Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. சிரியாவில் ராணுவ வீரரின் தலையை சிறுவன் ஒருவன் துண்டிக்கும் வீடியோவை வெளியிட்டு ஐ.எஸ் அமைப்பினர் மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர். ஐ.எஸ் தீவிரவாதிகளின் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரித்துகொண்டே வருகிறது. தனி நாடு அமைப்பதற்காக இவர்கள் பல நாசவேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஐ.எஸ் அமைப்பினர் சமீப காலமாக பல்வேறு படுகொலை சம்பவங்களை சிறுவர்கள் மூலம் அரங்கேற்றி வருகின்றனர். இந்நிலையில் சிரியா ராணுவ வீரர் ஒருவரின் தலையை பத்து வயதுகூட நிரம்பாத சிறுவன் ஒருவன் துண்டிக்கும் வீடியோவை வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர். அதில் முகமூடி அணியாத சிறுவன் ஒருவன் ராணுவ வீரரின் தலையை துண்டித்து பின்னர் இறந்தபோன ராணுவ வீரரின் முதுகில் வைப்பது போல் உள்ளது. மேலும் அந்த வீடியோவின் …

    • 0 replies
    • 191 views
  2. தென்மேற்கு சவுதி அரேபியாவில் உள்ள கால்பந்து மைதானத்தில் காலப்ந்து வீரர்கள் விளையாடி விட்டு ஓய்வுக்கு என்று விட்டனர் அப்போது கூட்டமாக வந்த குரங்குகள் அங்கு விளையாடி உள்ளன. இதில் ஒரு குரங்கு கோல் போஸ்ட்டின் வலையில் சிக்கி இறந்து விட்டது. இது குறித்து உள்ளூர் பத்திரிகைகளில் செய்தி வெளியிடபட்டுஉள்ளது ஆள் இல்லாத காலபந்தாட்ட மைதானத்தில் பக்கத்து மலையில் இருந்து வந்த குரங்குகள் ஓடுவதும் குதிப்பதுமாக விளையாடி உள்ளன. இதில் ஒரு குரங்கு கோல் போஸ்ட் வலையில் சிக்கி கொண்டது இதில் கழுத்து இறுகி அந்த குரங்கு பலியானது. அந்த குரங்கின் படம் சமூக வலை தளங்களில் வெளியாகி உள்ளது. - See more at: http://www.canadamirror.com/canada/48408.html#sthash.ZBo4mfXU.dpuf

  3. ம்ரிதா ராய் தனது பேஸ்புக் பக்கத்தில், தானும் திக்விஜய் சிங்கும் இந்து மத முறைப்படி திருமணம் செய்து கொண்டு, அதனை பதிவு செய்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். அம்ரிதா ராய் இது தொடர்பாக தனது பெஸ்பு பக்கத்தில், நானும், திக்விஜய் சிங்கும் திருமணத்தை நடத்தி முடித்துள்ளோம் என்பது எனது நண்பர்களுக்குத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இந்து மத முறைப்படி இந்தத் திருமணம் நடந்தது. மேலும் எங்களது திருமணத்தையும் பின்னர் முறைப்படி பதிவு செய்து கொண்டோம். இந்தத் தருணத்தில், கஷ்டமான நேரத்தில் என்னுடன் வழிநெடுக துணை நின்ற அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். மிகக் கடினமான கட்டத்தைத் தாண்டி வந்துள்ளேன். கடந்த ஒன்றரை வருடங்கள் எனக்கு மிகவும் கடினமானதாக, துயரம் மிகுந்ததாக, …

  4. அணிந்திருந்த ஆடைகளை கலைந்து எலும்புக்கூடு ஆடைகளுடன் கற்பித்த ஆசிரியை நெதர்லாந்தில் ஆசிரியை ஒருவர் மாணவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் நினைவிருக்கும்படி வினோதமான முறையில் உயிரியல் பாடம் எடுத்துள்ளார். நெதர்லாந்தின் க்ரோயன் ஹார்ட் ரிஜ்ன்வூட் என்ற பள்ளியில், டெபி என்பவர் கடந்த 7 ஆண்டுகளாக உயிரியல் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர் தனது இளமையான யோசனையால் மாணவர்களின் மனதைத் தொட்டிருக்கின்றார். இவர் ஒரு நாள் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு மனித உடற்பாகங்கள் சம்பந்தப்பட்ட பாடம் நடத்திக்கொண்டிருக்கையில் இவருக்கு வித்தியாசமான ஒரு யோசனை தோன்றியுள்ளது. அதாவது தனது நகரில் எலும்புக்கூடைப்போல வடிவமைக்கப்பட்ட ஆடைகளை பெண்கள் அணிந்துபோவதை, டெபி என்ற குறித்த ஆசிரியை அவ்வப்போது கவனித…

