுக் கறை படிந்ததாக கூறப்படும் மொனிக்கா லுவின்ஸ்கியின் ஆடையொன்றுக்கு 10 லட்சம் அமெரிக்க டொலர்களை வழங்க நூதனசாலையொன்று முன்வந்துள்ளது. பில் கிளின்டன் ஜனாதிபதியாக பதவி வகித்தபோது, ஜனாதிபதியின் வாசஸ்தலமான வெள்ளை மாளிகையில் ஊழியராக பணியாற்றியவர் மொனிக்கா லுவின்ஸி. வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி பில் கிளின்டனும் தானும் பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக பகிரங்கமாக தெரிவித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். இதற்கான ஆதாரமாக, பில் கிளின்டனின் உயிரணு படிந்த தனது கவுண் ஒன்றையும் அவர் காட்டினார். கிளின்டனின் உயிரணு படிந்த அந்த நீல நிற ஆடையானது, மொனிக்காவுடன் தான் பாலியல் நடவடிக்கைளில் ஈடுபட்டதை பில் கிளின்டன் ஒப்புக்கொள்ளச் செய்வதற்…

    • 0 replies
    • 381 views
  10. இஸ்ரேலின் கடும் தாக்குதலால் இருளடைந்து கிடக்கும் காசா நகரில் மின்சாரம் தயாரித்து ஒளி ஏற்றி வைத்திருக்கிறான் ஒரு சிறுவன். காசாவில் நடந்து வரும் இஸ்ரேலின் தாக்குதல்களால் அங்குள்ள பலஸ்தீன மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பெரும் கட்டிடங்கள் தரைமட்டமாக்கப்பட்டுள்ள நிலையில் மின்சாரம், குடிநீர் உள்ளிட்டவையும் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசித் தேவைகளுக்கு மக்கள் மிகவும் அல்லல்பட்டு வருகின்றனர். அப்படி இருளில் மூழ்கி இருக்கும் காசா நகர மக்களின் வாழ்க்கையில் 15 வயதான இளம் விஞ்ஞானி ஹுசாம் அல் – அத்தார் நம்பிக்கை ஒளி ஏற்றி வைத்திருக்கிறார். அவரது கண்டுபிடிப்புகளின் விளைவால் ‘காசாவின் நியூட்டன்’ என அவரை தற்போது மக்கள் அன்புடன் அழைக்க…

  11. தற்கொலை எண்ணம் இருப்பவர்களுக்கு அதிலிருந்து விடுபட பல நாடுகளில் ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன. இன்னும் சில நாடுகள், தற்கொலை செய்து கொள்வோரின் நோக்கத்தின் அடிப்படையில் அவர்களுக்கு உதவுகின்றன; வலியின்றி மரணிக்க வழிவகைகளைச் செய்து தருகின்றன. சுவிட்சர்லாந்து நாட்டில் மருத்துவர்களின் மேற்பார்வையில்லாமல், வலி தெரியாமல் மரணிக்க விரும்புவர்களுக்கென்றே சிறுரக வாகனம் ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த வாகனம், 2019-ம் ஆண்டில் முதன்முதலில் வடிவமைக்கப்பட்டது. பார்ப்பதற்கு விண்வெளிக்குச் செல்லும் ஓடம் போலத் தோன்றும் இந்த வாகனம், 3டி வடிவில் உள்ளது. 7.10 லட்சம் அமெரிக்க டொலர் செலவில் நெதர்லாந்தில் 12 ஆண்டுக்கால ஆராய்ச்சியில் உருவாக்கப்பட்டது. சுவிட்சர்லாந்தில் தற்கொலைக்கு சட்டம் அ…

