செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7085 topics in this forum
-
அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் பள்ளியில் 9-வது வகுப்பில் படிக்கும் மாணவன் அஹமட்மொஹமட் (14), சூடான் வம்சாவளியைச் சேர்ந்தவர். புதிய பொருட்களை உருவாக்குவதிலும், அறிவியலிலும் அதிக ஆர்வம் கொண்டவர். பென்சில்கள் வைப்பதற்கான சிறு பெட்டியில் சொந்தமாக ஒரு அலராம் அடிக்கும் கடிகாரத்தைச் செய்து, அதனை திங்கட்கிழமை தனது வகுப்புக்குக் கொண்டு வந்து ஆங்கில ஆசிரியையிடம் பெருமையாகக் காட்டியுள்ளார். ஆனால் அவருக்கு கிடைத்தது பாராட்டு அல்ல. அதை வெடிகுண்டு என நினைத்து ஆசிரியர்கள் காவலரை அழைத்தனர். உடனே அம் மாணவன் செய்யப்பட்டார். பின்னர் காவல்நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மாணவனுக்கு ஆதரவாக சமூகவலையமைப்புகளிலும் ஆதரவு பொங்கியது. …
-
- 0 replies
- 272 views
-
-
விமானத்திலிருந்து இறக்கி விடப்பட்ட இளம் பெண்! விமானத்திலிருந்து விமானப் பணிப்பெண்ணொருவரால் இளம் பெண்ணொருவர் இறங்கி விடப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தை சேர்ந்த ஹாரியட் ஒஸ்போர்ன் (31) என்ற ஒப்பனை கலைஞர் தன்னுடைய நண்பருடன் ஸ்பெயினிற்கு சென்றுள்ளார். இந்தநிலையில் இரண்டு குழந்தைகளுக்கு தாயான ஹாரியட், ஈஸிஜெட் விமானத்தின் பணிப்பெண்கள் தன்னை மற்ற பயணிகள் அனைவரின் முன் அவமதித்ததாக முறைப்பாடு செய்துள்ளார். இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘விமானத்தில் நுழைய முயன்ற போது, அனைவரின் முன்பாக வைத்தும் என்னுடைய ஆடை, குழந்தைகள் பார்க்கும் விதத்தில் இல்லை என்று கூறி வெளியேற்றிவிட்டனர். எனக்கு அழுகை வந்துவிட்டது. என்னுடைய தோழியுட…
-
- 5 replies
- 962 views
-
-
-
- 2 replies
- 490 views
-
-
கணவனின் தேனிலவு : சிவபூசைக்குள் புகுந்த முதல் மனைவி இளம் பெண்ணை ஏமாற்றி திருமணமுடித்து தேனிலவில் இருந்த போது மனைவியால் இரு பிள்ளைகளின் தந்தையொருவர் பிடிபட்ட சம்பவமொன்று கொழும்பில் இடம்பெற்றுள்ளது. ஏற்கனவே திருமணமான இரண்டு பிள்ளைகளின் தந்தையான தனியார் நிறுவனம் ஒன்றின் அதிகாரி, தாம் திருமணம் செய்யவில்லை என்று தெரிவித்து 24வயதான பெண் ஒருவரை திருமணம் முடித்து தேன்நிலவில் இருக்கும் போது அவரது முதல் மனைவியால் பிடிக்கப்பட்டார். வேறு ஒரு தனியார் நிறுவனத்தின் பணிப்பாளராக கடமையாற்றிய 24 வயது பெண்ணை ஏமாற்றி, தனியார் நிறுவன அதிகாரி திருமணம் செய்துள்ளார். இதேவேளை, குறித்த நபரின் மனைவி வைத்தியசாலை ஒன்றில் பணியாற்றி வருகிறார். …
-
- 1 reply
- 440 views
-
-
என் வயசு 18.. என்னை யாரும் கடத்தலை.. பத்திரமா இருக்கேன்.. நித்தியானந்தா சிஷ்யை பரபர வீடியோ "என் வயசு 18.. நான் பத்திரமா இருக்கேன்.. என்னை யாரும் கடத்தவில்லை" நித்யானந்தா ஆசிரமத்தில் சட்டவிரோதமாக அடைக்கப்பட்டதாக கூறும் பெண் ஒருவர் வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பரபரப்புக்கு பஞ்சமில்லாத நித்யானந்தா எங்கே இருக்கிறார் என்று யாராலுமே இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இவரை கர்நாடக போலீசார் ஒரு பக்கம் வலைவீசி தேடிவருகிறார்கள். ஆனாலும் யூடியூப் வாயிலாக பக்தர்களுக்கு காட்சி தந்து அவர்களுடன் உரையாடி வருகிறார் நித்யானந்தா. எப்போதெல்லாம் இவர் காட்சி தருகிறாரோ அப்போதெல்லாம் எதாவது ஒரு பகீர் குண்டை தூக்கி போட்டுவிட்டு போவார். அ…