    • 2 replies
    • 566 views
  5. மர்ம ஓவியர் புது முயற்சி . Friday, 07 March, 2008 11:07 AM . லண்டன், மார்ச். 7: லண்டனில் யாருக்கும் தெரியாமல் ஓவியங்களை வரைந்து பரபரப்பை ஏற்படுத்தி வரும் மர்ம ஓவியர் ஒருவர் பிளாஸ்டிக் பொருட் களுக்கு எதிராக விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடங்கி இருக்கிறாராம். . லண்டனில் உள்ள கட்டிடம் ஒன்றின் சுவரில் கொடிக் கம்பத்தில் கொடிக்கு பதிலாக பிளாஸ்டிக் கேரி பேக் பறப்பது போலவும், அதற்கு முன் இரண்டு சிறுவர்கள் அதை பயன்படுத்துவதற்கு எதிராக உறுதிமொழி ஏற்பது போலவும் ஓவியம் ஒன்றை வரைந்துள்ளார். இந்த ஓவியம் பார்ப்பவர்கள் ஆச்சரியப்படுவது மட்டுமின்றி சிந்திக்க வைப்பதாகவும் அமைந் துள்ளதாம். malaisudar.com

    • 0 replies
    • 784 views
  6. திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே புகழ்பெற்ற சிவன் மலை கோவில் உள்ளது. இந்தகோவிலில் உள்ள அம்மன் கழுத்தில் இருந்து மாங்கல்யம் கீழே விழுந்ததாக நேற்று இரவு பரபரப்பாக பேசப்பட்டது.இந்த சம்பவத்தினால் ஆண்களுக்கு ஆபத்து என்றும் எனவே பெண்கள் வீடுகள் முன்பு விளக்கு வைத்து வழிபட வேண்டும் என்று வேகமாக செய்தி பரவியது. ஒவ்வொரு வீட்டிலும் எவ்வளவு ஆண்கள் உள்ளார்களோ அந்த எண்ணிக்கையில் வீடுகள் முன்பு அகல் விளக்குகள் ஏற்றி அம்மனை வழிபட வேண்டும் என்றும் இவ்வாறு விளக்கு வைத்து வழிபட்டால் ஆண்களுக்கு எந்த ஆபத்தும் ஏற்படாது என்றும் வதந்தி பரவியது. ஈரோடு மாவட்டம் முழுவதும் இந்த வதந்தி பரவியது. ஈரோடு, கோபி, சத்தியங்கலம், பவானி ஆகிய பகுதிகளில் பெண்கள் தங்கள் வீடுகள் ம…

    • 1 reply
    • 807 views
  7. ஆஸ்திரேலியாவில் மீனவர் வலையில் சிக்கிய ராட்சத நண்டு லண்டன் அருங்காட்சியகத்துக்கு விமானத்தில் கொண்டு செல்லப்பட்டது. ஆஸ்திரேலியாவின் டாஸ்மேனியா தீவு பகுதியில் மீனவர் வலையில் ‘கிளாட்’ வகையை சேர்ந்த ராட்சத நண்டு கடந்த மாதம் சிக்கியது. ஆஸ்திரேலியாவில் எந்த வகை நண்டு கிடைத்தாலும் உடனே சட்டிக்குதான் போகும். ஓட்டல்கள், விடுதிகளில் அமோக விளம்பரத்துடன் நண்டுக் கறிகள் விற்பனையாகும். ஆனால், பிடித்த மீனவர் அதை கறிக்கு விற்காமல் பத்திரமாக வைத்திருந்தார். கடல்வாழ் உயிரினங்களை பாதுகாக்கும் ‘ஸீ லைஃப்’ என்ற அமைப்பு இதை ரூ.2.58 லட்சம் கொடுத்து அவரிடம் இருந்து வாங்கியிருக்கிறது. இது இங்கிலாந்தின் டார்செட் கவுன்டியில் உள்ள வேமோத் ஸீ லைஃப் அருங்காட்சியகத்தில் வைக்கப்படுகிறது. இதற்…