  12. எல்லோருடைய கனவுகளையும் அந்த சின்னஞ்சிறுமி கண்ணீர் ததும்பிநிற்கும் கண்களுடன் சொன்னதை கேட்ட அனைவரும் நிச்சயமாக உடைந்துபோய் இருப்பார்கள். ஒரு தேசம் எப்படி இவர்களிடம் இருந்து பிடுங்கி எடுக்கப்பட்டு, எப்படி இவர்கள் உலகின் திக்கெல்லாம் வீசி எறியப்பட்டு இருக்கிறார்கள் என்பதை விஜய் தொலைக்காட்சியின் ஒரு பாட்டுப்போட்டி ஒன்றின் அங்கம் ஒன்றில் சரிகா நவநாதன் மிகஆழமாக புரியவைத்திருந்தார். அவருடைய தந்தையான பெரியதம்பி நவநாதனுடன் கதைத்தபோது அவர் சொன்னார், இப்படி ஒரு சந்தர்ப்பம் அந்த பாட்டுப்போட்டியில் கிடைத்தால் நிச்சயமாக இந்தப் பாடலைத்தான் தான் படிப்பேன் என்று அந்த சிறுமி தன்னிடமும் தாயிடமும் சொல்லி இருந்தார் என்று சொன்னார். தனக்கு எங்காவது கிடைக்கும் ஏதாவது ஒரு அரிய சந்தர்ப்ப…

  13. கொடிய உயிர்க்கொல்லியான ‘எபோலா’ நோயினால் குடும்பத்தை இழந்து பிரித்தானியாவில் அடைக்கலம் புகுந்துள்ள வாலிபர் ஒருவரை உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறு பிரித்தானிய அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று சிரா லியோன். 2013ம் ஆண்டு உலகையே உலக்கிய ‘எபோலா’ நோய்க்கு இந்த நாட்டில் வசிப்பவரே அதிக எண்ணிக்கையில் பலியாகியுள்ளனர். இதே நாட்டை சேர்ந்த ஜிம்மி தொரோன்கா(20) என்பவர் அந்நாட்டில் தடகள விளையாட்டு போட்டியில் முன்னணியில் உள்ள ஒரு வாலிபர் ஆவர். ஆனால், துரதிஷ்டவசமாக எபோலா நோய் தாக்கியதில் அவரது குடும்பத்தை சேர்ந்த 8 நபர்கள் பரிதாபமாக பலியாகினர். இந்நிலையில், கடந்த 2014ம் ஆண்டு இங்கிலாந்தில் உள்ள கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற கொமன்வெல்த் விளையாட்டு போட்…

  14. 220 பேருடன் டேட்டிங் சென்றும் அது கிடைக்கவில்லை... நாயை திருமணம் செய்து ஹனிமூனுக்கு கிளம்பிய மாடல் அழகி..! தன்னிடம் பழகிய ஆண்கள் செய்யாததை தான் வளர்த்த நாய் செய்ததால் அதையே திருமணம் செய்து கொள்ளப்போவதாக பேரழியான மாடல் ஒருவர் கூறி அதிர வைத்துள்ளார். இங்கிலாந்தின் கிழக்கு எஸ்காட் பகுதியை சேர்ந்த 49 வயது எலிசபெத் ஹோட். இவர் ஒரு பிரபல மாடல். இவருக்கு முன்பிருந்தே ஆண்கள் மீது அதிக வெறுப்பு இருந்து வந்துள்ளது. இந்த வெறுப்பால் அவர் ஆண்களை அவர் நம்பாமல் இருந்து வந்துள்ளார். இதற்கு காரணம் அவர் இதற்கு முன் 220-க்கும் அதிகமான ஆண்களிடம் நெருக்கமாக பழகி இருக்கிறார். கடந்த 8 ஆண்டுகளில் 6 ஆண்களுடன் டேட்டிங் செய்துள்ளார். ஆனால், அவர்கள் யாரும் எலிசபெத்திற்கு உறுதுணையாக இர…