-
- 1 reply
- 601 views
- 1 follower
-
-
50 கிலோ மீற்றர் நீளமான வீதி “திருடப்பட்டது” - ரஷ்ய சிறைச்சாலை சேவை உயர் அதிகாரி கைது! ரஷ்யாவில் ஐம்பது கிலோமீற்றர் (31 மைல்) நீளமான வீதியை திருடிய குற்றச்சாட்டில் சிறைச்சாலை உயர் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அலெக்ஸாண்டர் புரோடோபொபோவ் எனும் இந்த அதிகாரி, கொங்கிறீட்டினால் நிர்மாணிக்கப்பட்டிருந்த நெடுஞ்சாலையொன்றின் கொங்கிறீட் பாலங்களை அகழ்ந்து விற்பனை செய்ததாக விசாரணையாளர்கள் தெரிவித்துள்ளனர். ரஷ்யாவின் வடக்கிலுள்ள கோமி பிராந்தியத்தில் இக்குற்றச் செயல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2014 முதல் 2015 வரையான ஒரு வருட காலப்பகுதியில் சுமார் 7,000 கொங்கிறீட் பாலங்களை த…
-
- 1 reply
- 839 views
-
-
[size=3][size=4]லண்டன்: இங்கிலாந்தில் உள்ள ஒரு விலங்கியல் பூங்காவில் அடைக்கப்பட்டிருந்த சிம்பன்சி, தன்னை வேடிக்கை பார்க்க வந்தவரிடம், இந்தக் கேட்டைத் திறந்து விடுங்கள் என்று 'சைன் பாஷையில்' பேசியது அனைவரையும் வியக்க வைத்தது. அதை விட ஆச்சரியமாக, அந்தக் கதவை எப்படித் திறக்க வேண்டும் என்பதையும் சிம்பன்சி சொல்லிக் கொடுத்தது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.[/size][/size] [size=3][size=4]மனிதனுக்கு மட்டும்தான் ஆறறிவு என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் ஐந்தறிவு படைத்த விலங்குகள் கூட சில நேரங்களில் நம்மை மிஞ்சி விடுகின்றன தங்களது அறிவுப்பூர்வமான செயல்பாடுகளால். அப்படி ஒரு சம்பவம், இங்கிலாந்தின் வடக்கு வேல்ஸில் உள்ள வெல்ஷ் இயற்கை விலங்கியல் பூங்காவில் நடந்துள்ளது.[/si…
-
- 1 reply
- 727 views
-
-
கருவிலுள்ள குழந்தைகளுக்கு கருணை காட்டும் கொரோனா- அவசர ஆய்வில் கிடைத்த அற்புத தகவல் கொரோனாவின் கொடூரப் பார்வையில் இருந்து தப்பிக்க முடியாமல் தொடர்ந்து சின்னாபின்னமாகி வரும் சீனாவில், இதுவரை 1500இற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கொரோனா (COVID-19) வைரஸ் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகளுக்குக் குறைந்த அளவு பாதிப்புகளையே ஏற்படுத்தக்கூடும் என கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் மிக எளிதில் பரவக் கூடியதாகவுள்ளது. அந்த வைரஸால் பாதிக்கப்பட்ட ஒருவரால் மேலும் இருவருக்கு அதிவேகமாக கொரோனா பரவுகிறது. ஆனாலும் இதுவரை இந்த கொடிய வைரஸ்க்குக் குறைவான எண்ணிக்கையிலான குழந்தைகளே பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், கொரோனாவின் அறிகுறியான சுவாசப…
-
- 0 replies
- 317 views
-
-