  8. விமானத்தில் வெடிகுண்டுப் புரளி – விமானியின் தவறால் பயணிகள் அவஸ்தை! விமானத்தில் வெடிகுண்டு காணப்படுவதாக எழுந்த சந்தேகம் காரணமாக பயணிகள் அச்சமடைந்த சம்பவம் நெதர்லாந்தில் இடம்பெற்றுள்ளது. நெதர்லாந்தின் அம்ஸ்ரர்டாமிலிருந்து ஸ்பெயினின் மட்ரிட் நகருக்கு புறப்பட்ட விமானத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்காரணமாக குறித்த விமானம் அம்ஸ்ரர்டாம் நகர விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. பயணிகள் பத்திரமாக வெளியேற்றப்பட்டதன் பின்னர் ராணுவத்தினர் விமானத்திற்குள் நுழைந்து வெடிகுண்டு போன்ற ஆபத்தான பொருட்கள் இருக்கின்றனவா என சோதனையிட்டிருந்தனர். இது குறித்து எயார்-எத்தியோப்பியா விமான நிறுவன அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கையில், ‘விமானி சந்தேகத்திற்குர…

  9. போதிய அளவு வீட்டு வேலைகளை செய்யவில்லையென மனைவிக்கு எதிராக கணவர் வழக்கு 2016-02-08 10:47:00 தனது மனைவி போதியளவில் வீட்டிலுள்ள வேலைகளை செய்யவில்லை எனக் கூறி, இத்தாலிய நபர் ஒருவர் தனது மனைவிக்கு எதிராக வழக்குத் தொடுத்துள்ளார். இவ் வழக்கில் மேற்படி பெண் குற்றவாளியாகக் காணப்பட்டால் அவருக்கு 6 வருடங்கள் வரையான சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. 21 ஆம் நூற்றாண்டில் அதுவும் இத்தாலியில் இத்தகைய வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளமை பலரையும் வியப்படையச் செய்துள்ளது. சமையல், சலவை மற்றும் சுத்திகரிப்பு பணிகளை செய்யாததன் மூலம், தனது குடும்பத்தை மனைவி மோசமாக நடத்துகிறார் என அந் நபர் குற்ற…

  10. தாய்லாந்து – பட்டையா கடற்கரை சாலையில் சனிக்கிழமை இரவு, இலங்கை சுற்றுலாப் பயணி ஒருவர், திருநங்கை ஒருவரின் உயர் குதிகால் காலணியால் தாக்கப்பட்டு, தலையில் காயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரவு 10:30 மணியளவில், பட்டையா கடற்கரை சாலையில் உள்ள சோய் 13/3 பகுதியில் இச்சம்பவம் நிகழ்ந்தது. 54 வயதான இலங்கையைச் சேர்ந்த சேபால என அடையாளம் காணப்பட்ட சுற்றுலாப் பயணி, தலையில் இரத்தம் வழியும் நிலையில் காணப்பட்டார். சவாங்போரிபுல் அறக்கட்டளையின் மீட்புக் குழுவினர் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து, முதலுதவி அளித்த பின்னர், இரு தரப்பினரையும் முவாங் பட்டையா காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் 29 வயதான திருநங்கை மின்ட்ரான் புர…

  11. Started by akootha,

    [size=6]கதிர்காமத்திலிருந்து காங்கேசன்துறைக்கு பாதயாத்திரை[/size] [size=4]கொழும்பு திம்பிரிகஸ்யாயவை சேர்ந்த எம். டேவிட் என்பவர், கதிர்காமம் கிரிவேரவிலிருந்து காங்கேசன்துறை வரையிலான சமாதான பாதயாத்திரையொன்றை ஆரம்பித்துள்ளார். அவர் நேற்று கொழும்பை வந்தடைந்தபோது அவரின் அயலவர்களால் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவர் இன்று திங்கட்கிழமை மீண்டும் தனது பயணத்தை தொடரவுள்ளார். [/size] http://www.tamil.dailymirror.lk/--main/46939-2012-08-19-15-00-58.html