  15. தமிழீழ விடுதலைப் போரட்டம் உலகின் கண்களுக்கு கொண்டு செல்லப்பட்டு நீண்ட காலங்கள் சென்றுள்ள போதிலும் தற்போதுதான் எமது போராட்டம் உலகின் பார்வையில் நியாயம் மிக்கதாக மாறியுள்ளது. இந்த நியாயத் தன்மையை சர்வதேசம் எவ்வாறு பயன்படுத்த போகின்றது என்பதே தமிழ் மக்களின் கேள்வியாக உள்ளது. ஈழ விடுதலைப் போராட்டம் ஆரம்பமானதில் இருந்து கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் வரை இலட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இறுதியாக இடம்பெற்ற வன்னி யுத்தத்தில் மட்டும் ஒரு இலட்சம் வரையான தமிழ் மக்களை எமது தாயகம் இழந்திருக்கின்றது. இந்த இழப்பினை நாம் வெறும் வார்த்தையாக எடுத்துக்கொள்ள முடியாது. எமது இனத்தை அழிப்பதற்கான நீண்டகால முயற்சியாகவே தமிழர் தாயகத்தில் இந்த அழிவு அரங்கேற்றப்பட்டிருக்கின்றது. ஒ…

  16. ஜேர்மனியில் இறுதிச்சடங்கொன்றில் போதையூட்டும் கேக் பரிமாறப்பட்டதால் பரபரப்பு! ஜேர்மனியில் இடம்பெற்ற இறுதிச்சடங்கொன்றின் போது அதில் பங்கேற்றவர்களுக்கு தவறுதலாக “ஹாஷ் கேக்” எனப்படும் போதையூட்டும் கேக் பரிமாறப்பட்டதாக உள்ளூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஜேர்மனியில் விதாகென் என்ற இடத்திலுள்ள உணவகம் ஒன்றினால் விநியோகிக்கப்பட்ட குறித்த போதையூட்டும் கேக்கை உட்கொண்ட 13 பேருக்கு குமட்டல் மற்றும் தலைச்சுற்றல் ஏற்பட்டது. குறித்த உணவகத்தில் பணியாற்றும் பெண் பணியாளர் ஒருவரின் மகளிடம் கேக் செய்யும் பணி ஒப்படைக்கப்பட்டதாகவும், 18 வயதான இளம் பெண் வேறொரு நிகழ்வுக்காக செய்து வைத்திருந்த ஒரு “ஹாஷ் கேக்கை”, அவரது தாயார் தவறுதலாக பரிமாறியமை பொலிஸ் விசாரணையில் இருந்து தெரியவந்துள்ள…

  17. “ஒரு மோசமான படத்தை அவர் பார்த்திருக்க வேண்டும்” யேர்மனியப் பொலீஸ் சொல்கிறது யேர்மனியில் Bochum என்ற நகரில் உள்ள சினிமா அரங்கிற்கு 30 வயது இளைஞன் ஒருவர் தென்னிந்தியத் திரைப் (படமான தர்பார்)படம் பார்க்க புதன் கிழமை சென்றிருக்கிறார். படத்தில் அவருக்கு ஈடுபாடு இல்லாமல் போக அவர் அப்படியே இருக்கையிலேயே உறங்கிப் போனார். பின்னர் இருக்கையில இருந்து சற்று வழுக்கி இருக்கைக்குள் அப்படியே ஆழ்ந்த நித்திரையாகிப் போனார். திரைப்படம் முடிந்து பார்வையாளர்கள் வெளியேற இவர் மட்டும் பூட்டப் பட்ட திரையரங்கில் தனியாக நித்திரையில் இருந்திருக்கிறார். அதிகாலை ஐந்து மணிக்கு விழித்துக் கொண்ட இளைஞர் நிலமையை உணர்ந்து பொலீஸுக்குத் தகவல் தர, அவர்கள் நடவடிக்கை எடுத்து அந்த இளைஞனை மீட்டு வீட்…