[size=2][/size] [size=2][size=4]பூகொட ஓவிட்டிகமவிலுள்ள 5.5 ஏக்கர் காணியொன்றை 41 பேருக்கு விற்பனை செய்ததாக கூறப்படும் 36 வயதான பெண்ணொருவரை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இப்பெண் இந்தியாவுக்கு தப்பிச்சென்று மீண்டும் இலங்கை திரும்பிய நிலையில் கைதுசெய்யப்பட்டுள்ளார். நுகேகொடை, மஹாரகம, கொஸ்கம, பூகொட, மொறட்டுவை, ஹோமாகம ஆகிய பிரதேசங்களை சேர்ந்த பல வர்த்தகர்கள் ஒரே காணியை 5 மில்லியன் ரூபா வரை கொடுத்து வாங்கியதாக குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் முறைப்பாடு செய்துள்ளனர். மாவட்ட காணி பதிவாளர் அலுவலகத்திலுள்ளவர்களின் உதவியை இப்பெண் பெற்றுள்ளதாக மேற்படி வர்த்தகர்கள் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக கம்பஹா பொலிஸார் வி…
-
- 0 replies
- 515 views
-
-
இலண்டன் வெஸ்ற் ஹென்டன் (West Hendon) பகுதியில் உள்ள ஆஞ்சேனயர் ஆலயத்தில் பூசை வழிபாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் புகுந்த மலையாளச் சாமியார் ஒருவர் தன்னைத் தானே ஆஞ்சனேய சாமி என்று பிரகடனம் செய்து பக்தர்களையும், பூசகரையும் மிரட்டி அடாவடித்தனம் புரிந்தமை பக்தர்களால் காணொளி வடிவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. சந்திரசேகரன் என்ற இயற்பெயரையுடைய இவர் கேரள வம்சாவழியைச் சேர்ந்தவராவர். ஆனாலும் ஆஞ்சனேயரின் அவதாரமாக தன்னைத் தானே சித்தரித்துக் கொள்ளும் இவர், ஹனுமந் சேவா துரந்தரர் சிறீமத் சந்திரசேகர ஆஞ்சனேய சுவாமிஜி என்று தனக்குத் தானே ஆன்மீகப் பெயர் சூட்டி கொழும்பு தெஹிவளையில் ஆஞ்சனேயர் கோயில் ஒன்றை நடத்தி வருகின்றார். கடந்த ஆண்டு நாடாளுமன்றப் பொதுத்தேர்தல் நடைபெற்ற காலப் ப…
-
- 15 replies
- 1.6k views
- 1 follower
-
-
ஒரே நேரத்தில் 25 பள்ளிகளில் பணியாற்றியதாக கணக்கு காட்டி மாதம் ரூ. 1 கோடி சம்பளம் வாங்கிய ஆசிரியை ஒரே நேரத்தில் 25 பள்ளிகளில் பணியாற்றியதாகக் கணக்குக் காட்சி ஆசிரியை ஒருவர் மாதம் ரூ.1 கோடி சம்பளம் வாங்கியதாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. பதிவு: ஜூன் 05, 2020 13:40 PM லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் அரசுப் பள்ளி ஆசிரியராக இருக்கும் ஒருவருக்கு ஒரே நேரத்தில் 25 பள்ளிகளில் பணியாற்றியதாகக் கணக்குக் காட்டப்பட்டு, அவருக்கு மாதம் ரூ.1 கோடி ஊதியமாக வழங்கப்பட்டு உள்ளதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன. மெயின்புரியைச் சேர்ந்த பள்ளி ஆசிரியை ஒருவர் சுமார் 25 பள்ளிகளில் பணியாற்றுவதாகக் கூறி அவருக்கு மாதந்தோறும் ரூ.1 கோடி அளவுக்கு ஊதியம் வழங…
-
- 1 reply
- 551 views
-
-
-
- 0 replies
- 330 views
- 1 follower
-
-
ரிஷாட் பதியூதீன் மற்றும் மஸ்தான் ஆகியோரது ஆதரவாளர்களுக்கு இடையில் மோதல்: 6பேர் காயம் வவுனியா சாளம்பைக்குளம் பகுதியில் ரிஷாட் பதியூதீன் மற்றும் மஸ்தான் ஆகியோரது ஆதரவாளர்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் 6 பேர் காயமடைந்தநிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். செட்டிகுளம்- மெனிக்பாம் பகுதியில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற பிரசாரகூட்டம் ஒன்றில் கலந்துகொண்டுவிட்டு சாளம்பைக்குளம் பகுதிக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வன்னி வேட்பாளர் காதர் மஸ்தானின் ஆதரவாளர்கள் சென்றிருந்த போதே இந்த மோதல் இடம்பெற்றுள்ளது. இதன்போது குறித்த பகுதிக்கு வந்த ஐக்கிய மக்கள் சக்தியின் வன்னி வேட்பாளரான ரிஷாட் பதியூதீனின் ஆதரவாளர்கள், மஸ்தானின் ஆதரவாளர்கள் மீது தாக்குதல்…