    • 24 replies
    • 2.5k views
  12. கொரோனா வைரஸை வைத்து "ஏப்ரல் பூல்" ஜோக்ஸை பரப்ப கூடாது.. போலீஸ் எச்சரிக்கை கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் நாளை ஏப்ரல் 1ம் தேதி முட்டாள்கள் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் கொரோனா வைரஸை வைத்து சமூக ஊடகங்களில் மக்களை முட்டாளாக்கும் நையாண்டி பதிவுகளை பரப்ப கூடாது என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.ஒவ்வாரு ஆண்டும் ஏப்ரல் 1ம் தேதி முட்டாள்கள் தினம் கொண்டாடப்படுகிறது இந்த நாளில் நண்பர்கள், உறவினர்கள், தெரிந்தவர்களை முட்டாளாக்கும் விதமாக ஏதேனும் இல்லாத ஒரு பொய்யை சொல்லி நம்ப வைத்து பின்னர் அது இல்லை என்று நையாண்டி செய்வது மக்களின் வழக்கம்.காலமாற்றத்தால் சமூக வலைதளங்கள் மூலம் ஒருவருக்கு ஒருவர் முட்டாளாக்கும் விதமாக கிண்டல் பதிவுகள், பொய்யான நையாண்டி பதிவுகளை பரப்புவா…

  13. வன்னிப் போரில் 146,679 தமிழர்கள் கொல்லப்பட்டு அல்லது காணாமல் போயிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது. நான்காம் கட்ட ஈழப்போரில் ஐக்கிய நாடுகள் மன்றத்தின் நடவடிக்கைகள் தொடர்பாக ஆராயும் நிமித்தம் செயலாளர் நாயகம் பான் கீ-மூன் அவர்களால் நியமிக்கப்பட்ட உள்ளக ஆய்வுக் குழுவால் புதன்கிழமை அறிக்கையொன்று வெளியிடப்பட்டிருந்தது. அவ்வறிக்கையின் இரண்டாவது பின்னிணைப்பில் (பக்கம் 38: சரத்து 5) வன்னிப் போரில் காணால்போன 146,679 தமிழர்களின் கதி குறித்து கேள்வியெழுப்பப்பட்டுள்ளது. சிறீலங்கா அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள், மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணையத்தின் முன் கிளிநொச்சி – முல்லைத்தீவு மாவட்ட செயலர்களால் சமர்ப்பிக்கப்பட்ட எழுத…

  14. தொலைபேசியில் வீடியோ கேம் விளையாடியவர் மூளை நரம்பு வெடித்து உயிரிழப்பு தொலைபேசியில் ஐந்து மணி நேரத்துக்கு மேல் வீடியோ கேம் விளையாடிய ஒருவர், மூளை நரம்பு வெடித்து உயிரிழந்த சம்பவம் கொழும்பில் பதிவாகியுள்ளது. கொழும்பு- கிரான்ட்பாஸ் பிரதேசத்தை சேர்ந்த 30 வயதுடைய ஒருவரே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். இவர் கடந்த 29 ஆம் திகதியே திடீர் மரணமடைந்திருந்தார். இந்நிலையில் இந்த திடீர் மரணம் தொடர்பாக மரண பரிசோதகர் இரேஷா தேஷானி விசாரணையை முன்னெடுத்திருந்தார். இதன்போதே அவரது மனைவி ஆனந்தன் தர்ஷிகா இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, “எனக்கு தெரிந்தவரையும் அவருக்கு அல்சர் வருத்தம் மாத்திரமே இருந்தது வேறு எந்ததொரு நோயும் இருக்கவில்லை. கடந்த 2…

  15. இறந்தவரின் கழுத்தில், கயிற்றைக் கட்டி... தரதரவென இழுத்துப் போன போலீஸ்! வைஷாலி, பீகார்: பீகார் மாநிலம் வைஷாலி நகரில் ஆற்றில் மூழ்கி இறந்தவரின் உடலை மீட்ட போலீஸார், அந்த நபரின் கழுத்தில் கயிற்றைக் கட்டி தரையோடு தரையாக இழுத்துச் சென்ற செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வைஷாலி நகரில் உள்ள கங்கையாற்றில் மூழ்கி ஒருவர் இறந்து விட்டார். அவரது உடலை தீயணைப்புத் துறையினர் உதவியுடன் போலீஸார் மீட்டு கரைக்குக் கொண்டு வந்தனர். அதன் பின்னர் இறந்த நபரின் கழுத்தில் பெரிய கயிற்றைக் கட்டி கிட்டத்தட்ட 100 மீட்டர் தூரத்திற்கு உடலை இழுத்துச் சென்றனர். இதை அங்கு கூடியிருந்த மக்களும் அதிர்ச்சியுடன் பார்த்தனர். இத்தனைக்கும் ஆற்றில் அந்த நபர் விழுந்ததுமே போலீஸாருக்குத் தகவல் போனது…