  18. [size=4] [/size] [size=4]திமுக தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள கேள்வி பதில் வடிவிலான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.[/size] [size=4]கேள்வி: இலங்கைத் தமிழர் பிரச்சினையில் எந்த அக்கறையையும் இதுவரை காட்டாதவர்கள், அக்கறையாக இருப்பதைப் போல வேடம் போடுபவர்கள் எல்லாம் உங்களை குறை கூறுவதிலேயே காலத்தைக் கடத்துகிறார்களே? [/size] [size=4]பதில்: “காய்த்த மரம்தான் கல்லடி படும்” என்பது பழமொழி. இதே போன்றதொரு கேள்விக்கு நேற்றைக்கே பதில் அளித்திருக்கிறேன். இலங்கையில் போர் நடைபெற்ற போது நான் எதுவுமே செய்யவில்லையா?[/size] [size=4]இதோ பட்டியல்![/size] [size=4]14-10-2008 அன்று அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டி, இரண்டு வாரத்திற்குள் போர் நிறுத்தம் ஏற்…

    • 9 replies
    • 1.1k views
  19. பெங்களூரு: "குடும்பத்தை நல்ல முறையில் கவனித்துக் கொள்ளும் கணவன், மனைவியை அடிப்பதில் தவறில்லை' என, கர்நாடக ஐகோர்ட் நீதிபதி பக்தவத்சலா தெரிவித்த கருத்து, பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. "அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்' என, பெண்கள் அமைப்புகள் போர்க்கொடி தூக்கியுள்ளன. "என் கணவர் அடிப்பதால், அவரிடம் இருந்து விவாகரத்து வழங்க வேண்டும்' எனக் கோரி, பெண் ஒருவர் தாக்கல் செய்த மனு, சமீபத்தில், கர்நாடக ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பக்தவத்சலா, "குடும்பத்தை நல்ல முறையில் கவனித்துக் கொள்ளும் கணவர், மனைவியை அடிப்பதில் தவறில்லை. இது போன்ற விஷயங்களை, குழந்தைகளின் நலன் கருதி, பெண்கள் சகித்துக் கொள்ள வேண்டும்' என தெரிவித்தார். நீதிபதியின் இந்தக் கருத்துக்கு…

  20. உண்ணப்படக் கூடிய திருமண ஆடை 2016-04-17 09:31:19 பிரிட்டனைச் சேர்ந்த பெண்கள் சிலர் இணைந்து மணமகள் ஆடையொன்றை வடிவமைத்துள்ளனர். அழகிய இந்த ஆடையை தயாரிப்பதற்கு 300 மணித்தியாலங்கள் மேல் தேவைப்பட்டனவாம். ஆனால், எந்தவொரு பெண்ணும் தனது திருமண வைபவத்துக்கு இந்த ஆடையை அணிந்துகொள்ள விரும்பமாட்டார். காரணம் இந்த ஆடை முற்றிலும் கேக் மூலம் தயாரிக்கப்பட்டதாகும். பாரம்பரியமாக திருமண ஆடைத் தயாரிப்புக்கு பயன்படுத்தப்படும் துணி வகைகளை அல்லாமல் வேறு பொருள் மூலம் தயாரிக்கப்பட்ட ஆடை இது என்பதை கண்டறிய முடியாத வகையில் இந்த ஆடை உள்ளது. …

  21. தோல் இல்லாமல் பிறந்த அதிசய குழந்தை நாக்பூர் வைத்தியசாலையில் பெண் குழந்தை ஒன்று தோல் இல்லாமல் பிறந்த சம்பவம் அனைவரையும் அதிசயத்தில் ஆழ்த்தியது. நாக்பூர் லதா மங்கேஷ்கர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பிரசவத்துக்காக இளம்பெண் ஒருவர் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நேற்று அதிகாலை 12.30க்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, அறுவை சிகிச்சை மூலம் அவர் பெண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்தார். இதில், அதிசயம் என்னவென்றால் அந்த குழந்தை வெளிப்புற தோல் இன்றி, கண்கள் சிவந்து காணப்பட்டது. கருவிழியும் இல்லை. இருந்தாலும், அந்த குழந்தை சராசரி குழந்தையை போல், அழுது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இதைத்தொடர்ந்து, அந்த குழந்தையின் பராமரிப்பு கருதி, பிரத்யேக வார்டில் வைக்கப்ப…