-
- 0 replies
- 339 views
-
-
உத்தரப்பிரதேசத்தின் கோரக்பூர் மாவட்டத்தில் ஒரே நாளில் தாயும் மகளும் தங்கள் வாழ்க்கை இணையுடன் திருமணம் செய்து கொண்ட நிகழ்வு நடந்துள்ளது என பிடிஐ செய்தி முகமை தெரிவிக்கிறது. அங்கு அரசாங்க உதவியுடன் நடைபெற்ற 63 திருமணங்கள் ஒன்றாக ஒரே நாளில் நடத்தி வைக்கப்பட்டது. அதில் கணவரை இழந்த தாய் ஒருவரும், அவரது இளைய மகளும் தத்தமது துணையைத் திருமணம் செய்து கொண்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர். கோரக்பூரின் பிப்ரலி கிராமத்தில்தான், டிசம்பர் 10ஆம் தேதி இந்த திருமண நிகழ்வு நடைபெற்றது. 53 வயதான பெலி தேவியின் கணவர் ஹரிஹர் 25 ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்தார். அவர்களுக்கு 3 மகள்களும், 2 மகன்களும் உள்ளனர். தற்போது பெலி தேவி ஹரிஹரின் சகோதரர் ஜகதீஷை திருமணம் செய்து கொண்டுள்…
-
- 6 replies
- 666 views
- 1 follower
-
-
பேத்திக்கு ‘பென்ஸ் கார்-ஐ’ பரிசளித்தார் அரசியல்வாதி தன்னுடைய பேத்தியின் முதலாவது பிறந்த தினத்துக்கு, சுமார் 40 மில்லியன் ரூபாய் (4 கோடி) பெறுமதியான பென்ஸ் காரொன்றை, முன்னாள் இராஜாங்க அமைச்சரொருவர் பரிசளித்துள்ளமை, சமூக ஊடகங்களில் புகைப்படங்களுடன் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் இராஜாங்க அமைச்சராக இருந்து, தன்னுடைய அமைச்சுப் பதவியை இராஜினாமாச் செய்த பிரியங்கர ஜயரத்னவே, தன்னுடைய பேத்தியான ஜவோனியாவுக்கு அந்தக் காரை பிறந்தநாள் பரிசாக வழங்கியுள்ளார். இந்த விவகாரம், சமூக ஊடகங்கள் மற்றும் வலைத்தளங்களில் பெரும் பரப…
-
- 0 replies
- 541 views
-
-
இப்படியும் மனிதர்கள் அலீஷா, ஃப்ரான்சிஸ்கா, ரஹீம், டாக்டர் சுப்பிரமணிய ஐயர் வலையில் பிடித்தது | சிவதாசன் இன்று முகநூலில் கிடைத்த ஒரு விடயம் பற்றி மேலும் அகழ்வாய்வு செய்தபோது கிடைத்த விடயங்கள் இவை. கடவுள் மனிதரைத் தன்னுருவத்தில் படைத்தார் எனப் பல மதங்களும் நம்புகின்றன. இருந்துமென்ன அதை நிரூபிக்க வேண்டாமா? இன்று முகநூலில் கிடைத்த படம் இது. இதில் தன் கரங்களை மகிழ்ச்சியுடன் தூக்கிக் காட்டிக்கொண்டு நிற்பவர் ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த இராணுவ வீரர், மேஜர் அப்துல் ராஹிம். அவருக்கு முன்னால் கரங்களைக்கூப்பி நிற்பவர்கள் கேரளாவைச் சேர்ந்த கால…
-
- 0 replies
- 381 views
-
-
டைட்டானிக் கப்பல் மூழ்கிய போது அங்கு இசைக்கப்பட்ட வயலின் ஏலத்தில் 900,000 பவுஸ்களுக்கு விற்பனையாகி சாதனை படைத்துள்ளது. கடந்த 1912 ஆம் ஆண்டு ஏப்ரல் 15 ஆம் திகதி இங்கிலாந்தின் சவுத்ஹாம்டன் துறைமுகத்தில் இருந்து அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு தனது பயணத்தை தொடங்கிய ‘டைட்டானிக்' என்ற பயணிகள் சொகுசு கப்பல் வடக்கு அட்லாண்டிக் கடலில் மூழ்கியது. டைட்டானிக் கப்பல் மூழ்கிய போது இசைக்கப்பட்ட வயலின் ஏலம் பயணத்தின் போது பனிப்பாறையில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 1500 க்கும் மேற்பட்டோர் கடலில் மூழ்கி பலியாகினர். கப்பல் மூழ்கிய போது அதில் இருந்த இசைக் குழுவினர் வயலின் இசைத்த படியே இருந்தனர். கப்பலில் இருந்து தப்பிக்க முயற்சிக்காமல் பயணிகளுடன் கடலில் மூழ்கி மரணத்தை …