  16. ஒரு சிறிய பரிசோதனை மரங்களின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. கீழே இருக்கும் படங்களை பாருங்கள் மரங்களின் அருமையை உணருங்கள் செடிகள் நிறைந்த தொட்டியின் வழியே கீழே இறங்கும் தண்ணீர் வெளியே வரும்போது தெளிவாக இருக்கிறது. அதே வெறும் மண், அல்லது காய்ந்த இலையுடன் கூடிய மண் வழியே வரும் தண்ணீர் கலங்கலாக இருக்கிறது. நாம் காடுகளையும், மரங்களையும் அழித்துவிட்டு ஆற்று நீர் ஏன் கலங்கலாக உள்ளது என்று கவலைபடுகிறோம். நிறைய மரங்களை வளர்ப்போம், காடுகளைக் காப்போம் தூய்மையான தண்ணீரைப் பெறுவோம். http://www.usetamil.net/t34821-topic#axzz2UPPmmgPT

  17. மாணவர்களுக்கு இடையே நடந்த ஓட்டப்பந்தயம்; குறுக்கே ஓடி வந்த நாய் வெற்றி பெற்றதாக அறிவிப்பு அமெரிக்காவின் உட்டா மாகாணத்தில் உள்ள லோகன் என்ற இடத்தில் செயல்பட்டு வரும் பள்ளி ஒன்றில் 4 x 200 மீட்டர் ஓட்டப்பந்தயப் போட்டிகள் நடந்தன. அப்போது பந்தயத்தில் பங்கேற்ற மாணவிகள் தொடர் ஓட்டத்தில் பங்கேற்று ஓடிய போது பார்வையாளர் பகுதியிலிருந்து உரிமையாளரின் பிடியிலிருந்து தப்பித்து ஹோலி என்ற நாய் ஒன்று பந்தய டிராக்கில் ஓடியது. பந்தயத்தில் பங்கேற்ற மாணவிகளுக்கு நடுவே அந்த நாயும் தலைதெறிக்க ஓட்டம் பிடித்தது. இதனைக் கண்ட பார்வையாளர்கள் கைதட்டி உற்சாகப்படுத்தினர். எல்லைக் கோட்டுக்கு அருகே வந்த போது மாணவி லானேயை விட ஹோலி ஒரு வினாடி முந்திச் சென…

    • 6 replies
    • 943 views
  18. நம்ம ஊரு பாட்டுக்கு இந்த போடும் ஆட்டத்தை பாருங்கள் பகிருங்கள் நாம இப்படி போவம்..

  19. நண்பர்களுடன் பாரிய பட்டம் ஒன்றை ஏற்றிக் கொண்டிருந்த இளைஞன் ஒருவன் கயிற்றை நண்பர்கள் விடும் போது இளைஞன் பிடியை விடாததால் அவனை அலாக்காக பட்டம் தூக்கி மேலே கொண்டு சென்ற காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இளைஞன் கீழே வீழந்து படுகாயமடைந்துள்ளான். https://vampan.net/wp-content/uploads/2021/12/269565160_242147331382458_1406662015373078646_n.mp4?_=1 https://vampan.net/34938/

    • 5 replies
    • 534 views
  20. பளுவில் சிக்குண்ட ஆணுறுப்பு ; 3 மணிநேர போராட்டத்தின் பின்னர் நடந்தது தெரியுமா..? உடற்­ப­யிற்சி நிலை­ய­மொன்றிலிருந்து தீய­ணைப்புப் பிரி­வி­ன­ருக்கு வந்த புதுவித அழைப்பை பற்றியே தற்போது இணையவாசிகள் பேசி வருகின்றனர். ஜேர்மனியில் அமைந்துள்ள ஒரு உடற்பயிற்சி நிலையமொன்றில் உடற்­ப­யிற்­சிக்­காக பயன்­ப­டுத்­தப்­படும் பளுவில் நபர் ஒரு­வரின் ஆணு­றுப்பு சிக்குண்ட நிலையில் தீய­ணைப்புப் பிரி­வி­ன­ருக்கு அழைப்பு விடுக்­கப்­பட்ட சம்­பவம் ஜேர்­ம­னியில் இடம்­பெற்­றுள்­ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. குறித்த சம்பவம் கடந்த 15 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.மேற்­படி நபர் 2.5 கிலோ­கிராம் எடை­யுள்ள இரும்புப் பளு­வுக்­குள்­ளி­லி­ருந்து தனது ஆணு­றுப்பை …