  22. [size=4]ஸ்கொட்லாந்தைச் சேர்ந்த முதலீட்டு நிறுவனம் ஒன்று நடத்திய ஆய்வில் 2012இல் பிறக்கும் குழந்தைகளில் மூன்றில் ஒரு பங்கினர் 100 வயது வரை வாழ்வார்கள் என்று தெரிய வந்துள்ளது. அவர்கள் 70 வயது வரை வேலை செய்வார்கள் என்றும் தங்கள் தாத்தா, பாட்டியை விட 8 ஆண்டுகள் தாமதமாகவே திருமணம் செய்து கொள்வார்கள் என்றும் அந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த ஆண்டு பிறக்கும் குழந்தைகளின் வாழ்வு அவர்களின் பெற்றோர் மற்றும் தாத்தா, பாட்டி ஆகியோரின் வாழ்வை விட வித்தியாசமாக இருக்கும் என்றும் நடப்பாண்டில் பிறந்த, பிறக்கும் குழந்தைகளின் பெற்றோர் 1983இல் பிறந்திருப்பார்கள் என்றும் அவர்களின் பெற்றோர் 1957ல் பிறந்திருப்பார்கள் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு பிறந்த குழந்…

  23. [size=4]போர் என்பது அமைதிபேச்சு வார்தை முறிந்ததால் வந்தஒன்று அமைதிபேச்சுவார்த்தையும் அதில் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தங்களையும் பன்னாடுகள் காக்கதவறியதால் வந்ததுபோர் பன்னாட்டு தலையீடு இல்லை என்றால் தமிழர்களுக்கு இனப்படுகொலை நடந்திருக்காது என்று மே17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் தெரிவித்துள்ளார்.[/size] [size=4]தமிழ்நெற் இணையத்தளத்திற்கு வழங்கிய நேர்காணில் அவர் இந்த குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார். தமிழர்களை காப்பதற்கு என்று ஒருகாவல் அணிஇருந்தது ஒருபடை இருந்தது அதுஇருந்திருக்கும் இந்த இனப்படுகொலை என்பது இலங்கை அரசினால் சாத்தியப்படுத்தியிருக்க முடியாது அமைதி ஒப்பந்தம் என்பது இந்த இனப்படுகொலை செய்வதற்கான முகாந்தரமாகத்தான் நாம் பார்க்கவேண்டியுள்ளது.[/size] [size=4]ஏன் எ…

  24. துப்பாக்கிச் சூடு நடத்த முற்பட்டவருக்கு வாள்வெட்டு! Mar 1, 2026 - 09:23 AM வீட்டிற்குள் புகுந்து நபர் ஒருவரைச் சுட முற்பட்ட இனந்தெரியாத துப்பாக்கிதாரி மீது, அந்த வீட்டின் உரிமையாளர் நாற்காலி மற்றும் வெட்டுக் கத்தியால் தாக்குதல் நடத்தியுள்ளார். தாக்குதலுக்கு உள்ளாகி காயமடைந்தவர் அலவ்வ பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் குறித்து முறைப்பாட்டாளர் பொலிஸாரிடம் தெரிவிக்கையில், களுத்துறை ரஜவத்த பகுதியைச் சேர்ந்த "பெத்தா" என்பவர் தன்னிடம் பெற்ற 30,000 ரூபாய் கடனைத் திருப்பித் தருவதற்காக தனது வீட்டிற்கு வந்ததாகவும், அப்போது அவருடன் வந்த இனந்தெரியாத நபர் தம்மீது துப்பாக்கிச் சூடு நடத்த முற்பட்டதாகவும் குறிப்பிட்டார். அச்சமயத்தில் தனது வீட்டில் இருந்த நாற்காலி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.