-
- 1 reply
- 556 views
-
-
சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்தவருக்கு பெண்கள் கொடுத்த தண்டனை - காணொளி இணைப்பு சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபரொருவருக்கு மூன்று பெண்கள் ஒன்றிணைந்து தாக்கும் காணொளி இணையத்தில் வெளியாகியுள்ளது. சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய நபரின் கால்கள் மற்றும் கைகள் கட்டப்பட்டு 3 பெண்கள் இணைந்து பொல்லுகள் மற்றும் தடிகளால் தாக்குவது போன்ற காட்சி குறித்த காணொளியில் பதியப்பட்டுள்ளது. இதேவேளை, பெரிய கயிற்றின் மூலம் கட்டப்பட்ட நபரை மைதானமொன்றில் அங்குமிங்குமாக இழுத்து குறித்த 3 பெண்களும் தாக்குதல் மேற்கொள்ள அந்தக் காட்சியை ஏனைய பெண்களும் சிறுவர்களும் பார்த்துக்கொண்டிருக்கின்றனர். இச் சம்பவம் இந்தி…
-
- 0 replies
- 261 views
-
-
-
- 0 replies
- 458 views
-
-
காத்தான்குடி பிரதேசத்திலுள்ள வீடொன்றில் கடந்த ஐந்து தினங்களுக்கு முன்னர் காலை உணவுக்காக தயாரிக்கப்பட்ட ரொட்டியில் அல்லாஹ் முகம்மத் எனும் எழுத்து காணப்பட்டுள்ளது. இது பற்றி தெரியவருவதாவது, காத்தான்குடி பி.ஜே.எம்.வீதியிலுள்ள மர்சூக் என்பவரின் வீட்டில் காலை உணவுக்கான ரொட்டி தயாரிக்கப்பட்ட வேளை ரொட்டியை தயாரித்து முடிந்த பிறகு அந்த ரொட்டியின் மேல் பகுதியில் அல்லாஹ், முகம்மத் என காணப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த ரொட்டியை சாப்பிடாமல் விட்டுள்ளனர். இந்த ரொட்டியை தயாரித்த ரொட்டி கல்லில் எந்த வொரு எழுத்தும் இருக்கவில்லையெனவும் இதில் அல்லாஹ் என்ற எழுத்தை கண்டவுடன் தான் அதிர்ச்சியடைந்ததாகவும், இது ஒரு அற்புதமாகு…
-
- 16 replies
- 923 views
-
-
கிளிநொச்சியில்... அரிய வகை ஆமை, மீட்பு! கிளிநொச்சியில் அரிய வகை நட்சத்திர ஆமை மீட்கப்பட்டு வன ஜீவராசிகள் திணைக்களத்தினரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி, தரம்மபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மயில்வாகனபுரம் பகுதியில் விவசாயி ஒருவர் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோதே குறித்த ஆமை அடையாளம் காணப்பட்டுள்ளது, இந்த ஆமை இனமானது அருகிவரும் நட்சத்திர ஆமை வகையை சேர்ந்தது என அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும், இந்த ஆமை இனமானது இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் நாட்டிற்கு உருத்துடையவைகள் எனவும், கடத்தப்பட்டு விற்பனை செய்யப்படும் அரிய வகையான ஆமை இனம் எனவும் தெரியவருகின்றது. உலகளவில் அதிகம் கடத்தப்படும் உயிரினங்களில் இந்த நட்சத்திர ஆமை இனமும் ஒன்றாகும். …
-
- 0 replies
- 241 views
-
-