  21. மனைவியை கொலை செய்ய முயற்சி! இத்தாலியில் இலங்கையர் கைது வியாழன், 26 ஆகஸ்ட் 2010 09:14 மின்னஞ்சல் அச்சிடுக PDF சொந்த மனைவி மற்றும் அவர்களின் இரு மாதப் பெண் குழந்தை ஆகியோரை தாக்கினார் என்பதற்காக குடும்ப வன்முறைச் சட்டத்தின் கீழ் இலங்கையர் ஒருவர் இத்தாலியில் நேற்றுக் கைது செய்யப்பட்டுள்ளார். Porto San Giorgio நகரத்தில் உள்ள இலங்கையரின் வீடு ஒன்றில் குடும்ப வன்முறை இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது என இத்தாலிய பொலிஸாருக்கு இரகசிய தகவல் ஒன்று கிடைத்திருக்கின்றது. அவர்கள் அவ்வீட்டை முற்றுகையிட்டனர். அப்போது மனைவியின் கழுத்தை நெரித்து கணவன் கொலை செய்ய முற்பட்டமையையையும், நையப் புடைத்தமையையும், காயப்படுத்தியமையும் நேரில் கண்டனர் என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர். தாய…

  22. விமானத்தில் ‘தூங்கிய’ பெண்ணிடம் சில்மிஷம்... இந்திய வம்சாவளி தாத்தாவிற்கு 8 மாதம் சிறை. நியூயார்க்: விமானத்தில் பக்கத்து இருக்கையில் இருந்த பெண்ணிற்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இந்திய வம்சாவளி முதியவருக்கு 8 மாதம் சிறை தண்டனை விதித்து அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தை சேர்ந்தவர் தேவேந்தர் சிங் (62). இந்திய வம்சாவளியை சேர்ந்த இவர், கடந்த மார்ச் மாதம் ஹ¨ஸ்டன் நகரில் இருந்து நியூஜெர்சிக்கு விமானத்தில் சென்றார். அப்போது விமானத்தில் இவரது பக்கத்து இருக்கையில் பெண் ஒருவர் அமர்ந்து பயணம் செய்துள்ளார். விமானப் பயணத்தின் போது தூங்கிக் கொண்டிருந்த தனக்கு தேவேந்தர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அப்பெண் புகார் அளித்தார். அதனைத் தொடர…

    • 7 replies
    • 1.4k views
  23. சர்வாதிகாரி ஹிட்லரின் உடலம் எங்கே.. சதாம் ஊசேன் எப்போது கைது செய்யப்பட்டார்..பிரபாகரன் எங்கே… ஒரு தலைவர் மரணத்தை உண்மையாக நேர்கோட்டு வடிவில் நாம் கேள்விப்பட்டால் அது செய்தி. அதற்கு முற்றிலும் புறம்பான உண்மைகளைத் தேடி விளக்கப்படுவதே கொன்ஸ்பிரேசன் கோட்பாடுகளாகும்.. நேற்று முன்தினம் சர்வதேச பயங்கரவாதி ஒஸாமா பின்லாடனை அமெரிக்கப்படைகள் கொன்றுவிட்டதாக செய்திகள் வெளியாகின. பின்லேடனின் உடலம் காட்டப்படாமலே கடலின் அடியில் புதைக்கப்பட்டுவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பின்லேடன் சுடப்பட்டதாக வெளியிடப்பட்ட புகைப்படத்தைக் கூர்ந்து பாருங்கள், அது பழைய புகைப்படம் ஒன்றில் செய்யப்பட்ட கணினி வேலைபோல இருக்கும்.. உண்மையில் பாகிஸ்தானில் நடைபெற்ற ஒரு தாக்குதலில்தான் பின்லேடன்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.