(Hafeez) ஆண் புடையன் ஒன்றை அடித்துக் கொன்றவரை பெண் புடையன் ஒன்று விரட்டி விரட்டி தீண்டியதில்அந் நபர் உயிரிழந்த சம்பவம் ஒன்று நேற்று மாத்தளை - உக்குவலைப் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. உக்குவலை பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளவராவார். அவ்விடத்திற்கு விஜயம் செய்த மாத்தளை திடீர் மரண விசாரணை அதிகாரி எம். ஜி. ஜயதிலக மரண விசாரணைகளை மேற்கொண்டார். குறித்த மரண விசாரணையில்,மேற்படி நபர் மதுபோதையில்இருந்ததாகவும் பாதை ஓரமாக இருந்த ஒருசோடி புடையன் பாம்பை வேறு படுத்திப் பிரித்து தடி ஒன்றினால் ஆண் புடையன் பாம்பை அடித்துக் கொன்றதையடுத்து ஆத்திரமுற்ற பெண் புடையன் குறித்த நபரை விரட்டி விரட்டி தீண்டியதாகவும் அதனால் விசம் ஏறி அவர் உயிரிழந்துள்ளதாகவும் அதில் தெ…
-
- 2 replies
- 508 views
-
-
கடவுச்சீட்டைப் பெற வரிசையில் காத்து நின்ற பெண் குழந்தையை பிரசவித்தார்! கடவுச்சீட்டைப்பெற்றுக்கொள்வதற்காக வரிசையில் காத்திருந்த பெண்ணொருவர் குழந்தையை பிரசவித்துள்ளார். பத்தரமுல்லையில் உள்ள குடிவரவு, குடியகல்வு திணைக்களத்திற்கு முன்பாக கடவுச்சீட்டு பெறுவதற்காக வரிசையில் காத்திருந்த பெண்ணொருவரே இவ்வாறு குழந்தையை பிரசவித்துள்ளார். குறித்த பெண் வரிசையில் நின்ற போது பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து, அங்கிருந்த இராணுவத்தினரால் பொரளை - காசல்வீதி மகளிர் வைத்தியசாலைக்கு அழைத்து செல்லும் வழியில் அவர் குழந்தையை பிரசவித்துள்ளார். குழந்தையை பிரசவித்த பெண் நேற்று முதல் கடவுச்சீட்டை பெற்றுக்கொள்வதற்காக குறித்த இடத்தில் காத்து நின்றுள்ளதாக அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர்.…
-
- 1 reply
- 258 views
-
-
மிகப்பெரிய மரம் எது ! ? அது எங்குள்ளது ? அந்த மரத்தின் பெயர் என்ன என்று கேட்டால் நம்மில் பலருக்கு பதில் தெரியாது . சரி அப்படி உலகிலேயே மிகப் பெரிய மரம் எங்குதான் இருக்கிறது !? உலகிலேயே எடை அதிகமான மரம் கலிபோர்னியாவில் உள்ள ஜெனரல் ஷெர்மன் என்ற மரம்தானாம் .கடந்த ஆண்டு மரங்களின் வளர்சிக் கணக்கெடுப்பின்படி படி இதுவரை இந்த மரத்தின் சாதனையை வேறு எந்த மரமும் வெற்றி கொள்ளவில்லை என்றால் பார்த்துக்கொள்ளுங்கள் . . http://en.wikipedia.org/wiki/General_Sherman_(tree)
-
- 2 replies
- 1.1k views
-
-
வவுனியா குருமன்காடு பகுதியில் உள்ள வீடொன்றில் இறந்த நிலையில் புலிக்குட்டி ஒன்று மீட்கப்பட்டுள்ளது. மன்னார் பகுதியில் இருந்து வவுனியாவுக்கு கொண்டுவரப்பட்ட இந்த புலிக்குட்டி விற்பனைக்காக வைத்திருந்த வேளையே இறந்துள்ளதுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த வீட்டில் இரு தினங்களாக ஆட்கள் இல்லாததனால் உணவின்றி புலிக்குட்டி இறந்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. இந்த புலிக்குட்டி 3 மாதங்களானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் குறித்து வவுனியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர். - See more at: http://onlineuthayan.com/News_More.php?id=259353375829217608#sthash.0EbBovY8.dpuf
-
- 2 replies
- 731 views
-